..
ஆரியத்தின் எதிர்மறை தான் திராவிடம்.. திராவிடம் காலாவதி ஆகிவிட்டதாக ஆர்.என்.ரவி புலம்புகிறாரே.. அவர் புலம்புவதிலிருந்தே திராவிடம் முன்பைவிட முனைப்போடும் வீரியத்தோடும் செயல்படுகிறதென தெரிகிறது .. சூடு பட்டால் அலறதான் செய்வார்கள் ..
..
பெண்களை படிக்காதே என்றது ஆரியம் ..
வா படி உதவிதொகை தருகிறேன் உனக்கே முன்னுரிமை என்றது திராவிடம் ..
வர்ண அடுக்கைச் சொல்லி தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்றது ஆரியம் ..
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றது திராவிடம் ..
பெண்களுக்கு சொத்தா.. குடும்ப உறவு சிதறுமென்றது ஆரியம்
சொத்தில் பெண்களுக்கும் சம பங்கென ஒன்றியத்திற்கே வழிகாட்டியது திராவிடம் ..
ஒரு இனத்தை அழிக்கவேண்டுமென்றால் அவன் பண்பாட்டை சிதைக்கவேண்டும் அதற்கு முதலில் நூலகத்தை இல்லாதாக்கவேண்டும் அதைதான் அண்ணா நூலகத்திலும் செய்ய துணிந்தது ஆரியம் .. ஆனால் எல்லா இடங்களிலும் நூலகம் என்பதை இலக்காக்கியது திராவிடம்
..
அடுக்கிகொண்டே போகலாம்..
ரவி போன்றோருக்கு ஏன் எரிகிறதென்றால் பிற மாநிலங்களில் செய்வதைபோல மதத்தை சாதியைச் சொல்லி மக்களிடையே மோதலை தமிழ்நாட்டில் உருவாக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் வெளிப்படையாகவே தெரிகிறது ..
எதை சொன்னாலும் மக்களே அதை கூறுபோட்டு ஆய்ந்து முகத்தில் கரியை பூசுகிறார்களே என்ற ஆதங்கம் ..
திராவிட பெருங்கிழவன் அந்தளவு உழைத்துவிட்டு சென்றிருக்கிறான் அவனோடு முடிந்தது என்று நினைத்தால் அவனது தம்பிமார்கள் பெருஞ்சுவரை எழுப்பி காத்து நிற்கிறார்களே என்ற கோபம் அவர்களை எரிச்சலடைய செய்கிறது
..
சரஸ்வதி நதி கலாச்சாரம் என்று புழுகி, தேடி பார்த்தும் கிடைக்காததால் சிந்துசமவெளி பண்பாட்டை கொண்டவனின் வரலாற்று அதிர்வுகள் கீழடியாய் கிடப்பதால் செய்வதறியாது புரட்டுகளில் காலம் இனியும் ஓடாதென்று உண்மையை வெளிவந்தே தீரும் என்பதால் பதறுகிறார்கள் ..
..
எதைச் சொன்னால் கோவம் வரும், எதைச் சொன்னால் பகை நடுங்குமென தெரிந்து படையோட்டம் நடத்துவதால் தளபதியின் "தீ" சொல் சுட்டெரிக்கிறது ஆரியம் குலைநடுங்குகிறது .. மொழியைச் சொல்லி சாதியைச் சொல்லி மதத்தைச் சொல்லி தமிழர்களின் ஒற்றமையை சிதைக்க முடியாது.. அவனை ஒருங்கிணைக்கும் சொல் திராவிடம் ..
ரவி பதறுவதும் அங்குதான்
..
திராவிடம் சொல் அல்ல
இனத்தின் அடையாளம்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment