ஏன் தடைசெய்யவில்லை என்ற குரல் ஒலிக்கிறது .. மத்திய தணிக்கை சான்றிதழ் பெற்ற படத்தை தடை செய்யவேண்டுமென வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது .கேரள அரசும் படைத்தை தடை செய்யவில்லை ஆனால் தமிழக அரசு ஏன் தடை செய்யவில்லை திமுக பாஜகவிற்கு பணிந்தது என சிலர் தூபம் போட இஸ்லாமியர்கள் பொங்கி திமுக முஸ்லிம்களுக்கு எதிரியென பேசுகிறார்கள் ..
..
ஒரு திரைப்படம் கண்டுக்கொள்ளாமல் விட்டாலே போதும் அது பெட்டிக்குள் சுருண்டுவிடும் .. இருவர் படம் திமுக தொண்டர்களே கலைஞரிடத்தில் எவ்வளவோ சொல்லியும் பிடித்திருந்தால் பார் இல்லையென்றால் பார்க்காதே என கடந்து போனார். படம் படுதோல்வி.. மணிரத்னமே கலைஞரை சந்தித்து படத்தை பார்க்க அழைத்தும் போகவில்லை
..
ஒரு படத்தை எதிர்ப்பைகாட்டி விளம்பரம் படுத்த தேவையில்லை இருவரை படத்தை தொடர்ந்து சிலபடங்கள் தோல்வியிலிருந்து மீள முடியாமல்
G. வெங்கட்ராமன் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக்கொண்டார் ..
..
அவர்கள் திட்டமிட்டே பொய்யான தகவல்களை கொண்டு ஒரு கலவரத்தை செய்ய முயற்சிக்கிறார்கள் .. சட்டென்று உணர்ச்சிவயப்பட்டு கலவரத்தில் இறங்கவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் .. பிரதமரே படத்தைப்பற்றி பேசி கர்நாடக தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார் அவர்களுக்கு நோக்கம் கலவரம் மதவாதம் .. ஹிஜாப் பிரச்சனையிலும் கர்நாடக முஸ்லிம்கள் கழட்டி வைத்து குழந்தைகளை படிக்க அனுப்பி மாநிலத்திலேயே முதலிடம் வரவைத்துவிட்டார்கள்.. இது தான் பதில் எங்களை படிக்கவிடாமல் தடுக்க எந்த சூழ்ச்சி செய்தாலும் அதை தாண்டி வென்றுகாட்டுவோம் தெருசண்டை போட்டுக்கொண்டிருக்க எங்களுக்கு நேரமில்லை கல்வி வேலைவாய்ப்பு இவை மட்டுமே எம்மை அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரும் என தெளிவாய் அறிந்தததால் "ஹிஜாப் " பள்ளியில் தேவையில்லை என முடிவுக்கு வந்தார்கள்
..
தமிழக முஸ்லிம்கள் பிரிந்துக்கொண்டு தங்களுக்குள் அடித்துக்கொண்டும், உணர்ச்சிமேலிட புஜத்தை தூக்கி கத்திக்கொண்டிருப்பதால் "காரியம்" எதுவும் ஆகாது.. திமுக எதிர்ப்பதால் இஸ்லாமிய சமூகம் மேம்பாடடையும் என்றால் தாராளமாக எதிர்த்து களமாடுங்கள் தவறில்லை .. சுயம் பரிசோதனை செய்யாமல் அரசியல் புரிதல் இல்லாமல் தேவையற்றவைகளை நேரத்தை வீண்விரயம் செய்யாமல் எது சரியான பாதை என தேர்ந்தெடுத்து பயணியுங்கள்.. மத அரசியலை விட்டு பொது அரசியலுக்கு வாருங்கள் .. மதத்தை மனத்திற்குள் வைத்துக்கொண்டு சமூகம் மேம்பாட்டிற்கு எந்த களம் சரியானதென முடிவெடுத்து செயல்படுங்கள்.. உங்களின் ஆற்றலை ஒரு சினிமா தடை எனும் குறுகிய வட்டத்திற்குள் அடைக்காதீர்கள் .. பேசுகிறவனும் எதிர்கருத்தை கொண்டவனும் பரப்பரப்பாக இஸ்லாமிய சமூகத்தை வைத்திருக்கவே விரும்புகிறான் .. எதிர்கருத்தை பதிவு செய்ய யாரும் தடை போடவில்லை .. தவறான கருத்திலியலோடு ஒரு படத்தை எடுக்கிறார்கள் என்றால் சட்டரீதியான அணுகுமுறையே அதற்கு வழி .. மாறாக தடை செய் என்பதல்ல
..
திமுக முஸ்லிம் சமூகதிதிற்கு எதுவுமே செய்யவில்லை என்பது போல சிலர் பேசுகிறார்கள் இன்று இஸ்லாமிய சமூகம் அனுபவிக்கும் உரிமைகள் எல்லாம் திமுக தந்ததுதான்
பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்த்தது தொடங்கி 3.5 % விழுக்காடுவரை யாரோ செய்தது ..
இன்று என் குடும்பத்தில் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பெண் வந்திருப்பது இடஒதுக்கீட்டே காரணம் .. நீண்ட பட்டியல் இடலாம்
..
எல்லாவற்றிலும் திமுக ஏன் செய்யவில்லை என கேட்பதை விடுங்கள் .. அதிமுகவே மேல் என நினைப்போர் தாராளமாக வெளிப்படையாகவே ஆதரிக்கலாம் .. இஸ்லாமிய சமூகத்திற்கு அதிமுகதான் சரி .. CAA சட்டவடிவை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்து நிறைவேற காரணமாக இருந்தார்களே அதைப்போல திமுகவும் உணர்ச்சி பொங்க பேசிவிட்டு (அதைதானே எதிர்பார்க்கிறீர்கள்) அமைதியாக இருக்கலாம் .. தமிழ் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் அதுதான் தேவை .. போராட்டம், வழக்கு சிறை என இளைஞர்களை வழி கெடுத்து தங்கள் வளத்தை பெருக்கி கொண்டு வாழலாம் ..
..
திமுகவை எதிர்க்க ஏதேனும் காரணம் வேண்டும் அதை தவிற வேறெதற்கும் பயன்படாது போராட்டங்களும் பிரச்சாரங்களும்
ஒரு சினிமா தடைக்குள் சுருங்கிவிட கூடியதா சமூக தேவைகள் .. பகைவரை இனங்கண்ட கூட்டம் வியக்கவைக்கும் விவேகத்தோடு வாழ்ந்த சமூகம், வழிகேடர்களின் கைகளில் சிக்கி உணர்ச்சிமேலிட தெருக்களில் தேவைகளை தேடி அலைகிறது..
இன்றைய தேவை சமுதாயத்திற்கு நல்ல "உஸ்தாத்"
..
வேர்களுக்கிடையே தேட வேண்டியதை
சிலபோது கிளைக்களுக்கிடையில்
நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற மௌலானா ரூமியின் வரிகள் தான் ஞாபகம் வந்தது .. இறகுகளோடு பிறந்த நீங்கள் தவழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள் #மௌலானாரூமி
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment