வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் ..
தஞ்சை களிமேடு சப்பரம் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறினால் தான் என்னை நானே தேற்றிக்கொள்ளமுடியும் ..
தமிழ்நாடு முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
..
ஆட்சியாளன் மக்கள் துயர்கண்டு அழுகிறவனாக அவர்தம் துயரை நீக்க வழிசெய்கிறவனாக .. நானிருக்கிறேன் என கரம்பிடித்து நம்பிக்கை தருகிறவனாக அமைந்தால் நாட்டுமக்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்
"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி"..என்ற வள்ளுவன் வாக்கிற்கொப்ப மழையை எதிர்பார்த்தே வாழும் உயிர்கள் போல நல்லாட்சியை நேர்மையான ஆட்சியை மக்கள் எதிர்பார்ப்பார்கள்.. அந்த நல்ல ஆட்சி தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது ..
..
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தீ விபத்து உடனடியாக அமைச்சர் சகாக்களை களமிறக்குகிறார் .. மேயர் ஓடி வருகிறார் அசம்பாவிதம் தடுக்கபடுகிறது .. கடந்த பத்தாண்டுகளில் பாழாய் போன தமிழ்நாட்டை சீரெழுப்ப கடும் முயற்சி எடுக்கிறார்கள் .. பழைய கட்டிடத்தை இடித்து புதிதாய் கட்ட முதல்வர் பணிக்கிறார் .. இத்தனை வேகமாய் இதற்குமுன் கண்டதில்லை .. கலைஞர்தான் சொல்வார் எனக்கு முன்பும் பின்பும் இப்படியொரு ஆட்சியாளன் இருந்ததில்லை எனும் பேசவேண்டும் அந்தளவிற்கு உழைப்பேன் என்பார் .. உண்மையில் கலைஞரை மிஞ்சுமளவிற்கு உழைக்கிறார் .. எதற்கும் தயங்குவதில்லை ஒருபுறம் பகைவர்கள் புரளிபாடி வயிறெரிகின்றனர் மறுபுறம் புறக்கணிக்கபட்ட அடிமை கூட்டம் ஒர்பாரி வைக்கிறது.. புரிந்துக்கொள்ளாத மூடர்கள் எங்கே இடறுவார் என காத்திருந்த "இலவுகிளி" போல கிடைக்கிறார்கள் .. மக்கள் தெளிவோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு உழைத்துக்கொண்டிருக்கிறார் ..
..
சித்தாந்த எதிரிகள் புலம்புவது கேட்க ஆனந்தராகமாய் இருக்கிறது .. எதையாவது சொல்ல கடைசியில் மக்களே திருப்பி முகத்தில் அடிக்கிறார்கள் ..
சொல்ல
"குறையேதும் இல்லை" என மூர்த்திகள் கதறுவது கேட்க பேரின்பம் ..
stalin is more dangerous than karunanidhi என்று பகைவர்கள் கதறியபோதே இவர் நமக்கானவர், நம்மில் ஒருவர், நாடும் வீடும் நலம்பெறும் என்ற நம்பிக்கை பிறந்தது ..
சொல் அல்ல
செயல் அவர் ..
உழைப்பு உழைப்பு உழைப்பு .. இதுதான் தாரக மந்திரம் அவரோடு சேர்ந்து ஓட்டம் பயில்கிறார்கள் தம்பிகள் .. அவரளவிற்கு ஓடமுடியாவிடினும் மூச்சிரைக்காமல் ஓடுகிறார்கள்
..
நல்லவர் கையில் தமிழ்நாடு
நமக்கினி கவலை இல்லை
சேர்ந்து கரம் கோர்ப்போம்
தளபதி வழிநடத்தும் தமிழ்நாடு "பாரினிலே சிறந்தநாடு " என பறைசாற்றும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment