Monday, April 25, 2022

பல்கலைகழகங்களில் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை கவர்னரிடமிருந்து பறிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேறியது .. இதுவரை ஆளுநர் நியமித்தார் அவருக்கு பரிந்துரைக்கும் கமிட்டி தமிழக அரசிடம் கலந்தாலோசிப்பதில்லை மூன்றுபேரை தேர்வு செய்து அனுப்புவதில் ஆளுநர் தேர்வு செய்யலாம் அல்லது அவர் விருப்பதற்கு நியமிக்கலாம் என்றிந்த விதியை மாற்றி ஆளுநரிடமிருந்து தமிழக அரசு நியமிக்கும் மசோதா நிறைவேறியிருப்பது புதிய மைல்கல் ..
..
நீண்டநாள் எதிர்பார்ப்பு என்று கூட சொல்லலாம் .. குஜராத் 
தெலுங்கானாவில் மாநிலத்தில் ஆளுநரை அரசே நியமிக்கும் சட்டம் உள்ளதால் இதை புறந்தள்ளமுடியாது .. பூஜ்சி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று சட்ட திருத்தமுன்வடிவு நிறைவேறியிருக்கிறது ..
இதை அதிமுக பாஜக தவிர்த்து மற்ற கட்சிகள் ஆதரித்திருப்பது நல்ல முன்னேற்றம் .. அதிமுகவோடு களம்கண்ட பாமக கூட இதை ஆதரித்து முதல்வர் வேந்தராக வேண்டும் என்று பேசியிருக்கிறது தேர்ந்தெடுக்கபட்ட முதல்வரை விட நியமனம் செய்யபட்ட ஆளுநர் அதிகாரம் மிகுந்தவரல்ல ..
.. 
அதிமுக எப்போதுமே திராவிட மாடலுக்கு எதிரான போக்கை கொண்டிருக்கிறது .. வேறுவழியின்றி "திராவிட கட்சி" எனச் சொல்லிக் கொண்டாலும் அது தொடங்கபட்ட காலம் முதலே பாசிசத்தோடான கரிசனபார்வை மாறியதே இல்லை .. கிரிமிலேயர் 
பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு இடஒதுக்கீடு என சட்டமன்றத்தில் சட்டம்கொண்டுவந்து எதிர்ப்பின் காரணமாக பின்வழித்தவர்தான் மகோரா (எம்ஜிஆர்).. 1974ல் மாநில சுயாட்சிக்கு எதிராக வாக்களித்த வரலாறு உண்டு
இந்துத்துவாவின் மற்றொரு முகமாக வளர்க்கபட்டவர் ..
மதமாற்ற தடைசட்டம் கொண்டுவந்து பிறகு திரும்ப பெற்றவர் ஜெயலலிதா இன்றைய தமிழகத்தில் ஏற்படும் சறுக்கலுக்கெல்லாம் அதிமுக அரசே காரணமாக இருப்பதை நாம் அறிவோம் .. ஜெயலலிதா நோய்வாய்பட்டிருந்த நேரம் அவரின் அனுமதியில்லாமலேயே நீட் தேர்விற்கு ஆதரவளித்து தமிழகத்திற்கு துரோகம் செய்தவர்கள் இப்போதைய அடிமைகள் ..
இவர்களா ஆதரித்துவிட போகிறார்கள் ..
..
திமுக ஆட்சிக்கு வரும்போது மட்டும்தான் சமூகநீதியும் சமுக நல்லிணக்கம் தொலைநோக்கு பார்வையோடு கூடிய வளர்ச்சி அனைத்துதரப்பினரும் நிம்மதியோடு வாழ்ந்திட வழிவகை,மாநிலத்தின் உரிமை, சுயமரியாதையோடு ஆட்சி அமையும் .. அதிமுக ஏன் தேவை எனில் அந்த இடத்தில் பாசிச சக்திகள் வந்துவிடகூடாது என்பதற்காகவே அன்றி வேறெந்த பயனுமில்லை .. 
எம்ஜிஆரே கரிசனத்தோடு நடந்தவர்தான் இப்போது அடிமைகளால் என்ன செய்ய முடியும் ..
..
நல்வாய்ப்பாய் தமிழகத்தில் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது இனி சுயமரியாதை மாநில சுயாட்சி நேர்மையோடு கூடிய நல்லாட்சி தொடரும் ..
மக்கள் தெளிவோடு இருக்கிறார்கள் 
திமுக மட்டுமே தமிழ்நாட்டை தலைநிமிர செய்யும் .. மாநில சுயாட்சி தன்னாட்சி அதிகாரம் இந்த பயணம் தொடரும் 
..
ஆம்.. பேரறிஞர் சொன்னதுதான் 

#ஆட்டுக்கு_தாடி_எதற்கு ..

..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment