Tuesday, April 26, 2022

ஜூன் 3 
கலைஞர் பெருமகனாரின் பிறந்தநாளை அரசுவிழாவாக கொண்டாடுகிறது மிக்க மகிழ்ச்சி 
தகுதிவாய்ந்த தலைவரை அரசு கொண்டாடுவதில் தமிழகமே பூரிப்படைகிறது ..வரலாறு நெடுக விமர்சனங்களாலும் ஏளனமாகவும்,வீண்பழிகளோடு கடந்துவந்தாலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்கள்பணியில் அடிதட்டுமக்களின் மேம்பாடு, சமூகத்தால் புறக்கணிக்கபட்டவர்கள், விளிம்புநிலை மக்கள் நலன் .. பாதாளத்தில் நின்றவர்களை ஏற்றிவிடும் ஏணியாய் தமிழகம் பிறமாநிலங்களுக்கு முன்னோடியாய் திகழ உழைத்த உண்மையாக ஊழியனுக்கு மக்கள் சேவையில் மகத்தான உயரத்தை கடந்த மாமனிதருக்கு அரசு செய்யும் மரியாதை ..
..
இவனுக்கு  முன்னாலும் பின்னாலும் இவனைப்போல ஆட்சியாளன்  தமிழகத்தில் இல்லை என்று பேசபடவேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு  பயணித்தவர் .. துரோகங்கள் பழிச்சொற்கள் இவரை தளர்த்திவிடவில்லை மாறாக தகுதியற்ற தரகுறைவான விமர்சனங்கள் புறந்தள்ளி தன்கடமையை தொடர்ந்து செய்தவர் .. இனி அவ்வளவுதான் கருணாநிதி காலி என்று பகைவர்கள் பரப்புரை செய்தபோதும் அதே புள்ளியில் இருந்து புதியதொரு தொடக்கமென எழுந்தவர் .. தமிழினின் இயல்பை அறிந்து தன்னை ஒருநாள் தேடுவார்கள் என நம்பி உழைத்தவர் .. புகழ்ச்சியோ இகழ்ச்சியோ எதுவும் அவரை கரைத்துவிடவில்லை மாறாக உரமாக்கி "தரு"வாக வளர்ந்து நிலைத்து நிழல் தந்தார் ..
..
இன்றைய தமிழ்நாட்டின் நவீன கட்டமைப்புகள் இவரின் தொலைநோக்கில் கிடைத்தது .. மீன்சோறு போடுவதல்ல மீன் பிடிக்க கற்றுதருவதே நல்ல தகப்பனுக்கு அழகென, கல்வி வேலைவாய்ப்பை உருவாக்கி இந்திய ஒன்றியத்திலேயே தமிழர்கள்  உயரத்தை அடைய வழிசெய்தவர் .. நிறைய கருத்து வேறுபாடுகள்  வந்து போனாலும் தகப்பன்சாமி " என மக்கள் வணங்கி மகிழ்கிறா்கள்.. ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டுமென்ற இலக்கணம் கலைஞர் அவர்கள்.. 
அரசியலில் கட்சியில் இயக்கத்தின் தலைமைப்பண்பில் நல்லபாடமாய் திகழ்கிறார் ..
..
இன பகைவர்கள் கட்டிவைத்த புளுகுகள், இவரை தொடர்ந்து வேட்டையாடியதும், எத்தனை தோல்விகள், பொய் பிரச்சாரங்கள்,
ஆரிய சூழ்ச்சிகள் வீண்பழிகள் அப்பப்பா .. வேறொருவருக்கு இப்படி நடந்திருக்குமேயானால் இருந்த இடம் தெரியாமலேயே போயிருக்கும் .. எதையும் நேர்மையோடு எதிர்க்கொண்டு #அநீதிவீழும்_அறம்வெல்லும் என
உறுதியோடு நிற்க முடிகிறதென்றால் நேர்மையான பயணம், நன்மை தீமை எல்லாவற்றையும் ஒன்றாக கருதி 
மக்கள் தொண்டே தன் "வாழ்நாள்" பொருள் என வாழ்ந்த மாமனிதர் .. கொள்கையில் தெளிவு உறுதி எதற்கும் அஞ்சா நெஞ்சுரம் நேர்மை அறவழி இவையன்றி வேறில்லை இந்த மாமனிதருக்கு..
..
உன்னதமான தலைவன் 
கலைஞர் பெருமகன் ..
வாழ்க!
கலைஞர் புகழ்!! ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment