டெல்லியில் கலவரம்
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இருபிரிவினரிடையே கலவரம் கல்வீச்சு தொடர்ந்து போலீஸ் தடியடி காயம் ..
யார் காரணம் அறிவோம் ..
இந்திய தலைமை அமைச்சர் உள்துறை அமைச்சர் மௌனம் காப்பது ஆபத்தானது
எதிரிக்கட்சிகள் கூட்டறிக்கை இந்தியாவின் முகம் மாறி கிடப்பதையும் பிரதமரின் மௌனம் கலவரபடுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள் ..
..
வடநாட்டில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் கலவரம் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கெதிராக திட்டமிடபடுவதும் வெட்டவெளிச்சமாக தெரிகிறது
ஊர்வலம் செல்லும் பாதையில் முஸ்லிம்கள் கடைகள் மட்டும் அடித்து நொறுக்கபடுவதும் கொளுத்தபடுவதும் மசூதிகளில்
காவி கொடியை கட்டுவதும் தொடர்கிறது ஆளும்தரப்பு பதில் சொல்வதில்லை அவர்கள் கைது செய்யபட்டாலும் உடன் பிணையில் வருகிறார்கள் வழக்கின்தன்மை கடினமான பிரிவுகளில் இல்லை.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் சனாதன தர்மம் நிலைநாட்டபடும் ராமராஜ்யம் அடைந்தே தீருவோம் அதற்காக பலிகொடுப்போம் என வன்முறையை தூண்டுகிறார் ஒன்றிய அரசே பிராமண கட்டுபாட்டில் இயங்கும் ஆர்எஸ்எஸ் என்ற பிராமண இயக்கம் சொல்வதுதான் சட்டம்..
இது எங்கேபோய் முடியும்
..
தமிழகத்திலும் மீனாட்சி வைகையில் இறங்கினாள் .. எவ்வளவு அமைதி
ஆனந்த கூத்தாடினர் மக்கள் ..
பேதமில்லை வன்மமில்லை
மாமன் மச்சானாய் கலந்து மகிழ்ந்தனர் .. இது ஏன் இந்துத்துவ வெறியர்களுக்கு புரியவில்லை உன் மதம் என் மதம் அவரவர் வழிபாடுதானே தவிர வாழ்வியல் முறையல்லவே
இங்கே பசித்தவன், ஏழை, பொருளீட்டுகிறவன், செல்வந்தன், நம்பிக்கையாளன் மறுப்பாளன் எல்லோரும் அவரவர் வேலையை செய்துக்கொண்டுதானே இருக்கிறார்கள் இல்லாதவனுக்கு ஈந்தும், தனக்கானதை அடைந்தும் மகிழ்வோடு வாழ்கிறார்கள்.. மதம் மண்டையில் ஏறவில்லை மனிதாபிமானம் தலையில் அலங்கரிக்கிறது ..
மனிதாய் வாழ்கிறார்கள் இதையும் கெடுக்க முயற்சிக்கும் போதெல்லாம் #தடி கொண்டு மக்கள் தலையில் அடிக்கிறார்கள்..
..
சித்பவ பிராமணர்களால் நடத்தபடும் அமைப்பு மீன் ஆடு மாடு உண்ணும் இந்துக்கள் இந்த அமைப்பிஸ் தலைமையேற்க முடியாது ..
இங்கேதான் தெளிவான திட்டமிடலோடு பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறுகின்றன அது அரசிற்கு தெரியும் ஆனால் நாட்டில் நடக்கும் மத கலவரங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல என ஒதுங்கிக்கொள்வார்கள் மூன்றுமுறை தடைசெய்யபட்ட இயக்கம் இந்த தேசத்தை வழிநடத்துவது தான் காலக்கொடுமை
..
சர்வதேசநாடுகள் அஹிம்சை தேசத்தை கலவரத்தோடு பார்க்கிறது.. மனிதசமூகத்தின் மீது நடத்தபடும் தாக்குதல் ஒருநாள் பதில் சொல்ல நேரிடும் இந்திய ஒன்றியம் பகைமை மறந்து பன்முகத்தன்மையில் இந்து முஸ்லிம் கிருஸ்துவர் என அடையாளபடுத்தாமல் "இந்தியன்" என்ற பெருமிதம் அடையாளமாய் வாழவகை செய்தல் வேண்டும் ..
மத கலவரத்தை திட்டமிடுவோர் தூண்டுவோர்,பரப்புவோர் அதை மிகைபடுத்தி ஒருசாராரய் பழிச்சொல்லும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
..
இந்திய ஒன்றியம் நமக்கானது இங்கே பிரிவில்லை பேதமில்லை உயர்வு தாழ்வில்லை
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment