Tuesday, February 26, 2019

அறம் வெல்லும்

கொடுத்தவேலையை ஒழுங்காக செய்கிறார் நடிகர் ஆனால் பலன்தான் இல்லாமல் போகிறது .. முதலில் ராகுலை சந்தித்தும் பேசி மய்யம் கொள்ளலாமென்றிருந்த கனவு தகர.. கம்யூனிஸ்டுகளோடு கதைக்க சென்று .. முகம் கறுத்து திரும்பும் நிலை .. திமுக வாக்கு வங்கியை சிதைக்க முடியாதென அறிந்து கூட்டணிகளை பிரிக்க பாசிச மேலிட கட்டளையை நிறைவேற்ற பாவம் படாதபாடுபட்டு நடிக்க வேண்டியிருக்கிறது .. அரசியல் இன்னும் அறிந்திருக்கவில்லை எங்கே யாரை எப்படி பலவீனபடுத்துவதென சூட்சமமெல்லாம் நிறைய கற்றதற்கு பிறகே கைகொடுக்கும்.. எதிரியை பலவீனபடுத்த மக்கள் விரும்பதாக கூட்டணி அமைய கூட்டணி சேர்வார்கள் என்பவரோடு பேசுவார்த்தை நடத்தி எதிராளிகள் அதிக இடங்களை ஒதுக்க செய்யும் தந்திரம் இதெல்லாம் திமுகவிற்கு ஆரம்பநிலையிலேயே தெரியும் இன்றைக்கு பாமக அதிமுக கூட்டணியை கட்சிகாரர்கள் மட்டுமல்ல வன்னிய சமூகமே வெறுக்கிறதே .. அதிமுக அதிக இடங்களை ஒதுக்கியும் பலனற்று போகுமென பட்சி சொல்ல தொடங்கியிருக்கிறது .. எதிரியை பலம் கொண்டு மோதுவது மட்டுமல்ல .. மெல்ல பலவீனபடுத்தவும் அறிந்திருக்க வேண்டும் .. காங்கிரஸின் கேட்டும் அது திமுகவிடம் தான் யாரை கூட்டணிக்குள் சேர்க்கலாம் என்று தீர்மானிக்கும் உரிமை இருக்கிறதென்ற சொல்லி அனுப்பிவைத்ததும் வேறு வழியின்றி திரிவது புரிகிறது .. திமுகவை பலவீனபடுத்தும் எண்ணம் ஈடேறாது .. காரணம் அதிமுக மற்றும் பாஜக பாமக மீதான மக்களின் வெறுப்பு மிகப்பெரிய மாற்றத்தை தரும் அதன் பலன் பிரதான கட்சிக்கு போகும் .. .. இந்த தேர்தலில் மிகப்பெரிய நாடக அரங்கேற்றங்கள் நடைபெறலாம் எப்படியும் வெல்லவேண்டுமென்று எதையும் செய்வார்கள்.. மானங்கெட்ட நெறிகெட்ட செயல்களை இனி பார்க்கலாம் யாரையெல்லாம் அனுப்பலாம் எப்படியெல்லாம் வாக்குகளை சிதறவைக்க முடியுமா என தினம் தினம் ஊடகங்களை வைத்து திரித்துக்கொண்டே இருப்பார்கள்.. உளவுத்துறை அனுகூலமாக சொன்னதாக கசியவிடுகிறார்கள் .. நாங்கள் பார்க்காதா உளவுத்துறை அறிக்கைகளா என்ன.. ? இதோ பாகிஸ்தானில் புகுந்து விமான தாக்குதல் நடத்தியதாக செய்த்களை வெளியிடுகிறார்கள் .. உலகளாவிய எந்த செய்தி நிறுவனமும் 300 தீவிரவாதிகளை கொன்றதை செய்தியாக்கவில்லை .. பெரியளவில் தீவிரவாதிகள் உயிரிழந்தும்..? சர்வதேத சமூகம் கண்டுக்கொள்ளவில்லையா..? இதிலிருந்தே ராணுவ நடவடிக்கையை கூட தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்துகிற நிலை மோடி அரசின் மீதான வெறுப்பையே அதிகரிக்க செய்திருக்கிறது .. இங்கே எந்த அரசியல் கட்சியும் தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதல் நடத்துவதை எதிர்க்கவில்லை மாறாக அனைத்து கட்சிகளும் வரவேற்றுயிருக்கிறார்கள் ஆனால் அதை யாரும் அரசியலாக்கவில்லை பாஜகவை தவிர.. திரு.பொன்னர் கன்னியாகுமரிக்கு வரும் பிரதமருக்கு கறுப்புகொடி காட்டதீர்களென வைகோவை கெஞ்சுகிறார் எங்கே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கிடைக்கும் என்பதால் கொஞ்சமேனும் மெச்சபட்ட தோல்வியை தழுவலாமென்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார் .. .. பாமக சிதறும் நிலைக்கு தள்ளபட்டிருக்கிறது .. ஒவ்வொருவராக வெளியேற தொடங்கியிருக்கிறார்கள் கோ.க.மணியும் பலமாக யோசிப்பதாக செய்திகள் வருகின்றன .. மக்கள் வெறுக்கிறவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டதும் அதை நியாயபடுத்த முயன்று தோற்றதும் அரசியலில் மிகவும் பரிதாபகரமான சூழலில் சிக்கியிருப்பது தெரிகிறது .. இந்த தேர்தல் நிறைய கட்சிகளுக்கும் அரசியலை வியாபாரமாக்க முயல்கிறவர்களுக்கும் .. பொழுதுபோகாமால் பிழைப்பைதேடி சாந்தை களைத்து மேடையில் திரைக்கதையில் இல்லாமல் நடிக்கிறவர்களுக்கும்.. மதவெறியை சாதிமோதலை தூண்டி குளிர்காய்கிற பாசிச வர்க்கத்திற்கும் பேரடியாக இருக்கும் .. .. அறம் வெல்லும் .. ஆலஞ்சியார்

Monday, February 25, 2019

பரிதாபம் நிலை பாமக

ஏன் இந்த இழிநிலை.. சொன்ன சொல் மாறியதாலா... அரசியலில் மாறி மாறி கூட்டணி என்பது அரசியல் நீதியாக பார்க்கபடுகிறது அந்தந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு நாட்டின் நிலை கருதி கடுமையாக எதிர்த்தவர்கள் கூட ஆதரித்த வரலாறு உண்டு.. (எமர்ஜென்ஸி) அவசரகாலத்தில் கடுமையாக இந்திராவை எதிர்த்தவர்கள் (ஊடகவியலாளர்கள் உட்பட) ஜனதா ஆட்சியின் அவலநிலை கண்டு நிலையான ஆட்சி வேண்டுமென்ற ஒற்றை நோக்கத்திற்காக ஆதரித்திருக்கிறார்கள் .. ஏன் ஜெயலலிதா ஆட்சியின் கொடுமைகளை சகிக்க முடியாமல் சோ போன்ற திமுக எதிர்பாளர்கள் கூட ஜெயலலிதாவை வீழ்த்த வியூகம் அமைத்தார்கள் திமுகவே சரியான தேர்வென்று கருதினார்கள் .. எனவே கூட்டணி மாறுவதோ அந்தந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டதாக இருத்தல் வேண்டும்.. ஆனால் ஏன் பாமகவிற்கு மட்டும் இத்தகைய எதிர்ப்பு வந்தது தமிழகத்தில் மற்ற எந்த கட்சியும் கூட்டணி மாறியதே இல்லையா ஏன் பாமகவை மட்டும் இத்தனை கேள்விகளுக்கு உள்ளாக்குகிறீர்கள் .. மற்ற கட்சிகள் தங்களின் நிலைபாட்டை உறுதியாக்கி அதில் நின்று அளவோடு கதைத்திருக்கிறார்கள் .. எல்லைமீறி அவசரகோலத்தில் தங்கள் தகுதியை மறந்ததில்லை .. இனி எப்போதும் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லையென்றும் திராவிட கட்சிகளால் தான் நாடு சீரழிந்ததாகவும் தீண்டதகாத கட்சியைப்போல திராவிடத்தை எதிர்த்து பேசிவிட்டு அதற்காக பெற்றவளை இழுத்து கீழ்தரமான வார்த்தைகளால் பேசி மிக மோசமான செயல்களால் சொற்களால் அதிமுகவை பேசிவிட்டு ஏன் கூட்டணி என்று கேட்பது இயல்புதானே .. திராவிட கட்சிகளோடு இனி எந்தகாலத்திலும் கூட்டணி இல்லை என்று அப்பனும் மகனும் சொல்லிவிட்டு நாங்கள் கடைவிரித்தோம் யாரும் கண்டுக்கொள்வாரில்லை ஆதனால் கூட்டணி சேர்ந்தோம் என்பதை எப்படி ஏற்கமுடியும் .. தேர்தல் வரும்போது மட்டும் தான் யாரும் கண்டுக்கொள்ளவில்லையென தெரியுமா .. தொடர்ந்து நான்கு தேர்தல்களை சந்தித்தும் யாரும் சீண்டவில்லை என்பது ஊரறிந்தது தானே அதற்கு பிறகு திராவிட கட்சிகளால் தமிழகம் சீரழிந்ததென்று கூறிவிட்டு மீண்டும் நக்கிபிழைப்பதேன் என்ற கேள்வி எழத்தானே செய்யும் .. ஊழல் குற்றசாட்டை கவர்னரிடம் தந்துவிட்டு ஊழல்வாதிகளோடு கூட்டணி அமைப்பதை கேள்விகேட்க எல்லோருக்கும் உரிமையுண்டு ஏன் ஆத்திரம் வருகிறது விசாரித்து உண்மை வரும் வரை குற்றவாளி இல்லையென்றால் இதே அளவுகோலை ஆண்டிமுத்து ராசா மீது கடைபிடிக்கவில்லையே இவ்வளவிற்கும் வழக்கிலிருந்து விடுதலையான பின்பும் ராமதாஸ் விமர்சித்திருக்கிறாரே.. அப்போது எங்கே போனது உங்கள் அறம் .. சொந்த மைத்துனர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார் (மாமனார் காங்கிரஸ் கட்சிகாரர்தானே) அவரே அதிமுக உறவை அரசியல் ரீதியாக கடுமையாக ஏற்கனவே (ராமதாஸும் அன்புமணியும் சொன்னதைதான்) விமர்சனம் செய்திருக்கிறார் இதில் ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் விமர்சிப்பதாக சொல்வது எந்தவகை தர்மம் .. ஒருவேளை திமுககாரனாக இருந்திருந்து விமர்சனம் செய்திருந்தால் தளபதி ஸ்டாலினை குறை கூறலாம் .. செய்த தவறை மறைக்க தப்பானபாதையை தெரிவு செய்ததை கேள்வி கேட்கும் போது பதிலில்லை பாஜக ஆட்சிக்கு பூஜ்யத்திற்கு (சூழியம்) கீழே மதிப்பெண்கள் இல்லை இருந்தால் தரலாமென்ற ராமதாஸ் இப்போது என்ன சொல்லபோகிறார் .. பத்து கட்டளைகளோடு கூட்டணி என்கிறீர் .. இப்போது ஆட்சியில் இருக்கும் இருகட்சிகளோடு கூட்டணி வைக்கிறீர் மத்திய மாநில ஆட்சியில் இருப்பவர்கள் குறைந்தபட்சம் நீட்தேர்வை இப்போதே ரத்து செய்ய சொல்லலாமே ரத்து செய்தால் தான் கூட்டணிக்கு வருவோமென நிபந்தனை விதிக்கலாமே அன்புமணி .. .. நிர்வாகமென்றால் என்னவென்றால் டயர்நக்கிகளுக்கு தெரியுமா என்றீர் .. எந்த விலைக்கு வாங்கலாமென்ற நிர்வாகவியல் தெரிந்திருக்கிறது .. கழுதைக்கு என்ன விலை தரலாம் குதிரைக்கு என்ன தரலாமென்று அறிந்திருப்பதால் தான் எதை ஆசைகாட்டினால் ஒட்டுமொத்தமாக விற்றுவிடுவார்களென கணித்ததால் தான் பாமகவை வாங்கியிருக்கிறார்கள் .. ராஜ்யசபை சீட் மூலம் நிச்சயமாக ஒரு எம்பி சீட் உறுதி எப்படியும் தானோ அல்லது மனைவியோ பதவிக்கு வந்துவிடலாமென்ற எண்ணம் கட்சிகாரர்களை மடையர்களாக்க துணிந்திருக்கிறீர்.. பொதுவாழ்வில் செயல்பட வந்தவர்கள் கொஞ்சம் நாவடக்கத்தோடும் நாகரீகமாகவும் கதைக்க தெரிந்திருக்கவேண்டும் .. தாம் மட்டுமே சிறந்த அறிவாளி போலவும் எனக்கு மட்டுமே திறமை இருக்கிறதென்றும் அகம்பாவத்தோடு பேச கூடாது முதலில் தங்களின் பலமென்ன என்பதை அறிந்திருத்தல் வேண்டும் அரசியல் ஏற்றதாழ்வுகளை ஏற்கிற ஜனநாயக பண்பு வேண்டும் என்னோடு விவாதிக்க தயாரா என கேட்டு திரிந்தவர் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பல்லுடைந்து போனதேன் .. தவறை ஒப்புக்கொள்ளும் தைரியமில்லாமை அதைவிட தப்பை நியாயபடுத்த மேலும் மேலும் முயற்சிப்பது கடைசியில் கரிபூசிய நிலைக்கு ஆளாக நேரிடும் அதுதான் ஊடகவியலாளர் சந்திப்பில் நடந்தது ..செய்தியாளர்களை ஏன் உணர்ச்சிவய படுகிறீர்களென தண்ணீரை குடியுங்கள் .. தண்ணீர் கொடுங்கப்பா என்று சொன்ன அன்புமணி கடைசியில் தண்ணீர் குடிக்கவேண்டிய நிலைக்கு ஆளானார் .. .. பிறர் நிலை மட்டுமன்றி தன்நிலையும் அறிபவனே சாணக்கியன் .. ஆலஞ்சியார்

Sunday, February 24, 2019

அதிமுக தமிழகத்தின் அவமானம்

கனிமொழியை எதிர்த்து தமிழிசை நிறுத்தலாமென பாஜக மேலிடம் விரும்புவதாக செய்திகள் கசிகின்றன .. உண்மையில் பாவம் தோன்றுகிறது கனிமொழி கடந்த இரண்டு வருடங்களாக தூத்துக்குடியை கணக்கில் வைத்து காய் நகர்த்தியிருக்கிறார் தொடர்ந்து அதிகவனம் செலுத்தி தானே நேரடியாக சென்று களநிலவரத்தை கண்டு களமிறங்குகிறார் சென்ற தேர்தலில் திமுகவும் மதிமுகவும் அதிகளவில் வாக்குகளை பெற்ற தொகுதியும் கூட.மிக பாதுகாப்பான தொகுதி என்று கூட சொல்லலாம் .. தமிழிசை மீது என்ன கோபமோ தெரியவில்லை பலியாடாக நிறுத்த போகிறது .. மிகப்பெரியளவில் வாக்குகள் வேறுபாட்டை தரபோகிற தொகுதி.. .. இந்த தேர்தலில் மிக முக்கியமாக அதிமுகவின் இறுதி அத்தியாயத்தை எழுதுகிற தேர்தலாக இருக்கவேண்டும் எதற்காக பாசிச சக்திகளால் எம்ஜிஆரை கொண்டு அதிமுக தொடங்கபட்டதோ அதன் முழுமை பெற தொடங்கியிருக்கிறது .. எந்த தனிநபரின் ஆளுமையில்லாமல் மக்களால் தேர்வுசெய்யபடாதவர்களை அங்கீகாரமில்லாதவர்களை கொண்டு தமிழகத்தில் நடத்திவரும் அதிகாரமிக்கவர்களாக பாஜகவினர் செயல்படுகிறார்கள் அவர்கள் மீது வழக்கு தொடரபட்டால்கூட அது செயலிழந்துபோகிறது .. வெளிப்படையாக மதவெறியும் சாதிவெறியும் தூண்டபடுகிறது .. தமிழகம் விரும்பாதவைகள் திணிக்கபடுகின்றன அது மொழி கலாச்சாரம் மண் வளம் என எல்லாம் அழிக்கபடுகிறது ..வைகோ சொன்னதைப்போல பாஜகவிற்கோ மோடிக்கோ வாக்களிப்பது உங்கள் தலைமுறைக்கு கொள்ளிவைக்கிறாய் என்றே பொருள்.. .. பாஜக தலைமையிலான கூட்டணி .. ? அப்படிதான் அதிமுகவை மிரட்டி சொல்லவைக்கிறார்கள் .. தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள்தான் கடந்த ஐம்பதாண்டுகளாக தலைமையேற்றுயிருக்கிறது இவர்களின் அயோக்கியத்தனத்தால் இவர்கள் அடித்த கொள்ளையால் ஊழல்களால் பாஜக அரசிடம் பயந்து குலைநடுங்கி கிடக்கிறார்கள் .. நோட்டாவை கூட வெல்ல முடியாதவர்களுக்கு ஐந்து தொகுதியும் தலைமையுமாம்,.. யாரெல்லாம் கூட்டு நேற்றுவரை ஊழல் செய்துவிட்டார்கள் டயர்நக்கிகள் இவர்களுக்கெல்லாம் மந்திரியென்றால் என்னவென்று தெரியுமா நிர்வாகம் என்றால் தெரியுமா என்று .. கவர்னரிடம் 208 பக்க ஊழல் குற்றசாட்டை சொன்ன சாணக்கியன்..? திடீரென காலநக்கி நிற்பதும் .. நேற்றுவரை நாடாளுமன்றத்திலேயே பாஜகவால் தமிழகத்திற்கு இழைக்கபட்ட கொடுமைகளை பட்டியலிட்டவர் .. அதே பாஜகவை மீண்டும் ஆட்சியில் வருகிறார்களாம் .. எவ்வளவு கயமை கொஞ்சமும் அஞ்சாமல் மக்களை விலைக்கு வாங்கிவிடலாமென்ற திமிர் இவர்கள் முற்றிலுமாக விரட்டபடவேண்டியவர்கள் .. அதிமுக பாமக பாஜக கூட்டு.. தமிழர்களுக்கு எதிரான தமிழகத்திற்கெதிரான வேட்டு.. அதிமுக தமிழகத்திற்கு அவமானம்.. .. ஆலஞ்சியார்

Saturday, February 23, 2019

இனியேனும் நல்லவனாய்

நான் நானாக வேண்டும்.. இப்போது காணும் நான் நானில்லை.. .. நான் எனும் அகந்தை எப்போது வந்தது நான் நானானதாலா எப்போது சிரித்திடும் இயல்பில்லை இப்போது.. வந்தவர் யாரென்று பார்த்து பின் பேசும் வழக்கம் எனதில்லை வல்லனுக்காய் வழங்கி நிற்கும் செயல் எனதில்லை வந்து விழும் சொல்லில் .. பொய் சேர்ந்தததெப்போது அறிவில்லை அமுதமொழி தனை .. எனக்காய் கொஞ்சம் வளைத்தொடித்து ஏனென புரியவில்லை.. .. சிறு புள்ளியாய் இருந்தபோது என்னோடிருந்த நேர்மை.. பயிலும் போதும்.. நன்கு பயின்றவரோடு பயணித்தபோதும்.. நல்லவர் சபையை நாடி திரிந்தபோதும்.. நாடோடியாய்.. நல் மனிதரை சந்தித்து திரிந்த போதும் .. பசியறிந்த சாப்பிட்டாயா என முகம் தெரியா கிழவி கேட்டபோதும்.. பசி மறந்து தலையாட்டி கடந்தபோதும்.. கையில் காசின்றி.. நடந்தே சான்றோர் கூட்டத்தை காண.. அலைந்த போதும்.. ஊர்சுற்றி திரிந்து.. அந்திநேரத்தில்.. சில வயல்வெளி கூத்தை ரசித்து நின்றபோதும்.. சூரியன் மறையும் ..பின் எழும் நேரம் வரை வயலில் காவல் காத்து நெல் மூட்டை அருகே விழுந்து கிடந்தபோதும்.. பெரியப்பனனின் பேச்சை மீறா பொன் வசந்த காலம் அது .. .. பொய் சொல்லி பழக்கமில்லை.. வாசலில் நிற்கும் வறியவரை விரட்டியதில்லை இரக்கம் கொண்ட கண்கள் .. ஈகையோடு கூடிய எளிய வாழ்வு.. அப்பனின் அறிவு.. நடை நேர்த்தி.. அண்ணனின் நிமிர் ..திமிர்.. அன்பை மட்டுமே தந்த அம்மா.. யாரையும் முகம் சுழிக்க வைக்க்காதேவென்ற பெரியப்பன்.. சாவின் அருகில் நின்றாலும்.. தர்மத்தோடு பேசு.. எதிரியே ஆனாலும் எள்ளுவதை குறை.. நீ.. போராடும் எதிரி உனை விட தாழ்ந்தவனெனில் மோதாதே.. என்ற அப்பனின் அறிவுரை எங்கு போனது எல்லாம்.. .. இப்போது பேச தொடங்கும் முன் முகம் பார்க்கிறேன்.. அவன் தோற்றத்திற்கு தகுந்தாற்ப்போல் வந்து விழும் வார்த்தைகள்.. சத்தியமாய் எனதில்லை என்னுள் மிருகம் சட்டென்று கக்கிவிட்ட விசத்துளிகள் அவை.. எள்ளிநகையாடும் செயல்.. பலகாலம் என்னுள் அடங்கி கிடந்த மனபேய் செயல் அது.. முதுகுக்கு பின் சிரிப்போரை விடுத்து நேர்நின்று கதைப்போரின் மீது வாள் வீச சொன்னது என் சிற்றறிவு.. .. மாறுதல் வேண்டும் எப்போதும் நானாய்.. தப்பில்லா எண்ணமாய்.. தவறியும்..தீ சொல் பேசாத தீங்கிழைக்காத கடும் சொல் தவிர்த்து.. கவின் மிகு சொல்லெடுத்து உண்மையின் அருகாமையில் நின்று கதைக்கவேண்டும்.. வல்லவனை விடுத்து நல்லவனுக்காய் சிலகாலமேனும் உழைத்திட வேண்டும்.. .. இனியேனும் நல்லவனாய் வேண்டும்.. .. ஆலஞ்சியார்

Thursday, February 21, 2019

மக்களுக்கான இயக்கம் திமுக

மக்கள் கருத்து அறிதல் சிறந்த ஜனநாயக பாதை மக்களுக்கான இயக்கம் மக்களின் நலனில் அக்கறை கொண்ட கட்சி மக்களிடமே வெற்றி தோல்விகளில் இரண்டிலும் இரண்டற கலந்து பயணித்து வெற்றி நல்வாய்ப்பாகவும் தோல்வி இன்னும் உழைப்பதற்கானதாகவும் தம்மை தயார்படுத்திக்கொள்கிற கட்சி திமுக.. எது தேவை என அறிந்து எதுவெல்லாம் சரியோ அதை தேர்வுசெய்து கேட்காமலேயே தருகிற தலைவர் கலைஞர் எதை தடுத்துநிறுத்தவேண்டும் எதையெல்லாம் முதலில் செய்திட வேண்டுமென்ற ஆழ்ந்த அரசியல் அறிவின் செயல்வீராய் திகழ்ந்தார் அவரின் திட்டங்கள் காலங்கடந்தும் செயல்படுத்தபடுகின்றன எல்லைகளை கடந்து போற்றபடுகிறது பின்பற்றபடுகிறது தமிழகம் அடைந்த எல்லா நலனும் கலைஞர் பெருமகனின் அறிவில் சிந்தனையில் உதித்தவைகள் .. இன்றைக்கும் படும் துயரங்கள் எல்லாம் கலைஞரை அவசரபட்டு வேண்டாமென வைத்ததின் விளைவென்பதை மக்கள் உணருகிறார்கள் .. அந்த மாமனிதரின் இழப்பை எந்தவிதத்திலும் சரிகட்ட முடியாதென அறிவார்கள் .. .. கலைஞர் முழு அரசியல்வாதி என எதிர்முகாமில் இருந்த ராஜகோபாலச்சாரியார் சொன்னார் தன்னை அப்படிதான் செதுக்கிக்கொண்டார்.. முழுநேரமும் மக்களைப்பற்றி சிந்தித்த தலைவர் எந்தநிலையும் கொள்கைபிறழின்றி பெரியாரின் கனவுகளை நினைவாக்கியவர் .. அவர் தொடங்கிவைத்ததையெல்லாம் பாசிச அரசு மெல்ல அறுக்கபார்க்கிறது .. மழலைகளுக்கு கூட பொதுதேர்வை கொண்டுவரும் மாபாதக செயலை கொஞ்சமும்,கூச்சமின்றி செய்ய துணிகிறார்கள் மருத்துவகனவை எளிதாக்கி திறமையும் தகுதியும் இருந்தால் போதும் ஏழைகளும் மருத்துவராய் வரவேண்டுமென எண்ணி நுழைவுதேர்வை ரத்தாக்கியவர் விவாசயம் பொய்த்துபோய்விடகூடாதென்பதற்காக இலவசமின்சாரம் தந்து கடும் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து செயல்படுத்தியவர் .. சொல்லிக்கொண்டே போகலாம் அந்த பேரருளாளரை இழந்து நிற்கும் தமிழகத்தில் தான் தோன்றிகளாய் .. மக்கள் நலனைவிட தங்களை காத்துக்கொள்ள அடிமைசாசனம் எழுதி கொடுத்து காவிகளுக்கு கொள்கை எதிரிகளுக்கு வெண்சாமரம் வீசும் பேடிகளால் தமிழகம் படும் இன்னல்களை களைய வேண்டிய பெரும் பொறுப்பு திமுகவிற்கு உண்டு .. .. அரசும் ஊடகங்களும் மதவெறி கும்பலும் சாதிவெறியர்களும் பாசிச பாஜகவோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் கைகோர்த்து திமுகவை ஒரு படி கீழே வைக்க நினைக்கிறது தொடர் விமர்சனங்கள் களநிலவரத்தை மறைத்து திமுகவை பலவீனமான கட்சிப் போல காட்ட நினைக்கின்றன கள யதார்த்தத்தை யாரும் கணக்கில் கொள்வதில்லை .. அதிமுக பலவீனபட்டிருப்பதையும் பாமகவின் நிலை பரிதாபகரமாக இருப்பதையும் எழுத பேச மறுக்கின்றன .. திமுக எழுச்சி மக்களோடு தொடர்புடையது மக்களின் ஆதரவையும் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றது தளபதியின் உழைப்பும் அரசியல் நேர்மையும் தளராத தன்நம்பிக்கையும் விடாமுயற்சியும் மிகப்பெரிய பலனை தரும் .. மக்களுக்கான தலைவர் மக்கள் விரும்புகிற தலைவர் நிச்சயமாக அங்கீகாரம் பெறுவார் .. திமுக மக்களிடமே கருத்து கேட்பது மக்களின் பங்களிப்பை பெறவேண்டும் என்பதற்காக.. மக்களின் தேவைகள் நாட்டின் நலன் சார்ந்த விடயங்கள் மண் இனம் மொழி கலாச்சாரம் சிதையாமல் காத்திட.. நல்லதொரு ஆட்சியை தர தளபதியின் கரங்களில் மாபெரும் வெற்றியை தருவோம்,.. .. மக்களுக்கான தலைவர் தளபதி.. .. ஆலஞ்சியார்

Wednesday, February 20, 2019

களம்..

நான்... .....எனது களம்.. சிலநேரம்.. சூடாவேன்.. சுடும் தனலாய் சுட்டெரிக்கும் கொடுங்காற்றாய் பேரிரச்சலாய்..வருவேன் இளஞ்சுடாய் கதகதப்பாய் காதல் செய்வேன் சுவை தருவேன். மழையாவேன்.கவி .. மழையாவேன்.. சுடர் ஆவேன். சுட்டெரிப்பேன். ஆர்ப்பரிப்பேன்.. அடங்கா.. திமிராவேன் அலை ஆவேன்.. சில நேரம்.. கலையாவேன்.. ஆடும் மயிலாவேன்.. தமிழ் பாடும் குயிலாவேன். எதிரியை..கண்டால்.. சிலம்பெடுப்பேன்.. தமிழ்..சிலம்பெடுப்பேன். எனை தாக்கினால்.. பொறுத்தருள்வேன் என் தமிழையெனில் .. தலை கேட்பேன்.. எல்லா கிளைகளிலும் வந்தமர்வேன்.. அறிவார்ந்த சபையெனில் அமைதியாய் காதோர்ப்பேன்.. சான்றோர் சொற்களை சேகரிப்பேன் .. அறிவமுதம் எவ்விடமோ அவ்விடம் நானிருப்பேன்.. கொள்கை பேச கொட்டும் முரசடித்து வேழமிதேறி.. வருவேன்.. திராவிட திமிரோடு வருவேன் #எனதுகளம் தமிழாய்..தேனாய்.. சுவைக்கும்.. சிலநேரம்.. துவர்க்கும்.. வேம்பாய்.. ஆனாலும்..மருந்தாய். ஆரிய எதிர்ப்பாய் அமைதி கடலாய். அலங்கார திமிராய்.. அடங்கும் அன்பாய் தமிழ் தேராய். தாலாட்டும்..இசையாய் கதை பேசும் . காமம் சொல்லும் கவி தரும். காவியம் சொல்லும் இயல்பாய் எதிரிகளை.. சூறையாடும் தமிழ் வேலாய்.. திராவிடம் பேசும் பகுத்தறிவு சுடராய் பெரியாரை.. பேரறிஞரை பேரருளாளரை புகழ்பாடும் குயிலாய் எனது களம்.. .. ஆம் எனது களம்.. தேடலின்..தொடர்.. முடிவில்லா நெடுந்தொடர் .. .. ஆலஞ்சியார்

Tuesday, February 19, 2019

பாஜக பாமக அதிமுக

எல்லோரும் ராமதாஸை திட்டுகிறார்கள்.. அவர் எப்போது நேர்மையாக நடந்துக்கொண்டிருக்கிறார் சொந்த சமூகத்திடமே துரோகம் வஞ்சனை செய்து உலா வருகிறவர் நாட்டுமக்கள் நலன் நாட்டைப்பற்றிய கவலை என்பதெல்லாம் அவர் அறியாதது தன் மகனுக்கு பதவி அதற்காக யார் காலில் வேண்டுமானாலும் விழுவேன் பணம் பதவி அதற்காக எந்த வேலையும் செய்வேன் இதுதான் மரு.ராமதாஸ் .. .. மிக கேவலமாக பேசிவிட்டு தன் சமூக மக்களிடம் திரும்ப திரும்ப செல்ல முடிகிறதே .. தன் வாக்கு வங்கியை திராவிட கட்சிகளோடு சேர்ந்து நின்று குறிப்பிட்ட அளவில் .. தோல்வியை தழுவிய போதும் வைத்திருப்பது திராவிட கட்சிகளின் தயவால் என்பதை அறிந்ததால் தான் திரும்ப திரும்ப மாறி மாறி சவாரி செய்கிறார் .. மாற்றம் முன்னேற்றமென்று மகன் ஆசை பட்டாலும் அது பேரடியாய் விழுந்தது யாருமே கண்டுக்கொள்ளவில்லையென்றவுடன் பழைய முறையை கையிலெடுத்து மக்கள் காறி உமிழ்ந்தாலும் காசு சேர்க்கும் மார்க்கம் அறிந்திருக்கிறார் மரு.ராமதாஸ்.. .. அதிமுகவிற்கு தெரியும் இந்த முறை பேரடி விழுமென்று ஆனால் மெச்சபட்ட தோல்வியை தழுவினால் தினகரனிடமிருந்து உள்ளதையும் பிடிங்கிக்கொள்ளலாம் என்று ஜெயலலிதாவே தராத எண்ணிக்கையை தந்திருக்கிறார்கள்.. சென்ற தேர்தலில் நிலை வேறு இப்போது நிலைமை தலைகீழாக இருப்பதறிந்தும் எடப்பாடி மெகா கூட்டணியை உருவாக்கியிருக்கிறார் அதன் பலன் எதிர்பார்த்த அளவு கிடைக்காதெனினும் அதிமுகவை சொந்த கொண்டாடும் தினகரன் வகையறாகளுக்கு செக் வைக்கலாம் .. எழு, ஐந்து, பன்னிரண்டு தொகுதிகள் திமுகவிற்கு ஏறக்குறைய உறுதியானதைப்போலதான் .. வடமாவட்டத்தில் வாங்கி வங்கி பெருமளவில் சரிந்தநிலையில் பாஜகவோடான கூட்டு மக்களிடையே எதிர்மறையான தாக்குதலை தரும் .. மிச்சமுள்ள தொகுதிகளும் இதே நிலைதான் உருவாகும் எனினும் பன்னிரண்டு வெற்றி உறுதியாகிறநிலை தான் இப்போது .. வன்னியர்கள் மரு.ராமதாஸை அவரது முகநூல் பக்கத்திலேயே வறுத்தெடுக்கிறார்கள் உங்களை நம்பி இனி பயனில்லை .. மாற்றம் முன்னேற்றம் என்றது உங்கள் மகன் மருமகள் முன்னேற்றம்தானா ..? சமுதாய மக்களிடம் இனி எப்படி செல்வோமென்று ஒரே புலம்பல்கள் .. காரணம் தன் தகுதியை நினைக்காமல் அளவுக்குமீறி ஆசைபட்டு கடைசியில் அடிமைகளிடம் அடிமையானதுதான் மிச்சம் ..கடைசியில் மண்டியிட்ட மரு.ராமதாஸ் .. திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் .. பாஜக அதிமுக அரசு மீதான கடும் எதிர்ப்பும் மாறி மாறி சென்று கேவலபட்டுநிற்கிற பாமகவின் செயல்பாடும் மிகப்பெரிய தோல்வியை அதிமுக அணிக்கு தரும் .. பாஜகவோடு சேர்ந்து போட்டியிடுவது அதிமுகவினரிடம் கூட ஏமாற்றத்தை தந்திருக்கிறது .. வெற்றி எளிதென்று அலட்சியமாக இருந்திடாமல் களப்பணியை கவனமாக செய்தால் திமுக மிகப்பெரிய சக்தியாக இந்திய அரசியலில் செல்வாக்கு பெறும் .. .. ஆலஞ்சியார்

Monday, February 18, 2019

பாமகவை அப்புறபடுத்த வேண்டும்

எங்கு செல்வது என்று தெரியாமல் திணறுகிறது பாட்டாளி மக்கள் கட்சி அப்பனும் மகனும் ஆளுக்கொரு பக்கம் சாயலாமென விரும்புகிறார்கள் பாவம் ..சாதிகாரர்கள் வேறு மாவீரன்..? குருவின் குடும்பத்தை முன்னிறுத்த அன்புமணி எங்குநின்றாலும் அவரை எதிர்த்து வன்னியதாயை (குருவின் தாயாரை அப்படிதான் அழைக்கிறார்கள்) நிறுத்த போகிறார்களாம் .. சபரீசன் அன்புமணியை சந்தித்து பேசி வெற்றி பெற்ற பின்னர் என்னவெல்லாம் கிடைக்கும் என்றும் ஆசை ஊட்டுகிறாராம் பியூஸ் கோயல் அன்பு மணி ராமதாஸை போனில் தொடர்பு கொண்டு பேச முயன்று பிடிபடாமல் தப்பிக்க அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாமென பா ஜ க தரப்பில் அட்வைஸ் செய்யப்பட்டு உள்ளதாம் இந்த நிலையில் எங்கே போனால் என்ன கிடைக்கும் என்று ராமதாஸூம் அன்புமணியும் தடுமாறி நிற்கிறார்களாம் .. .. உண்மையில் விதைத்ததுதான் கிடைக்கிறது மாறி மாறி சவாரி செய்து எங்கே கூடுதல் இடங்கள் கிடைக்கிறதோ அங்கே கடை விரிக்கும் செயல் .. தான் செய்துதந்த உறுதிமொழியை மீறி சொந்த சமூகத்திடமே வினையை விதைத்தவர் சொன்ன வாக்குறுதிக்காக அன்புமணிக்கு மந்திரி பதவியை பெற்று தந்தது திமுக ஆனாலும் நன்றி என்ற சொல் இருப்பதே தெரியாமல் நடந்துக்கொண்டவர்கள் .. திராவிட கட்சிகளின் தயவிலேயே இன்றைய எல்லாம் கிடைத்தபோதும் (பதவி அங்கீகாரம்) திராவிட கட்சியால் தமிழகம் சீரழிந்து போய்விட்டதாக ஊர்தோறும் மேடைபோட்டு கத்தி .. மாற்றம் முன்னேற்றமென சொல்லி திரிந்து யாரும் கண்டுக்கொள்ளாமல் போனதுதான் மிச்சம் .. நேருக்குநேர் விவாதிக்க தயாரா .. அதற்கு தைரியமிருக்கிறதா என கேட்டு தமிழகத்திலேயே அரசியல் அறிந்த அறிஞரைப்போல பேசி.. கடைசியில் யாரும் கேட்பாரற்று பாமகவின் அங்கீகாரம் போனது தான் மிச்சம் .. எழு தருவாயா என கேட்ட வாய் கொடுப்பதை கொடுங்கள் என கெஞ்சுகிற நிலைக்கு வந்து நிற்கிற நிலைவரும் .. திராவிட கட்சிகளே வேண்டாமென வைத்தவர் .. அந்த கட்சிகளிடையே மாறி மாறி பேச வருகிறார் .. தனித்து நின்றால் பாமகவில் யாருமே இருக்கமாட்டார்கள் .. இனி திராவிடத்தில் தயவில் தான் காலம்தள்ளவேண்டும் .. .. இனி எக்காலத்திலும் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை 101% சதவிகிதம் கிடையாது வேண்டுமென்றால் எழுதி தருகிறேன் என்றெல்லாம் இனி மேல் பேசமாட்டேன் என இனியொரு சத்தியம் செய்துவிட்டால் போகிறது ..யாராவது சாதிகாரன் சட்டையை பிடித்து கேள்வி கேட்கவா போகிறான் .. படையாச்சி வம்சத்திலே பிறந்த இழிமகனே என கேள்வி எழுப்பவா போகிறான் .. பெற்ற தாயையே அசிங்கமா பேசியதை மறந்தவர்கள் தானே.. நானோ என் குடும்பத்தினரோ சட்டமன்ற நாடாளுமன்றத்தை மிதிக்கமாட்டோமென சத்தியம் செய்ததை ஏன் மகனுக்கு மகுடம் சூட்டினாய் என கேட்டார்களா என்ன..? .. மிக மோசமான நிலைக்கு பாமக தள்ளபட்டதற்கு ராமதாஸின் மகனுக்கு பதவி பெற்று தரவேண்டுமென்ற ஆசைதான் காரணம் .. பாமக தனித்து நின்றால் இருக்கிற இடமே தெரியாமல் போகும் திராவிட கட்சிகளின் தோளில் சவாரி செய்து மீண்டும் துளிர்விட காரணமாக கூடாது .. திராவிட சித்தாந்தத்தை கொள்கைகளை ஏளனமாக பேசி திரிந்துவிட்டு ..உலக உத்தமன் போல அறிவாளியை போல மற்றவர்களை எள்ளிநகையாடியவர்களை யாருமே கண்டுக்கொள்ளாமல் விட்டால் அரசியலில் இருந்து மக்கள் அப்புறபடுத்திவிடுவார்கள் .. .. ஆலஞ்சியார்

Sunday, February 17, 2019

பாசிசத்தின் குழந்தை

நான் அரசியலைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன் .. நிறைய பொருள் பொதிந்த வார்த்தை.. அரசியல்வாதிகளோடு பேசலாம் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறமால்..எந்தவொரு தேர்தலிலும் நிற்காமல், வெட்டிபேச்சு பேசிதிரிவோரோடு என்ன வேண்டிகிடக்கிறது .. தேர்தலில் நின்று முதலில் (டெபாசிட்) கட்டிவச்ச காசை திரும்ப பெற முடியுமா என்று பாருங்கள் எத்தனை விழுக்காடு வாக்குவரும் ஒரு விழுக்காட்டை கூட பெற முடியுமா என்ற சந்தேகத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் பதில் தரவேண்டுமா .. படத்தை திரையிட முடியாமல் போனதற்கு நாட்டை விட்டு ஓட நினைத்தவரெல்லாம் நாட்டை காக்க வந்த தெய்வம்..? போல் பேசிகிறார்கள் .. தூய்மையான கையாம் ஒழுங்கான அச்சிட்ட டிக்கெட் வசூலிக்காமல் எவ்வளவு வசூலெனதென கணக்கை காட்டாமல் கறுப்புபணத்தில் புழங்குகிறவர் யோக்கியனை போல பேசிவருகிறார். .. வேடிக்கை மனிதருக்கு இங்கென்ன வேலை யாரை எங்கே எப்படி அடிப்பதென்று எமக்கு தெரியும் அரசியல் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தவர்கள் கலைஞரெனும் அரசியலின் வழிதோன்றல்கள் அறுபதாண்டு காலமாய் ஆலமாய் தமிழர் நெஞ்சில் நின்றவர்கள் .. இங்கே அரசியல் அநாதைகளின் அழுகை சத்தங்கள் எங்கள் படையோட்டத்தில் கேட்பதில்லை .. .. திராவிடத்தின் நான்காம் தலைமுறை நாசுக்காவும் பேசும் புறடியில் பளிச்சென்று அடியும் கொடுக்கும், ஐம்பதாண்டுகால அரசியல் அனுபவமும் நீண்டநாள் பயிற்சியும் தலைவரின் வழிநடத்தலை நேரில் கண்டு படித்தவரிடம்.. திடீரென சினிமா வாய்ப்பிழந்தவர்கள் வந்து கதைக்க நினைப்பது அறியாமை .. எதிர்த்தவர்கள் இருக்குமிடமே தெரியாமல் போவதுதானே வாடிக்கை .. இந்த வேடிக்கை மனிதரும் காலப்போக்கில் காணாமல் போவார் .. சினிமாவில் வாய்ப்பு போனபிறகு யாரும் படத்தை வாங்க மறுத்த சூழலில் பிழைப்பிற்காக வந்தவர் .. இந்த விடயத்தில் ரஜினி சிறந்த வியாபாரி இன்னமும் அவரது படங்கள் வியாபாரம் ஆகின்றன பெருந்தொகை கொடுத்து திரையரங்களை ஏற்பாடு செய்கிறார்கள் .. கமலுக்கு விஸ்வரூபம் 2 ..வாங்க ஆளில்லை வந்த விலைக்கு தள்ளியும் பெரும் இழப்பை தந்ததால் .. வேறு வழியின்றி அரசியலை கையிலெடுக்கிறார் .. அவர் இன்னும் நிறைய அடி வாங்க வேண்டியிருக்கிறது அரசியலில் ஆழபுதைக்கபடுவார் .. முன்னெச்சரிக்கையாக ரஜினி தப்பித்துகொள்ளபார்க்கிறார் ரஜினி வியாபாரி தனது படங்களுக்கு இருக்கும் கிராக்கியை உணர்ந்து .. காற்றுள்ளவரை தூற்றுக்கொள்ளும் வழிதெரிந்தவர் .. ரஜினி வரமறுத்த சூழலில் பார்பன பாசிசம் ஆட்டுகுட்டியை நிறுத்துகிறது .. அரசியலில் கேனத்தனமாக பேசினால் சொல்லும் போகும் பல்லும் போகும்.. சேர்த்துகுழைத்து தேய்த்த சாந்து கரைந்து போகும் முகம் விளறிபோகும் .. அரசியலில் பாவம் பலியாடு சிக்கிகொள்ளும்,.. கமல் காங்கிரஸோடு பேச.. அவர்கள் திமுகவை கைகாட்டிவிட்டார்கள் அவர்களுக்கே ஒற்றை இலக்கமே கிடைக்குமென்கிற நிலையில் யாரோடு சேர முடியாத யாருக்கும் வேண்டாத நிலையில் திமுகவை குதற நினைக்கிறார் .. கிராமசபை கூட்டம் அவர் நடத்தினாராம் .. ஏற்கனவே நமக்கு நாமே நடத்தியவர்கள் .. உள்ளாட்சி தோறும் நல்லாட்சியை தந்தவர்கள் வெற்றி தோல்வி இரண்டிலும் மக்களோடு பயணிப்பவர்கள் அரசியலில் தவழும் குழந்தை நீர்..இன்னும் அரிச்சுவடியை கூட அறிந்திராத நிலை நாங்கள் அரசியல் பல்கலை கழகத்திடமே நேரடியாக பயின்றவர்கள் .. .. முதலில் அரசியல் கற்றுக்கொண்டு வரவும் .. .. ஆலஞ்சியார்

Saturday, February 16, 2019

அறம் வெல்லும்

தம்பிதுரை .. தப்பான இடத்தில் சரியான நபர் என்று கனிமொழி சொன்னபோதே சொன்னேன் .. இவன் காரியகாரன் தப்பான இடத்தில் சரியான நபர் இருக்கமுடியாது .. கொள்கை பிழைகள் இவர்கள் தன்மானமில்லாதவர்கள் திராவிடத்தை திராவிட சிந்தாத்தை பேசினால் தான் தங்கள் அடையாளத்தோடு இருப்பதாக நம்பவைக்க முடியும் ஆனால் செயல்கள் எப்படி இருந்தாலென்ன.. அதிமுக தொடங்கபட்டதே திராவிடத்தை தொடர் செயல்பாட்டிற்காக அல்ல திராவிடத்தை செயலிழக்க அல்லது அதன் வேகத்தை மட்டுபடுத்த இதுதான் பார்பனீய சித்தாந்திகளின் நோக்கமாக இருந்தது அது ஒரளவு வெற்றியும் பெற்றார்கள் .. சமயம்பார்த்து எம்ஜிஆரை கொண்டு திமுகவை உடைத்து மிக நல்லவரைப்போல ஊடகத் துணையோடு செய்தும் காட்டினர் எந்த சினிமாவெனும் மாஸ் மீடியா திமுகவிற்கு துணைநின்றதோ அதை வைத்தே திமுகவை அழிக்க தீட்டிய திட்டம் அது கவர்ச்சியிலும் சினிமா மோத்திலும் தமிழனை அடிமையாக்கிய காலகட்டத்தில் எம்ஜிஆரெனும் மாய மானை கொண்டு வீழ்த்தினார்கள் .. இக்கட்ட காலகட்டத்திலும் கொள்கையில் உறுதியும் , மக்களுக்காக உழைப்போம் என்ற தெளிவும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் கலைஞரிடம் இருந்தது எந்த சூழ்நிலையிலும் நிதானமாக மக்களை சந்திக்கிற நேர்மை மிகு பேராற்றல் அரசியல் தெளிவு எக்காரணத்திற்காக திராவிட இயக்கம் தோன்றியதோ அதில் இம்மியளவும் மாறாது சமூக சார்ந்த சிந்தனையோடு சமூகநீதியை நிலைநாட்டிட தொடர்ந்து களைப்பின்றி உழைப்போம் என கலைஞர் பெருமகன் பெரும் அரணாய் கழகத்தை காத்து நின்றார் .. நோக்கம் கொள்கை தெளிவின்றி தொடங்கபட்ட கட்சி கடைசியில் நோட்டாவிடம் தோற்கிற கட்சியிடம் மண்டியிடுகிற நிலை .. தமிழகத்தில் 2% விழுக்காடு வாக்குவங்கி இல்லாத பாஜகவோடு கேட்கிற தொகுதிகளை ஒதுக்க ஒப்புக் கொள்கிற அவலத்திற்கு வந்து நிற்கிறது .. .. தம்பிதுரை எங்கே தனக்கு தொகுதியே கிடைக்காமல் போய்விடுமோ என அஞ்சுகிற சூழல் இவர்கள் செய்த தில்லுமுல்லுகளை காட்டி பாஜக மிரட்டுவது வெளிப்படையாகவே தெரிகிறது 11 பேர் தகுதி நீக்க வழக்கை தாமதபடுத்துவதும் ..21 தொகுதி இடைத்தேர்தலை நடத்தாமல் காலங்தாழ்த்துவதற்கு பாஜகவின் தயவு தேவை என்பதால் இவர்கள் அடித்த கொள்ளையிலிருந்து காப்பாற்ற வழக்கு சிறையென்ற மிரட்டி அதிமுக பணியவைக்குகிறது .. அதனால் வீர வசனம் பேசி பாஜகவை கடுமையாக எதிர்த்து பேசுவதுபோல் பேசிவிட்டு வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு எதிர்த்து வாக்களிக்காமல் வெளியேறி மக்களை ஏமாற்றுகிற நாடகம் ஜெயலலிதா காலத்திலேயே பார்த்ததுதான் .. .. இவர்கள் மக்கள் முன் தோற்று போவார்கள் மக்களை மடையர்களாக எண்ணும் பாசிச சிந்தனையும் அதற்கு துணை போகிறவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் .. பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் சொன்னதைப்போல.. "வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதன் மூலம் நாடு தன்னிகரற்ற வளர்ச்சி அடையும். நான் நம்பிக்கை அற்றவன் ‌அல்ல .. நான் ஜனநாயகத்தை உறுதியாக நம்புகிறேன்" .. ஜனநாயகம் வெல்லும் இந்த கொள்ளையர்கள் கூட்டமும் கொலைக்கார கூட்டமும் விரட்டபடுவார்கள் அறம் வெல்லும் .. ஆலஞ்சியார்

Thursday, February 14, 2019

பாசிச பாஜக

திமுக காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி.. .. 2ஜி தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது அமித்ஷா.. .. 2ஜி வழக்கை பிரதமர் மன்மோகன்சிங் சிபிஐ விசாரிக்கட்டுமென விட்டார் .. அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவை பதவி விலக சொல்லி விசாரணையை சந்திக்க செய்தார் .. அவரும் கைது விசாரணை என எதற்கும் அஞ்சாமல் எதிர்கொண்டு புடம்போட்ட தங்கமாய் வெளியே வந்தார் .. திமுகவை அழிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக எங்கே திமுகவை தொடர்ந்து ஆட்சியில் இருக்க அனுமதித்தால் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சமூகநீதியை நிலைநாட்டிவிடுவார்கள் .. தமிழகத்தை போல பாசிசத்தை எதிர்க்கிற நிலமாய் ஒருங்கிணைந்த இந்தியாவை மாற்றிவிடுவார்களென அஞ்சி நீண்டநாட்களாய் தமிழகத்தில் நிழல் கூட படமுடியாதவாறு துரத்தியடிக்கிற நிலையை மாற்றிவிட இனியொரு வாய்ப்பு கிடைக்காதென்று ஊக அடிப்படையிலான கணக்கை பெரிதாக்கி இழப்புபென்பதை ஊழலாய் மாற்றி ஊடகங்கள் துணையோடு சாட்டையை சுழற்றியபோதும் அறம் வெல்லும் என்ற திமிரோடு ..அறிவுகொண்டு வீழ்த்தி ..வீண்பழியாய் சுமத்தபட்ட களங்கத்தை கலைஞர் வாழ்நாளுக்குள்ளாகவே துடைந்தெறிந்த இயக்கம் திமுக.. .. இதோ ..ரஃபேல் ஊழலை சிபிஐ விசாரிக்க அனுமதி மறுக்கிறவர் ..ஊழல் ஒழிப்பு சரத்தையே நீக்கி அறிந்தே ₹30,000 கோடியை திவாலான கம்பெனிக்கு கொடுத்தவர் ஊழல்வாதி இல்லையாம் .. நீதிமன்றத்தால் தண்டிக்கபட்ட குற்றவாளி ஜெயலலிதாவை தனது அமைச்சரவையின் மூத்த அமைச்சரை அனுப்பி சந்திக்க செய்தவர் .. யாரை நீதிபதியாக நியமிக்கலாமென்று குற்றவாளியிடமே கேட்டு யார் வழங்கிநிற்பாரென அறிந்து வழக்கை அவரிடம் தந்ததற்கு பெயர் ஊழலில்லையா .. நீதிபதிகளை மிரட்டி ..சொராபுதீன் கொலை வழக்கில் தீர்ப்பை சாதகமாக்கியதற்கு பெயர் என்ன..? மத கலவரத்தை தூண்டி குளிர்காய்கிற செயலை நாடெங்கும் நடத்திடும் முயற்சி தமிழகத்தில் ஈடேறவில்லை என்பதற்காக ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு .. அதிமுகவை மிரட்டி தங்களுக்கு சாதகமான செயலிகளை திட்டங்களை முன்னெடுப்பதற்கு என்ன பெயர் .. .. நாடெங்கும் பாஜகவின் முகத்தை கிழித்தெறிய தயாராகி வருகிறார்கள்.. உ.பி குஜராத் போன்ற வடமாநிலங்களில் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என்பதால் இங்கே தமிழகத்தில் அதிமுகவோடு சேர்ந்து சில இடங்களையாவது வெற்றிட வேண்டுமென்ற கனவில் முக்கிய தலைகள் அடிக்கடி உலாவருகின்றன .. ஒவ்வொரு முறையும் மக்கள் விரட்டியடிக்கிறார்கள் .. நோட்டாவை தாண்ட முடியாதவர்களுக்கு எட்டு தொகுதி பத்து தொகுதி வேண்டுமாம் .. ஐந்து விழுக்காடு வாக்கு வங்கியுள்ள பாமகவிற்கு நான்காம் .. இதிலிருந்தே அடிமை திமுக எந்தளவிற்கு கொள்ளையடித்து இவர்களிடம் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்களென தெரிகிறது .. ஊழலுக்காக சிறைக்கு சென்றவரின் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு அந்த ஊழலுக்கு உறுதுணையாய் நீதிமன்றத்தையே வளைத்தொடித்தவர்கள் ‍.. திமுகவை குறைகூற அருகதையில்லை .. திமுக மீது இதுவரை எந்த குற்றசாட்டும் நிரூபிக்கபட்டதாக வரலாறில்லை .. திமுகவை ஊழல் கட்சி என்று சொல்வதற்கு ஏதேனும் ஆதாரமிருந்தால் தரவேண்டும் .. ஏதோ வாய்புளித்ததென பேசி திரிவதால் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை .. .. தமிழகத்தில் பாஜகவோடு சேர்ந்ததால் அதிமுகவிற்கும் சேர்த்து இறுதி அத்தியாயத்தை எழுதிவிடுவார்கள் மக்கள் ..எச்சரிக்கை .. ஆலஞ்சியார்

Wednesday, February 13, 2019

பாஜக அரசியல்

"உச்சநீதிமன்ற" நீதிபதிகளையே அமித்ஷா, மோடியால் விலைக்கு வாங்க முடியும்" - கர்நாடக முன்னாள் பிஜேபி முதல்வர் எடியூரப்பா.. கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்கள் வெளியிட்ட கேசட்டில் எடியூரப்பா பேசியது அணி மாறி வந்தால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுக்கு 10 கோடி ரூபாயும் மந்திரி பதவியும் கொடுக்கப்படும் அதை எனது மகன் பணம் பட்டுவாடா செய்வான் உச்சநீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் மோடியும், அமித் ஷாவும் பார்த்து கொள்வார்கள்.. சபாநாயகருக்கு 50 கோடி கொடுத்துவிடலாம். மஹாராஷ்டிரா ஃபட்நாவிஸ் வந்து எல்லாம் பார்த்து கொள்வார்.".. .. பாஜகவின் ஆட்சி செய்கிற மாநிலங்களில் .. மக்கள் எதிராக வாக்களித்தும் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத போதும் வெறும் இரண்டே எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு அதிகாரத்தில் வந்த போதும் ஊடகங்களும் பொதுமக்களும் ஜனநாயகத்திற்கு தலைகுனிவு என கேள்வி எழுப்பாததால் இன்று அதே பாணியை கையாள்கிறார்கள் .. மக்கள் யாருக்கு வாக்களித்தால் என்ன நாங்கள் நினைத்தால் ஆட்சியமைப்போம் என்பது மிகபெரிய அநீதி மட்டுமல்ல ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைப்பதற்கு ஒப்பாகும்.. உச்சநீதிமன்றத்தையே வாங்கிவிட முடியுமென்பதலிருந்தே அவர்களின் மேலாதிக்கம் எந்தளவு அரசு நிர்வாகத்தில் இருக்கிறதென்பதும் எங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற தொனி தெரிகிறது .. ஆர்எஸ்எஸ் நீதித்துறையின் கைகளை கட்டிபோட்டிருக்கிறது .. அரசியல் சாசன சட்டத்தையெல்லாம் மீறி மநுநீதியை மட்டுமே செயலாக்குவோம் முடிந்தால் பார்த்து கொள்ளுங்களென . சட்டமன்ற சபாநாயகருக்கு ₹50 கோடி விலை பேசபடுவதையும் எம்எல்ஏக்களுக்கு₹10 கோடி மற்றும் அமைச்சர் பதவி என்ற ஆசைகாட்டி எந்த வழியென்றாலும் பரவாயில்லை அதிகாரத்தை அடையவேண்டுமென்று கங்கணம் கட்டி செயல்படுகிறார்கள் .. .. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு தான் ஜனநாயக மரபுகள் மீறபடுவதும் எதற்கும் விலைபேசலும் சாதாரணமாக நடைபெறுகிறது .. தமிழகத்தில் போதுமான பெரும்பான்மை இல்லை என்ற நிலையிலும் அதிமுக ஆட்சியை வைத்து நடத்தும் "சர்க்கார்" .. சட்டமன்ற உறுப்பினர்கள் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தேர்தலை நடத்தாமல் தமிழ்நாட்டிற்கு செய்கிற அநீதியை .. நீதிமன்றங்களும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதிலிருந்தே நீதிமன்றங்கள் அவர்கள் பிடியில் சிக்கியிருப்பது புரிகிறது .. வாக்குபதிவு இயந்திரத்தை அதிகாரி துணையோடு மத்திய பிரதேசத்தில் ஹோட்டல் ரூமில் கண்டெடுத்தும் தேர்தல் ஆணையம் என்ன செய்தது .. வாக்கிற்கு வெளிப்படையாக டோக்கன் கொடுத்தது அறிந்தும் இந்திய தேர்தல் ஆணையம் சுயமாக ஏதும் செய்ததா .. யாருக்காக இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேணிடும் ஆறுமாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டுமென விதிகள் இருந்தும் ஆளும் அதிமுகவை காப்பாற்ற ..பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறதோ என்ற எண்ணம் வெகுமக்கள் சந்தேகம் கொள்கிறார்கள் .. நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் எங்கள் பிடியில் என எடியூரப்பாவின் பேச்சு வெளிப்படையாகவே சொல்கிறது .. நேர்மையாக வெற்றி பெற முடியாதென்ற நிலையில் எதையாவது செய்து நெறிகெட்ட செயலானாலும் அதிகாரத்திற்கு வரவேண்டுமென்ற குறிக்கோள் ஆபத்தானது இது வேரறுக்கபடவேண்டும் .. இந்த பாசிச ஆட்சிக்கு மக்கள் எழுச்சி மூலமே முடிவுகட்டவேண்டும் .. மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸிக்கு தந்து .. இந்திய இறையாண்மையை.. ஜனநாயகத்தை வேற்றுமையில் ஒற்றுமையை காணும் பன்முக கலாச்சார பின்னணி கொண்ட இந்தியாவை காக்கவேண்டும் .. ஆலஞ்சியார்

Tuesday, February 12, 2019

மோடி வெறும் மாயை

பிரதமர் மோடியை ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என ராகுல்.. பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கூட தகவல் தரபடாத நிலையில் பிரதமர் மட்டுமே அறிந்திருந்த விடயம் அனில் அம்பானிக்கு தெரிந்திருந்திருக்கிறது .. இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு பத்துநாட்கள் முன்பு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்திருக்கிறார்.. மோடி யாருக்கு தரகர் வேலை பார்க்கிறார் .. ரகசிய காப்பை மீறிய செயல் தேசதுரோகம் .. இதுவரை எந்தோ பிரதமரையும் யாரும் இப்படி விமர்சனம் செய்ததில்லை .. மிக மோசமான பிரதமரென பெயர் எடுக்கிறார் .. ஆந்திரா சென்றவர் அங்கு சந்திரபாபு நாயுடுவை மாமனாருக்கு துரோகம் செய்தவரென பேசிவிட்டு வர .. சந்திரபாபு மோடியை கிழித்து தொங்கவிட்டார் .. 1999-ம் ஆண்டு நான் ஆந்திராவின் முதல்வராகப் பதவியேற்றேன். ஆனால் மோடி 2002-ம் ஆண்டுதான் குஜராத்தின் முதல்வரானார். நான் கடந்த 40 வருடங்களாக அரசியலில் உள்ளேன். நான் லோகேஷின் அப்பா .. உங்களுடைய அடையாளம் என்ன? .. முத்தலாக் பற்றிக் கருத்து கூறும் மோடி, நீங்கள் விவாகரத்து செய்யாமலே உங்கள் மனைவியைப் பிரிந்து வாழ்கிறீர்கள்... இதற்கு என்ன பதில்..? நான் என்.டி.ஆரின் மருமகன். அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் முறையாக வழங்கி வருகிறேன். அவரின் ஆசீர்வாதத்துடனே இந்தக் கட்சியை வழிநடத்தி வருகிறேன்... ஆனால் நீங்கள் உங்கள் குருவான அத்வானிக்கு என்ன மரியாதை செய்கிறீர்கள் குஜராத் கலவரம் கோத்ரா விவகாரத்தில் உங்களை பாதுகாத்த அத்வானிக்கு நீங்கள் தந்த மரியாதை என்ன..? மோடி என் குடும்பத்தையும் சொந்த விஷயங்களையும் விமர்சிக்கிறார். இப்போது நான் கூறும் கருத்துகள் என் தனிப்பட்ட கருத்துகளே எல்லை மீறி பேசினால் நாமும் அவர்கள் வழியிலேயே பதில் சொல்லவேண்டியிருக்கிறது ... .. மிக மட்டரகமான அரசியலை செய்துவருகிறது பாஜக .. பிரியங்கா டெல்லியில் இருக்கும் போது மார்டன் உடையணிகிறார் கிராமங்களுக்கு போனால் சேலை அணிகிறாரென பாஜகவினர் பேசுவதிலிருந்தே அவர்களின் தகுதி தரம் தெரிகிறது .. மோடியின் அரசியல் என்பது பொய்களாலும் .. மதவெறியாலும் மோசமான அரசியல் நகர்வுகளாலும் ஆனது .. இந்தியா கண்ட பிரதமர்களில் இவர் மட்டும்தான் என்ன படித்தார் எங்குபடித்தார் இவரின் ஆரம்பகால நிலை என்ன என்பது பற்றி யாருமே அறிந்திருக்கவில்லை ..டீ விற்றேன் என்ற தகவல் கூட மெய்பிக்கபடாததாக இருக்கிறது .. வாய்சொல் வீரராய் வலம் வரும் மோடி சிறந்த நிர்வாகியாகவோ நல்ல தலைமைபண்புள்ளவராகவோ, சிறந்த தலைவராகவோ இல்லை .. எல்லாம் பொய் எதிலும் ஒளிவுமறைவு .. நேர்மையற்ற செயல் ஊழலை ஒழிப்பதாக சொல்லி ஊழல் செய்தவர்களை காப்பாற்ற.. ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழலுக்கு எதிரான சரத்து நீக்கியது மோசடியாளர்களை காப்பாற்ற துணை நிற்பது இதுதான் மோடி .. பாசிச பாஜக வீழித்தபடவேண்டும் .. .. ஆலஞ்சியார்

Monday, February 11, 2019

காதல்

காதல் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் இணைந்து சுற்றுவது விபச்சாரம் ..தவ்ஹீத்ஜமாத் .. இவர்கள் யார் எது விபச்சாரமென முடிவு செய்ய ஒருவரின் தனி சுதந்திரத்தில் தலையிட இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது காதல் ஏதோ கெட்ட காரியம் போலவும் இவர்கள் மட்டுமே ஒழுக்கமானவர்கள் போலவும் இவர்கள் மட்டுமே சிறந்தபாதையில் செல்வது போலவும் எத்தனைகாலம் ஏமாற்றி திரிவார்கள் .. ஒரு பெண்ணும் ஆணும் தனித்திருந்தாலே அவர்கள் கெட்டவர்கள் என்பதைபோல இவர்கள் பேசி திரிவது எந்தவகை நாகரீகம் .. .. காதல் புனிதமானதென்றெல்லாம் சப்பைகட்ட வரவில்லை மாறாக காதல் இயல்பானது ஒவ்வொருவர் மனதிலும் வந்து போகும் உணர்வு யாரை யாரை வேண்டுமானாலும் விரும்புவதற்கோ வெறுப்பதற்கோ தடைபோட நாம் யார் .. எது தேவையென உணரும் போது அவர்கள் தங்களுக்கு நம்பிக்கை தருகிறவர்களை நேசிப்பது ஏதோ மிகப்பெரிய குற்றம் போல சித்தரிக்கிறார்கள் ஏதோ ஒன்றிரண்டு தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் காதலில் புரிதலில் பிழையாகி மகிழ்ச்சியை இழந்திருக்கலாம் தவறான தேர்வால் துன்பம் ஏற்பட்டிருக்கலாம் இது காதலில் மட்டும் நிகழ்வதில்லை .. அதற்காக அத்தனை பேரையும் ஒரே நோக்கில் காண்பது அறிவுடைசெயலா .. மதம் தலைக்கேறி விவரகேடுகளின் செயல் இது .. மற்றவர்களை நோக்கி குற்றம்சுமத்துகிறவர்கள் தங்களை நியாயவான்களாக காட்ட நினைத்து தோல்வி கண்டவர்கள்.. தனிமனித செயல்களை இவர்கள் வரையறுக்க நினைப்பது அடிமுட்டாள்தனம் .. மதவெறி முத்திப்போய் தன்னை சுற்றி நிகழும் இயல்பான விடயங்களை கூட குற்றம் காண்கிற போக்கு ஆபத்தானது .. யாருடைய நடத்தையையும் குற்றம் சுமத்த நமக்கென்ன அருகதை இருக்கிறதென்று தவ்ஹீத்ஜமாத் முதலில் யோசிக்கவேண்டும் .. .. இஸ்லாமியர்களிடையே காதல் வந்ததே இல்லையா பண்டைய அரேபிய தேசத்து வரலாற்றை படித்துபார்த்தால் காதலின் உணர்வு புரியும் .. காதல் எத்தனை ரசகரமானதென்று நமக்கு விளங்கும் .. இஸ்லாமிய அறிஞர்கள் பலரின் வரலாற்றில் காதல் பேசும்பொருளாக இருந்திருக்கிறது .. காதல் அன்பின் அடையாளமாய் .. இல்லற வாழ்வின் வாக்குறுதியாய் இருந்த வரலாற்று நிகழ்வுகள் நிறைய காணலாம் .. "கணவனிடமிருந்து பிரிந்த பெண்ணை திருமணம் முடிக்க .. அவர் "இத்தா " இருக்கிற காலத்தில் வாக்குறுதியை தராதீர்கள் உங்கள் மனதில் இருப்பதை அவர் அறிவார் எனினும்" .. என்ற நபிமொழி எத்தனை தூய்மையான காதல்மொழி .. .. பித்தர்களே மதம் தலைக்கேறி செய்வதறியாது உளறிக்கொட்டுகிறீர் .. மற்றவர்களை குறை கூறும் முன் சுயம் பரிசோதித்துக்கொள்ளுங்கள் .. சொந்த சமுதாயத்திலேயே குழப்பத்தை விளைவித்து .. உறவெனும் பிடிப்புள்ள கயிற்றை அறுத்து .. சேர்ந்துவாழந்த சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி .. மதபோதகர் என்ற பெயரில் காமலீலைகளை அரங்கேற்றி .. அசிங்கபட்டு சமுதாயத்தையே கேவலபடவைத்தவர்கள் .. பொது சமூகத்திற்கு புத்தி சொல்ல தகுதியை இழக்கிறீர் .. முதலில் தனி மனித ஒழுக்கம் நேர்மை ஒற்றுமை நேசம் அன்பு ..காதல் இவற்றையெல்லாம் அறிந்துகொள்ளுங்கள் காதலென்பது அன்பின் வெளிப்பாடு காதல் என்பது தன்நம்பிக்கை தரும் தன்னையே மெருகூட்டும் தன்னையே உயர்வாக எண்ணவைக்கும் அழகிய உணர்வு .. காதல் .. ஆலஞ்சியார் .. வரைபடம் Egalivan..

Sunday, February 10, 2019

உள்ளே வராதே

மூன்று முறையம் உலகளவில் டிரண்ட் ஆகிறது #gobackmodi .. ஏன் இந்தளவிற்கு விரட்ட்விரட்டி அடிக்கிறார்கள் இதுவரை எத்தனையோ பிரதமர்கள் வந்ததில்லையா வேண்டாதவராக இருந்தாலும் பரமவைரியாக கருதினாலும் மௌனமாய் கறுப்புக்கொடிகாட்டியிருக்கிறார்களே தவிர இப்படி உலகளவிற்கு அசிங்கபடுத்தியதில்லை .. காரணம் தமிழகத்தில் நேரடியாக களமிறங்க முடியாதென்று அறிந்து மறைமுகமாக ஆட்சியில் அதிகாரம் செலுத்துவதும்.. தமிழக மக்களின் நலன்களை புறக்கணித்து தமிழக மக்கள் விரும்பாதவற்றை திணிப்பதும் தமிழக மாணவர்களின் உயர்கல்வியை கேள்விக்குறியாக்கியதும் .. தமிழகத்தில் மதவெறியை கலவரத்தை தூண்ட எச்.ராசா போன்றவர்களை பயன்படுத்தி தொடர்ந்து தமிழர்ளை தேசவிரோதியாக சித்தரிப்பதும் மக்கள் மனதில் வெறுப்பை அதிகரித்திருக்கிறது .. தமிழகம் தொடங்கிவைத்த உள்ளே வராதே திரும்பி போ என்ற சொல் .. பிற மாநிலத்தினரும் மோடிக்கெதிராக திருப்பியிருக்கிறது .. கேரளம் அஸ்ஸாம் ஆந்திரா என .. பட்டியல் நீள்கிறது .. .. பாஜக மீதான வெறுப்பு .. மோடி மீதான கோபம் மக்களிடம் எந்தளவிற்கு இருக்கிறதென்பதை தொடர்ந்து உலகில் முதலிடமாக்குவதிலிருந்தே புரிந்துக்கொள்ளலாம் .. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரே இரவில் மக்களை நடுத்தெருவில் நிறுத்தியவரை .. ₹380 இருந்த எரிவாயுவை ₹1000த்தை தொடவைத்தவரை .. நான் வந்தால் டாலர் மதிப்பை நாற்பதாக்குவேன் என்று சொல்லி நான்கரையாண்டில் 70 தை தொடவைத்தவரை நீட் தேர்வை கொண்டுவந்து சாமானியர் வீட்டு குழந்தைகளின் மருத்துவகனவை தகர்த்தவரை ..கஜா புயலால் கடும்பாதிப்புக்குள்ளாகியும் கண்டுகொள்ளாதவரை.. தமிழகம் வேண்டாமென்கிற ஸ்டெர்லைட் மீத்தேன் திட்டங்களை இரும்புகரம் கொண்டு மக்கள் மீது திணிப்பவரை.. சிறு தொழில்களை நசுக்கி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வெண்சாமரம் வீசுபவரை .. வாய் திறந்தால் பொய் பொய் .. குஜராத்தைப்போல இந்தியாவை கொண்டுவருவதாக சொல்லி கடைசியில் குஜராத்தே வளர்ச்சியடையவில்லை என்ற உண்மை விளங்கியவுடன் .. போட்டேஷாப் செய்து ஏமாற்றியது தெரிந்தவுடன் மோடியை வா மோடி என்றா ..சொல்வார்கள் ...போ மோனே மோடி என்றும் NoEntry என்றும் தான் சொல்வார்கள் .. .. திருப்பூரில் ப.சிதம்பரத்திற்கெதிராக பேசியிருக்கிறார் .. கருத்துவேறுபாடுகளிலிருந்தாலும் ப.சிதம்பரம் அறிவாளி என்பதிலோ சிறந்த நிர்வாகி என்பதிலோ மாற்று கருத்து இல்லை அவரோடு நேருக்குநேர் நின்று புரிதலோடு விவாதிக்க மோடிக்கு நிச்சயம் தைரியமில்லை அதற்கான தகுதியும் இல்லை கடைசியில் நான் ஏழைத்தாயின் மகன் என்று சொல்லி அனுதாபத்தை பெற முடியாதா என்று பார்க்கிறார்.. பொய்யில் பிறந்த பொய்யிலே வளர்ந்தவர் குஜராத் கலவரத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தபட்ட கொடூரதாக்குதல்களை கண்டுகொள்ளாமல் இருந்து அன்றைய பிரதமர் வாஜ்பாயே அரச தர்மத்தோடு நடந்துக்கொள்ளுங்கள் என்றார்.. அதுவே தகுதியாய் ஆர்எஸ்எஸ் இவரை பிரதமராக்கியது .. தகுதியும் திறமையும் அற்றவரை நாடு திரும்பி போ என்கிறது .. இன்று.. ஆம் இந்தியாவே மோடியை விரட்ட தொடங்கியிருக்கிறது .. இது இன்னும் இன்னும் தொடரும் .. பாசிசபாஜகவை மோடியை ஆட்சியிலிருந்து இறக்குகிறவரை ஓயாது .. .. உள்ளே வராதே .. ஆலஞ்சியார்

Saturday, February 9, 2019

திருப்பி போ

#GobackModi.. ராஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மிக கடுமையான முறையில் சிக்கி கொண்டதாக இன்று அநேகமான நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அன்றைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய கடிதத்தில் எந்த டீலிங்காக இருந்தாலும் மோடியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்பதே மிக முக்கியமானதாக பேசபடுகிறது.. தி இந்து பத்திரிக்கை ஆசிரியர் நிர்மலா மீது எந்த குற்றசாட்டும் இல்லாத போது ஏன் பிரதமரை காப்பாற்ற இவ்வளவு முயற்சிக்கிறாரென கேள்வி எழுப்பியிருக்கிறார் .. மோடிக்கு எதிராக குற்றசாட்டின் கைகள் நீள்வதால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக பத்திரிக்கைகள் எழுதுகின்றன ..இந்த பிரச்சினையில் இருந்து அவ்வளவு எளிதாக வெளியே வர முடியாது என்பது தான் உண்மையாகும்...ஏனெனில் ஆட்சி மாறும் நிலையில் மோடி விசாரணையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது .. .. திரு.ராகுல் நேரடியாக திருடரென குற்றம்சாட்டி பேசிவருகிறார்.. நேற்றுவரை ஊழலுக்கெதிரானவராக இதே ஊடகங்களால் கட்டமைக்கபட்ட பிம்பம் தகர்ந்தெறி தொடங்கியிருக்கிறது வெற்று கூச்சலும் வீராப்பும்,பொய்பித்தலாட்டமும் வாய்சவடாலும் நீண்டநாள் நிலைத்துநிற்காதென்று நீண்டகாலம் தாங்கிபிடிக்கமுடியாதென்று ஊடகங்கள் தூக்கியெறிய தயாராகியிருப்பது ஊடக அறம் இன்னமும் மிச்சமிருப்பதை உணர்த்துகிறது .. 2019 தேர்தல் பாஜகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் .. .. தென்னகத்தில் தமிழகம் கேரளாவை தொடர்ந்து ஆந்திராவில் GoBackModi என்ற பதாகைகளை பிரமாண்டமாக நிறுத்தியிருக்கிறார்கள் கறுப்புநாள் என ஆந்திர முதல்வர் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.. இந்திய வரலாற்றில் ஒரு பிரதமரை வராதே போ என எந்த மாநிலமும் சொன்னதில்லை .. எதிர்ப்புகள் இருந்திருக்கின்றன மிக மோசமான தோல்வியை தந்திருக்கிறார்கள் ஆனால் உள்ளே வராதே என்று கேவலபடுத்தியதில்லை தமிழ்நாட்டில் உணர்வுபூர்வமாகவே பாஜக மீதான சித்தாந்த எதிர்நிலை பாசிசத்தை விரட்ட வேண்டுமென்ற எண்ணம் தமிழக மக்களின் மனதில் பதிந்துபோன ஒன்று .. ஆனால் ஆந்திராவில் அப்படியில்லை இப்போது அங்கும் மோடி மீதான கோபம் பெருமளவில் கூடியிருப்பது பாஜக அரசின் செயல்பாடுகளும் ஆந்திராவிற்கான நலதிட்டங்களை கண்டுகொள்ளாமல் காலங்கிடத்தியதும் மோடி மீதான வெறுப்பை அதிகபடுத்தியிருக்கிறது .. மிக மோசமான எதிர்ப்பை வெறுப்பை சந்திக்கிற பிரதமராக மோடி இருக்கிறார் .. .. தமிழகத்தில் தொடர்ந்து மோடியை கறுப்புகொடிகாட்டியும் பலூன்கள் பறக்கவிட்டும் விரட்டாத குறையாக மரியாதை செய்கிறார்கள் நாளை திருப்பூர் வருகிறார்.. திருப்பூரில் சிறுதொழிலை நசுக்கி அல்ல அழித்து பல்லாயிரணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை இழக்க செய்து முதலாளியாக வலம்வந்தவர்களை கூலி தொழிலாளிக்கிய பெருமை மோடி அரசையே சாரும் .. தமிழகத்தில் தனித்து நின்று நோட்டோவை மிஞ்ச முடியாதவர்கள் அதிக தொகுதிகளை ஒதுக்கும் நிலைக்கு அதிமுக வந்திருக்கிறதென்றால் அதிமுகவின் நிலை மிக பரிதாபகரமாக இருக்கிறதென்றே பொருள் .. பாஜகவின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள் இவர்கள் அடித்த கொள்ளையை கண்டுக்கொள்ளாமல் காப்பாற்றுகிற கேடுகெட்ட செயலை பாஜக செய்கிறது ..ஊழலுக்கு எதிரான இயக்கத்தை தொடங்குவதாக சொல்லி ஊழலில் திளைத்துநிற்கிற அதிமுகவினரை காப்பாற்றி .. அதிமுகவை அபகரிக்க செயலை மக்கள் புரிந்திருக்கிறார்கள் ... .. தமிழகத்தை தொடர்ந்து கேரளம் ஆந்திரா என விரிவடையும் மோடிக்கெதிரான GobackModi கோஷம் ...வடமாநிலங்களில் வியாபிக்க தொடங்கியிருக்கிறது அரசியல் அறநெறியற்ற ஜனநாயக மரபுகளை காற்றில் பறக்கவிட்ட மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்து மதவெறியை தூண்டி நாட்டை குட்டிசுவராக்கிய மோடி அரசை.. பாசிச பாஜக அரசை.. ஆர்எஸ்எஸின் மறைமுக ஆட்சியை விரட்டிட இப்போதே தொடங்குவோம் .. #ModiNeverAgain #IndiaHatesModi #GoBackModi .. ஆலஞ்சியார்

Friday, February 8, 2019

தளபதிபடை தரணி ஆளும்

ஒரே மாதம் 12,167 கிராமங்கள் ஒன்னரை லட்சம் திமுகவினர் எழுபத்தி ஐந்து லட்சம் மக்களை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் ..இல்லை கலந்துரையாடியிருக்கிறார்கள் .. மிக சிறந்த களப்பணியாக இதை கருதுகிறேன் ஜனநாயகத்தின் வேர்களை தேடிய இந்த பயணம் மிக சிறந்த மக்கள் எழுச்சியை தரும் .. மாநில அரசாலும் மத்தியில் ஆளும் பாசிச அரசின் கொடுங்கையாலும் ஏமாற்றபட்டு சொல்லண்ணா துயரத்தில் சிக்கி தவிக்கும் மக்களின் இறுதி நம்பிக்கையாக திமுக இருப்பதில் மகிழ்ச்சி.. ஆனால் அதோடு முடிந்ததல்ல .. தேர்தல் களப்பணி என்பது வாக்குகளை ஒருங்கிணைத்து அதை சரியாக தேர்தல்நாளன்று திமுகவை நோக்கியதாக மாற்றும் பெரும்பணி நமக்கிருக்கிறது .. எதிரிகள் சிரமபட்டு வாக்குகள் திமுகவிற்கு செல்வதை தடுக்க பெரும்முயற்சி எடுப்பார்கள் .. ஜாதிய வன்முறை மதவெறியை தூண்டுவார்கள் பொய் பிரசாரங்களை நடிகர்களை கொண்டு புதியதொரு மாற்றத்தை தூய்மை தரபோவதாக கூட பேசிதிரிவார்கள் மக்களின் மனநிலையை துசை திருப்ப எதையெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும் நெறியின்றி செய்ய துணிவார்கள் ..பொய்யும் பணமும் பேசுபொருளாக்கபடும் எப்படியேனும் திமுகவிற்கு செல்லும் வாக்குகளை மடைமாற்ற முடியாதா..? என செயல்படுவார்கள் அத்தனையையும் கடந்து வெற்றியொன்றே குறிக்கோளாய் செயல்பட வேண்டிய தருணம்,.. யார்யாரை கூட்டணியில் சேர்க்கலாமென்று சமூக வலைதளங்களில் விவாதிப்பதும் யாரை சேர்க்கலாமென பரிந்துரைப்பதும் தேவையில்லாதது தலைமைக்கும் கழக நிர்வாகிகளுக்கும் நம்மை விட துல்லியமாக கணிக்கும் ஆற்றல் உண்டு யாரோடு சேர்ந்து பயணிக்கவேண்டுமென்ற திறமைமிகு செயல்திட்டம் உண்டு கொள்கையில் பிறழாமல் கட்சியை வழிநடத்தும் பேராற்றல் தளபதிக்கு உண்டு .. இக்கட்டான காலகட்டத்தில் நாட்டை நல்லவர்களிடம் ஒப்படைக்க மக்கள் விரும்புகிறார்கள் ..மதவெறியை தூண்டி குளிரிகாய்கிற குள்ளநரிகளிடமிருந்து தேசத்தை மீட்க குறிப்பிட்ட வர்க்கத்தினருக்காக ஒட்டுமொத்த மக்களையும் நடுத்தெருவில் நிறுத்திய கேடுகெட்டவர்களை விரட்டிட இந்திய அரசை வழிநடத்தும் பேராற்றலை கண்டு அவர்களோடு இணைந்து நாட்டின் நாசசக்திகளை விரட்டிட தளபதியை கையில் பெரும் வெற்றியை சேர்த்திட உழைக்கவேண்டும் .. .. எங்கு திரும்பினாலும் திமுக கொடிகள், கூட்டங்கள் கிராமங்கள் தோறும் மக்களின் தன்னெழுச்சி.. இந்த பாசிசத்தின் காலடியில் மண்டியிட்டு கிடக்கும் மூடர்களை விரட்டவேண்டுமென்பதற்காக மக்களின் பேராதரவை திமுகவிற்கு வருவது கண்டு எதிரிகளுக்குப் பயம் வரத்தானே செய்யும்.. புலம்பத்தானே செய்வார்கள்.. அதையெல்லாம் கணக்கில் கொள்ள தேவையில்லை .. அதிமுக அணியில் நோட்டாவை தாண்ட முடியாத கட்சியான பாஜகவிற்கு இரட்டை இலக்கில் தொகுதி ஒதுக்குவதிலிருந்தே அதிமுகவினர் எந்தவளவிற்கு அவர்கள் பிடியில் இருக்கிறார்களென தெரிகிறது வசமாக மாடிடிக்கொண்ட விழிபிதுங்கி நிற்கிற கோழைகளாய் அதிமுகவினர் நிற்பது கண்டு தமிழகமே சிரிக்கிறது .. மிகப்பெரிய தோல்வியை அதிமுக அணி சந்திக்கும் .. கீழ்வானம் சிவக்கும் இருள் விலகும் உதயசூரியன் மெல்லென சிரிப்பான் தளபதிபடை தரணி ஆளும் .. .. ஆலஞ்சியார்

Thursday, February 7, 2019

அழுக்கர்கள்

திமுகவுடன் கூட்டணி இல்லை திமுக ஊழல் கட்சி ..அழுக்குபொதியை சுமக்க மாட்டோம்..கமல் .. கமலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை ஆனால் பொதுவாக நவீன முற்போக்குவாதிகள் புதிதாய் கட்சி தொடங்குபவர்கள் அரசியல் கட்சிகள் ஆரம்பித்தவுடனேயே திமுகவை தொடர்ந்து ஊழல்கட்சி என்பதைபோல பேசி சித்தரித்துவருவதை மறுக்கவேண்டியதிருக்கிறது.. இதுவரை எந்த வழக்கிலாவது திமுக தலைமையோ அல்லது பிரதான தலைவர்களோ நீதிமன்றத்தால் தண்டிக்கபட்டிருக்கிறார்களா .. திமுக மீது சுமத்தபபட்ட குற்றசாட்டுகளில் இந்த ஐம்பது ஆண்டுகளில் ஏதேனும் ஒருவழக்கில் ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கபட்டிருக்கிறதா.. கட்சி ஆரம்பிக்கறவனெல்லாம் திமுகவை ஊழல்கட்சி என்று சொல்வதின் சூட்சமம் இதுதான் .. திமுக எதிர்த்தால் தான் அறியபடுவோம் என்கிற அரசியல் அறிவு தெரிந்திருக்கிறது அவ்வளவுதான் .. .. விடுதலை இந்தியாவின் முதல் ஊழல் குற்றசாட்டு டி.டி கிருஷ்ணம்மாச்சாரி என்ற காங்கிரஸ்காரர் மீதுதான் நேரு அமைச்சரவையிலிருந்து பதவி விலக நேர்ந்தது பார்பனர் என்பதால் இதுவரை அந்த ஊழல்பற்றி யாரும் பேசுவதில்லை .. விடுதலை இந்தியாவில் முதல்வராக நீதிமன்றம் சென்று குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு சென்ற பாப்பாத்தி ஜெயலலிதாவை பற்றி தியாக சீலர் அளவிற்கு பேசுகிறார்கள் அரசே மக்கள் வரிப்பணத்தில் நினைவுமண்டபம் அமைக்கிறது பாரத ரத்னா வழங்கவேண்டுமென கேட்கிற அவலமெல்லாம் நடக்கிறது தண்டிக்கபட்டு நிபந்தனை பிணையில் இருந்தவரை மத்திய அரசின் நிதியமைச்சரே நேரில் சந்தித்தார் .. அப்போதெல்லாம் வாய் திறக்காத முற்போக்கு பாப்பான் திமுகவை குறை கூறவேண்டுமென்பதற்காக ஊழல்கட்சி என்கிறார் .. வாய்புளித்ததென்று சொல்லி திரிகிறவர்களுக்கு முடிந்தால் திமுக மீதான குற்றசாட்டை நிரூபியுங்கள் ..எந்த வழக்கையும் கண்டு அஞ்சியதில்லை ..வாய்தா வாங்கி ஓடியொளிந்ததில்லை நீதிமன்றத்தில் எனக்கு வியாதி இருக்கிறதென சலுகை கேட்கவில்லை சட்டப்படி எதிர்கொண்டு பொய்குற்றசாட்டை தவிடுபொடியாக்கி நெருப்பில் இட்ட பொன்னை போல மிளிர்கிறது திமுக .. .. ஏதோ இவர்கள் மட்டும்தான் உத்தமசீலர்கள் போல பாவலா காட்டுகிறார்கள் கறுப்புபணம் அதிகம் புழங்கும் சினிமாதுறையில் இருந்து வந்து வாங்குகிற சம்பளத்தை கூட பாதி வெள்ளையாகவும் மீதி கறுப்பாகவும் பெறுகிறவர்கள் உத்தம நடிகனாய் வலம் வந்தால் நம்பிவிடுவார்களென காலம்போன காலத்தில் கதைத்து திரிகிறவர்களுக்கு .. அரசியல் புகலிடம் அல்ல என்பதை உணர்த்தவேண்டும் .. திமுக அழுக்காம் .. பழைமை கூட அழுக்காய்தான் தோன்றும் .. எம் பாட்டானின் அறிவு சுவடிகளை பழசை எரிக்க வேண்டுமென சொல்லி தீயிலிட்டு போகி கொண்டாடியவர்களின் வாரிசு தான் மீண்டும் அழுக்கென்று வருகிறது .. அரசியலில் கண்ட கழிசடைகளும் வரலாமென்ற எண்ணம் தாம் அழுக்கானது ..என்றாவது மக்களுக்காக போராடியோ பரிந்து பேசியோ அவரின் துயரங்களுக்காக வாதாடியோ அவர்களின் தேவைகளைப்பற்றிய அறிவோ இல்லாமல் சினிமா வாய்ப்பு குறைந்தவுடன் நேராக அரசியலுக்கு வந்து திமுகவை திட்டினால் தான் அரசியலில் பிழைக்கமுடியுமென்ற பழைய யுக்தியை கையிலெடுக்கிறார்கள்.. எடுத்தவனெல்லாம் இருக்குமிடமே தெரியாமல் போனதாக தான் வரலாறு .. எச்சரிக்கை.. .. அழுக்கர்கள்

Wednesday, February 6, 2019

அதிமுக தலையில் தொங்கும் தூக்குகயிறு பாஜக

விகடன் பா ஜ க வுடன் அ தி மு க கூட்டணி அமைத்து போட்டியிட்டால் நாங்கள் நிச்சயமாக நாங்கள் அ தி மு க விற்கு வாக்களிக்க மாட்டோம் என்பதே தமிழ் நாட்டில் பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது... அதி மு க தனித்து போட்டியிட்டால் வாக்களிப்பீர்களா ?..என்ற கேள்விக்கு நிச்சயமாக நாங்கள் அ தி மு க விற்கும் வாக்களிக்க மாட்டோம். ஏனெனில் வெற்றி பெற்று பின்னர் மீண்டும் அவர்கள் பா ஜ க விற்குதான் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் கருத்தை தெரிவித்ததாக விகடன் கருத்துகணிப்பு சொல்கிறது .. .. மிகையில்லை அதிமுகவிற்கு வாக்களிப்பதென்பது இன்றைய சூழலில் அது பாஜகவிற்கு மட்டுமே பலன்தரும் தமிழகத்தின் பாஜக செல்வாக்கென்பது ஏறக்குறைய பூஜ்யம் நிலையில்தான் இருக்கிறது ஆனால் அதை தூக்கிபிடிக்க வேண்டிய நெருக்கடியில் அதிமுக இருப்பதுதான் கொடுமை வேறு வழியில்லை .. அவர்கள் மீது இருக்கும் வழக்குகள் கொள்ளையடித்ததின் தெளிவுகள் வெளிப்படையாகவே ஊழல் இவையாவும் அவர்களை கைகட்டி சேவகம் செய்ய வைக்கிறது .. பாஜக தன்மையாகவெல்லாம் இல்லை மிரட்டுகிற தொனியில் தான் செயல்பாடுகள் இருக்கின்றன எந்த தொகுதி என்பதை கூட அவர்களே தீர்மானிக்க நிலை .. பாமகவை விட வாக்குவங்கி குறைவாக இருந்தபோதும் அதிக இடங்களை கேட்கிற துணிவு எங்கிருந்து வந்தது நேட்டாவை கூட தாண்ட முடியாத கட்சி பிரதான ஆளும்கட்சியிடம் எண்ணிக்கை அதிகமாக கேட்கிறதென்றால் காரணம் இவர்களின் குடுமி அவர்கள் கையில் வேறுவழியின்றி தலையாட்டுகிற கேடுகெட்டநிலை .. பேராசையில் பதவி மோகத்தில் கிடைத்த வாய்ப்பை வைத்து முடிந்தளவு சுருட்டிக்கொண்டு போய்விடவேண்டுமென்ற தவிப்பில் செய்த தில்லுமுல்லுகள் இப்போது நிற்க வக்கில்லாதவனை தோளில் சுமக்கவேண்டிய நிலை அதனால் தான் மக்கள் மிக தெளிவாக அதிமுகவிற்கு வாக்களித்தாலும் தேர்தலுக்கு பிறகு அவர்கள் பாஜகவோடு கூட்டணி வைப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் .. .. அதிமுகவின் நிலை பரிதாபகரமாக இருப்பதையே இப்போதைய நிகழ்வுகள் காட்டுகிறது .. கொள்கைப்பிடிப்போ அரசியல் தெளிவோ இல்லாமல் கருணாநிதியை எதிர்க்கவேண்டுமென்ற ஒற்றை நோக்கத்திற்காக அதையே பலமாக எண்ணி தொடங்கபட்ட கட்சி எம்ஜிஆர் எனும் கவர்ச்சியும் அறுபது எழுபதுகளில் சினிமா மீதான மோகமும் நிழலை நிஜமென நம்பிய அறியாமையும் காலபோக்கில் ஏற்பட்ட தெளிவில் மெல்ல கரைய தொடங்கியது .. அதை பார்பனீய சக்திகள் தங்களின் நலனுக்காக கட்டிகாத்தார்கள் திமுக எதிர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுகவின் செயல்கள் பாதகம் தருமென்றும் அறிந்து ஊடகத்தின் துணையோடு அதிமுகவை காத்தார்கள் .. அதிமுக என்பதே பாசிசத்தின் மற்றொரு வடிவமாகதான் காத்துநின்றார்கள் இடையிடையே துளிர்விட நினைத்தபோது மக்கள் தந்த மரண அடி .. அவர்களை வளரவிடாமல் தடுத்துநின்றது .. ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிக்கி குற்றம் நிரூபிக்கபட்டபின் .. தொடர்ந்து சிறை விடுதலை மேல்முறையீடென ஜெயலலிதாவை காத்து கட்சியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுக்க தீட்டிய திட்டம் இப்போது கைகொடுக்கிறது .. ஆனால் களம் வேறுமாதிரியான உண்மை உணர்த்தும் போது புரியும் ..இன்னும் எத்தனை காலமானாலும் பாசிச பார்பன சக்திகள் இங்கே வேரூன்ற முடியாது எத்தனை மாறுவேடம் தரித்தாலும் கண்டு சின்னபின்னமாக்கி சிதறி ஓடவிடுவார்கள் தமிழர்கள் .. .. தமிழுக்கு தமிழர்க்கு தமிழ் மண்ணுக்கு தமிழனின் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் இந்த பாசிச பார்பனர்கள் .. தமிழனை அடிமைபடுத்திட நினைக்கிற இவர்கள் இயல்பை எப்போதும் விரட்டுவார்கள் .. பாஜக என்பதே பார்பனர் நலனுக்கான கட்சி அதை தூக்கிவைத்து கொண்டாட நினைத்தால் அதிமுக அழிய தொடங்கும் .. எப்போதுமே பாஜகவை ஏற்காத தமிழக மக்களின் மனநிலையை தான் விகடன் கருத்துகணிப்பு சொல்கிறது .. அதிமுக தலையில் தொங்கும் தூக்குகயிறு பாஜக .. ஆலஞ்சியார்

Tuesday, February 5, 2019

அரசியல் பிழை

ராமதாஸ் .. இன்றைக்கு சமூகவலைதளங்களில் அதிகம் பேசபட்டிருக்கிறார் முன்பு பேசியவைகளை எல்லாம் மீண்டும் மீண்டும் எடுத்து பதிவிடுகிறார்கள் .. கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் .. கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும்... என்று பேசிய வசனங்கள் மீண்டும் ஒளியிழையை எடுத்து போட்டு பாவம் பாமககாரர்களை நெளிய செய்கிறார்கள் .. திமுக அதிமுகவோடு கூட்டணி இல்லையென எழுதி கையெழுத்து போட்டுதரவா என்றெல்லாம் கேட்கிறார் .. நாமெல்லாம் மறந்து போனதை சமூகவலைத்தளங்களில் இட்டு ராமதாஸுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக எண்ணினால் அது தவறு அவர் எப்போது அரசியலில் நேர்மையோடு நடந்திருக்கிறார் .. ஜெயலலிதாவோடு பிணங்கி வெளியே வந்த போது அவர் சொன்ன வார்த்தை சுய தெளிவுள்ள எந்த மனிதனும் சொல்ல முடியாத வார்த்தை .. வன்னியர் சங்கமாக இருந்த போது தன் சமூக மக்களிடத்தில் நன்மதிப்பை நம்பிக்கையை பெற சத்தியம் செய்தார் .. நானோ என் குடும்பத்தினரோ சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ செல்ல மாட்டோம் என்ற உறுதிமொழியை தந்தார் .. தன்னை நம்புகிற வன்னிய சொந்தகளிடமே பொய் பேசி தன் நலன் தன் குடும்ப நலன் மட்டுமே குறிக்கோளாய் செயல்படுபவர் .. பாமக என்பது வன்னியருக்கான கட்சி என்பது கூட தவறு .. அது ராமதாஸ் குடும்ப நலனுக்கான கட்சி அவ்வளவுதான் .. .. திராவிட கட்சிகளோடு 102% விழுக்காடு கூட்டணி இல்லையென்றவர் திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன என்று மாற்றம் முன்னேற்றம் என்று வகுப்பதெடுத்தவர் ..தன்னை மட்டுமே அறிவாளியாக எண்ணிக்கொண்டு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்றவர் .. தனித்துவிடப்பட்ட நிலையில் யாருமே கண்டுக்கொள்ளாமல் போக வேறுவழியின்றி தனக்கு எம்பி பதவியாவது கிடைக்காதா என்ற நப்பாசையில் எதையும் இழக்க தயார் என கேவலபட்டுநிற்கிறார் .. ஆரம்பகாலங்களில் 6% விழுக்காடு வாக்குவங்கி குறைந்து குறைந்து வடமாவட்டங்களில் செல்வாக்கை இழந்து கட்டிவச்சகாசை (டெபாசிட்) கூட இழந்த நிலையில் கட்சியின் அங்கீகாரம் பறிக்கபடுகிற நிலைக்கு ஆளாகி நிற்கிறார் .. பாமகவின் வாக்கு வங்கியான வன்னியர்களிடையே சாதிவெறியை தூண்டி .. தாழ்த்தபட்ட மக்களின் மீதான தாக்குதல்கள் அவர்களின் குடிசைகளை கொளுத்துதல் என இளைஞர்களை வழிகெடுத்து கட்டமைக்கபட்டது .. சாதிவெறி நீண்டநாள் கைகொடுக்காது என்பதை உணரவே இல்லை .. எப்போதெல்லாம் தொய்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சாதிவன்மத்தை தூண்டி குளிர்காய்ந்ததின் விளைவு சொந்த சமூகமக்களாலேயே புறக்கணிக்கபடுகிற சூழல் வந்தது .. சாதியோ மதமோ அரசியல் சிலகாலம் நிற்க உதவுமே தவிர நீண்டநாள் பயனிக்க முடியாது .. இன்றைய ட்விடில் ராமதாஸ் https://twitter.com/drramadoss/status/1092679587027251201?s=19 நாடாளுமன்ற கூட்டணி குறித்து தவறான தகவல்களை ஊடகங்கள் தருவதாக சொல்கிறார் யாரை திருப்திபடுத்த இதை செய்கின்றன என்கிறவர் ஊடகங்கள் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் தரகுவேலை பார்க்க கூடாதென்று ட்விட் செய்திருக்கிறார் .. அறமென்றால் என்னவென்று தெரியுமா .. இவர் இதுவரை அரசியலில் எடுத்த நிலைபாடுகளும் அதற்காக அவர் சொன்ன காரணங்களும் அறம் சார்ந்துதான் இருந்ததா ..? அரசியலில் நெறிகெட்ட ஈன செயலை கூட கொஞ்சமும் கூச்சமின்றி செய்தது யார் அரசியலில் குறைந்தபட்ச நம்பிக்கையையாவது இனி கடைபிடித்திருக்கிறாரா அடுத்தவர்களை பிற கட்சிகளை கொள்கை ரீதியாக எதிர்ப்பதென்பதில் தவறில்லை மாறி மாறி கூட்டணி வைப்பது கூட சரியான காரணவிடயங்காக இருக்கவேண்டும் சமூகசார்ந்த அக்கறையும் .. நாட்டின் நலனும் மக்கள் விரோத ஆட்சியை எதிர்க்க இருக்கவேண்டுமே தவிர .. சுயநலனுக்கானதாக மாறி மாறி சவாரி செய்தல் எப்படி அரசியல் நெறியாகும் மொத்தத்தில் ராமதாஸ் நெறிகெட்ட அரசியல்வியாபாரி அவ்வளவுதான்.. .. #ராமதாஸ்_ஓர்_அரசியல்பிழை ..

Sunday, February 3, 2019

மதவெறியை சாய்ப்போம்

இத்தனை காலம் மத்தியில் கூட்டாச்சியில் இருந்த திராவிட கட்சிகளால் என்ன பயனை தமிழகம் அடைந்தது .. நிர்மலா சீதாராமன்,.. அதுசரி .. மக்களோடு கலந்து மக்கள் தேர்தெடுத்து நாடாளுமன்ற உறுப்பினராகி மந்திரியாகியிருந்தால் தெரிந்திருக்கும் ..தமிழ் தெரிந்த பிராமணருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டுமென்பதற்காக.. மக்களால் தேர்வு செய்யபட்ட பொன்னருக்கு கூட தராமல் கேபினட் அந்தஸ்து கிடைத்தவருக்கு திமுக அமைச்சரவையில் இருந்தபோது தமிழகம் பெற்ற நலன்கள் என்னென்ன என்பதெல்லாம் தெரியாது .. .. வி.பி.சிங் ஆட்சிகாலத்தில் பிராமணர்களின் கடும் எதிர்ப்பிற்கிடையே மண்டல்கமிஷன் பரிந்துரையை சட்டமாக்கி இன்றுவரை 27% விழுக்காடு பிற்படுத்தபட்டோர் இடஒதுக்கீடு கிடைக்கிறதே .. எரிச்சல் வரதான் செய்யும் .. தொலைதொடர்ப்பை எளிதாக்கி சாமானியன் கைகளிலும் தந்ததே .. பெரிய முதலாளிகளின் கொள்ளையை தடுத்து .. விளிப்பதற்கு ₹3.75 காசுகள் என்றிருந்ததை .50 காசுகள் என்றாக்கியதே அதனால் 2ஜி என்ற மாய எண்ணை வைத்து திமுகவை அழிக்க நினைத்து .. புடம்போட்ட தங்கமாய் திமுகவும் ராசாவும் மின்னுவது கண்டு எரிச்சல் வரதான் செய்யும் .. இன்னுமிருக்கிறது பொடா சட்டத்தை ரத்து செய்ய குரல் கொடுத்தது, சென்வாட் வரி ரத்து உறுதிமொழியை நிறைவேற்றியது, காவிரி நடுவர் மன்றம் அமைத்தது, காவிரி நதிநீர் தொடர்பான இடைக்காலத் தீர்ப்பைப் பெற்றது. இடைக்காலத் தீர்ப்பின்படி காவிரி நதிநீர் ஆணையம் அமைத்தது..காவிரி இறுதித் தீர்ப்பைப் பெற்றது நீண்டகாலமாய் பல்வேறு அறிஞர்கள் வலியுறுத்தியும் பார்பனர்களால் தடுத்து நிறுத்திய தமிழை நீசமொழியென்று சொன்னவர்கள் வாயடைக்க எங்கள் தமிழை #செம்மொழி ஆக்கியது .. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைத்தது, காமராஜர் எண்ணூர் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தது, 3 ஆயிரத்து 276 கி.மீ. நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றி, மேம்பாலங்கள் அமைத்து, விரிவாக்கம் செய்தது, சேலம் ரோலிங் மில் சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தியது, தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவியது, சேலத்திற்கென தனி ரயில்வே கோட்டம், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது, சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், சேதுசமுத்திர திட்டம், நெம்மேலியில் கடல் நீர் சுத்திகரிக்கும் திட்டம், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் சாலைகளை அகலப்படுத்தும் திட்டம், அனைத்து மீட்டர் கேஜ் ரெயில் பாதைகளையும் பிராட் கேஜ் பாதைகளாக மாற்ற ஒப்புதல் பெறப்பட்டது, 90 ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டது, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம், ஒகனேக்கல் குடிநீர் திட்டம், தேசிய கடல்சார் பல்கலைக்கழகம், திருவாரூரில் தேசிய பல்கலைக்கழகம், திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் அமைத்தது.. மத்திய அரசின் மூலம் ரூ.72 ஆயிரம் கோடி விவசாயக் கடன் மற்றும் வட்டி தள்ளுபடி, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி போன்ற சாதனை திட்டங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சிகாலத்தில் மத்திய அரசின் மூலமாக நிகழ்த்தப்பட்டுள்ளன... .. ஆனால் வளர்ச்சி திட்டங்களை கண்டு பாசிச சக்திகள் கோபம் கொள்ளவில்லை .. மத்திய கல்வி வேலைவாய்ப்பில் 27% விழுக்காடு பிற்படுத்தபட்டோருக்கு வழங்கியது .. தீக்குளித்தெல்லாம் தடுக்க பார்த்தார்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள் .. திமுக ஆட்சிகிகு வந்தால் மத்திய அரசில் அங்கம் வகித்தால் தமிழர்கள் மேலும் மேலும் பலன்பெறுவார்களே.. இங்கே மதவாதத்தை சாதிவெறியை தூண்டி .. சூத்திரனை அடித்துக்கொள்ளவைத்து .. சத்தமில்லாமல் பார்பனர்களை உயர்பதவிகளுக்கும் பிற உயர்க்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அமர்த்திட முடியாமல் போகுமே என்ற அச்சம் தான் உளறவைத்திருக்கிறது ..பாஜக அரசால் தமிழர்கள் தமிழ்நாடு அடைந்த பயன் ஒன்றுமில்லை .. நோட்டோவை தாண்ட முடியாத நிலையில் அடிமைகள் வைத்து ஏதேனும் நன்மையடைந்திட முடியாத என்ற நப்பாசையில் உலா வருகிறார்கள் .. பாவம் புதைத்த சுடவே தெரியாமல் அழிய நேரிடும் திராவிடம் எப்போதும் ஆரியத்திற்கு பாசிசத்திற்கு பிராமணீயத்திற்கு எதிரானது .. இங்கே பார்பனசூழ்ச்சி பலிக்காது வேறு இடம் பார்க்கவும் .. நிர்மலா சீதாராமன் .. யாரென்றே தெரியாதவர்களெல்லாம் பாஜக ஆட்சியில் இருப்பதால் துள்ளுகிறார்கள்.. நாட்கள் எண்ணபடுகின்றன விரட்டியடிக்கபட்டு.. புதியதொரு அத்தியாயம் குறிக்கபடும் மதவெறியை சாய்க்க தமிழகம் என்றும் முன் நிற்கும் .. .. ஆலஞ்சியார்

Saturday, February 2, 2019

திமுக மக்களுக்கான இயக்கம்

ஊராட்சி கூட்டமென்று ஊர் ஊராய் போகிறார் ஸ்டாலின் .. எடப்பாடி .. மக்களை சந்திப்பதில் என்ன தவறு மக்களின் ஆட்சியில் மக்களே தீர்மானிக்கும் சக்தியாய் இருப்பவர்கள் ..ஜனநாயகத்தின் அடிப்படையே,மக்களின் தனிஉரிமையும் அவர்கள் யாரை தேர்வு செய்யவேண்டுமென்று சுயமாய் தீர்மானிக்கும் அதிகாரம் பெறுவதுதான் .. மக்களின் விருப்பு வெறுப்பு அவர்களுக்கு என்ன தேவை எது உடனடி தேவை என்பதறிந்து செயல்படுதல் இது தான ஜனநாயக ஆட்சியின் கடமை .. ஆளும் அரசும் முதல்வரும் அவர் சகாக்களும் மக்களை சந்திக்க துணிவின்றி தவிர்க்கிற நிலையில் எதிர்க்கட்சி தலைவராய் .. மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தின் தலைவராய் அவரும் அவரின் சகாக்களும் தொண்டர்களும் மக்களை சந்திப்பது ஏன் முதல்வருக்கு எரிச்சலை தரவேண்டும் .. .. உள்ளாட்சி தேர்தலை நடத்த வக்கில்லாமல் நீதிமன்றம் உத்தரவிட்டும் காலம் கடத்தி ஜனநாயகத்தின் உயிர்ஊற்று உள்ளாட்சி அதிகாரத்தில் இருக்கிறதென்ற உண்மைகூட அறியாமல் எங்கே உள்ளாட்சி தேர்தலை வைத்தால் மிகப்பெரிய தோல்வியை மக்கள் தந்துவிடுவார்களென அஞ்சி தொடர்ந்து ஏதேதோ காரணங்களை சொல்லி வரும் அதிமுக அரசு .. முன்பு அப்படிதான் எம்ஜிஆர் உள்ளாட்சி தேர்தலையே நடத்தாமல் தவிர்க்க .. கடைசியில் வேறு வழியின்றி நடத்தியதில் 98 நகராட்சிகளில் 90 இடங்களில் திமுக பிடித்ததும் வரலாறு .. மக்களே தங்கள் தேவைகளை கண்டு தீர்வு செய்துகொள்ள எதுவெல்லாம் அவர்களின் அடிப்படையென்பதை அவர்களே முடிவு செய்து தங்கள் வட்டத்திற்குள் முழு அதிகாரத்தோடு செயல்படவே உள்ளாட்சி அமைப்புகள் .. சிற்றூர்களின் (கிராமம்) வளர்ச்சி நலன் சுகாதாரம் போன்ற அடிப்படைகள் கவனிப்பாற்று அவசர தேவைகளுக்கு கூட அதிகாரிகளை நம்பி பின் செல்லகூடிய நிலை .. அதிகாரவர்க்கத்தில் பிடியில் உள்ளாட்சிகள் இருப்பது ஜனநாயகத்தையே கேலிபொருளாக்குகிற செயல் ..இவையெல்லாம் திடீரென்று ஒரு நாளில் சசிகலா சிறைசெல்ல நேர்ந்ததால் முதல்வர் பதவி கிடைத்த எடப்பாடிக்கு தெரியாது .. அன்று எடப்பாடிக்கு பதில் சசிகலா யாரை கைகாட்டியிருந்தாலும் அவர்தான் இன்று முதல்வராய் இருந்திருப்பார் .. எந்தவிதத்திலும் அருகதையற்ற அரசாய் விளங்குகிற அதிமுகவும் அதன் அமைச்சர்களும் தங்களின் ஊழலை மறைக்க அதிலிருந்து தப்பிக்க பாஜகவின் உத்தரவிற்கு கட்டுபட்டு அடிமைகளாய் இருக்கிறார்கள் .. அவர்களுக்கு மக்களை சந்திக்கிற செயல் அதிர்ச்சியை தொந்தரவை தந்திருக்கிறது .. .. ஊராட்சி சபை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு கேள்விகேட்கிறார்கள் திமுகவிற்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல வாக்களிக்காதோரும் எதிர்த்து வாக்களித்தோரும் கூட தங்களின் கேள்விகளை தங்கள் தரப்பு கோரிக்கைகளை நியாயங்களை எடுத்துவைக்கிறார்கள் தவறை சுட்டிகாட்டிகிறார்கள் எது எங்களின் தேவை எதிலெல்லாம் நாங்கள் பாதிக்கபட்டிருக்கிறோம் இந்த ஆட்சி செய்த துரோகங்கள் எதிர்க்கட்சியாய் திமுக செய்ய தவறியதென்ன என்பதையெல்லாம் மக்களே முன்வந்து கேட்கிறார்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள் .. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எதையெல்லாம் செய்யவேண்டும் எதுவெல்லாம் முதல் தேவை எதை தவிர்க்க வேண்டுமென்று மக்களிடமே கேட்டு தெரிந்து தெளிவுபெறுகிற நிகழ்வு ..மிக சிறந்த ஜனநாயகதன்மையோடு மக்களே மகேசன் என்ற உயர் தத்துவத்தின் உயிர்நாடியாய் ஊராட்சி சபை கூட்டங்கள் .. எடப்பாடிக்கு என்றில்லை ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதோருக்கு அரசியலை தங்கள் நலன் பதவிக்கு என செயல்படுவோருக்கும் சாதிமத அரசியல் செய்யும் அயோக்கியர்களுக்கு எரிச்சல் தரத்தான் செய்யும் .. .. திமுக மிகசிறந்த பாதையில் பயணிக்கிறது மக்களிடமே சென்று அவர்களின் தேவைகளை அவர்களிடமிருந்தே அறிந்து பணியாற்று வாய்ப்பை பெறும் ஜனநாயக நெறியோடு செயல்படுகிறது .. எல்லாகாலகட்டத்திலும் வெற்றி தோல்வியிலும் மக்களிடமே செல்கிற இயக்கம் .. பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் நல்லாட்சியை தந்த.. தரபோகிற இயக்கம் ..விடுதலை இந்தியாவில் உட்சபட்ச ஜனநாயகநெறிகளோடு வெளிப்படைதன்மையோடு இயங்குகிற கட்சி திமுக மட்டும் தான் .. .. திமுக மக்கள் இயக்கம் மக்களுககான இயக்கம்.. .. ஆலஞ்சியார்