அமைச்சர் வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது .. மகிழ்ச்சி
இந்த முறை அமைச்சர் தேர்வு டெல்டாவில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்,..
டி.ஆர்.பி ராசா (தளிக்கோட்டை ராசுதேவர் பாலு ராசா) அமைச்சர்பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்பதில் மறுகருத்தே இல்லை .. ஆனால் நீண்டநாள்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் தகுதியும் திறமையும் மக்கள் செல்வாக்கும் உடையவர் உண்டு ஏன் பாலுவின் மகனுக்கு தரவேண்டும் என்ற நியாயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்,..
..
பூண்டியார் பெயர் பரிசிலனையில் இருந்ததாகவும் பாலுவின் அழுத்தம் ராசாவிற்கு கிடைத்ததாகவும் பேசுபொருளாகியிருக்கிறது .. நிச்சயமாக கலைவாணன் தகுதியுடைவர் என்பதிலோ தந்தையின் காலந்தொட்டே கழகப்பணியில் தங்களை கரைத்துக்கொண்ட குடும்பம் என்பதிலோ யாரும் கைநீட்டி குறைச்சொல்லமுடியாது..
ஏற்கனவே தஞ்சை நாடாளுமன்ற தொகுதியை கேட்டுநின்று தோற்றவரலாறு உண்டு .. தஞ்சையில் டி.ஆர்.பாலு பெரிதாக எதையும் நிகழ்த்திவிடவில்லை. களப்பணியிலோ மக்களிடம் தொடர்போ இல்லாத தலைவராக தான் இருப்பார் .. பழநிமாணிக்கம் போன்றோர் அன்று அமைதியாக கட்டுபட்டுநின்றதால் தான் இன்று கிடைக்கவேண்டிவர்களுக்குரிய அருகதையை தட்டிபறிக்கும் நிலை இது தொடர்வது வேரில் வெந்நீரை ஊற்றுவதைப்போல
..
கும்பகோணம் அன்பு, திருவையாறு சந்திரசேகரன் (இவர் சிவாஜியை வென்று சரித்திரம் படைத்தவர்) என நீண்ட பட்டியல் உண்டு .. ராசாவை விட அனுபவம் வாய்ந்தவர்கள் ..மக்களிடையே நீண்டகால தொடர்பில் உள்ளவர்கள் .. இதையெல்லாம் வரும்காலங்களில் கருத்தில் கொள்ளவேண்டும் .. துரைமுருகன் போன்றோர்கள் கட்சிபணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வழிவிடவேண்டும் .. வரும்தலைமுறையை வழிநடத்த நல்லதொரு பயிற்சிக்கான களமாக மாற்றவேண்டியது அவசியம்
..
அமைச்சர் தேர்வு முதலமைச்சரின் விருப்பமும் அதிகாரவரம்பிற்குட்பட்டது .. தலைவரின் முடிவை ஏற்போம் .. நமது கருத்தை தொடர்ந்து தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் .. தலைவரின் வழியில் அவரது தடத்தில் பயணிப்போம்,.. எல்லோரும் தகுதியானவர்கள் தான் என்பதை நம்மைவிட தலைவர் நன்றாக அறிவார் ..
புதிய அமைச்சருக்கு வாழ்த்தையும் அன்பையும் சொல்வோம்
..
ராசா மந்திரியானார்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment