காவலர்களுக்கு ஒருநாள் விடுமுறை திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளது அதை தான் காவல்துறை தலைவர் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் வழக்கம் போல் சைலேந்திரபாபுவிற்கு நன்றி சொல்லி நடுநிலை சமூகம் பேரானந்தம் அடைகிறது ..
..
திமுக ஏன் செய்யவில்லை என 100 நாட்கள் கூட கடக்காத நிலையில் சிலர் பொங்குவதும் சத்தமில்லாமல் ஒவ்வொன்றாய் நிறைவேற்றுவதை துறைரீதியாக கணக்கெடுப்பதும் திமுக என்றாலே வாழ்த்த மனமில்லாத மனநோயாளிகள் இங்கே பரவலாக இருக்கிறார்கள் .. குடிமைமாற்று என்றவுடனே "பூர்வக்குடி" களை விரட்டுவதா என சிலர் வீரவசனம் பேசுகிறார்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் பீ யிலும் மூத்திரத்திலும் வாழ்வதை மனதுக்குள் ரசிக்கும் கொடூரமானவர்கள் அவர்கள் தான் இவர்களின் அரசியல் .. ஏழ்மையும் வறுமையும் தொடரவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள்..
..
ராஜகண்ணப்பன் எதிரே கைகட்டி திருமா அமர்ந்திருப்பது போல போட்டோஷாப் அதை பரப்பி தங்கள் அரிப்பை தீர்த்துக்கொள்வோர் முதலில் திருமாவை கூட சரியாக அறியாதவர்கள் யாருக்கும் அடிபணிய கூடாதென்ற கொள்கையில் இருப்பவரை அவமானபடுத்தும் நீலசங்கிகள் சூத்திரனை பார் என சந்தோசம் அடைவது தெரிகிறது .. மூத்தபத்திரிக்கையாளன் என தன்னை சொல்லிக்கொள்ளும் பாண்டே "கண்ணில் பட்டது " என சீவி விட கடைசியில் மூக்ககொடிந்தது ..இதெல்லாம் அவர்கள் தினம் காண்பது தான் ஆனால் நீலம் எதற்கெடுத்தாலும் பதறுவதும் திராவிடம் பார் என எகத்தாளம் பேசுவதும் சகிக்கவில்லை .. திராவிடம் இல்லையென்றால் இப்போது கூட தெருவில் நடக்கமுடியாத சூழலே இருக்கும் என்பது தான் உண்மை..
..
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே !"
#திருமூலர்
கோவில்களில் தமிழில் அர்ச்சனை அடுத்தவாரம் தொடங்கும் என சேகர்பாபு அறிவிப்பை சமய தமிழ் சமூகம் ஏன் கொண்டாடவில்லை..
இதற்கும் பாஜக பாமக தான் காரணமென சொல்வார்களோ OBC இடஒதுக்கீட்டை நீதிமன்றத்தை நாடி ,போராடி பெற்று தந்தால் மோடியின் நல்லமனசை பாரீரென போஸ்டர் அடிக்கிறான்.. ஒன்றிய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக இன்று உரிமை கொண்டாடும் சாதிவெறியர்களோ மதமூடர்களோ அன்று நவதூவாரங்களையும் பொத்திக்கொண்டிருந்தார்கள். ஆம்
இதையெல்லாம் திமுக தொடர்ந்து செய்யவேண்டும்.. கடமைதான் அதற்கெதற்கு விளம்பரம் செய்யாமல் இருந்தால் பக்கத்துவீட்டுகாரன் சொந்தம் கொண்டாடுவான் ..
திமுக செய்யும் நலதிட்டங்கள் நிறைவேற்றிய வாக்குறுதிகள் போராடி பெற்ற உரிமைகளை விளம்பரம் செய்யவேண்டும்
..
தமிழகம் வெற்றிடம் இருக்கிறதென்றார்கள் தலைவரில்லா தமிழகம் என்றார்கள் .. ஸ்டாலின் மௌனபுன்னகையால் கடந்து போனார் .. இன்று #MyLeaderStalin
என இந்திய ஒன்றியமே கொண்டாடுகிறது .. OBC இடஒதுக்கீட்டை பெற்று தந்தது தொடக்கம் தான் .. இன்னும் நிறைய பார்க்க போகிறது இந்திய ஒன்றியம் ..
பதர்களே வீசும் காற்றில் பறந்துபோவீர்கள் ..
நெல்மணிகள் மட்டும் தாழ வரும் ..
நல்லெண்ணமும் நேர்மையும் அஞ்சாமையும் நீதியும் நெஞ்சில் சுமந்த தலைவர் ஸ்டாலின் ..
அவரையோ அவர் சார்ந்த இயக்கத்தையோ விமர்சனம் செய்ய முதலில்
உங்கள் தகுதியை வளர்த்துகொள்ளுங்கள் பிறகு வாள் வீசலாம் ..
..
தலைவர் ஸ்டாலின்
இந்திய ஒன்றியம் கொண்டாடும் தலைவராக வருவார் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment