Thursday, April 14, 2022

அண்ணல் அம்பேத்கரை மோடியோடு ஒப்பிட்டு இளையராஜா எழுதியது வைரலாகிறது ..
வியக்க ஒன்றுமில்லை இசை தெரிந்தளவிற்கு இயல் தெரியவில்லை ..
..
அம்பேத்கர் 
இந்திய அரசியலின் பிதாமகன் 
ஒடுக்கபட்ட மக்களுக்காக மட்டுமல்ல அழுத்தபடும் செயலுக்களுக்கெதிராக சமதர்மம் வேண்டுமென்பதில் தெளிவோடு போராடி கடைசிவரை இந்தியா பார்ப்பனபிடியிலிருந்து மீள முடியாது இயலாதென அறிந்து 
பௌத்தம் தழுவியவர் .. இந்துவாக பிறந்தேன் இந்துவாக சாகவிருப்பவில்லை..
தீண்டதாகாதோர் யார் சூத்திரர்கள் யார் சாதியை அழித்தொழிக்கும் வழி என்ன ..நான் இந்துவாக சாகமாட்டேன்
என அறைகூவலோடு வெளியேறியவர் 
இந்திய அரசியல் சாசன சட்டத்தை எழும்போது அவர் அனுபவதித்த இடைஞ்சல்கள் என் கைகளில் பற்றிக்கொண்டு பார்பனீயம் எழுதியதென பகிரங்கபடுத்தி ஒடுக்கபட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மட்டுமே தீர்வு தரும் என தீர்க்கமாய் உணர்ந்து பெற்று தந்தவர் .. 
..
இந்திய சனாதனவாதிகள் எவ்வளவு கொடூரமான மனநிலையை கொண்டிருந்தார்கள் என்பதற்கு ஒர் உதாரணம் .. இந்திய விடுதலைக்கு முன்பு 1946 ல் இந்திய அரசியல் நிர்ணயசபைக்கு காங்கிரஸ் சார்பில் மராட்டியத்தில் நிறுத்தபடுவாரென எதிர்பார்க்கபட்டது ஆனால் காங்கிரஸில் இருந்த சனாதனவாதிகள் அவர்பெயரை இடம்பெற செய்யாமல் பார்த்துக்கொண்டனர் .. எல்லோருக்கு அதிர்ச்சி அப்போது முஸ்லிம்லீக் அவரை வங்கத்தில் நிறுத்தி தேர்வு செய்தது இதெல்லாம் வரலாறு 
..
குஜராத் இனபடுகொலை .. கோத்ரா ரயில் எரிப்பு தொடர்ந்து முஸ்லிம்கள் கொலை உடமைகள் எரிப்பு கர்ப்பணிபெண் வயிற்றை கிழித்த கொடுமை .. எதிர்வினை இப்படிதானியிருக்கும் என பேசியவர் அப்போதைய பிரதமர் வாஜ்பாயே "அறத்தோடு அரச தர்மத்தோடு நடந்துக்கொள்ளுங்கள் " என மோடிக்கு அறிவுரையை சொல்லியதெல்லாம் அறியாமல் ஒப்பீடு செய்கிறார் .. முத்தலாக் பற்றிய போதிய அறிவுமில்லை அதை அச்சமூகமே அக்கறைக்கொள்ளவில்லை தவறாக பயன்படுத்துவதாக அறிவர் .. ஒருவேளை தன் மகனின் மதமாற்றம் அவரை பேசவைத்திருக்கலாம் ..
..
இசைக்கு ராசாவாக இருந்து தொலைத்திருக்கலாம்.. சனாதனத்தின் கொடுமையை அதிகம் உணர்ந்தும் பாவவிமோசனம் தேடுவதாக சொல்லி அதினுள்ளே வீழ்ந்து கிடப்பவர் .. அவரின் இசை "இன்றைக்கும் என்றைக்கும்" 
நம் நெஞ்சில் ரீங்காரமிடும் 

"புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே" கொண்டாடலாம் 
மற்றபடி ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment