Thursday, August 5, 2021

நல்லரசு..
தமிழகம் மீள்கிறது 
இரவல்களை விரட்டி தனதானதை உறுதி செய்து தமிழர் மானம்காத்து, இனத்தின் பெருமையை உலகறிய செய்யும் முயற்சி தொடர்வதும் மகிழ்வை தருகிறது ..
கோவில் கொடியவர்களின் கூடாரமாக கூடாது என்பதற்கு இன்று விடை தெரிகிறது .. கோவில் நிலங்கள் மீட்கபடும் போது பக்தி வேசம் கட்டிய பரதேசிகளும்,நாங்கள் தான்  இந்துமத காவலர்கள் எனும் பார்ப்பன கூட்டமும் பம்முகிறது ..
மயிலாப்பூர் மாமாக்கள் அன்னை தமிழில் அர்ச்சனையை மௌனமாக கடக்கிறார்கள் .. கோவில் நிலங்கள் கல்விசாலையாவது சிலருக்கு எரிச்சல் தரும் அறிவின் திறவுகோல் சமயங்களை சாய்த்துவிடுமென அஞ்சுகிறார்கள் . 
ஒன்றிய அரசு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தவைத்து சமூகநீதியை நிலைநாட்டி இது மக்களுக்கான அரசென்பதை நிரூபித்திருக்கிறார்கள்..
..
எதிலும் நேர்மையோடு யாருக்கும் வளைந்து கொடுக்காமல் சட்டம் தன் கடமையை செய்கிறது..
பாலியல் வழக்குகள் அவதூறுகள் உடனுக்குடன் கைது செய்யபடுவதும்  சிவசங்கர் பாபா பத்மா சேஷாத்திரி ராஜகோபாலன் என யாரும் தப்ப முடியாதென சொல்வதில் தெரியும் நேர்மையான ஆட்சி.. கொரோனா தொற்றை கையாண்டவிதம் உலகமே வியக்கிறது .. இதோ மக்களைத் தேடி மருத்துவம் இந்திய ஒன்றியம் இதுவரை அறியாதது.. இதுவே மக்களாட்சியின் மகிமை .. இந்தியாவிற்கே வழிகாட்டியாய் அமையும் .. இல்லம் தேடி மருத்துவம் மக்களரசின் மகத்தான செயல்.. 
.. 
சாதி பெயர் நீக்கம் 
நீண்டகாலமாக நெஞ்சில் அரித்துக்கொண்டே இருந்தது .. உ.வே.சாமிநாதய்யர் (எங்கள் ஊர் அருகில் பாபநாசம் அருகில் உத்தமதானபுரம்)  தமிழ் தாத்தா என அறியபட்டவரின் மறுபக்கமும் உண்டு அது இப்போதைக்கு தேவையில்லை .. நிறைய தமிழ்ச்சுவடிகளை மீட்டவர் .. இன்னும் நிறைய கிடைக்காமல் போனதும் பார்பனசதிதான் காரணம் போகியை சொல்லி வீட்டிலிருந்த தமிழ் மருத்துவம் வாழ்வியல் ரகசியம், பண்பாட்டு களஞ்சியம் எல்லாம் எரியூட்டபட்டன..மிச்சமிருந்ததை மீட்டவர் .. அவரின் தமிழ்மொழித் தொண்டு காலம்கடந்தும் போற்றபடும்.. ஆனால் உ.வே.சா. என்றாலே புரியும் சாமிநாதய்யர் என தொடர்ந்து பேசி வந்ததை தான் இன்று சாதி எனும் இழிவை நீக்கி தமிழறிஞரை பெருமையை பாடமாக்கி வரும் தலைமுறை சாதிபித்துப்பிடித்து அலையாமல் இருக்கும் துவக்கம்.. பாராட்ட மனமில்லையென்றாலும் கூட விமர்சனம் செய்யாமல் இருக்கலாம்.. சாதியை நம்பி பிழைப்பு நடத்தும் இளைஞர்கள் மூளைச்சலவை செய்து வழிகெடுக்கும் சமுதாய கோடாரிகள் புலம்புகின்றன அதை புறந்தள்வோம் .. 
..
கீழடி எனும் தமிழன் நாகரீகத்தின் தாய்மடியை வெளிகொணர்வதை சிலர் பதற்றத்தோடு அணுகினாலும் எங்கள் வரலாறும் வாழ்வியலும் நாகரீகமும் எத்தனை ஆழத்தில் புதைத்காலும் வெளிவருமென கட்டயம் கூறியிருக்கிறது இப்போதைய திமுக அரசின் செயல்பாடுகள் தமிழ்மொழி ஆர்வலர் கல்வெட்டின் அறிவாற்றல் கொண்டவர் எங்கள் தங்கம் தென்னரசு அவர் துறையின் அமைச்சரானதும் ஆர்எஸ்எஸ் கைக்கூலி பாண்டியராஜனின் அட்டூழியத்தால் மறைக்கபட்டவைகள் வெளிவருகிறது ..
..
ஒவ்வொரு துறைசார்ந்த செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது
கடந்த 10 ஆண்டு ஆட்சியின் அலங்கோலங்கள் வெள்ளையறிக்கையாய் வருகிறது.. அடிமைகளின் முகம் கிழியும் 
அரசு இயல் தெரியாத கூமுட்டைகளை தான் 
ஆளுமையென ஊடகங்கள் கொண்டாடியது வெளிச்சத்திற்கு வரும்..
திறமையானவர்களை தேர்வுசெய்து அமைச்சர்களாக்கி ஒவ்வொரு அசைவையும் ஆய்ந்தறிந்து செயல்படும் முதல்வர் ..தமிழகம் இனி தெளியும் உயர்வு பெறும் .. நல்லரசு என மக்கள் நம்பும் தொடக்கம் பொற்காலத்தை சமைக்கும்..
சாமானியரும் முதல்வரை கைநீட்டி அழைத்து கதைக்க முடிகிறது.. இதெல்லாம் நல்லாட்சியின் சாட்சியங்கள் .. கொடுத்த வாக்குறுதிகள் மகளிர் கட்டணமில்லா பயணம் தொடங்கி ஒவ்வொரு வாக்குறுதியும் நிச்சயம் நிறைவேற்றபடுமென அரசின் தலைவர் உறுதியளிக்கிறார்.. 
குறைகூற வழியில்லாமல் சிலர் பகடி பேசுவதும் எரிச்சல் அடைவதும் தெரிகிறது அவர்கள் இந்த மண்ணின் புறையோடிப்போன சீழ்கள் துடைத்தெறிந்து மருந்திடுவோம்.. 
புதிய தமிழ்நாடு சாதி சமயமற்ற தொல் தமிழன் வாழ்ந்த வரலாறு படைப்போம் ..
தலைவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் எனும் நம்பிக்கை ஒளி நம் பெருமையை வெளிச்சம் காட்டும் தமிழ்நாடு மிளிரும் மகிழும் ..
"தமிழ் வாழ்க"
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment