#கலைஞர்சட்டமன்றத்தில்
மனம் நிறைந்தது ..
என்பதாண்டுகாலம் மக்களுக்காக உழைத்த ஓய்வறியா சூரியனுக்கு இன்று சட்டமன்றத்தில் புகழஞ்சலி..
படத்திறப்பு என்பது ஒரு சடங்கு அவ்வளவுதான் .. மாபெரும் தலைவனை கொண்டாடி தீர்க்க தமிழன் வாழும் காலமெல்லாம் நினைவுகூறதான் வேண்டும் .. 14 வயதில் திருவாரூர் வீதியில் தமிழ்கொடியேந்திய வீரமகன் என்பதாண்டுகள் சறுக்கல்கள் இல்லாத கொள்கையோடு வெற்றிநடைபோட முடிந்ததே இது யாருக்கும் வரும்..
..
வந்தார்கள் வென்றார்கள் சரித்திரமாய் சிலரே நின்றார்கள்
ஆனால் நின்றவர்களில் சிலரே பெருமையோடு வாழ்ந்தார்கள் பொதுவாழ்வில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தான் ஏற்ற கொள்கையை நடைமுறைபடுத்தி சொன்னதை செய்த தலைவர்.. ஒடுக்கபட்டோரை உயரத்தில் ஏற்றிட திட்டங்கள் வகுத்தி அதை நடைமுறைபடுத்தியவர் .. ஒன்றியம் காணாத வரலாற்று நிகழ்வுகளை நிகழ்த்தியவர் .. அதிகாரம் கையில் வந்தபோதெல்லாம் அதை சரியாக பயன்படுத்தி தான் ஏற்ற சித்தாந்தத்திலிருந்து பின்மாறாமல், பெரியார் கண்ட கனவை நினைவாக்கியவர் .. இன்று தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தில் முதலாவதாய் நிற்கிறதே அது இந்த பெருமகன் செய்த மாயம்.. பொதுவுடமை பேசிய வங்கம் கூட செய்ய மறந்ததை 70 களிலேயே செய்து மனிதனை மனிதன் இழுப்பதா என கேள்வி எழுப்பி விடை கண்ட புரட்சியாளன் ..உண்மையான புரட்சித்தலைவன் .. மிகவும் பிற்படுத்தபட்டோர் என அறிவித்தவர் .. வசைபாடல்களை புறந்தள்ளி வாகைசூடியவர் .. துரோகங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன ஆனாலும் தன் செயல்பாட்டை நிறுத்தியதில்லை தலைவனுக்கான இலக்கணமாய் திகழ்ந்தவர் ..
..
சட்டமன்றம் சுவையோடு நடத்தியவர் .. கலைஞர் இருக்கிறாரென்றால் பயந்தோடியவர்கள் அதிகம் .. எம்ஜிஆரும் ஜெயாவும் சபைக்கே வராமல் இருந்த வரலாறுண்டு .. எதிரிகள் பகைவர்கள் வாயடைத்துப்போனார்கள்.. பெரியவர் பக்தவச்சலம் காமராஜர் என பெருந்தலைவர்களும் அரசியலறியா சில்லறைகளும் சபையில் இருந்ததுண்டு .. எல்லோரையும் திகைக்கவைத்து நாவன்மையால் வென்றுகாட்டிய வீரர்.. இவர் செயல்திட்டங்கள் தான் இந்திய ஒன்றியத்திற்கு இன்றைக்கும் தேவைபடுகிறது..
இந்திய ஒன்றியம் கண்ட ஒப்பற்ற தலைவன்.. இவரைப்போல் யாருண்டு இனி வரபோவதுமில்லை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை தளராமல் தோல்வி வெற்றி இரண்டிலும் பணியாற்றி அரசை இயக்கிய பேராற்றல் கொண்டவர்
விளிம்புநிலை மக்களையும் ஏழைகளுக்கும் இயலாதோருக்கும்
பேரருளாய் வந்த பெருமகன்.. 1974 ல் மாநில சுயாட்சியை கொண்டுவந்து கூட்டாச்சியின் மகிமையை உணர்த்தி ஜனநாயகத்திற்கு செழுமையூட்டியவர்..
..
எழுத்து பேச்சு செயல் ஓயாத உழைப்பு..
இதுதான் கலைஞர் .. தமிழக அரசியல் இவரை சுற்றியே இயங்கியது என்னோடுவா இல்லெனில் எதிர்த்து நில் இதுதான் தமிழ்நாட்டு அரசியல் இவரை புறக்கணித்து தமிழ்நாட்டின் அரசியல் இல்லை ..
இனி
சட்டமன்றத்தில் படமாய் அல்ல பாடமாய் நிற்கிறார் .. பதிமூன்று முறை நின்று பதிமூன்றுமுறையும் வென்று சாதனைபடைத்த மாபெரும் தலைவர்
"
நான் இருக்கும் வரை இந்த சமூகம் ஆதிக்க வெறியாலும் மத வெறியாலும் தினம் தினம் செத்து மடிவதை எதிர்ப்பேன் . ஏனென்றால் நான் பெரியாரின் வளர்ப்பு , அண்ணாவின் கொள்கைப் பாதுகாவலன்" என்றார் கலைஞர்
ஆம்
தமிழ்நாட்டின் தமிழினத்தின் தமிழ்மொழியின் பண்பாட்டின் பாதுகாவலன் .. அவர் வழி தமிழ்நாட்டின் வழி என பெருமைக் கொள்வோம் மிகசிறந்த ஜனநாயகவாதியின் படம் மேதகு குடியரசு தலைவரால் திறப்பது பெருமைகுரிய விடயம் ..
#நல்லோர்_சிறப்புறுவர் ..
..
கலைஞர் வாழ்க!
#KalaignarInAssembly
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment