தஞ்சை தந்த திராவிட தீரர்
கழகத்தின் கண்மணியாய் கலைஞரின் கரம்பற்றி ஒரத்தநாட்டை கோட்டையாக்கியவர் ..
குறிப்பாக தஞ்சை மேற்கில் செல்வாக்கோடு கழகத்தை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தவர்
மாணவர் பருவம்தொட்டு அண்ணாவின் பேச்சால் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு கலைஞரின் போர்படை தளபதியாய் எதிரிகளை மிரளவைத்தவர் ..
மொழிப்போர் வீரராய் இளைஞர்களிடையே மாணவர்களிடையே செல்வாக்கோடு திகழ்ந்தவர் .. உள்கட்சி விடயங்களில் ஏற்றதாழ்வு வந்த போதும் கழகத்தின் தலைவரின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவர் .. கலைஞர் தந்த அரவணைப்பின் கதகதப்பில் மிளிர்ந்தவர்
கட்சியை எப்படி மக்களிடையே கொண்டு சேர்க்கவேண்டுமென அவரிடம் பாடம் கற்கவேண்டும்
துளிகூட சளைக்காமல் செயலாற்றுவார் .. அவரது பேச்சில் தொலைநோக்கு சிந்தனை இருக்கும் .. தெளிவான உரைநடை மிணுக்காத சொற்கள் எஃகு போன்ற உறுதியோடும் துடிப்போடும் கழகம் வளர்த்த மாவீரர் ..
..
ஏப்ரல் 24 ல்
அகவை 88 ல் காணும்
மாவீரர் எல்.ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment