Thursday, May 4, 2023

திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டாண்டுகள் ..
முதலில் நம் அன்பையும் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும்  தமிழ்நாடு முதலமைச்சர் மாண்பமை மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சொல்வோம் ..
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
..
அரசு ..
மக்கள் நிம்மதியாக  நல்லதொரு ஆட்சி கிடைத்ததை எண்ணி மகிழ்வதும் சில நேரம் ஊடலாய் பிணங்குவதும் இரண்டாண்டில் வெளிப்படையாக தெரிகிறது .. சில தவறுகள் பொதுவெளியில் பேசுபொருளாக்கி அதை வைத்து குளிர்காய நினைக்கும் சிலரின் நோக்கத்திற்கு தீனி போடுவதாய் அமைகிறது அரசின் செயல்பாடுகள் .. விமர்சனங்களையும் வாழ்த்துகளையும் ஒரே தட்டில் பார்பவர்கள் தான் நாம், .. ஆனால் இங்கே விமர்சிக்கபடுவதற்கு காரணியாக அமைவது சிலரின் செயல்பாடுகள் என்பதுதான் உண்மைகட்சியையும் அரசையும் வெவ்வேறாக பார்க்கவேண்டும் தான் ஆனால் இயக்கம் தான் நமக்கு அதிகாரத்தை பெற்று தந்ததென்பதில் வேறு கருத்துண்டா என்ன.. ?
..
அரசின் செயல்பாடுகள் கட்சிவேறுபாடின்றி பாராட்டும் எதிர்க்கவும் செய்பவர்கள் கூட தலைவரின் நேர்மையையும் ஆட்சி திறனையும் குறை சொல்வதில்லை .. ஆனால் கட்சிகாரன் போர்வையில் சில "நேர்மையாளர்" வேசம் கட்டுபவர்களின் அலப்பறைகள் தாங்கமுடியவில்லை .. எந்தவொரு செயலையும் திட்டத்தையும் உடனே விடிவு தேவை என எண்ணுபவர்களால் உடனே பார்த்தாயா இனி கூப்புதான் என்று அறிந்தே பிதற்றும் நடுநிலைகளால் நிறைய தேவைக்கதிகமாக விமர்சனத்திற்கு மௌனம் காக்கிறோம் என்றே நினைக்கிறேன் .. 
அவர்களால் நமக்கு தகுதியுள்ள எதிரியை இனங்காட்ட முடியவில்லையென்ற இயலாமையை புரிந்துக்கொள்ளமுடிகிறது .. ஆனால் "திமுககாரன் " என்கிறவரின் உடனடி தீர்வு சகிக்கவில்லை.. 
..
சில இஸ்லாமிய அமைப்புகள் எது செய்தாலும் உடனே பார் திமுக பாஜகவிற்கு ஒத்தூதுகிறதென பொங்குகிறார்கள்.. இந்த அரசு அனைவருக்குமானது .. எல்லாநிலையிலும் எதிர்க்க புறக்கணிக்கவேண்டியதில்லை என்ற புரிதல் இல்லை .. கொள்கையில் சமரசமில்லாது அதேவேளை அவர்களின் உணர்வுக்கும் மதிப்பளிப்பதுதான் சிறந்த அரசிற்கு அழகு .. 
..
அரசை குறைகூறவே கூடாதா என கேட்போருக்கும் எல்லாம் உரிமையும் உண்டு உண்மையாய் விமர்சனத்திற்கு மதிப்பளிக்க கடமைபட்டிருக்கிறது திமுக அரசு .. அரைகுறையோடு வாட்ஸ்ஆப் வதந்திக்கெல்லாம் பொங்கவேண்டாம் .. 12 மணிநேர வேலைத்திட்டத்தை திமுக தொழிற்சங்கமே (தொமுச)  எதிர்த்ததே .. கூட்டணி கட்சிகளும் எதிர்த்ததன உடனே முதலமைச்சர் கனிவோடு பரிசிலித்து நிறுத்தினார் .. விமர்சனத்தையும் ஏற்கும் அரசு இது என்பதற்கு இதுவே சான்று ..
..
திமுக ..
உள்ளடி வேலைகளில் சிலர் ஈடுபடுவதும், அதை சில அதிகாரமிக்கவர்கள் தொண்டர்களை கண்டுக்கொள்ளாமல்  இருப்பதும் காலப்போக்கில் அடித்தளத்தை அரிக்க தொடங்கி விடுமோ என்ற அச்சம் மேலிடுகிறது .. பணம் பதவியை பெற்று தரும் என்பது இயக்கத்தை செல்லரிக்கும் செயல் .. உழைப்பவன் நேர்மையும் தகுதியும் உள்ளவனுக்கு வாய்ப்புகள் தரப்படவேண்டும் ..ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்த வேகத்தில் கொஞ்சம் சுணக்கம்  தென்படுகிறது .. அதிகாரத்தை அடைந்தவுடன் "அகந்தை " கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்களை, தான்தோன்றித்தனமாக செயல்படுவோரை மாற்றி நிறுத்த வேண்டும் ..தனக்கு பிடித்தவரை விட கட்சிக்கு பிடித்தமானவனை கரம்பிடித்துக் கொண்டே நடக்கவில்லையெனில் சரித்திரம் நாளை பழிக்கும்,கேலி செய்யும் 
..
ஐம்பதாண்டுகளுக்கு மேல் அனுபவமும் தோல்வி, வெற்றி இரண்டிலும் மனங்கலங்காமல்  செயல்படும் தளபதி.. 
சிலரின் செயல்களும், பேராசையும் தான்தோன்றித்தனமும்,அதிகார மமதையும் பேருக்கும் களங்கம் சேர்க்கும் .. வேண்டாத களைகளை பிடிங்கியெறிந்தால் பயிர் செழுமையாய் வளரும் .. சில புல்லுருவிகள் திமுகவிற்கு களங்கம் கற்பிக்கமுயல்கிறார்கள் .. எப்போ என காத்துநிற்கும் பகைவரும், ஊதி பெரிதாக்க ஊடகமும் கழுகுபார்வையோடு காத்திருக்கின்றன.. சிறிய தவறைகூட பெரிதாக்க விலைபோன வீணர்கள் தயாராக நிற்கிறார்கள் .. இதையெல்லாம் தாண்டி இரண்டாண்டில் தலைவர் தமிழ்நாட்டை வழிநடத்தி வளம்கொழிக்க செய்கிறார் .. கூட இருப்பவர்கள் பொறுப்போடு செயல்படவேண்டும், அதிகாரிகளும், சகாக்களும் 
கழகத்தவர்களும் ..
காட்டாறுகள் சிலநேரம் அடித்துக்கொண்டு போய்விடும் ..  அதே ஆறு சமவெளியில் பயணிக்கும் போதுதான் பலனை தரும் .. நாடு செழிக்கும் நன்மை பயக்கும் .. திமுக சமவெளியில் பயணிக்கும் வற்றாத ஜீவநதி .. 
எல்லா ஜீவராசிகளுக்கும் பயனளிக்கும் ஆற்றை போல திமுக அரசு எல்லோருக்குமானது  .. அதுதானே திராவிடம் ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment