தமிழணங்கே!..
சிலருக்கு எரிச்சலை தருகிறது ..
அகோரமாக சித்திரம் வரைந்திருப்பதாக புலம்புகிறார் ஒருவர்.. இவரின் ஜகத்குரு தமிழை நீசபாஷை என்ற போது வராத கோபம் இப்போது வருகிறது .. திராவிட இயக்கம் வளர தொடங்கியதற்கு முன்பு வரை தமிழர் தமிழ் என்ற அடையாளம் பார்பனர்களை மட்டுமே முன்னுறுத்திருந்தது .. தமிழ் நாட்டின் சிறப்பை சொல்லும்போதெல்லாம் குடுமிகளை முன்னுறுத்தி சமஸ்கிருதம் கலந்த தமிழை முன்னெடுத்து விளம்பரம்படுத்தியவர்கள் இன்று தனித்துவிடபட்டப்பின் அலறுகிறார்கள் ..
..
சரியான நேரத்தில் எதிர்வினையாற்றுவதில் எப்போதும் தயங்காமல் செவ்வனே செய்கிறார் ஏ.ஆர்.ரகுமான் .. தமிழன் என்று தன்னை அடையாளபடுத்துவதை தவறுவதுமில்லை தன்மானத்தை விட்டுகொடுப்பதுமில்லை .. ஹிந்தியை முதன்மைபடுத்த நினைக்கிறபோதெல்லாம் வாள்தூக்கி நிற்கிறார் .. 300 ஆண்டுகள் மட்டுமே பழக்கமுள்ள இலக்கணறிவில்லாத
ஒருமொழி மூவாயிரமாண்டு சீரிளமையோடு இருக்கும் தமிழோடு அடிக்கடி உரசிபார்ப்பது வாடிக்கையாய் நிகழ்வது வேடிக்கையாய் தெரிகிறது ..
..
உருதுவிற்கு போட்டியாக உருவாக்கபட்ட மொழி இலக்கணமில்லா பிறமொழிகளின் கலப்படத்தில் ஹிப்ரு மொழி வளத்தையும் வடமாநிலமொழிகளின் அழிவில் அதன் சுரத்தையும் கொண்டு கட்டமைக்கபட்டது .. செத்த சமஸ்கிருதத்தை தூக்கிநிறுத்த முடியாதென அறிந்து பிறமொழிகளோடு கலப்படம் செய்தும் குறிப்பாக தென்னிந்திய மொழிகளான திராவிட மொழிகளில் தமிழிலிருந்து பிரிந்து வட்டார சொல்லடையில் மலர்ந்த மொழிகளில் ஆதிக்கம் செலுத்தியும் தமிழ்மொழியில் கிளைகள் தனித்தன்மையை மீட்டெடுக்க தொடங்கியதும் ஹிந்தியை முன்னிறுத்த தொடர்ந்து முயற்சிப்பதும் தென்னிந்திய மாநிலங்கள் எதிர்ப்பதும் வாடிக்கையாகிறது ..
..
வடஇந்திய மொழிகளான குஜராத்தி மராட்டி பீகாரிய மொழிகள் வழக்கொழிந்து போகும் அவலநிலைக்கு இந்தியை பிரதானபடுத்தியதே என அவர்களும் உணர்கிறார்கள் .. மொழியாளுமை என்பது இலக்கண இலக்கியத்தில் மட்டுமில்லை .. வழக்கிலும் அது தன் சிறப்பை பறைசாற்றவேண்டும்.. வெகுமக்கள் பேசாமல் போனால் மொழி ஆரோக்கியமிழக்கும் ..
பிறமொழி திணிப்பு அல்லது பிறமொழி மீதான கரிசன பார்வை தாய்மொழியை அழிக்கவே உதவும் .. மொழி என்பது தேவைக்குரியதே தவிர திணிப்பிற்குரியதல்ல..
..
ரகுமான் இந்திபாடல்களுக்கு இசையமைக்கவில்லையா முக்காபலா என்றெல்லாம் இசை வடிக்கவில்லையா என அறிவிலித்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள் .. தொழில்சார்ந்து எது தேவவையென கேட்கிறார்களோ அது தருவதுவே அவரது கடமை.. அதேவேளை தன் சுயத்தில் எப்போதும் மேடையேறி கூட அதை தவிர்க்காமல் நிலையோடுநிற்பவர் .. அதெல்லாம் இரண்டாம் போரில் ஜெர்மனிய பாஷை கற்றுக்கொண்ட பச்சோந்திகள் சொல்ல அருகதையற்றவர்கள் .. தமிழனின் அடையாளமாக பீற்றிக்கொண்டு திரிந்தவர்களிடமிருந்து பிடுங்கி அவர்கள் ஆரியர்கள் அவர்கள் பாஷை வேறு என வெளிச்சம்போட்டு காட்டியதில் பெரும் திராவிட தீரர்களுக்கு உண்டு ..
..
ஒற்றை மொழி ஒரே நாடென்பதல்லாம் ஒருமைபாட்டிற்கு ஊறு விளைவிக்குமென தமிழ்நாட்டின்
தலைவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் தெளிவாக பொட்டில் அடித்து சொல்லியிருக்கிறார் .. தென்னிந்திய மாநிலங்கள் தன்மானத்தோடு தலைநிமிர தொடங்கியிருப்பதன் அடையாளம் தெலுங்கான கர்னாடகம் எதிர்வினையாற்றியிருக்கிறது..
மானமிகு கனிமொழி கருணாநிதி எங்கே ஆங்கிலம் படித்தால் அறிவு வளர்ந்துவிடுமோ என அமித்ஷா அஞ்சுவதாக சொல்லியிருப்பதில் உண்மை உண்டு .. வடவர்களில் பெரும்பான்மையினரை படிப்பறிவற்றவர்களாக வைத்திருப்பதுதான் பாசிச பாஜகவின் வெற்றியின் ரகசியம் .. மக்களின் அறிவுக்கண் திறந்து விழித்தெழுந்தால் பாஜக பாதாளத்தில் விழும் எழவே முடியாது .. மதமும் சாதியும் புராணகதைகளும் பொய்யும் அவர்களது ஆயுதங்கள் .. அதை அறிவுக்கொண்டு வேரறுப்போம்
..
இன்பத்தமிழ் எங்கள் உயிர்..
மற்றதெல்லாம்...
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment