இந்தியாவில் இஸ்லாமியர்களாக வாழ்வதற்கு அவன் ஒவ்வொருமுறையும் தன்னை சமாதான புறாவென நிரூபிக்க வேண்டியிருக்கிறது.. தென் இந்தியாவில் கேரளம் தமிழகம் தவிர்த்து வடமாநிலங்கள் உட்பட மிக நெருக்கடியான சூழலே நிலவுகிறது .. கேரளம் தமிழ்நாடு இரண்டிலும் மெல்ல படர துவக்குவது ஆபத்தானது.. ஒவ்வொருமுறையும் படர நினைக்கும் போது வெந்நீரை ஊற்றி அழித்துக் கொண்டிருந்தாலும் திடீரென சிலரின் வரவு கண்டு இவரா என வியப்பூட்டும் வகையில் நம் நம்பிக்கையில் கரிபூசுகிறார்கள்
நல்ல வாய்பாக தமிழகத்தை திமுக ஆட்சி செய்கிறது .. இம்முறையும் அதிமுக தொடர்ந்திருந்தால் மோசமான அனுபவங்களை வரலாறு பதிவு செய்திருக்கும் ..
..
நாடு எங்கே போகிறது ..
முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு இல்லை என்றார்கள் .. இஸ்லாமியன் கடையில் பொருள் வாங்காதே என்றார்கள் அவர்கள் கல்விக்கு முட்டுகட்டை போட ஹிஜாப் அணியாதே என்றா்கள் மசூதிகளில் காவி கொடியேற்றுவேன் தடுத்தால் வீடு தரைமட்டமாகும் உச்சநீதிமன்ற தீர்ப்பெல்லாம் கால் மசுருக்கு சமம் என செவிசாய்க்க மறுக்கிறார்கள் .. பொது சமூகம் மெல்ல மௌனமாய் மூர்ச்சையாகியிருக்கிறது .. காய்ந்தநிலத்தில் சிறுதுளிநீர்விழ முளைத்தெழுவதைப்போல மனிதாபிமானவர்கள் அக்கறையோடு கேள்வி எழுப்புகிறார்கள் ஆனால் நீதிமன்றமே சொன்னாலும் கேட்பதில்லை எனும் போது பேரிறைச்சிலில் முனகல்கள் வெளிவராமல் போகிறது..
..
அரசதர்மத்தோடு நடந்துக்கொள்ளுங்கனென மோடியை பார்த்து குஜராத் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடத்தபட்ட இன படுகொலைகளை கண்டு
அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் சொன்னதை இன்றுவரை கருத்தில் கொள்ளவில்லை.. ஒரு மதத்தவர்களுக்காக அல்லது குறிப்பிட்ட சாதியினருக்காக குறிப்பிட்ட மாநில வளர்ச்சிக்காக மட்டுமே ஒன்றியத்தின் பிரதமர் செயல்படுவது அழகல்ல.. தொடர்ந்து முஸ்லிம்கள் மிரட்டபடுவதும் உடமைகளை இருப்பிடத்தை புல்டோசர் வைத்து உடைப்பதும் மிகபெரிய மதசார்பற்ற ஜனநாயக நாட்டில் நடைபெறுவது சர்வதேச சமூகம் இந்தியா மீது கொண்ட பார்வை மாற தொடங்கவதும் அழிவின் அடையாளமாகும் ..ஒன்றுமை சிதைந்ததால் ஒன்றியம் இல்லாமல் போகும் .. இவ்வளவு அநீதிக்கு பிறகும் உள்துறை அமைச்சரோ,பிரதமரோ வாய்மூடி இருப்பது அவர்களின் நிஜ முகத்தை காட்டுகிறது ..
..
தேசம் இருளடைய தொடங்கியிருப்பது இதுவரை இல்லாத பேதம் தலைதூக்குவதும் கல்விசாலைகளை திறக்காமல் சிலைகளை நிறுவி மதபோதையை ஏற்படுத்தி, வரும் சமூகத்தையும்,வளரும் சமூகத்தையும் இருட்டில் நிற்கவைத்தால் அறிவெனும் ஒளியை இல்லாதாக்கினால் இவர்கள் விரும்பும் "சனாதன ராமராஜ்யம் " அமைக்கலாம் .. அது ஆபத்தான விளைவுகளையே தரும் ஒருசாரார் தவிர வெகுமக்கள் புறக்கணிக்கபடும் நிலை உருவாகும் ..
..
நாம்
விழித்தெழுந்திட வேண்டும் இருள்நாக்க சூரியனின் சுடரில்
இந்திய ஒன்றியமே "திராவிடமாடலை" பின்தொடர வேண்டும் .. எல்லோருக்கும் கல்வி இருப்பிடம் அவரவர் நம்பிக்கைக்கு கேடுவராமல் அடுத்தவர் உரிமையில் தலையிடாமல் நன்னெறியோடு நல்லாட்சி வேண்டும்..
யாரும் கேள்வி கேட்க கூடாதென்ற நிலையை மாற்றி இங்கே எல்லோரும் சமமாய்,சமத்துவமாய், சமூகநீதியோடு வாழ இந்த வீணர்களை வீழ்த்த பாசிச பாஜகவை சாய்க்க வேண்டி
நல்லதொரு தொடக்கத்திற்காக காத்திருக்கிறது தேசம் ..
எதிர்க்கட்சிகள் தங்கள் நலனை மறந்து நாட்டின் நலன் கருதி விட்டுகொடுத்து அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்தால் பாசிசம் வீழும் ..
..
வீழ்ந்துதானே ஆகவேண்டும்
அநீதி வீழ்ந்துதானே ஆகவேண்டும்
அநீதி வீழும் அறம் வெல்லும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment