Tuesday, April 5, 2022

ஸ்டாலினை பளு தூக்கும் போட்டிக்கு அனுப்பலாம் என நகையாடுகிறார் .. அடிமைத்திலகம் எடப்பாடி பழனிசாமி .. 
விமர்சனம் செய்வதற்கும் தகுதி வேண்டும் அது உம்மிடம் அறவே இல்லை .. உமது பேச்சு எரிச்சலின் வெளிபாடு .. அரசியலில் காலம் செய்த கோளாறாய் வாய்பொத்தி 
சசிகலாவிடம் காலில்விழுந்து பெற்று அந்த நன்றியை கூட உடன்மறந்து பொதுவாழ்வில் கழிசடையாய் திரியும் உமக்கு 
#முத்துவேல்கருணாநிதிஸிடாலின் அவர்களில் நிழலை கூட விமர்சிக்கும் அருகதை இல்லை..
..
அரசியல் விபத்தாய் வந்த நீர் ..
வரலாறு தந்த மாபெரும் தலைவனை வெற்றியை பெரும் செல்வாக்கை கண்டு எரிச்சல் அடைவது தெரிகிறது ..  அரசியலில் குழிபறித்து முன்னேறினால் விழும் போது அடிபலமாகதான் விழும் .. இனி எழவே முடியாது டெல்லி பாதுஷாக்கள் நம்பி  நீச்சல் தெரியாமல் குளத்தில் இறக்குகிறீர் ஆழமறியாது முழ்க வேண்டும்.. சாதீய சூழலும் மதவெறியின் மாயையும் காக்குமென நம்புகிறீர் இருக்குமிடம் தெரியாமல் போவது நிச்சயம் ..
..
யாரை விமர்சிக்கிறீர் தெரியுமா
அறிஞர் அண்ணாவே "அப்பனைப்போல பிடிவாதகாரன் " என்ற ஸ்டாலினை தாம்.. உழைப்பின் மறுபெயர் ஸ்டாலின் என கலைஞர் சொன்னதெல்லாம் வெறும் புகழ்ச்சியில்லை நாட்டுமக்கள் நிம்மதியோடு அதைவிட தன்மானத்தோடு பெருமிதமாய் எண்ணுகிறார்கள்.. அடிமை கோமாளிகளால் இழந்த தமிழ்நாட்டின் பெருமையை மீட்டெடுக்கவந்த மாவீரென புகழ்கிறார்கள்  தமிழர் மானம் காத்து பகைமைகாத்துநிற்கும் காவல்தெய்வமென மகிழ்கிறார்கள் .. பகைவருக்கு தெரிகிறது 
Stalin is more dangerous than Karunanidhi என்று அடிமை உமக்கு தான் புரியவில்லை ..
..
ஒன்றிய இந்துத்துவாவாதிகளுக்கு சேவகம் செய்து கால்பிடித்து நக்கி பிழைத்துக்கொள்ளலாமென நினைத்து  எதைவேண்டுமானாலும் பேசலாம் என நினைத்தால் எச்சரிக்கை ..
மக்கள் உம்மை எழவே அரசியலில் முடியாதவாறு புதைத்துவிடுவார்கள் ..
அரசியலில் அரைகுறை அறிவோடு பொய் பித்தலாட்டம் கால்பிடித்தல் வடவருக்கு வெண்சாமரம் வீசுதல் என கேலிக்குள்ளான நீர் யாரை விமர்சிக்கிறீர் தெரியுமா..
திறம்பட ஆட்சி நடத்தி, நேர்மை அஞ்சாமை,துணிவோடு பகை இதுவென அறிவித்து நேர்மையோடு களம் காணும் போர்வீரனை.. நல்லதை மட்டுமே கொண்டு நடக்கும் செயல்வீரன், தெளிவான பாதை இதுதான் அது பெரியாரின் பாதை என
 ஊருக்கு உரக்கச் சொல்லி  நேர்மையோடு ஆட்சி நடத்துகிறவர் .. இதோ ‌‌கொஞ்சமும் சமரசமில்லாமல் கவர்னரை திரும்பி  கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்திருக்கு தைரியம் இதெல்லாம் உமக்கு வராது தெரியாது .. தலையாட்டிக்கொண்டே தமிழனை தலைகுனிய வைக்கும்  அரைவேக்காடு 
அஞ்சாநெஞ்சன் தளபதியாரை  பகடி செய்வதை ஏற்க முடியாது 
கோபுரகலசம் மீது எச்சில் இலை பறந்தமர்ந்தாலும்  கலசத்தின் பெருமை குறையாது ..
..
"கோபத்திலும் சீற்றத்திலும் பிணத்தைப் போல இரு.
பணிவிலும் அடக்கத்திலும் பூமியைப் போல இரு
தாங்கிக்கொள்வதில் கடலினைப் போல இரு..     என்றார் 
மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்கள்..
ஆம் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அப்படிதானிருக்கிறார் 
அது உயர்வு தந்த பணிவு அதற்காக எள்ளிநகையாடுவதையும் பகடி செய்வதையும் ஏற்க முடியாது .. 
பொறுமைக்கும் எல்லை உண்டு 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment