டெல்லி
இந்திரபிரஸ்தத்தில் எங்கள் ராவணன் ..
..
தமிழ்நாடு முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் தலைநகரில் ராவணகோட்டையை திறக்க சென்றிருக்கிறார் .. பகைவர்கள் நிலைகுலைய ,எதிரிகளோ வாய்கிழிய உளறுகிறார்கள் ..
..
அடிமைதிலகம் எடப்பாடி துபாய் முதலீடு குறித்து குடும்பம் சென்றதேன் என விளக்கமளிக்க கால்பிடிக்க சென்றதாக டயரை நக்கியே பழகப்பட்டவர் பழக்கதோசத்தில் பிதற்றுகிறார் .. பிரதமரோடு தமிழர் தலைவன் அமர்ந்திருக்கும் திமிர் ஒன்றே சொல்லும் எதற்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவரென்று .. திராவிட இயக்கம் அறிவை மானத்தை உரிமையையே தரும்..
மானம் ஒன்றே பெரிதென கொண்ட வாழ்ந்த சமூகம் தமிழ் சமூகமென உணர்த்தும் .. இடையில் வழிகெட்டவர்கள் பிழையில் பிறந்தவர்களால் அவமானமே வந்தது அதைவைத்து ஒட்டுமொத்த தமிழினத்தை எடைபோட கூடாது .. எடப்பாடி பழனிசாமி போன்ற சொரணை கெட்டதுகள் தமிழினத்தின் கலப்பட வித்துகள் .. வழி தவறிய ஆடுகள், காலத்தின் கேடுகள்..
..
டெல்லி சபையில் மதிக்கதக்கோர் தேடிவந்து கரம்பிடித்து மகிழ்கிறார்கள் .. இது அரசுமுறை பயணம் மட்டுமல்ல .. எங்கள் இனத்தின் அடையாளமாய் இயக்கத்தை பறைசாற்ற எழுந்தருளி நிற்கும் அறிவாலயம்
அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்புவிழா .. அறிவுடை சமூகத்தின் திறவுகோலாய், எம் இனம் மொழிகாக்கும் படைத்தளமாய் .. மாநில சுயாட்சி கேட்கும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சபையாய் திகழபோகிறது .. பிற மொழி பேசுவோர், தங்கள் மாநிலத்தில் சுயமரியாதையோடு செயல்பட தலைவரை கண்டு படிக்க வருகிறார்கள் .. உழைப்பால் உயர்ந்த உன்னதரை கண்டு மகிழ்கிறார்கள் .. அருகில் அமர்ந்து புகைபடமெடுத்து வரலாற்றில் பதிகிறார்கள் ..
..
இனி..
தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தை ஒருங்கிணைக்கும் வழிகாட்டும், பாசிசத்தை வேரறுக்க படையோட்டும், தங்கதளபதி கண்ணசைவுக்காக காத்திருக்கிறது தேசம் ..
வீணர்களே ..
ஓரமாய் ஒதுங்கி நில்லுங்கள் ..
இந்திய ஒன்றியத்தை புதிதாய் வடிவமைக்க தெற்கிலிருந்து
உதய சூரியன் வருகை தந்திருக்கிறது .. நன்னெறியோடு நேர்மையாய் நல்லாட்சி தந்து மக்கள் விரும்பும் முதல்வராய் .. இந்திய ஒன்றியமே ஏங்கி நிற்கும் மகத்தான தலைவர் எங்கள் இனத்தின் காவலன்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் டெல்லி
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment