Saturday, May 20, 2023

இரண்டு கவிதைகள்
**********************************

ரகசியம் சொல்கிறேன்
காதை கொடுங்கள்
நான் நானில்லை ..
நிஜத்தில்..
நான் நானில்லை..
முகம் வேறு..
அகம் வேறு...
..
உள்ளில் வஞ்சம்..
பிறர் வாழ..
வழிவிடுவதேயில்லை..
எல்லாம் எனக்காது..
அடுத்தவர் உரிமையா..
நான் தருவருதே..
அவர் உரிமை..
..
பங்காளி 
தேங்காய் உடைத்தால்
நான் கொட்டாங்குச்சியை அல்ல
அவன் கையையே உடைக்கிறேன்..
..
வெளியில் தெரியும்
எதுவும்..நிஜமில்லை..
..
உள்ளில் மிருகம்
மூகமூடியணிந்து..
சிரித்து பேசி..
பலரை படுகுழியில்
தள்ளுகிறது ..
தவறென்று தெரிந்தும்.
மனதில்  துளியும்
இரக்கம் கொள்ளாமல்.
கீரிடம் சூட்டிக்கொள்ளகிறேன்..
..
அடுத்தவர் பாதையை
அடைத்து..
எனக்கென..ஒருபாதை..
நான் மட்டுமே
செல்லும் தனிபாதை
வேண்டுமென்கிறேன்..
..
சுற்றம் சொந்தம் கூட
எனைச் சுற்றியே
இயங்க வேண்டுமென்ற
பேராசைக்காரன்..#நான்
..
உலகம் எனக்கானது
என்ற அகம்பாவம்..
எதற்கும் அடங்காத திமிர்
யார் சொல்லும் கேளாமை,
அறியாமை..
பெரியவர் தம்மை மதிக்காத
கொடுஞ்செயல் ..
எல்லாம் உண்டு என்னிடம்..
வெளியில் காட்டாதவாறு
யாரும் எனை 
இனம்காணாதவாறு..
..
நான் நானில்லை
நிஜத்தில்லை
மனிதனில்லை..
மனிதம் மரத்துப்போன
முகமிழந்த..
போலி முகமூடியணிந்த
பொல்லாதவன் ..
..
எல்லோரும்..
சொல்கிறார்கள்
#நான்_மனிதன்..
..
*************************************

சிலநேரம்..
நம்மை கடந்து போகும்
நிகழ்வு எதும் ..
நமக்கில்லை என
எண்ணுவதுண்டு..
சின்ன சலனத்தைக்கூட
ஏற்படுத்துவதில்லை.  
நமக்கு மிக நெருக்கமான
ஏதோ ஒருவகையில்
தொடர்புடைய  .
என்றாவது ஒருநாள்..
நம்மை நேரடியாய் ..
சில வேளை ..
இதயத்தில் ரணத்தை..
மாறா வடுவை
தரக்கூடிய
நிகழ்வு கூட
நமக்கில்லையெனும் போது..
சஞ்சலமில்லாமல்
நம்மால் இயங்க முடியும்..
..
மரணம் அழகு..
அத்தனை கொடூரமில்லை..
என்றாவது
நம்மை தழுவும்..
ஆரத்தழுவும்..
இயற்கையோடு
நம்மை கொண்டு சேர்க்கும் ..
மண்ணில் உரமாவோம்..
..
நிறைய வாழ்ந்தவனோ
நிம்மதி இழந்தவனோ..
பேராசை கொண்டவனோ
பேரறிவாளனோ.
மண் சமன் செய்யும். 
மரணம் அழகு.. 
இயல்பாய் வருமெனில்..
தனியாய் வருமெனில்..
#மரணம்கூட_அழகு..
..
ஆலஞ்சியார் 

செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

No comments:

Post a Comment