இப்தார் Iftar
திறப்பு எனும் பொருள்படும் நோன்பு திறப்பு .. இதன் வேர்ச்சொல் "ஃபதர"என்பது "உடைத்துத் திறத்தல்" (break fast)
என்பதாகும்.. பசியோடிருந்து படைத்தோனின் கிருபைக்காக தன்னை வருத்திக்கொண்டு நோன்பிருப்போருக்காக "பசியாற" வழங்கல் ..
..
இப்போதெல்லாம் ஃபேஷனாகிவிட்டது அரசியல்கட்சிகள் சமுதாய இயக்கங்கள், பணம்படைத்தோர் தங்கள் பங்கிற்கு "இப்தார்" வழங்கி பெருமைபட்டுக்கொள்கிறார்கள் .. வலியவர்களின் இப்தார் பேசுபொருளாகிறது அங்கே பசியை விட "புளிச்சேப்பம்" அதிகம் ..
பெருந்தொகை செலவிடபடுகிறது
அந்த தொகை எளியவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு செலவிட்டால் அதைவிட "சிறந்ததிறப்பு" வேறெதுமிருக்காது ..
..
தவறென்கவில்லை (எளியவர்கள் இயலாதோர் தவிர்க்கமுடியாதோர் வழிப்போக்கன் இவர்களுக்கு இப்தார் வழங்கபடவேண்டும்) ..
வேறொரு மார்க்கமும் இருக்கிறதென்பதே இப்பதிவின் நோக்கம் .. பள்ளிகளில் நோன்பு கஞ்சி கிடைக்கிறது அது தொடரவேண்டும் .. இப்போதெல்லாம் அரசியல் தலைவர்கள் "திறப்பை" சரியாக செய்கிறார்கள் .. புகழ், தற்பெருமை, கருணை மகான், என லேபில் செய்யப்படுகிறது.. வாக்குவங்கியும் நல்லிணக்கமும் மதசார்பின்மையும், அவர்களுக்கு "நல்ல திறப்பாக" இருக்கும் .. எல்லாகட்சியும் "கடை திறக்கிறது" இதில் யாரையும் குறைகூற முடியாது ..
..
அண்ணாமலை திறப்பில் கலந்துக்கொண்டார் என்பவர்களுக்கு ஜனாப் தினகரன் கூட முபாரக்காக கலந்துக்கொண்டார் .. திமுக அதிமுக மதிமுக பாமக.. என பல்வேறு அரசியல் தலைவர்களும் பலகட்சியினரும் தங்கள் இருப்பை "திறந்து"காட்டினர் .. நோன்பாளிகளின் திறப்பை சிறப்பிக்க வேண்டியதை தங்கள் நிலைநிறுப்பின் "திறப்பாக" மாற்றிக்கொள்கிறார்கள் ..
..
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களிடம் இப்போதெல்லாம் இப்தார் "கௌரவமாக " பார்க்கபடுகிறது
பல்வேறு அமைப்புகள் கட்சிகள் சமுதாய இயக்கங்கள் ரசிகர் மன்றங்கள் தங்கள் இருப்பை "திறந்து" காட்டுகிறார்கள்.. மக்களால் எல்லா இடங்களுக்கு செல்லமுடிவதில்லை ..
எவ்வளவு செலவுகள் உண்மையில் யாரும் தேவைக்குரியவர்கள் இல்லை.. தேவைக்குரியவர்களை கண்டு அவர்களுக்கு உதவினால் அவர்களுக்கு நல்ல வாசலை திறந்தவர்கள் ஆவீர்கள் .. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் 33% விழுக்காடு அதிகமாக உணவு பொருட்கள் ரமளானில் விற்பனையாவதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது மற்ற மாதங்களை விட வீண் விரயங்களும் ரமளானில் தான் அதிகம்..
..
அதுமட்டுமல்ல "எளிய மார்க்கம்" இப்போதெல்லாம் பள்ளிகளை விளக்குகளால் அலங்கரித்து பசையை காட்டுகிறது .. இஸ்லாமிய வீதிகள் இரவலங்காரத்தில் மிதக்கின்றன..
பெருமைபடலாம் ஆனால் அதை தவிர்த்தால் மகிமை பெறலாம் ..
வீண் விரயம் என்பதை உணராமல் அதை எளியவர்களின் வறுமையை போக்க , கல்விபெற இயலாதோருக்கு தந்துதவ முடியும் இஸ்லாம் மதமல்ல மார்க்கம் என்பதில் கூட உடன்பாடில்லை .. மார்க்கம் எனில் பாதை என பொருள் இப்போதெல்லாம் பல பாதைகளால் வழிதவறுகின்றன "ஆடுகள்" .. இஸ்லாம்"வாழ்வியல் நெறி " "எளிய வழி" இருப்பவனையும் இல்லாதவனையும் சமன் செய்யும் கோட்பாடு என புரிந்தால் ஏழைகளற்ற சமுதாயத்தை உருவாக்கலாம் ..
இது நல்ல இப்தாராகட்டும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment