Sunday, May 28, 2023


கோமாளிக்கு
ராசா 
வேசம் கட்ட
செங்கோலை சுமந்து 
"அறம்" பேசா
ஆசை துறந்த பண்டாரங்கள்
ஆகாய வழியில் 
அவசரமாய் வந்தார்கள் .. 
பண்டாரங்களுக்கு 
அறுசுவையில் உணவு தந்து 
படுத்துறங்க பகட்டான கொகுசு மெத்தையும், 
குளுகுளு வெண்சாமர விசிறியும் 
கூடவே நொறுக்குதீனியும் தந்து 
இளைப்பாற சொன்னார்கள்
..
செங்கோலை சுமந்து வர
கூலிதான் தர முடியும் 
சிம்மானத்தில் அமர வைக்க 
பண்டாரங்களுக்கு தகுதியென்ன 
ஒரு படி கீழே கைகட்டி நின்று 
அந்தணர் அழுக்கை நீக்கி
செங்கோலை தருவார்கள் 
பண்டாரம் கைபட்ட "தீட்டு" நீக்க 
பரிகார பூஜை .. 
தமிழனின் செங்கோலுக்கு நீசபாஷையிலா  செய்ய முடியும்..
தெய்வபாஷையில் தானே ..?
..
பாவம் 
பண்டாரங்கள்..
அரண்மனையில் 
தூரமாய் நின்று 
சுமக்கூலிக்காக 
நிற்கிறார்கள்..
அய்யா சாமி..
..
சைவம்..
அந்தோ  "அ" சைவமானது 
..
ஆலஞ்சியார்

Wednesday, May 24, 2023

செங்கோல்  ..
நீதி தவறாமை எனும் பொருள் இன்றைய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா.. 
நாடாளுமன்றத்தில் திருவாடனை மடம் தந்த செங்கோல் வைக்கப்படும்.. இதில் கூட சோழர்காலத்து செங்கோலென பொய்  ..
பிரதமர் புதிய நாடாளுமன்றத்தை ஏன் திறக்ககூடாதென சிலர் கேள்வி எழுப்புகின்றனர் .. நாடாளுமன்ற மரபுகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கும் இவர் எதிலும் தன்னை முன்னிலைப்படுத்தி காட்சி பொருளாய் திகழும் இவர், ஜனநாயக மாண்புகளை மதிக்காத இதுவரை ஊடகத்தை சந்திக்காத பயந்தாங்கொள்ளி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தை தினமொரு வேசம் கட்டும் "அரிதாரபுருசர்"திறப்பது முறையாக என்ன ..
..
நாட்டின் முதல் குடிமகன் குடியரசின் தலைவர் திறப்பதுதானே சரி.. எல்லா நிகழ்விலும் தன்னையே முன்னிறுத்தும் நாடக சக்கரவர்த்தி திறப்பதா சரி.. 
பிரதமர் நல்ல ஜனநாயகவாதி இல்லை ..  தன்னை சர்வ அதிகாரமும் மிக்கவராக எண்ணிக்கொண்டிருக்கும் இவர் அடிப்படை தகுதி கூட இல்லாதவர், படித்த படிப்பு பொய், சொல்லும் வார்த்தைகள் பொய்,நடத்தும் நாடகம் பொய்.. இந்தியா கண்ட மிக மோசமான ஆட்சியாளர் .. இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் நாடாளுமன்றத்தை, தன்னை மன்னராக நினைத்துக் கொள்ளும் "புலிகேசி வகையறா" திறப்பது பொருத்தமில்லை என்பதனால் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன
..
நாட்டின் முதல் குடிமகன் திறப்பதே மேன்மையான செயல் 
..
ஆலஞ்சியார்

Tuesday, May 23, 2023

U.T. காதர் 
கர்நாடக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக இஸ்லாமியர் சபாநாயகராக பதவியேற்கிறார்..
தொடர்ந்து ஐந்துமுறை சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித்தலைவர் பணியாற்றியவர் சித்தராமையா அமைச்சரவையில் இடம் பெற்றவர் அமைச்சராக வருவாரென எதிர்பார்க்கபட்டவர் சபை தலைவராகிறார் .. தனக்கு வியப்பாக இருப்பதாகவும் நம்பிக்கையுடனும் அன்புடனும் சபையை நடத்துவேன் என்கிறார்.. 
..
கர்நாடகவில் காங்கிரஸ் 15 பேருக்கு வாய்ப்பை வழங்கியது 9 பேர் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள்.. இதில் ஒரு படிப்பினை இருக்கிறது .. கர்நாடகாவில் 12.5% விழுக்காடு முஸ்லிம்கள்.. வாக்குகளை சிதறவிடாமல் பல்வேறு அமைப்புகளாக பிரிந்து நிற்காமல் பதவி பேராசைக்கு சமுதாயத்தை "பலி" கொடுக்காமல் பெரியகட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு பாஜகவை வீழ்த்தவேண்டும் அது கர்நாடகாவில் காங்கிரஸால் மட்டுமே முடியும் என உறுதியாக நம்பி வாக்களித்திருக்கிறார்கள்.. 
அது பலன் தந்திருக்கிறது.. 
சமுதாயப் பேரைச் சொல்லி சில சைத்தான்கள் வாக்கை பிரித்து பாஜகவிற்கு உதவுவது தொடர்ந்து பல மாநிலங்களில் நடக்கிறது.. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆய்ந்தால்  சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெல்வதும் அதற்கு சமுதாயத்தின் காவல்காரன் என பேசிதிரியும் சிலரே காரணம் என்கிற உண்மை தெரிகிறது ..
..
 இந்த முறை உவைசிக்கோ Sdpi க்கோ வாக்களித்து வீணாக்காமல் காங்கிரஸுக்கு வாக்களித்து வாக்களித்து வென்றிருக்கிறார்கள்..நல்ல தொடக்கம்.. இது மற்ற மாநிலங்களிலும் வலுவாக உள்ள கட்சிகளோடு இணைந்து ஒற்றைகட்டாய் நின்று தங்களுடைய வாக்குவங்கிகேற்ப இடங்களை பெறலாம்.. 58  பிரிவாக நின்று பதவி பண ஆசையில் சமுதாயத்தை காட்டிகொடுக்கும் கயமைக்கு முற்றுபுள்ளி வைத்தால் சமுதாயம் பலன் பெறும் பலம் பெறும் ..
..
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ..
U T காதர் பாய்க்கு வாழ்த்துகள் 
..
ஆலஞ்சியார்
 கலைஞர் நூற்றாண்டு..
ஒரு தலைவனின் பயணம்..
 அரசியல் இலக்கணமாய் திகழ்ந்த வரலாறு.. 
என்பதாண்டுகள் ஏற்றமிறக்கத்தோடு வழிநெடுக பகைவரும், துரோகிகளும்,வாளெடுத்து நின்றபோதும் புறமுதுகு காட்டாத பெருந்தலைவன்.. வஞ்சத்தால் வீழ்த்த நினைத்தார்கள், படுகுழியில் தள்ளிவிடலாமென திட்டம் தீட்டினர்.. சூழ்ச்சிகளை வெல்லும் சூத்திரம் அறிந்திருந்தான்.. வெற்றியோ தோல்வியோ அவருடைய இயக்கத்தை தடுக்க இயலவில்லை..
..
தஞ்சையில் உட்புற சிற்றூரில் (திருக்குவளை) பிறந்து இந்திய ஒன்றியத்தின் தவிர்க்கமுடியாத தலைவனாய் தன்னை நிலைநிறுத்தியவன்.. 
இந்தியா இப்போது சிந்திப்பதை முப்பதாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தி காட்டியவன்..பகைவருக்கோ சிம்மசொப்பனம்.  இன எதிரிகளோ செய்வதறியாது கை பிசைந்து நின்றார்கள்.. மாபெரும் இயக்கத்தின் அடித்தளம் தகர்ந்துவிடாமல் காத்துநின்ற தலைவன்.. எத்தனை  அம்புகள், வீழ்த்திட நினைத்து முடிந்தது பார் "சகாப்தம்" என சில கைகூலிகள் கவிதைபாட, தளராது எழுந்து நின்று ஆடியது கண்டு மிரண்டனர் சதியாளர்கள்..
..
கலைஞரின் கலைப்பயணம் காட்டாறு போல் ஆரிய திணிப்பை அடித்துக்கொண்டு போனது.. தீந்தமிழில் சுழற்றிய சொற்ச்சொடர்கள் ஆரியத்தின் அடிவயிற்றை கலக்கியது.. "ஆகாரத்திற்காக அழுக்கை தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன்" என்றெழுதி யாரும் அதுவரை சொல்லாத உவமையோடு இலக்கியம் படைத்தார் மிரண்டது தமிழ்த்திரை.. கலைஞரின் எழுத்தாணி சமநிலையை போதித்தது .. கயமையை சுட்டெரித்தது.. எதிரிக்கும் வாழ்வு தந்தது .. யாருமே தொடாத யாருமே தொட முடியாத உயரத்தை தொட்டது .. தொல்காப்பியத்திற்கு எளிய உரை எழுதி எமக்கெல்லாம் புரியவைத்தது கலைஞரின் பேனா..  கலைஞர் வசனமென்றால் 
கைதட்டியது பெருங்கூட்டம்.. அதுவரை வடமொழி கலப்பில் உரையாடல் தந்த சினிமா கலைஞரின் வரவிற்கு பிறகு தான் 
தமிழ் சிம்மாசனத்தில் அமர்ந்தது..
தமிழ்த்திரை வசனத்தை முன்னிறுத்தி பயணிக்க தொடங்கியது 
கலைஞரின் எழுதுகோல் தலைக்குனிந்த போதல்லாம் தமிழன் தலைநிமிர்ந்தான்.. 
..
சொக்கவைக்கும் பேச்சு வார்த்தையில் சிலம்பம் கட்டி ஆடியபோது எதிரியும் மெய்மறந்து நின்றான்.. அடுக்குமொழியில் தேன்கலந்து தித்திக்க பேசும்போது தமிழ்நாடே நாட்டியமாடியது.. எப்போதும் எதிர்பார்ப்பார்கள்
 வீழ்ந்ததாய்தான் வரலாறு.. தமிழ்உணர்வை வீரத்தை இளைஞர் நெஞ்சில் விதைத்தது இவரின் பேனா.. அரசியல் எதிரிகள், சித்தாந்த பகைவர் கூட  இவர் மொழியில் மயங்கி  நின்றார்கள்..
..
பகுத்தறிவு துணைக்கொண்டு, வாளேந்தி நின்றபோது செய்வதறியாது கதிகலங்கி நின்றது பகை.. தொலைநோக்குப்பார்வை , அடத்தளமக்களின் மேம்பாடு, அனைவருக்கும் கல்வி, இயலாதோர்க்கு முன்னுரிமை, 
தீட்டும் திட்டங்களெல்லாம் எளியவர் பயன்பெற வேண்டும்.. 
மீன் சோறு போட்டவர்களுக்கு மத்தியில் நீ மீன் பிடிக்க கற்றுதந்தவர்..  
கையில் தண்ணீர் கிடைத்த போதெல்லாம் தாகித்தவனை தேடிக்கொண்டிருந்தவர்..
நவீன தமிழ்நாட்டை வடிவமைத்தவர்.. மக்கள் பணியில் தொய்வின்றி ஓய்வின்றி உழைத்தவர் .. இனம்,மொழி,பண்பாடு நாகரீகம் இவற்றை காக்க பெருஞ்சுவராய் நின்ற பெருமகன் ..  தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் எதோவொருவகையில் இவரின் அரசியலால்,அதிகாரத்தால் அணுகுமுறையால் பயனடைந்திருக்கிறது கல்வியில் வேலைவாய்ப்பில் அதுவரை மறுக்கபட்டவர்களுக்கு உரிமை கிடைத்திருக்கிறது.. இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சியும் கட்டமைப்பும் எல்லாம் திராவிட பெருவுடையான் கலைஞரால் நிகழ்ந்தது தான் 
..
தலைமைப்பண்பில் எப்போதும் சிறந்து விளங்கினார் , தொண்டர்களோடு தொடர்பு அவரது சுவாசமாக இருந்தது . உடன்பிறப்பே என விளித்து முரசொலித்து ஊட்டம் தருவார் .. தோல்விகள் வரும்போதெல்லாம் மறுநாள் முரசொலியை தேடும் .. அதுவே அருமருந்தாக தொண்டனுக்கு அமையும்.. அடிமட்ட தொண்டனுக்கும் குரல் கொடுக்க எதிர்க்க, வினா எழுப்ப, உரிமை தந்தார்
எழுப்பிய கேள்விக்கு விளக்கம் தந்து ஜனநாயகம் காத்தவர்..
இயக்கத்தின் பலம் எது என்பதை உணர்ந்திருந்தார்..
..
நூற்றாண்டு கண்ட பேரியக்கத்தின் பெருமைமிகு தலைவர்.. ஆக சிறந்த ஜனநாயகவாதி .. தலைச்சிறந்த  ஆளுமை, அறம்சார்ந்த அரசியல் கலைக் களஞ்சியம்.. பொதுவாழ்விற்கு வருவோருக்கு
இவரின் வாழ்வியல் மிகச்சிறந்த பாடம் கலைஞரின் நூற்றாண்டுவிழாவை கொண்டாடுவோம்..
..
வாழ்க! கலைஞர் புகழ்!!
#கலைஞர்100
..
ஆலஞ்சியார்

Saturday, May 20, 2023

**********************************

ரகசியம் சொல்கிறேன்
காதை கொடுங்கள்
நான் நானில்லை ..
நிஜத்தில்..
நான் நானில்லை..
முகம் வேறு..
அகம் வேறு...
..
உள்ளில் வஞ்சம்..
பிறர் வாழ..
வழிவிடுவதேயில்லை..
எல்லாம் எனக்காது..
அடுத்தவர் உரிமையா..
நான் தருவருதே..
அவர் உரிமை..
..
பங்காளி 
தேங்காய் உடைத்தால்
நான் கொட்டாங்குச்சியை அல்ல
அவன் கையையே உடைக்கிறேன்..
..
வெளியில் தெரியும்
எதுவும்..நிஜமில்லை..
..
உள்ளில் மிருகம்
மூகமூடியணிந்து..
சிரித்து பேசி..
பலரை படுகுழியில்
தள்ளுகிறது ..
தவறென்று தெரிந்தும்.
மனதில்  துளியும்
இரக்கம் கொள்ளாமல்.
கீரிடம் சூட்டிக்கொள்ளகிறேன்..
..
அடுத்தவர் பாதையை
அடைத்து..
எனக்கென..ஒருபாதை..
நான் மட்டுமே
செல்லும் தனிபாதை
வேண்டுமென்கிறேன்..
..
சுற்றம் சொந்தம் கூட
எனைச் சுற்றியே
இயங்க வேண்டுமென்ற
பேராசைக்காரன்..#நான்
..
உலகம் எனக்கானது
என்ற அகம்பாவம்..
எதற்கும் அடங்காத திமிர்
யார் சொல்லும் கேளாமை,
அறியாமை..
பெரியவர் தம்மை மதிக்காத
கொடுஞ்செயல் ..
எல்லாம் உண்டு என்னிடம்..
வெளியில் காட்டாதவாறு
யாரும் எனை 
இனம்காணாதவாறு..
..
நான் நானில்லை
நிஜத்தில்லை
மனிதனில்லை..
மனிதம் மரத்துப்போன
முகமிழந்த..
போலி முகமூடியணிந்த
பொல்லாதவன் ..
..
எல்லோரும்..
சொல்கிறார்கள்
#நான்_மனிதன்..
..
*************************************

சிலநேரம்..
நம்மை கடந்து போகும்
நிகழ்வு எதும் ..
நமக்கில்லை என
எண்ணுவதுண்டு..
சின்ன சலனத்தைக்கூட
ஏற்படுத்துவதில்லை.  
நமக்கு மிக நெருக்கமான
ஏதோ ஒருவகையில்
தொடர்புடைய  .
என்றாவது ஒருநாள்..
நம்மை நேரடியாய் ..
சில வேளை ..
இதயத்தில் ரணத்தை..
மாறா வடுவை
தரக்கூடிய
நிகழ்வு கூட
நமக்கில்லையெனும் போது..
சஞ்சலமில்லாமல்
நம்மால் இயங்க முடியும்..
..
மரணம் அழகு..
அத்தனை கொடூரமில்லை..
என்றாவது
நம்மை தழுவும்..
ஆரத்தழுவும்..
இயற்கையோடு
நம்மை கொண்டு சேர்க்கும் ..
மண்ணில் உரமாவோம்..
..
நிறைய வாழ்ந்தவனோ
நிம்மதி இழந்தவனோ..
பேராசை கொண்டவனோ
பேரறிவாளனோ.
மண் சமன் செய்யும். 
மரணம் அழகு.. 
இயல்பாய் வருமெனில்..
தனியாய் வருமெனில்..
#மரணம்கூட_அழகு..
..
ஆலஞ்சியார் 

செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
..
2..
சின்னம் ..
தன் வாழ்நாளில் பெரும்பகுதியை சட்டமன்றத்திலும், பொதுவாழ்வில் 80 ஆண்டுகள் ஏற்றமிறக்கம் என எந்நிலையிலும் தடமாறாத தன்னிகரில்லா தலைவனுக்கும் சென்னை கடற்கரையில் பேனா சின்னம் .. இனி தமிழகத்தின் LANDMARK பேனா சிலை 
..
கோவில் கூடாதென்பதல்ல கொடியவரின் கூடாரமாக மாறாக கூடாதென்பதற்காக என முழங்கிய பேனா , மலமள்ளும் என் சகோதரனுக்கு உள் இடஒதுக்கீட்டை கையிலும் தலையிலும் மலத்தை சுமக்கும் அருந்ததியருக்கு 3% விழுக்காடு தந்து தலைமேல் தூக்கி ஆடுகிறேன் என்ற பேனா 
பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட பகுத்தறிவு துணைக்கொண்டு திட்டம் தீட்டிய பேனா .. சிறுபான்மை சமூகத்தவர் கல்வி வேலைவாய்ப்பில் இடம்தர உள்ஒதுக்கீடு செய்த பேனா 
..
முதல் பட்டதாரிக்கு கட்டணமில்லா கல்வியை தந்த பேனா,  உள்ளாட்சிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு தந்த பேனா .. பெண்களுக்கு சொத்தில் பங்கு தந்ததால் இந்திய குடும்ப உறவுகள் சிதைந்து போகும் என பழைமை பேசி வஞ்சித்தார்கள் .. ஆனால் இந்த திராவிடப் பெருவுடையாரின் பேனா தான் பெண்களுக்கு "சொத்தில் பங்கு" என உத்தரவிட்டது .. பெண்கள் கல்வியை உறுதி செய்ய தாலிக்கு தங்கம் என்றதும் இந்த பேனா தான் ..
பிற்படுத்தபட்ட இடஒதுக்கீட்டை உயர்த்தியதும், சமத்துவபுரம் கண்டதும், மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி தந்ததும், அனைவருக்கும் கல்வி,  சமஉரிமை, வேலைவாய்ப்பு, என ஓயாது எழுதி அதை செயல்படுத்திய பேனா .. மனிதனை மனிதனே இழுப்பதா என்ற பேனா தான் கைரிக்ஷாவை ஒழித்தது .. சமய நல்லிணக்கம் சமூகநீதி, ஒடுக்கப்பட்டோருக்கு முன்னுரிமை என 80 ஆண்டுகள் முழக்கமிட்டு பெற்று தந்த பேனா ..
..
நவீன தமிழகத்தை செதுக்கிய பேனா .. இந்த பேனா சிந்திய துளிகளில் முளைத்ததுதான் இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,கட்டமைப்பும்,  இந்திய ஒன்றியம் இன்று சிந்திக்க தொடங்கியருப்பதையெல்லாம் முப்பதாண்டுகளுக்கு செய்து சாதனை படைத்த பேனா .. காதுகேட்காத  சிறுவர்களுக்கு ஒற்றை கையெழுத்தில் செவித்திறன் கண்ட பேனா ..
..
கேலியும் கிண்டலும், வன்மமும், பொய்யும், வழக்குகளும், தொடர்ந்த சுழன்றடித்தபோதும்  அறம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு மக்கள் தொண்டாற்றிய மகத்தான தலைவன்.. 
இந்திய ஒன்றியம் கண்ட தன்னிகரில்லா தலைவர் கலைஞர் சமசரமில்லாத போராளி, சமூகநீதிக்காக  தொடர்ந்து எழுதியும் பேசியும் செயல்படுத்தியும் வந்தவர், பெரியாரின் சீடராய் அண்ணாவின் தம்பியாய், தமிழகமக்களின் பேரன்பிற்குரியவராய் திகழ்ந்தவர் .. 
வறியவருக்கு செவிசாய்க்கும் இறையாய் திகழ்ந்த பேரருளானனுக்கு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை கடலில் பேனா சின்னம் .. தடைகள் பலகடந்து தடம்பதித்த மாபெரும் தலைவனுக்கு தமிழ்நாடு செய்யும் நன்றிகடன் ..  பொல்லாங்கு பேசுவோரும், புறமுதுகில் குத்துவோரும், அரசியல் கழிசடைகளும்,ஆணவத்தில் கொக்கரித்த பாசிசத்தின் கள்ளகுழந்தைகளும் தந்த இடையூறை தகர்ந்து கம்பீரமாக எழுந்து நிற்தும் கலைஞரின் பேனா ..
.. 
ஆலஞ்சியார்
..
3.
ஆரியம்/திராவிடம்..
..
ஆரியத்தின்  எதிர்மறை தான் திராவிடம்.. திராவிடம் காலாவதி ஆகிவிட்டதாக ஆர்.என்.ரவி புலம்புகிறாரே.. அவர் புலம்புவதிலிருந்தே திராவிடம் முன்பைவிட முனைப்போடும் வீரியத்தோடும் செயல்படுகிறதென தெரிகிறது .. சூடு பட்டால் அலறதான் செய்வார்கள் .. 
..
பெண்களை படிக்காதே என்றது ஆரியம் .. 
வா படி உதவிதொகை தருகிறேன் உனக்கே முன்னுரிமை என்றது திராவிடம் ..
வர்ண அடுக்கைச் சொல்லி தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்றது ஆரியம் ..
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றது திராவிடம் ..
பெண்களுக்கு சொத்தா.. குடும்ப உறவு சிதறுமென்றது ஆரியம் 
சொத்தில் பெண்களுக்கும் சம பங்கென ஒன்றியத்திற்கே வழிகாட்டியது திராவிடம் ..
ஒரு இனத்தை அழிக்கவேண்டுமென்றால் அவன் பண்பாட்டை சிதைக்கவேண்டும் அதற்கு முதலில் நூலகத்தை இல்லாதாக்கவேண்டும் அதைதான் அண்ணா நூலகத்திலும் செய்ய துணிந்தது ஆரியம் .. ஆனால் எல்லா இடங்களிலும் நூலகம் என்பதை இலக்காக்கியது திராவிடம் 
.. 
அடுக்கிகொண்டே போகலாம்..  
ரவி போன்றோருக்கு ஏன் எரிகிறதென்றால் பிற மாநிலங்களில் செய்வதைபோல மதத்தை சாதியைச் சொல்லி மக்களிடையே மோதலை  தமிழ்நாட்டில் உருவாக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் வெளிப்படையாகவே தெரிகிறது ..
எதை சொன்னாலும் மக்களே அதை கூறுபோட்டு ஆய்ந்து முகத்தில் கரியை பூசுகிறார்களே என்ற ஆதங்கம் .. 
திராவிட பெருங்கிழவன் அந்தளவு உழைத்துவிட்டு சென்றிருக்கிறான் அவனோடு முடிந்தது என்று நினைத்தால் அவனது தம்பிமார்கள் பெருஞ்சுவரை எழுப்பி காத்து நிற்கிறார்களே என்ற கோபம் அவர்களை எரிச்சலடைய செய்கிறது 
..
சரஸ்வதி நதி கலாச்சாரம் என்று புழுகி, தேடி பார்த்தும் கிடைக்காததால் சிந்துசமவெளி பண்பாட்டை கொண்டவனின் வரலாற்று அதிர்வுகள் கீழடியாய் கிடப்பதால் செய்வதறியாது புரட்டுகளில் காலம் இனியும்  ஓடாதென்று உண்மையை வெளிவந்தே தீரும் என்பதால் பதறுகிறார்கள் ..
..
எதைச் சொன்னால் கோவம் வரும், எதைச் சொன்னால் பகை நடுங்குமென தெரிந்து படையோட்டம் நடத்துவதால் தளபதியின் "தீ" சொல் சுட்டெரிக்கிறது ஆரியம் குலைநடுங்குகிறது .. மொழியைச் சொல்லி சாதியைச் சொல்லி மதத்தைச் சொல்லி தமிழர்களின் ஒற்றமையை சிதைக்க முடியாது.. அவனை ஒருங்கிணைக்கும் சொல் திராவிடம் .. 
ரவி பதறுவதும் அங்குதான் 
..
திராவிடம் சொல் அல்ல 
இனத்தின் அடையாளம் 
..
ஆலஞ்சியார்
..
4.
தங்க ஊசி என்பதாலேயே வயித்துல குத்திக்க முடியாதுடா என்று எங்கம்மா சொல்லும் ..
மாண்பமை ஸ்டாலின் அவர்களே தொழிலாளர் வேலைநேர சட்டதிருத்தம் ஏற்றுக்கொள்ளமுடியாதது 
..
12 மணி நேரவேலை என்பது உடல்சோர்வை மட்டுமல்ல மன அழுத்தத்தையும் தரும்.. இதை அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன் .. மூன்றுநாட்கள் ஓய்வென்பதெல்லாம் கடைசியில் "அதிகநேர வேலை " செய்தால் பணம் தருகிறோம் என்ற நிலையை எட்டும் .. 8 மணிநேர வேலை என்பதே நீண்டநெடிய போராட்டத்திற்கு பிறகு கொண்டுவரபட்டது 
..
கார்ப்ரேட்களின் கணக்குகூட்டலுக்கு அரசாங்கம் செவிசாய்க்குமெனில் இழப்பு நமக்குதான் என்பதை காலம் உணர்த்தும் .. இந்த ஆட்சிக்கு நல்ல பெயர், மக்களிடத்தில் நிம்மதியோடு வாழ்கிறோம் என்ற நம்பிக்கையும், கட்சிகாரனை கூட சிபாரிசுக்கு விடாமல் நேர்மையோடு ஆட்சி நடத்துகிறார் என்ற நல்லபெயர் ஒரே நாளில் சரிந்துவிடவேண்டுமா ..
..
தங்களின் அமைச்சர்களில் தங்கமாய் மின்னும் தங்கம் தென்னரசு அதிமுககாரர்கள் கூட விரும்புகிற அமைச்சர், நிதானம் தவறாத நேர்வழியில் திறமையோடு துறையை நடத்திவருகிறவர் .. அதிகாரிகளின் பரிந்துரையோ கார்ப்பரேட்களின் நெருக்கடிக்கோ வளைந்து போவாரெனில் அது திராவிட மாடலுக்கு தீராத வினையை தரும் .. குழு அமைத்து பரிசீலினை செய்வதாக சொல்லியிருப்பது ஆறுதலை தந்தாலும் .. மக்களும் தொழிலாளர் சமூகமும் விரும்பாத, இந்த சட்டவடிவு திரும்ப பெறவதே சாலச்சிறந்தது 
..
மனிதர்களை இயந்திரபடுத்தும் போக்கு மனித உரிமையை பறிப்பதாகாதா ..  8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேரம் உறக்கம் என்பதுதான் நியதி  மனிதனை உரிமையை பறித்து பணத்தாசை காட்டி உழைப்பை உறிஞ்சும் செயல் இது .. 12 மணிநேர வேலைக்கு சட்ட அங்கீகாரம் என்பது விருப்பபட்டால் செய்யலாம் ஆனால்  காலபோக்கில் அது தவிர்க்கமுடியாத  கட்டாயமாகிவிடும் .. நாம் மும்மொழிக்கொள்கை ஏன் கடுமையாக எதிர்க்கிறோம் இந்தி மொழியோ பிறமொழியோ திணிக்கபட்டால் தாய்மொழியை கற்பிக்க கூட ஆளில்லாத நிலை வந்துவிடும், படிக்க யாரும் முன்வரவில்லையென ஆசிரியர் நியமனம் தடைபடும் என்பதாலும் கடைசியில் மெல்ல நம்மொழி சாகும் என்பதால்தான் ..  8 மணிநேர வேலைக்கு சென்று வருவதற்கு 10/12 மணிநேரம் ஆகிறது  இதில் 12 மணிநேரம் என்றால் குறைந்தது 14/15 மணிநேரமாகும்  வேலைஅழுத்தம் இது மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெரும் பாதிப்பை தரும் 
..
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.. என்றான் வள்ளுவன் 
நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்..

..
நல்லாட்சியை தருகிற நீங்கள் வெகுமக்கள் ஏற்காத ஒன்றை சட்டமாக்குவதும் முறைதவறிய செயல் ..அரசின் புகழை அது சரித்துவிடும்.. நாடே உற்றுநோக்கும் தங்களின் எண்ணமும் செயலும் இந்திய ஒன்றியமே எதிர்பார்த்து நிற்கும் வேளையில் இந்த இடறல் தேவையில்லை .. தொழிலாளர் விரோதபோக்கு நம்மை வீழ்த்திவிடும் .. 
..
இந்திய ஒன்றியத்திலேயே முதன்முதலில் தொழிலாளர் தினத்திற்கு விடுமுறை அளித்த வரலாறு நமக்குண்டு .. 
இறுதியாக  மௌலான ரூமி அவர்களின் வரிகளோடு முடிக்கிறேன் 
"மழைதான் பூக்களை வளர்க்கிறது
இடி அல்ல" 
..

ஆலஞ்சியார்
..
5.
சஹர்..
இஸ்லாமிய கிராமங்களில் நோன்பு இரவுகளில் பக்கீர் வருகைகள் மிக மிக குறைந்தவரும் காலத்தில் வழுத்தூரில் பக்கீர்கள் சஹர் நேரத்தின் "துயில் எழுப்புதல்"
 செய்வது மதுரமான நிகழ்வாகிறது.. இது தேவைதானா நவீன வசதிகள் உண்டே, நள்ளிரவுநேரத்தில் அமைதியை கெடுக்க "தப்பொலி" ஓசை தேவைதானா என சில நவீன சித்தாந்திகள் கேட்க கூடும்,..
மெல்ல அழிந்துவரும் கலைவடிவங்களில் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று ..
..
இப்போதெல்லாம் பக்கீர்களை காண்பதறிதாய் போய்விட்டது .. பக்கீர் என்பதன் பொருள் கூட இன்றைய பக்கீர்களுக்கு தெரிவதில்லை என்பதுதான் வேதனையான விடயம் ..
.. 
பக்கீர் எனும் பகீீீர் எனும் மூலச்சொல் (பாரசீகம்)  வந்தது தன் எல்லா தேவைகளுக்காக இறைவனை இறைஞ்சுகிற தன்மை அது ஆன்மீக தேவையாகவும் உலகளாவிய தேவையாகவோ இருக்கலாம்  என்பதிலிருந்தே அவர்கள் "துறவிகள் " அல்ல என பொருள் கொள்ளலாம் ..
..
தமிழகத்தில் நாடோடிகள் (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) நூலில் அ. வசந்தா அவர்கள் எழுதிய ‘பக்கீர்’ கட்டுரையில்
பக்கீர் என்பவர் தன்னிடத்தில் யாதொரு சொத்தில்லாமலும், யாதொரு தொழில் செய்யக் கூட்டாமலிருப்பவனாகவும் அவனிடத்தில் ஒரு நாளுக்குப் போதுமான உணவும் முழு உடுப்பும் இருந்தால் அவன் பக்கீரல்ல” என்பது பொது வழக்கு.. பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்கள் பக்கீரல்லர் என்பதையும், எவ்வித வருமானமும் இல்லாமல் வாழ்பவர்களே பக்கீர் என்பதையும் இதன்வழி அறியலாம்” .. என்கிறார்
..
பக்கீர்கள் யாசகம் பெறுபவர்கள்  அல்ல அவர்களுக்கென்று பாரம்பரிய பெருமிதங்கள் உண்டு .. 
இஸ்லாமிய ஞான இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும், பரிச்சியமும் கொண்டவர்கள். தொன்மையான இசைக்கருவிகளை இசைக்கக் கற்றிருப்பார்கள். பார்வையில், பேச்சில், கனிவு, நன்னடத்தை, பற்றற்றத் தன்மை, இசையில், இறைப்புகழில் தோய்ந்து விடுதல் நாடோடிக்குணம் அவர்களின் இயல்பு இவையெல்லாம் ஒருகாலகட்டத்தில் இஸ்லாமிய சமூக மலர்ச்சியில் தேவையற்றதாக அல்லது இஸ்லாம் எடுத்தியம்பாததென பேச்சு வர தொடங்கியதிலிருந்து எல்லாம் மாறிப்போனது 
..
சூபித்துவத்தை ஒருபுறமும்  இறைநேசத்தை மறுபுறமும் கொண்டவர்கள் மனிதகுலநேசத்தை கொண்டு எளிமை பரந்த நோக்கு சமய உணர்வு கொண்டவர்கள் ஆனால் காலபோக்கில் ஏக இறைவனுக்கு மாறுபடுவதாக சொல்லி இவர்களை இஸ்லாமிய சமூகத்தின் "நவீனர்கள்" மெல்ல புறக்கணிக்க தொடங்கினார்கள்
இவர்களின் உடை இஸ்லாமிய பொது சமூகத்திலிருந்து மாறுபட்டு பச்சை /வெள்ளை தலைபாகை கண்டமாலை பாசிமணி ஜிப்பா என மாறுபடுவதும் நாடோடி வாழ்வியலை கொண்டதும் இவர்கள் இஸ்லாமிய சமூகத்திலிருந்து ஒடுக்கபட காரணங்களில் ஒன்றாகியது 
..
இன்றைக்கு மிகவும் புறக்கணிக்கபட்டவர்களாக பக்கீர்கள்
இருக்கிறார்கள் பழைய மரபுகள் புதிய  வழிதடங்களில் பயணிக்க முடியாமல் வாழ்வாதார நெருக்கடியால் பிற தொழில்களுக்கு சென்றுவிட்டார்கள் .. அர்ப்பணிப்போடு கலைநயமிக்க இறைநேசபாடல்களில் ஒலித்து சமயநெறிகளை பின்பற்றிவந்த சமூகம் இஸ்லாமிய சமூகத்தாலேயே தேவையில்லாத நிலைக்கு ஆளாகி பக்கீர்கள் வரவும் குறைந்து போய்விட்டது ..
..
வழுத்தூர் தொன்மைகளை கைவிடாமல் காத்துநிற்பதில் பெருமிதம் தோன்றுகிறது .. இது நம்பிக்கையை எல்லாம் மீறி நல்ல கலைவடிவ நாடோடி தென்றல் வீசுவதை ரசிக்கவும் போற்றவும் துணை நிற்கவும் வேண்டியது கடமை ..
எல்லோரும் பக்கீர் ஆகிவிட முடியாது .. 14 நாட்கள் தவமிருந்து தலை முதல் பாதம் வரை ரோமங்களை நீக்கி இறைந்தவரை போல  சடங்குகள் செய்து கபனிட்டு அடக்க செய்யவேண்டும் .. சிறு துவாரத்தில் காற்று புக சில மணிதுளிகள் பீர்மார்களும் பக்கீர்களும் பைத் பாடி மீண்டும் தோண்டி எடுத்து  அவரை பக்கீர் ஆக்குவார்கள் .. இப்போதெல்லாம் "அடக்கம் " செய்யும் சடங்கு தவிர்க்கபடுகிறதெனும் பக்கீராக சில வரையறைகள் உண்டு .. இஸ்லாம்  ஏற்கிறதா என்ற கேள்வியும் இவர்கள் வாழ்வில் பெரும் நெருக்கடியைதந்ததென்றாலும் தமிழ்நாட்டில் பக்கீர்கள் வரவும் பெருக்கவும் பெருமளவில் குறைந்ததென்பதை மறுக்க முடியாது ..
..
மிகசிறந்த கலையோடு கூடிய வாழ்வியலை வாழ்ந்தவர்கள், நெறியோடும் புகழோடும் நல்ல குரலவளத்தோடும் ஞான பெருக்கோடும் வாழ்ந்த சமூகம் 
பக்கீர் சமூகம் .. இனி வரும்காலங்களில் ...?
..
ஆலஞ்சியார்
..
6..
ஆன்மீகம்..
ஒருவகை பொய்.. இங்கே மதம் கடவுள் உள்ளவரை இந்த ஏமாற்றும் வித்தை அரங்கேறிக்கொண்டே இருக்கும்.. அவரவர் வசதிக்கேற்ப தங்கள் நிலைநிறுப்பை காட்டிக்கொள்ள பொய் எனும் ஆயுதம் அவர்களுக்கு உதவும்..
மதம் சொல்லும் போதே தலைக்கேறிய போதையாய் நம்மை சூல் கொள்ளும் எதையுமே ஏனென்று கேட்காமல் சொல்வதை ஏற்க நம் மூளையின் GOD பகுதியை சலவை செய்யும்..
மனித தேவைகளை மறந்த தெய்வத்தின் நிலை தேடும் போலி பாசாங்கு வரும்.. ஞானமெனும் அறிவை மழுங்கடித்து மெய்ஞானமெனும் பூச்சுற்றும் வேலை செய்யும்.. ஞானமென்றால் அறிவு அறிவெனில் அது தெளிவென்றே பொருள்.. பிறகெதற்கு மெய்யென்று பொய் சொல்லும் கூத்து .. 
..
ஆன்மீகவாதிகளை கூர்ந்து கவனியுங்கள்.. 
கவனமாக நம்மை அவர்கள் பக்கம் இழுப்பார்கள் ..எப்படியென்றோ ஏனென்று கேள்வி எழுப்பினால் .. நம்மை புறக்கணித்து சரிவராதென்றும் ஏன் 
 நம்பிக்கையில்லாமல் வந்தீர் என்பார்கள்.. ஆன்மீகவாதிகளின் ஆயுதம் பொய் .. மக்களின் பயம்/பலவீனம் அவர்கள் மூலதனம்.. வேதம்  கடவுளோடு தொடர்பு மனிதனின் செயல்பாட்டால் விளையும் கெடுதிகளுக்கு..  பரிகாரங்களென 
நம்மை மடமையில் வீழ்த்தும் வித்தை அறிந்திருப்பார்கள்...
துறவு அல்லது இல்லறத்தை விடுதல் என்பது இயற்க்கைக்கு முறணானது.. காமம் இயல்பான நமது ஆசைகளின் வடிகாலாய்.. இன்பமெனும் நிலையை அடைதல்.. இங்கே காமம் அசிங்கமாக பார்க்கபடுவதும்.. அதை தவறென்றும் கற்பென்றும் கட்டுபாட்டை கடுமையாக்கியதும் ..
ஒழுக்கமென்று நம்பவைத்ததும் .. காமத்தில் திருட்டுத்தனம் வந்தது அதற்கு ஆன்மீகம் பெருந்துணையானது.. எந்த ஜீவராசியும்  காமத்தை அழுக்காகியதில்லை மதம் பேசும் பித்தர்கள்..மக்களின் பலவீனத்தின் மீதே வீற்றிருப்பார்கள்.. சில செப்படிவித்தைகள் அறிந்திருப்பர்.. அதைவிட கடைசி ஆயுதமாக காமத்தில் நம்மை நிறுத்தி .. ஒருவகை ஆசையை தூண்டி அடிமைபடுத்தும் வேலை நடக்கும்.. காமம் அழகு.. எந்த ஜீவராசியும் காமத்தை அசிங்கமென்றதில்லை மனிதனை தவிர அதை திருட்டுத்தனமாக அடைய இந்த ஆன்மீகம் துணைக்குவரும்..
..
ஆன்மீகம் பேசுவோரை மதபோதகர்களை  பாருங்கள் தான் மட்டுமே சரி தன் கடவுள் மட்டுமே சரி .. நாம் மட்டுமே நேரான பாதையில் செல்கிறோமென்று மூளைச்சலவை நடத்துவர்.. ஒருவகை போதை தரும் சொற்களால் நம்மை கட்டி போடும் சாகசம் அறிந்து பிற வழிபாடுகளின் மீது வெறித்தனமான வன்மத்தை 
விசவிதையை தங்களை பின்பற்றும் மக்களிடம் விதைக்கும் கேடுகெட்டவர்கள் தங்களுக்குள் போட்டிவந்துவிட்டால் அவர்களின் கடந்த கால நிகழ்கால அசிங்கங்களை பொதுவெளியில் வைத்து அதற்கு இறைவனை துணைக்கழைத்து விவாதிப்பார்கள்.. ஒருவரின் தனிப்பட்ட விடயத்தை நாம் ஏன் தெரிந்துக்கொள்ளவேண்டும் பேச வேண்டுமென்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் நான் யோக்கியன் அவன் அயோக்கியன் என்கிற ரீதியில் கதைப்பதற்கு பெயர் இவர்கள் மொழியில் ஒழுக்கம் ..
..
இப்போதெல்லாம் ஆன்மீகம் ..அரசியலென்று ஆகிவிட்டது அது எவ்வளவு தீமையை தருகிறதென்பதற்கு நடந்தேறும் நிகழ்வுகளே சாட்சியம் வகிக்கின்றன.. எதை உண்பது என்பதில் தொடங்கி எதை செய்யவேண்டும் எதை பேசவேண்டுமென திணிக்கிறார்கள்.. எதுவாகயிருந்தாலும் அது திணிக்கபடுமேயானால் அது மக்கள் மனங்களிலிருந்து அறுந்துவிழும் .. 
இந்த உலகில் மனிதம் பேசுகிற இல்லாததை இல்லையென்று உரக்கசொல்லி .. பொய் புரட்டு இதிகாசம் வேதம் சாதி சடங்கு என மூடமும் மடைமையை புறக்கணித்து அறிவின் நிழலில் நிற்கிற இயற்கையை அதன் வழியில் நம்புகிற  வழிமுறையே  காலம் கடந்தும் நிலைக்கும் அதற்கு பெயர் நாத்திகமென்றால் அதுவே உலகிற்கு அமைதியை செழிப்பை உயர்வை நம்பிக்கையை ஒற்றுமையை தரும்.. மதமென்பது ஒருவகை பிரிவினை அதில் கடவுள் ஆன்மீகம் என்பதெல்லாம்.. ஒருவகை ஏமாற்று.. இது எல்லா மதத்திற்கு பொருந்தும்.. நானே உயர்ந்தவன் என்மதமே சரியென்கிறதைவிட அயோக்கியத்தனம் வேறேதுமில்லை..
..
அன்பே சிறந்த வழி..
..
ஆலஞ்சியார்..
..
7..
ஊடக அறம் ..
நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டிய இடம் ஒன்றுண்டு .. ஆம்  எப்போதும் "அறம் வெல்லும்" என்று நம்பிக்கையோடு நின்ற பேரருள் செல்வம் .. எத்தனை கீழ்த்தரமான செயல்கள் வந்து மோதி நின்றபோதும் அறம் தவறாமல் ஊடகத்தின் பொருள் உணர்ந்து செயல்பட்டவர் .. எத்தனை விலைபேசல்கள் மிரட்டல்கள் வந்தன .. மிசா ஒன்று போதும் முழுவதுமாக முடக்கபட்ட போது கூட துண்டு சீட்டில் அச்சடித்து மவுண்ட் ரோட்டில் விநியோகம் செய்த அறம் .. பொய்களால் வலைப்பின்னி நகரமுடியாமல் செய்திடலாம் என்ற போதும் கொள்கை உறுதியோடு நின்றாடிய அறம் .. குடும்பத்தை கேலி பேசியும் வஞ்சகத்தோடு இட்டுகட்டி மானம் கெடுக்க நினைத்த போதும் இவன் ஓடிவிடுவான் என நினைத்தோரை எதிர்த்துநின்று புன்னகையால் சாய்த்த அறம் 
அந்த அறத்திற்கு கருணாநிதி என்ற பெயருண்டு 
..
இன்றைக்கு உத்தமர் போல் வேடமிட்டு இனத்தையும் பண்பாட்டையும் சிதைப்போரிடம் கைட்டி நிற்போர் .. சில ஆயிரங்களுக்கு விலைபோகும் கயமை.. நெறியில்லா நெறியாள்கை தகுதியில்லாதோரிடம் ஊடகம் சிக்கி தவிக்கிறது .. கொள்கையை பேசுங்கள் சரியோ தவறோ உங்களுக்கென்ற பாதையை தேர்வு செய்து களமாடுங்கள் .. தவறென்றாலும் உங்களின் உறுதிபாடு முக்கியம் இன்றைய தவறு நாளை விளங்கங்களோடு சரிசெய்ய இயலும் .. ஆனால் விலைபோனால் "அடிமாடு" தான் 
..
ஊடகத்துறையை தேர்வு செய்யும் போது கொஞ்சமேனும் நன்மையோடு, மக்களுக்கு சேதியை கொண்டு சேருங்கள் .. நடுநிலை என்பது ஒருவகை இயலாமை .. தெளிவோடு பயணிக்க மறுப்பவர்களின் தடுமாற்றதிற்கு மறுபெயர் ..  இன்றைய ஊடகத்துறையின் நிலை பரிதாபத்திற்குரியதாகிவிட்டது .. நாட்டுநலன் மக்கள் நலன் என்பதெல்லாம் பணத்தை கொண்டு தீர்மானிக்கபடுவது கேவலமான ஒன்று ..  
..
கலைஞரை போல ஊடகத்தை கையாள முடியாது தலைவனாகவும் மூத்த பத்திரிக்கையாளனாகவும், எதிர்கருத்து கொண்ட பத்திரிக்கைகளுக்கு/பத்திரிக்கையாளர்களுக்கு முன்னுரிமை தருவாதாகட்டும் ..  
அதே நேரம் செய்தியில் உண்மை கெடாமல் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற அக்கறை .. ஜனநாயகமாண்பு கெடாமல் கையாண்டவிதம் .. ஒவ்வொருவரும் கற்கவேண்டிய பாலபாடம் .. அரசியலில் மட்டுமல்ல ஊடகத்திற்கும் கலைஞர் பெருமகனின் வாழ்வு புதிதாய் வருவோருக்கு அரிச்சுவடி 
..
இளம் ஊடகவியலாளர்களே 
நெஞ்சுரத்தோடு வாய்மை வெல்லும் என நம்பிக்கையோடு அறத்தின் பக்கம் நில்லுங்கள் .. விலைபோனவர்கள் விலாசம் தெரியாமல் போன வரலாறு நிறைய உண்டு .. 
அறம் வெல்லட்டும் 
ஆம் அறமே இறுதியில் வெல்லும் 
..
ஆலஞ்சியார்
இரண்டு கவிதைகள்
**********************************

ரகசியம் சொல்கிறேன்
காதை கொடுங்கள்
நான் நானில்லை ..
நிஜத்தில்..
நான் நானில்லை..
முகம் வேறு..
அகம் வேறு...
..
உள்ளில் வஞ்சம்..
பிறர் வாழ..
வழிவிடுவதேயில்லை..
எல்லாம் எனக்காது..
அடுத்தவர் உரிமையா..
நான் தருவருதே..
அவர் உரிமை..
..
பங்காளி 
தேங்காய் உடைத்தால்
நான் கொட்டாங்குச்சியை அல்ல
அவன் கையையே உடைக்கிறேன்..
..
வெளியில் தெரியும்
எதுவும்..நிஜமில்லை..
..
உள்ளில் மிருகம்
மூகமூடியணிந்து..
சிரித்து பேசி..
பலரை படுகுழியில்
தள்ளுகிறது ..
தவறென்று தெரிந்தும்.
மனதில்  துளியும்
இரக்கம் கொள்ளாமல்.
கீரிடம் சூட்டிக்கொள்ளகிறேன்..
..
அடுத்தவர் பாதையை
அடைத்து..
எனக்கென..ஒருபாதை..
நான் மட்டுமே
செல்லும் தனிபாதை
வேண்டுமென்கிறேன்..
..
சுற்றம் சொந்தம் கூட
எனைச் சுற்றியே
இயங்க வேண்டுமென்ற
பேராசைக்காரன்..#நான்
..
உலகம் எனக்கானது
என்ற அகம்பாவம்..
எதற்கும் அடங்காத திமிர்
யார் சொல்லும் கேளாமை,
அறியாமை..
பெரியவர் தம்மை மதிக்காத
கொடுஞ்செயல் ..
எல்லாம் உண்டு என்னிடம்..
வெளியில் காட்டாதவாறு
யாரும் எனை 
இனம்காணாதவாறு..
..
நான் நானில்லை
நிஜத்தில்லை
மனிதனில்லை..
மனிதம் மரத்துப்போன
முகமிழந்த..
போலி முகமூடியணிந்த
பொல்லாதவன் ..
..
எல்லோரும்..
சொல்கிறார்கள்
#நான்_மனிதன்..
..
*************************************

சிலநேரம்..
நம்மை கடந்து போகும்
நிகழ்வு எதும் ..
நமக்கில்லை என
எண்ணுவதுண்டு..
சின்ன சலனத்தைக்கூட
ஏற்படுத்துவதில்லை.  
நமக்கு மிக நெருக்கமான
ஏதோ ஒருவகையில்
தொடர்புடைய  .
என்றாவது ஒருநாள்..
நம்மை நேரடியாய் ..
சில வேளை ..
இதயத்தில் ரணத்தை..
மாறா வடுவை
தரக்கூடிய
நிகழ்வு கூட
நமக்கில்லையெனும் போது..
சஞ்சலமில்லாமல்
நம்மால் இயங்க முடியும்..
..
மரணம் அழகு..
அத்தனை கொடூரமில்லை..
என்றாவது
நம்மை தழுவும்..
ஆரத்தழுவும்..
இயற்கையோடு
நம்மை கொண்டு சேர்க்கும் ..
மண்ணில் உரமாவோம்..
..
நிறைய வாழ்ந்தவனோ
நிம்மதி இழந்தவனோ..
பேராசை கொண்டவனோ
பேரறிவாளனோ.
மண் சமன் செய்யும். 
மரணம் அழகு.. 
இயல்பாய் வருமெனில்..
தனியாய் வருமெனில்..
#மரணம்கூட_அழகு..
..
ஆலஞ்சியார் 

செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

ஊழலை, கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு  .. New India Born  என்றவர்கள் புதிய ₹2000 நோட்டை அறிமுகம் செய்தார்கள் .எஸ் வி சேகர் போன்றவர் 2000 ரூ நோட்டில்  சிப்பு இருக்கு கள்ள பணபுழக்கத்தை காட்டிக் கொடுத்துவிடும் என்றெல்லாம் ஊதினார்கள் .. இப்போ கள்ளநோட்டை ஒழிக்க ₹2000 செப்டம்பர் முதல் செல்லாது..
..
டாக்டர் மன்மோகன் சிங் வருங்காலம் என்னை சரியாக தான் பேசும் .. உண்மையில் அன்று தூற்றியவர்கள் இன்று கவலைக் கொள்கிறார்கள் ..
நிதியமைச்சர் Nirmala Sitharaman அவர்களின் கணவர் பரக்கலா பிரபாகர்

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து  The Crooked Timber of New India .. பிரதமர் அதிர்ச்சி தரும் அளவிற்கு திறமையற்றவர் என எழுதியிருக்கிறார்.. நிதியமைச்சரின் கணவரே சொல்கிறார் ,நிதியமைச்சரோ பிரதமர் அலுவலகமோ பாஜகவோ மறுக்கவில்லை.. உண்மையில் தேசம் மிக மோசமான காலகட்டத்தில் இருக்கிறது 2024 ஒருங்கிணைந்து இந்த நாசகார கும்பலை வீழ்த்த வேண்டும் வீழ்த்தியே தீரவேண்டும்..

.. ஆலஞ்சியார் 

Wednesday, May 17, 2023

அன்பின் முதலமைச்சர் .. 
மாண்பமை மு.க..ஸ்டாலின் 
Honorable 
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 

நாகரீக அரசியல் ..,
அரசியல் இலக்கணத்தில் சிறியதாக இனிய ஓசை எழுப்புமே அன்றி காரியத்தில் துளையிட்டுவிடும் ..சமீபத்திய செயற்பாடுகள் ஒன்றை உணர்த்தியிருக்கிறது.. இரண்டாண்டு அரசு அதிகாரம் வெகுமக்களின் அன்பை எந்தளவு பெற்று தந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் முணுமுணுப்பையும் பெற்று தந்திருக்கிறது.. 
..
நெடிய அனுபவமும் அசராத உழைப்பும் நெறிதவறாத செயலும் 
நிலை உயர காரணம்  என்பதை அறிவோம் ஆனால் கூட இருப்போரும், குழி பறிக்க காத்துநிற்போரும், சமயம் கிடைக்காத என ஏங்கிநிற்கும் பகை முன் நம்மை நிர்கதியாய் நிறுத்த தயங்காதவர்கள்.. அரச இயந்திரம் அதிகார போதையில் தனக்கு இணக்கமில்லாமல் நடத்தவிடாது .. நிறைய இடையூறுகள் தரும் அதையெல்லாம் மீறி அரசு இயந்திரத்தை நடத்துவது கடினமான செயல் .. அதை ஒரளவு வெற்றிகரமாக கையாண்டவர்கள் வரலாற்றில் படமாகிறார்கள்.. வேறெங்கும் தேட வேண்டியதில்லை தலைவர் கலைஞர் போதும் .. அவரே நமக்கு பாடம் 
..
கட்சி மிக முக்கியம்.. ஒருமுறை செல்வி.ஜெயலலிதா அதிமுக இரு அணியாக பிரிந்திருந்த நேரத்தில் ஜானகி முதல்வராக வந்தார் அப்போது ஆட்சியை விட கட்சி முக்கியம் .. கட்சி இருந்தால் பதவி தானே வருமென்றார் .. ஆம் அடித்தளம் சரியாக இருந்தால் கட்டிடம் வலுவாக இருக்கும் .. கலைஞர் காலத்து தொண்டனைப்போல் இப்போதெல்லாம் காண்பதறிது.. 
உழைக்கிறார்கள் ஆனால் அதில் சுயநலம் மேலோங்கி நிற்கிறது..  
காலத்தின் தேவை கருதி உதயநிதியை கொண்டுவந்தீர்கள்,  மக்களும் பயிற்சி பெறட்டும் என வரவேற்றார்கள் ஆனால் அதை சிலர் தங்களின் வருங்கால கனவிற்காக மேளம் கொட்டுகிறார்கள் .. 'சின்னவர்' வழியில் என சிலாகித்து எழுதி காலூன்ற பார்க்கிறார்கள் .. 
உழைப்பவர்கள் தான் ஆனால் தன் புகழுக்காக தன்னை உயர்த்திக் கொள்ள பொய்க்கொண்டு ஆடுகிறார்கள்.. கட்சியை விட தங்கள் செலவாக்கிற்காகவே கைதட்டும் இவர்கள் ஆபத்தானவர்கள்..
..
விமர்சனங்களும், மறுப்புகளும் ஏனென்ற கேள்வியும் அக்கறையோடு கூடியது.. இயக்கத்தின்பால் தன்னலமற்ற அன்பும் உணர்வுபூர்வமான பற்றும் கொண்டது.. அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் இயக்கத்தின்/ கட்சியின் வெற்றியை தனது வெற்றியாக கொண்டாடும் பெரும் மதிப்பிற்குரியவர்கள் இவர்களின் கரங்களை பற்றிக்கொண்டாலே போதும் .. சில ஒட்டுண்ணிகளால் இறுதியில் அவப்பெயரே மிஞ்சும்..
..
கட்சியை கடந்து திமுக ஆட்சிக்கு வரவேண்டுமென நினைத்தவர்களும் அதற்காக தங்களளவில் உழைத்தவர்களும் கவலைக் கொள்கிறார்கள் .. கட்சிக்குள் ஒருசிலரின் ஆதிக்கமும் தொண்டர்களை அகல நிறுத்தி சிலர் சாதித்துக்கொள்ள நினைப்பதும் வரும்காலத்தில் சறுக்கலை தரும்  மக்களின் பெரும் நம்பிக்கையில் சிறிய ஓட்டை போதும் சனாதனவாதிகள் அதை அகலபடுத்திவிடுவார்கள்..
..
வெளிப்படையாகவே  சிலர் தங்கள் பிள்ளைகளுக்காக உதயநிதியை உயர்த்தி பிடித்து இருக்கிறேன் அய்யா என சிலர் வளைந்து நிற்பது சுயமரியாதை இயக்கத்தின் சாபக்கேடு.. சிலதுகளை விலக்கியும் சிலரை எச்சரித்தும், நீண்டநாட்கள் அதிகாரத்தை அனுபவித்து சுகம் கண்டவர்கள் விடாது தங்களுடைய மக்களுக்காக கேட்பவர்களை ஓரமாக நிறுத்திவிட்டு புதியவர்களுக்கு உண்மையான கொள்கை பிடிப்புள்ளவர்களை அரவணைத்து செல்லவில்லை என்றால் விலை கொடுக்க வேண்டிவரும்..
..
தங்களின் கடும் உழைப்பு சிலரின் சந்தர்ப்பவாத செயலால் வீணாகபோய்விடும் .. மூத்த தலைவர்கள் வரும்தலைமுறைக்கு கதவை திறக்க மனமில்லாமல் தங்கள் வாரிசுகளை முன்னிறுத்துவதும்  அவர்களை புகழ்பாடிகளை கொண்டு துதிபாடுவதும் வெகுமக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது..
சில வேண்டதாகதவைகளால் நல்வாய்ப்பு கைநழுவிப் போகலாம்.. நமக்கான நம் இனத்திற்கான தேவைகள் நிறைய இருக்கிறது .. சனாதனவாதிகளும், சில இனத்தின் கோடாரிகளும், காத்திருக்கின்றனர்.. 
எச்சரிக்கை..
..
திமுக ஆட்சிக்கு வரவேண்டுமென விரும்பிய பொதுமக்கள் சிலர் முகம் சுளிக்க தொடங்கியிருப்பது தெரிகிறது.. 12 மணிநேர வேலை,அமை‌சசரவை மாற்றம் தொடங்கி கள்ளசாராய சாவிற்கு 10 லட்சம் நிவாரணம் என்ற அறிவிப்பு எதற்கு என்ற கேள்வியும் திசை மாறுகிறதா, விடியல் ஆட்சி என பேசுகிறார்கள்..
கவனம்.. கட்சிகாரன் கூட சஞ்சலபடுகிறான் வாக்குகேட்டு போனபோது தந்த உறுதிமொழியை கூட நிறைவேற்ற முடியவில்லை தன் வார்டுகளுக்கும் கூட நியாயமாக உதவ முடியவில்லை.. அரசு அலுவலகம் கட்சிகாரன் செல்லமுடியாத சூழல் .. ஆனால் அதிமுககாரன் சாதித்துகாட்டுகிறான் .. இதெல்லாம் வரும் தேர்தலில் நமக்கு பாடம் நடத்தும் .. 
.. 
ஐம்பதாண்டு பொதுவாழ்விற்கு சொந்தகாரருக்கு பாடமெடுப்பதா என  பதவிக்காக கூவும் சிலர் விமர்சனம் செய்வதை கேள்வி கேட்கிறார்கள் திமுக வரலாற்றை அறிந்தும் சுய நலத்திற்காக வகுப்பெடுக்கிறார்கள்.. கலைஞரெனும் மாபெரும் தலைவன் விமர்சனங்களை செவிமடுத்து அதற்கு தக்க பதிலளித்து இயக்கத்தை வலுப்பெற செய்தார் ..  
"ஆலமர நிழலில் எதுவும் வளராது'..
அடுத்த தலைமுறை தலைவனை முன்னிறுத்த வேண்டுமென கடிதமெழுதியதற்கு 'காலம் தலைவனை தேர்வு செய்யும்' என பதில் தந்து எம்மை வியப்பில் ஆழ்த்தியவர்.. இயக்கம் நல்ல தலைவனை இனங்காட்டியது..  தளபதி அவர்களே இந்த நீண்ட கடிதம் இயக்கத்தின் மீதும் இனத்தின் மீதும் கொண்ட பெரும் நம்பிக்கையில் நான்காம் தலைமுறை திராவிட மாடலாய் ஒலிக்கவும் ஜொலித்திடவும் வேண்டியே அன்றி வேறெதும் ஆசை இல்லை..
.. 
வாழ்க திராவிடம்..

ஆலஞ்சியார்

Saturday, May 13, 2023

தேசம் விழித்துக்கொண்டது 
..
வெறுப்பை விதைத்து மக்களை பிரித்த நாசகார சக்திகளிடம் மீட்டு அன்பெனும் கடையை திறந்திருக்கிறது காங்கிரஸ் 
ராகுல் எனும் தேசத்தை நேசிக்கும் மக்களை ஒருங்கிணைந்து வழிநடத்தி செல்ல வேண்டுமென உழைத்துக் கொண்டிருக்கும் இளந்தலைவரை நாடு பற்றிக்கொண்டதில் மகிழ்ச்சி
..
பிரதமர் பதவி வகிக்கும் மோடி அவர்களே மதத்தை வைத்து ஜெய் பங்ரஜ் என முழக்கமிடுங்கள் என நஞ்சை விதித்தும் தான் வகிக்கும் பதவியின் கண்ணியத்தை மறந்து  அனுமனை அவமதித்துவிட்டதாக பிரச்சாரம் செய்தும் , வெளிபபடையாகவே இஸ்லாமிய வெறுப்பை இட ஒதுக்கீட்டை  ரத்து செய்வோம், முஸ்லீம்களின் ஓட்டு தேவையில்லை என பேசியும்  மக்களை மதத்தை கொண்டு பிரித்து வன்மத்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்ற பழைய கணக்கை கையிலெடுத்தும்  மக்கள் தெளிவாக அமைதியும் வளர்ச்சியும் நல்லிணக்கமும் தேவையென தீர்ப்பை தந்திருக்கிறார்கள் 
..
இந்திய தேசத்தின் ஜீவன் இன்னும் உயிர்ப்போடும் உறுதியோடும் இருக்கிறது.. திராவிட மண்ணிலிருந்து முழுவதுமாக பாசிச சக்திகள் துடைத்தெறியபட்டிருக்கிறது.. இது இந்திய ஒன்றியம் முழுவதுமாக செயல்படுத்த பிரதான மாநில கட்சிகள் தங்களின் விருப்பு வெறுப்புகளை தூரவைத்துவிட்டு தேசநலன் மக்கள்நலன் கருதி பாஜகவை அதிகாரத்திலிருந்து விரட்டவேண்டும் 
..
ராகுல் எனும் இளைஞனின் "கை"களை தேசம் பலமாய் பற்றிக்கொள்ளாவிட்டால் இழப்பு நமக்குதான் .. மதம் சாதியை சொல்லி நம்மை பிரிக்கும் சதிகாரர்கள் இரத்தவெறிபிடித்து அலைகிறார்கள்.. எச்சரிக்கை..
ராகுலின் நெடிய நடைப்பயணம் நல்ல தாக்கத்தை விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.. 
..
கர்நாடக மக்கள் நல்ல தீர்ப்பை தந்திருக்கிறார்கள்.. குறிப்பாக இஸ்லாமியர்கள் ஒவைசியின் நரித்தனத்தை நம்பி ஏமாறாமல் சரியான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.. போலியான மதவாதிகளை நம்பாமல் தேசிய நீரோட்டத்தில் இணைந்து செயல்படுவதுதான் சரியென முடிவெடுத்திருப்பது நல்லபுரிதலை காட்டுகிறது ஹிஜாப் பிரச்சனை கையிலெடுத்த பாஜகவை பெரும்பான்மை சமூகமும் புறந்தள்ளி தோல்வியை தந்து மத நல்லிணக்கமே நாட்டின் இறையாண்மைக்கு  வலுசேர்க்கும் என காங்கிரஸை வெற்றிபெற செய்திருப்பது பெரும் நம்பிக்கையை தருகிறது.. 
2024 ல் தேசம் விடியும் 
..
ஆலஞ்சியார் 
டெல்டா ..
அமைச்சர் வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது .. மகிழ்ச்சி 
இந்த முறை அமைச்சர் தேர்வு டெல்டாவில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதை  கவனத்தில் கொள்ளவேண்டும்,.. 
டி.ஆர்.பி ராசா (தளிக்கோட்டை ராசுதேவர் பாலு ராசா)  அமைச்சர்பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்பதில் மறுகருத்தே இல்லை .. ஆனால் நீண்டநாள்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் தகுதியும் திறமையும் மக்கள் செல்வாக்கும் உடையவர் உண்டு ஏன் பாலுவின் மகனுக்கு தரவேண்டும் என்ற நியாயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்,.. 
..
பூண்டியார் பெயர் பரிசிலனையில் இருந்ததாகவும் பாலுவின் அழுத்தம் ராசாவிற்கு கிடைத்ததாகவும் பேசுபொருளாகியிருக்கிறது .. நிச்சயமாக கலைவாணன் தகுதியுடைவர் என்பதிலோ தந்தையின் காலந்தொட்டே கழகப்பணியில் தங்களை கரைத்துக்கொண்ட குடும்பம் என்பதிலோ யாரும் கைநீட்டி குறைச்சொல்லமுடியாது.. 
ஏற்கனவே தஞ்சை நாடாளுமன்ற தொகுதியை கேட்டுநின்று தோற்றவரலாறு உண்டு .. தஞ்சையில் டி.ஆர்.பாலு பெரிதாக எதையும் நிகழ்த்திவிடவில்லை.  களப்பணியிலோ மக்களிடம் தொடர்போ இல்லாத தலைவராக தான் இருப்பார் .. பழநிமாணிக்கம் போன்றோர் அன்று அமைதியாக கட்டுபட்டுநின்றதால் தான் இன்று கிடைக்கவேண்டிவர்களுக்குரிய அருகதையை தட்டிபறிக்கும் நிலை இது தொடர்வது வேரில் வெந்நீரை ஊற்றுவதைப்போல 
..
கும்பகோணம் அன்பு, திருவையாறு சந்திரசேகரன் (இவர் சிவாஜியை வென்று சரித்திரம் படைத்தவர்) என நீண்ட பட்டியல் உண்டு .. ராசாவை விட அனுபவம் வாய்ந்தவர்கள் ..மக்களிடையே நீண்டகால தொடர்பில் உள்ளவர்கள் .. இதையெல்லாம் வரும்காலங்களில் கருத்தில் கொள்ளவேண்டும் .. துரைமுருகன் போன்றோர்கள் கட்சிபணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வழிவிடவேண்டும் ..  வரும்தலைமுறையை வழிநடத்த நல்லதொரு பயிற்சிக்கான களமாக மாற்றவேண்டியது அவசியம் 
..
அமைச்சர் தேர்வு முதலமைச்சரின் விருப்பமும் அதிகாரவரம்பிற்குட்பட்டது .. தலைவரின் முடிவை ஏற்போம் .. நமது கருத்தை தொடர்ந்து தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் .. தலைவரின் வழியில் அவரது தடத்தில் பயணிப்போம்,.. எல்லோரும் தகுதியானவர்கள் தான் என்பதை நம்மைவிட தலைவர் நன்றாக அறிவார் ..
புதிய அமைச்சருக்கு வாழ்த்தையும் அன்பையும் சொல்வோம் 
..
ராசா மந்திரியானார் 
..
ஆலஞ்சியார்

Saturday, May 6, 2023


ஏன் தடைசெய்யவில்லை என்ற குரல் ஒலிக்கிறது .. மத்திய தணிக்கை சான்றிதழ் பெற்ற படத்தை தடை செய்யவேண்டுமென வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது .கேரள அரசும்  படைத்தை தடை செய்யவில்லை ஆனால் தமிழக அரசு ஏன் தடை செய்யவில்லை திமுக பாஜகவிற்கு பணிந்தது என சிலர் தூபம் போட இஸ்லாமியர்கள் பொங்கி திமுக முஸ்லிம்களுக்கு எதிரியென பேசுகிறார்கள் ..
..
ஒரு திரைப்படம்  கண்டுக்கொள்ளாமல் விட்டாலே போதும் அது பெட்டிக்குள் சுருண்டுவிடும் .. இருவர் படம் திமுக தொண்டர்களே கலைஞரிடத்தில் எவ்வளவோ சொல்லியும் பிடித்திருந்தால் பார் இல்லையென்றால் பார்க்காதே என கடந்து போனார்.   படம் படுதோல்வி.. மணிரத்னமே கலைஞரை சந்தித்து படத்தை பார்க்க அழைத்தும் போகவில்லை 
..
ஒரு படத்தை எதிர்ப்பைகாட்டி விளம்பரம் படுத்த தேவையில்லை இருவரை படத்தை தொடர்ந்து சிலபடங்கள் தோல்வியிலிருந்து மீள முடியாமல் 
G. வெங்கட்ராமன் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக்கொண்டார் ..  
..
அவர்கள் திட்டமிட்டே பொய்யான தகவல்களை கொண்டு ஒரு கலவரத்தை செய்ய முயற்சிக்கிறார்கள் ‍.. சட்டென்று உணர்ச்சிவயப்பட்டு கலவரத்தில் இறங்கவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் .. பிரதமரே படத்தைப்பற்றி பேசி கர்நாடக தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார் அவர்களுக்கு நோக்கம் கலவரம் மதவாதம் .. ஹிஜாப் பிரச்சனையிலும் கர்நாடக  முஸ்லிம்கள் கழட்டி வைத்து குழந்தைகளை படிக்க அனுப்பி மாநிலத்திலேயே முதலிடம் வரவைத்துவிட்டார்கள்.. இது தான் பதில் எங்களை படிக்கவிடாமல் தடுக்க எந்த சூழ்ச்சி செய்தாலும் அதை தாண்டி வென்றுகாட்டுவோம் தெருசண்டை போட்டுக்கொண்டிருக்க எங்களுக்கு நேரமில்லை கல்வி வேலைவாய்ப்பு இவை மட்டுமே எம்மை அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரும் என தெளிவாய் அறிந்தததால் "ஹிஜாப் " பள்ளியில் தேவையில்லை என முடிவுக்கு வந்தார்கள் 
..
தமிழக முஸ்லிம்கள் பிரிந்துக்கொண்டு தங்களுக்குள் அடித்துக்கொண்டும், உணர்ச்சிமேலிட புஜத்தை தூக்கி கத்திக்கொண்டிருப்பதால் "காரியம்" எதுவும் ஆகாது.. திமுக எதிர்ப்பதால் இஸ்லாமிய சமூகம் மேம்பாடடையும் என்றால் தாராளமாக எதிர்த்து களமாடுங்கள் தவறில்லை .. சுயம் பரிசோதனை செய்யாமல் அரசியல் புரிதல் இல்லாமல் தேவையற்றவைகளை நேரத்தை வீண்விரயம் செய்யாமல் எது சரியான பாதை என தேர்ந்தெடுத்து பயணியுங்கள்.. மத அரசியலை விட்டு பொது அரசியலுக்கு வாருங்கள் .. மதத்தை மனத்திற்குள் வைத்துக்கொண்டு சமூகம் மேம்பாட்டிற்கு எந்த களம் சரியானதென முடிவெடுத்து செயல்படுங்கள்.. உங்களின் ஆற்றலை ஒரு சினிமா தடை எனும் குறுகிய வட்டத்திற்குள் அடைக்காதீர்கள் .. பேசுகிறவனும் எதிர்கருத்தை கொண்டவனும் பரப்பரப்பாக இஸ்லாமிய சமூகத்தை வைத்திருக்கவே விரும்புகிறான் .. எதிர்கருத்தை பதிவு செய்ய யாரும் தடை போடவில்லை .. தவறான கருத்திலியலோடு ஒரு படத்தை எடுக்கிறார்கள் என்றால் சட்டரீதியான அணுகுமுறையே அதற்கு வழி .. மாறாக தடை செய் என்பதல்ல
.. 
திமுக  முஸ்லிம் சமூகதிதிற்கு எதுவுமே செய்யவில்லை என்பது  போல சிலர் பேசுகிறார்கள் இன்று இஸ்லாமிய சமூகம் அனுபவிக்கும் உரிமைகள் எல்லாம் திமுக தந்ததுதான் 
பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்த்தது தொடங்கி 3.5 % விழுக்காடுவரை யாரோ செய்தது .. 
 இன்று என் குடும்பத்தில் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பெண் வந்திருப்பது  இடஒதுக்கீட்டே காரணம் .. நீண்ட பட்டியல் இடலாம்
..
எல்லாவற்றிலும் திமுக ஏன் செய்யவில்லை என கேட்பதை விடுங்கள் .. அதிமுகவே மேல் என நினைப்போர் தாராளமாக வெளிப்படையாகவே ஆதரிக்கலாம் .. இஸ்லாமிய சமூகத்திற்கு அதிமுகதான் சரி .. CAA சட்டவடிவை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்து நிறைவேற காரணமாக இருந்தார்களே அதைப்போல திமுகவும் உணர்ச்சி பொங்க பேசிவிட்டு (அதைதானே எதிர்பார்க்கிறீர்கள்)  அமைதியாக இருக்கலாம் ..  தமிழ் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் அதுதான் தேவை .. போராட்டம், வழக்கு சிறை என இளைஞர்களை வழி கெடுத்து தங்கள் வளத்தை பெருக்கி கொண்டு  வாழலாம் ..
..
திமுகவை எதிர்க்க ஏதேனும் காரணம் வேண்டும் அதை தவிற வேறெதற்கும் பயன்படாது போராட்டங்களும் பிரச்சாரங்களும் 
ஒரு சினிமா தடைக்குள் சுருங்கிவிட கூடியதா சமூக தேவைகள் .. பகைவரை இனங்கண்ட கூட்டம் வியக்கவைக்கும் விவேகத்தோடு வாழ்ந்த சமூகம், வழிகேடர்களின் கைகளில் சிக்கி உணர்ச்சிமேலிட தெருக்களில் தேவைகளை தேடி அலைகிறது.. 
இன்றைய தேவை  சமுதாயத்திற்கு நல்ல "உஸ்தாத்"
..
வேர்களுக்கிடையே தேட வேண்டியதை
சிலபோது கிளைக்களுக்கிடையில்
நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற மௌலானா ரூமியின் வரிகள் தான் ஞாபகம் வந்தது .. இறகுகளோடு பிறந்த நீங்கள்  தவழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள் #மௌலானாரூமி 
..
ஆலஞ்சியார்
ஆரியம்/திராவிடம்..
..
ஆரியத்தின்  எதிர்மறை தான் திராவிடம்.. திராவிடம் காலாவதி ஆகிவிட்டதாக ஆர்.என்.ரவி புலம்புகிறாரே.. அவர் புலம்புவதிலிருந்தே திராவிடம் முன்பைவிட முனைப்போடும் வீரியத்தோடும் செயல்படுகிறதென தெரிகிறது .. சூடு பட்டால் அலறதான் செய்வார்கள் .. 
..
பெண்களை படிக்காதே என்றது ஆரியம் .. 
வா படி உதவிதொகை தருகிறேன் உனக்கே முன்னுரிமை என்றது திராவிடம் ..
வர்ண அடுக்கைச் சொல்லி தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்றது ஆரியம் ..
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றது திராவிடம் ..
பெண்களுக்கு சொத்தா.. குடும்ப உறவு சிதறுமென்றது ஆரியம் 
சொத்தில் பெண்களுக்கும் சம பங்கென ஒன்றியத்திற்கே வழிகாட்டியது திராவிடம் ..
ஒரு இனத்தை அழிக்கவேண்டுமென்றால் அவன் பண்பாட்டை சிதைக்கவேண்டும் அதற்கு முதலில் நூலகத்தை இல்லாதாக்கவேண்டும் அதைதான் அண்ணா நூலகத்திலும் செய்ய துணிந்தது ஆரியம் .. ஆனால் எல்லா இடங்களிலும் நூலகம் என்பதை இலக்காக்கியது திராவிடம் 
.. 
அடுக்கிகொண்டே போகலாம்..  
ரவி போன்றோருக்கு ஏன் எரிகிறதென்றால் பிற மாநிலங்களில் செய்வதைபோல மதத்தை சாதியைச் சொல்லி மக்களிடையே மோதலை  தமிழ்நாட்டில் உருவாக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் வெளிப்படையாகவே தெரிகிறது ..
எதை சொன்னாலும் மக்களே அதை கூறுபோட்டு ஆய்ந்து முகத்தில் கரியை பூசுகிறார்களே என்ற ஆதங்கம் .. 
திராவிட பெருங்கிழவன் அந்தளவு உழைத்துவிட்டு சென்றிருக்கிறான் அவனோடு முடிந்தது என்று நினைத்தால் அவனது தம்பிமார்கள் பெருஞ்சுவரை எழுப்பி காத்து நிற்கிறார்களே என்ற கோபம் அவர்களை எரிச்சலடைய செய்கிறது 
..
சரஸ்வதி நதி கலாச்சாரம் என்று புழுகி, தேடி பார்த்தும் கிடைக்காததால் சிந்துசமவெளி பண்பாட்டை கொண்டவனின் வரலாற்று அதிர்வுகள் கீழடியாய் கிடப்பதால் செய்வதறியாது புரட்டுகளில் காலம் இனியும்  ஓடாதென்று உண்மையை வெளிவந்தே தீரும் என்பதால் பதறுகிறார்கள் ..
..
எதைச் சொன்னால் கோவம் வரும், எதைச் சொன்னால் பகை நடுங்குமென தெரிந்து படையோட்டம் நடத்துவதால் தளபதியின் "தீ" சொல் சுட்டெரிக்கிறது ஆரியம் குலைநடுங்குகிறது .. மொழியைச் சொல்லி சாதியைச் சொல்லி மதத்தைச் சொல்லி தமிழர்களின் ஒற்றமையை சிதைக்க முடியாது.. அவனை ஒருங்கிணைக்கும் சொல் திராவிடம் .. 
ரவி பதறுவதும் அங்குதான் 
..
திராவிடம் சொல் அல்ல 
இனத்தின் அடையாளம் 
..
ஆலஞ்சியார்
மௌலானா  எனும் சொல்லின் பொருள் உணர்த்தும் பெருந்தகை
வழுத்தூர் பெற்ற மாபெரும் ஞானி 
எதையும் புன்முறுவலோடு கடந்துபோகும் ஞானம் எல்லோர்க்கும் வாய்க்காது .. தலைமைக்கான பண்பு நிறைந்த அறிவுக்கூடம் .. ஆசான் அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்தும் .. நின்றுக்கொண்டே மூத்திரம் கழித்த போது "உட்கார்ந்து போ" என்று நல்வழிபடுத்தியவர் ..  
தினம் "தினமணி"யை வாசிக்காமல் இருந்ததில்லை .. யாரிடமும் கடிந்து பேசி யாரும் கண்டதில்லை .. ஒழுக்கசீலர்கள், பண்பாளர்கள், பரந்தமனப்பான்மை கொண்ட பெருந்தகைகள் அறிவுஜீவிகள், என ஞானம் நிறைந்த மண்ணில் நானும் பிறந்தேன் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் ..
..
ஆலஞ்சியார்
 

Thursday, May 4, 2023

மாபெரும் தலைவனுக்கு நினைவு சின்னம் ..
தன் வாழ்நாளில் பெரும்பகுதியை சட்டமன்றத்திலும், பொதுவாழ்வில் 80 ஆண்டுகள் ஏற்றமிறக்கம் என எந்நிலையிலும் தடமாறாத தன்னிகரில்லா தலைவனுக்கும் சென்னை கடற்கரையில் பேனா சின்னம் .. இனி தமிழகத்தின் LANDMARK பேனா சிலை 
..
கோவில் கூடாதென்பதல்ல கொடியவரின் கூடாரமாக மாறாக கூடாதென்பதற்காக என முழங்கிய பேனா , மலமள்ளும் என் சகோதரனுக்கு உள் இடஒதுக்கீட்டை கையிலும் தலையிலும் மலத்தை சுமக்கும் அருந்ததியருக்கு 3% விழுக்காடு தந்து தலைமேல் தூக்கி ஆடுகிறேன் என்ற பேனா 
பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட பகுத்தறிவு துணைக்கொண்டு திட்டம் தீட்டிய பேனா .. சிறுபான்மை சமூகத்தவர் கல்வி வேலைவாய்ப்பில் இடம்தர உள்ஒதுக்கீடு செய்த பேனா 
..
முதல் பட்டதாரிக்கு கட்டணமில்லா கல்வியை தந்த பேனா,  உள்ளாட்சிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு தந்த பேனா .. பெண்களுக்கு சொத்தில் பங்கு தந்ததால் இந்திய குடும்ப உறவுகள் சிதைந்து போகும் என பழைமை பேசி வஞ்சித்தார்கள் .. ஆனால் இந்த திராவிடப் பெருவுடையாரின் பேனா தான் பெண்களுக்கு "சொத்தில் பங்கு" என உத்தரவிட்டது .. பெண்கள் கல்வியை உறுதி செய்ய தாலிக்கு தங்கம் என்றதும் இந்த பேனா தான் ..
பிற்படுத்தபட்ட இடஒதுக்கீட்டை உயர்த்தியதும், சமத்துவபுரம் கண்டதும், மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி தந்ததும், அனைவருக்கும் கல்வி,  சமஉரிமை, வேலைவாய்ப்பு, என ஓயாது எழுதி அதை செயல்படுத்திய பேனா .. மனிதனை மனிதனே இழுப்பதா என்ற பேனா தான் கைரிக்ஷாவை ஒழித்தது .. சமய நல்லிணக்கம் சமூகநீதி, ஒடுக்கப்பட்டோருக்கு முன்னுரிமை என 80 ஆண்டுகள் முழக்கமிட்டு பெற்று தந்த பேனா ..
..
நவீன தமிழகத்தை செதுக்கிய பேனா .. இந்த பேனா சிந்திய துளிகளில் முளைத்ததுதான் இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,கட்டமைப்பும்,  இந்திய ஒன்றியம் இன்று சிந்திக்க தொடங்கியருப்பதையெல்லாம் முப்பதாண்டுகளுக்கு செய்து சாதனை படைத்த பேனா .. காதுகேட்காத  சிறுவர்களுக்கு ஒற்றை கையெழுத்தில் செவித்திறன் கண்ட பேனா ..
..
கேலியும் கிண்டலும், வன்மமும், பொய்யும், வழக்குகளும், தொடர்ந்த சுழன்றடித்தபோதும்  அறம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு மக்கள் தொண்டாற்றிய மகத்தான தலைவன்.. 
இந்திய ஒன்றியம் கண்ட தன்னிகரில்லா தலைவர் கலைஞர் சமசரமில்லாத போராளி, சமூகநீதிக்காக  தொடர்ந்து எழுதியும் பேசியும் செயல்படுத்தியும் வந்தவர், பெரியாரின் சீடராய் அண்ணாவின் தம்பியாய், தமிழகமக்களின் பேரன்பிற்குரியவராய் திகழ்ந்தவர் .. 
வறியவருக்கு செவிசாய்க்கும் இறையாய் திகழ்ந்த பேரருளானனுக்கு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை கடலில் பேனா சின்னம் .. தடைகள் பலகடந்து தடம்பதித்த மாபெரும் தலைவனுக்கு தமிழ்நாடு செய்யும் நன்றிகடன் ..  பொல்லாங்கு பேசுவோரும், புறமுதுகில் குத்துவோரும், அரசியல் கழிசடைகளும்,ஆணவத்தில் கொக்கரித்த பாசிசத்தின் கள்ளகுழந்தைகளும் தந்த இடையூறை தகர்ந்து கம்பீரமாக எழுந்து நிற்தும் கலைஞரின் பேனா ..
.. 
ஆலஞ்சியார்
திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டாண்டுகள் ..
முதலில் நம் அன்பையும் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும்  தமிழ்நாடு முதலமைச்சர் மாண்பமை மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சொல்வோம் ..
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
..
அரசு ..
மக்கள் நிம்மதியாக  நல்லதொரு ஆட்சி கிடைத்ததை எண்ணி மகிழ்வதும் சில நேரம் ஊடலாய் பிணங்குவதும் இரண்டாண்டில் வெளிப்படையாக தெரிகிறது .. சில தவறுகள் பொதுவெளியில் பேசுபொருளாக்கி அதை வைத்து குளிர்காய நினைக்கும் சிலரின் நோக்கத்திற்கு தீனி போடுவதாய் அமைகிறது அரசின் செயல்பாடுகள் .. விமர்சனங்களையும் வாழ்த்துகளையும் ஒரே தட்டில் பார்பவர்கள் தான் நாம், .. ஆனால் இங்கே விமர்சிக்கபடுவதற்கு காரணியாக அமைவது சிலரின் செயல்பாடுகள் என்பதுதான் உண்மைகட்சியையும் அரசையும் வெவ்வேறாக பார்க்கவேண்டும் தான் ஆனால் இயக்கம் தான் நமக்கு அதிகாரத்தை பெற்று தந்ததென்பதில் வேறு கருத்துண்டா என்ன.. ?
..
அரசின் செயல்பாடுகள் கட்சிவேறுபாடின்றி பாராட்டும் எதிர்க்கவும் செய்பவர்கள் கூட தலைவரின் நேர்மையையும் ஆட்சி திறனையும் குறை சொல்வதில்லை .. ஆனால் கட்சிகாரன் போர்வையில் சில "நேர்மையாளர்" வேசம் கட்டுபவர்களின் அலப்பறைகள் தாங்கமுடியவில்லை .. எந்தவொரு செயலையும் திட்டத்தையும் உடனே விடிவு தேவை என எண்ணுபவர்களால் உடனே பார்த்தாயா இனி கூப்புதான் என்று அறிந்தே பிதற்றும் நடுநிலைகளால் நிறைய தேவைக்கதிகமாக விமர்சனத்திற்கு மௌனம் காக்கிறோம் என்றே நினைக்கிறேன் .. 
அவர்களால் நமக்கு தகுதியுள்ள எதிரியை இனங்காட்ட முடியவில்லையென்ற இயலாமையை புரிந்துக்கொள்ளமுடிகிறது .. ஆனால் "திமுககாரன் " என்கிறவரின் உடனடி தீர்வு சகிக்கவில்லை.. 
..
சில இஸ்லாமிய அமைப்புகள் எது செய்தாலும் உடனே பார் திமுக பாஜகவிற்கு ஒத்தூதுகிறதென பொங்குகிறார்கள்.. இந்த அரசு அனைவருக்குமானது .. எல்லாநிலையிலும் எதிர்க்க புறக்கணிக்கவேண்டியதில்லை என்ற புரிதல் இல்லை .. கொள்கையில் சமரசமில்லாது அதேவேளை அவர்களின் உணர்வுக்கும் மதிப்பளிப்பதுதான் சிறந்த அரசிற்கு அழகு .. 
..
அரசை குறைகூறவே கூடாதா என கேட்போருக்கும் எல்லாம் உரிமையும் உண்டு உண்மையாய் விமர்சனத்திற்கு மதிப்பளிக்க கடமைபட்டிருக்கிறது திமுக அரசு .. அரைகுறையோடு வாட்ஸ்ஆப் வதந்திக்கெல்லாம் பொங்கவேண்டாம் .. 12 மணிநேர வேலைத்திட்டத்தை திமுக தொழிற்சங்கமே (தொமுச)  எதிர்த்ததே .. கூட்டணி கட்சிகளும் எதிர்த்ததன உடனே முதலமைச்சர் கனிவோடு பரிசிலித்து நிறுத்தினார் .. விமர்சனத்தையும் ஏற்கும் அரசு இது என்பதற்கு இதுவே சான்று ..
..
திமுக ..
உள்ளடி வேலைகளில் சிலர் ஈடுபடுவதும், அதை சில அதிகாரமிக்கவர்கள் தொண்டர்களை கண்டுக்கொள்ளாமல்  இருப்பதும் காலப்போக்கில் அடித்தளத்தை அரிக்க தொடங்கி விடுமோ என்ற அச்சம் மேலிடுகிறது .. பணம் பதவியை பெற்று தரும் என்பது இயக்கத்தை செல்லரிக்கும் செயல் .. உழைப்பவன் நேர்மையும் தகுதியும் உள்ளவனுக்கு வாய்ப்புகள் தரப்படவேண்டும் ..ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்த வேகத்தில் கொஞ்சம் சுணக்கம்  தென்படுகிறது .. அதிகாரத்தை அடைந்தவுடன் "அகந்தை " கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்களை, தான்தோன்றித்தனமாக செயல்படுவோரை மாற்றி நிறுத்த வேண்டும் ..தனக்கு பிடித்தவரை விட கட்சிக்கு பிடித்தமானவனை கரம்பிடித்துக் கொண்டே நடக்கவில்லையெனில் சரித்திரம் நாளை பழிக்கும்,கேலி செய்யும் 
..
ஐம்பதாண்டுகளுக்கு மேல் அனுபவமும் தோல்வி, வெற்றி இரண்டிலும் மனங்கலங்காமல்  செயல்படும் தளபதி.. 
சிலரின் செயல்களும், பேராசையும் தான்தோன்றித்தனமும்,அதிகார மமதையும் பேருக்கும் களங்கம் சேர்க்கும் .. வேண்டாத களைகளை பிடிங்கியெறிந்தால் பயிர் செழுமையாய் வளரும் .. சில புல்லுருவிகள் திமுகவிற்கு களங்கம் கற்பிக்கமுயல்கிறார்கள் .. எப்போ என காத்துநிற்கும் பகைவரும், ஊதி பெரிதாக்க ஊடகமும் கழுகுபார்வையோடு காத்திருக்கின்றன.. சிறிய தவறைகூட பெரிதாக்க விலைபோன வீணர்கள் தயாராக நிற்கிறார்கள் .. இதையெல்லாம் தாண்டி இரண்டாண்டில் தலைவர் தமிழ்நாட்டை வழிநடத்தி வளம்கொழிக்க செய்கிறார் .. கூட இருப்பவர்கள் பொறுப்போடு செயல்படவேண்டும், அதிகாரிகளும், சகாக்களும் 
கழகத்தவர்களும் ..
காட்டாறுகள் சிலநேரம் அடித்துக்கொண்டு போய்விடும் ..  அதே ஆறு சமவெளியில் பயணிக்கும் போதுதான் பலனை தரும் .. நாடு செழிக்கும் நன்மை பயக்கும் .. திமுக சமவெளியில் பயணிக்கும் வற்றாத ஜீவநதி .. 
எல்லா ஜீவராசிகளுக்கும் பயனளிக்கும் ஆற்றை போல திமுக அரசு எல்லோருக்குமானது  .. அதுதானே திராவிடம் ..
..
ஆலஞ்சியார்