Sunday, April 24, 2022

மேதகு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அவர்கள் மீது நமக்கு மரியாதை உண்டு .. பெண் அரசியலில் எதிர்கொள்ளும் எல்லா கேலி கிண்டல் தொந்தரவு நையாண்டி பகடி  என அனைத்தையும் எதிர்கொண்டு தான் ஏற்ற கருத்தில் உடன்பட்டு விசுவாசமாக நின்றவர் ..
.. 
இவரின் திருமணம் கலைஞர் எம்ஜிஆர் இருவரும் இருதுருவமாக இருந்த காலத்தில் வந்திருந்து வாழ்த்தினார்கள் காரணம் குமரி அனந்தன் எனும் தமிழ்பால் பேரன்பும் தேசியநீரோட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை அர்பணித்து செயலாற்றிய சொல்லழகர் .. தந்தைபோல காங்கிரஸில் வருவார் என எதிர்பார்த்தவேளையில் பாஜகவில் சேர்ந்தார் .. கடும் முயற்சி உழைப்பு தலைமைக்கு விசுவாசமாய் நடந்து தமிழக பாஜக தலைவராக வந்தார் இவர் வந்த பிறகுதான் நாள்தோறும் செய்தியானது பாஜக என்றால் மிகையில்லை ..  எதைப்பற்றியும் கவலைபடவில்லை உருவகேலி செய்தபோதும் தலைமுடியை கூட நாகரீகமற்றமுறையில் வலைதளங்களில் விமர்சித்தபோதும் இடதுகையால் தள்ளி தான் ஏற்ற பணியை திறமையாக செய்தவர் ..
..
சிறந்த பொதுசேவகர் தவறான இடத்தில் என நான் கூட விமர்சனம் செய்திருக்கிறார் .. அறிவாய்ந்த தமிழ்மகள் அறிவிலிகூட்டத்தின் தலைவராக இருக்கிறார் என்று எழுதியிருக்கிறேன் .. இவரை விமர்சனம் செய்தோரை கட்சிபேதமின்றி கடுமையான கண்டித்து எழுதியிருக்கிறேன் .. பார்த்தாலே தீட்டு என சனாதனத்தால் ஒதுக்கிவைக்கபட்ட சமூக பின்னணியில் இருந்து கல்வியே உயர்வுதரும் என நம்பிக்கையோடு அரசியலில் தனக்கென புதியபாதையை வகுத்து அதில் குறிப்பிட்ட வெற்றியும் பெற்றவர் ..
..
சங்கரமடத்தில் (அது சங்கரமடமா என்பதில் கூட கருத்துவேறுபாடு உண்டு புனே சங்காராச்சாரியார் இவர்களை நக்லி என சொல்வார்  ஆதிசங்கரர் உருவாக்கியதல்ல காஞ்சி மடம் .. தமிழ் பேசும் பிராமணர்கள் தங்களுக்கென உருவாக்கிய
கும்பகோணம் மடம் இடம்பெயர்ந்து காஞ்சிக்கு சென்றது வரலாறு) அவருக்கு ஏற்பட்ட அனுபவம் அவர் சந்தித்த உருவகேலியை விட மோசமானது .. சங்கராசாரியர் துணியை தூக்கி போட்டது..
தமிழிசை எனும் ஆளுமையை சிறுமைபடுத்தியது, அவரது கண்ணியத்திற்கு இழுக்காகும்..
ஆனால் அங்கு வந்திருக்கும் பார்பனருக்கு கையில் கொடுப்பதும் உண்மையில் கூனிகுருகிநிற்கிற அவலம்.. என்னதான் இரண்டு மாநிலத்திற்கு ஆளுநரானாலும் எங்களை பொறுத்தவரை கீழானவர் என்ற மமதையை தவிர வேறொன்றும் இல்லை
..
இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் ஈரோடு மாமன்றத்தின் தலைவராக  பெரியாரின் தகப்பனார் இருக்கிறார் அவரிடம் குமாஸ்தாவாக வேலைபார்க்கும் பார்பனர் தங்கள் கடைக்கு வந்து தந்தையை வெங்கடப்பா என பெயர் சொல்லி ஒருமையில் அழைத்ததை கண்டு தந்தையிடம் வேலைபாக்க்கும் ஒருவர் இப்படி பேசுகிறாரே என்னதான் செல்லாக்கோடு இருந்தாலும் சனாதன கோட்பாடு அவரைவிட தாழ்த்துகிறதே என தனக்குள் கேள்வி கேட்டு அன்றுமுதல் பெரியார் சுயமரியாதைகாரனாக மாறினார் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்திற்காக உழைத்தார் ..
..
அக்கா தமிழிசை உணர வேண்டியநேரம் வந்துவிட்டது சுயமரியாதையை மானத்தை இழக்கவேண்டுமா என ஒடுக்கபட்ட மக்களின் பிரதிநிதிகள் சிந்திக்கவேண்டும் பணம் பதவி தராத கண்ணியத்தை சமத்துவம் மட்டுமே தரும் ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment