என்றார் மௌலானா ரூமி அவர்கள்
..
சிலர் வெண்சாமரத்திற்கு மயங்கிகிடக்கிறார்கள் ..
தன்நிலை அறிபவனே சிறந்த மனிதன் ..
பூப்பதெல்லாம் கடவுளின் காலடியில் விழுவதில்லை அதைவிட மங்கையின் கருங்கூந்தலில் அழகு செய்வதே சிறந்தது வந்ததின் பயன் அது..
..
சாமானியன் அறிவுச் சுரண்டல்
வளரவிடாமல் தடைபோடல் மதமெனும் மயக்கத்தில் தொடர்ந்து அழுத்தி அவனை கரைசேரமுடியாமல் காவல் நிற்பது பாசிசத்தின் பிரதானவேலை.. ஒரு மதம் அதை வைத்து கலவரம் ஏழைகள் உரிமை உடமை அடித்து நொறுக்கபடுவதும் ஆளும் தரப்பு வழிகேட்டில் திரியும் இளஞர்களை விலைபேசி சமூகத்தை மிரட்டி வருவதும்
பார்த்து பார்த்து மனம் சலிப்படைகிறது ..
..
பெருபான்மை என்பது எண்களில் இல்லை.. வெகுமக்களின் ஆசை வேற்றுமையில் ஒற்றுமை .. ஆனால் அதிகார மயக்கம் உயரத்தில் நிற்க வேண்டும், தங்களுக்கு கீழே பெரும்கூட்டம் தலையசைக்க வேண்டும் .. வர்ணவேறுபாட்டைச் சொல்லி வயிறுவளர்க்கவேண்டும் .. எல்லாம் எமக்கே வேண்டும் என்று ஒருசாரார் நீண்டநாள் அதிலேயே பயணித்துவிட்டதால்
வழிவிட மறுத்ததை எங்கே அறிவு வந்துவிட்டால் கேள்வி எழுப்புவானென அவனை கீழே நிறுத்தி வாளெடு கொடிபிடி கூச்சல்போடு உனக்கு சன்மானம் உண்டென வழிகெடுக்க பாவம் இடை,கடைகள் வழிதவறிய ஆடுகளாய் ..
..
வெறும் கூச்சல் புழுதியை கிளப்புகிறது .. அதனால் சிறுபான்மை அச்சம் கொள்கிறது கண்களில் நீர் .. வாய் திறந்து உரக்க அழ கூட முடியவில்லை எங்கே எதிர்வினையாற்றுவதாய் இருப்பிடத்தை இடித்து தரைமட்டமாக்கிவிடுவானோ என்ற பீதி .. கரிசனமாய் பேச யாருமில்லை .. கண்ணீர் துடைக்க கரங்களில்லை .. அரவணைக்கவோ,அக்கறைகாட்டவோ ஆள்வோர் தயாரில்லை அடுத்த தேர்தலில் வெற்றிக்கான வழியை எப்படி தடுக்கமுடியும்
தயாரித்தவனே தடுக்கவா முடியும் ..
..
பெரும் மக்கள் வாய்மூடி மௌனம் காப்பது ஆபத்தானது
வாழ்நாளில் செய்கிற மிகப்பெரிய தப்பு.. மதம் சாதி பிரிவினை என பிளவுபட்டு நின்றால் கடைசியில் இடம்தெரியாமல் போவீர்கள்
சிலர் வெண்சாமரத்திற்கு ஆசைபட்டு வீணாய் போகாதீர்..
கடவுள் காலடியில் பட்டுத்துணியென மூளைச்சலவைக்கு ஆளாகி வீதியில் கலவரத்திற்கு தயாராகாதீர்..
..
உன் வருங்காலமும் உன் சந்ததிகளில் வருங்காலமும் நல்லதொரு வாழ்வியலாய் இருந்திட வேண்டுமெனில் மூளைகெட்ட மூடர்களில் மதமேறிய அயோக்கியர்களில் சொற்களில் மயங்காமல் இளைஞனே சீர்படு ..
கல்வி உனை உயர்த்தும் அதை தேர்ந்தெடு ..மதமோ சாதியோ உனை கரைசேர்க்காது கல்வி ஒன்றுமட்டுமே காலம் தாண்டியும் உன் புகழ்பாடும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment