Tuesday, August 31, 2021

ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைப்பதற்கு எதிர்த்து அதிமுக வெளிநடப்பு .. 
நல்லது .. 
ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் என்பதே சகிக்கமுடியாத ஒன்று .. ஒரு குற்றவாளி மக்கள் பணத்தை கொள்ளையடித்தது நிரூபணமாகி தண்டிக்கபட்டவர் ..சட்டத்தின் நூலிழையில் தப்பிக்க நினைத்து,  நீதிமன்றம் காலதாமதபடுத்தி அதற்குள் அவர் மரணமடைய புனிதரைப்போல இங்கே கொண்டாடபடுவது மோசமான செயல்.. இங்கே யாருக்கும் வெட்கமில்லை .. A1 குற்றவாளி நான்காண்டு தண்டனையும் ₹100 கோடி தண்டமும் விதித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் சரியென்றது .. ஆனால் நூல் அவரை காத்தது என்று சொல்லலாம் .. அவரின் சொத்துகள் தண்டத்திற்காக (அபராதம்) எடுத்துக்கொள்ளபடவேண்டும்..
இந்திய நீதி அநீதிகளால் பொலிவிழந்து நிற்பது வேதனை இங்கே வல்லவன் வகுத்ததே நீதியாய் இருப்பது அவலம் 
கல்விசாலைகள் குற்றவாளிகள் பெயரில் என்பது வரும் தலைமுறைக்கு செய்யும் துரோகம் நல்ல தலைமுறையை நற்பண்பை நல்லொழுக்கத்தை விதைக்கும் கல்விசாலைகள் கொள்ளைக்காரியின் பெயரில் இருக்ககூடாது ..
..
தமிழ்நாடு சரியானவர் கையில்  அதிகாரம்  கிடைத்து பல்வேறு துறைகளில் மிளிர தொடங்கியிருக்கிறது .. சட்டென்று உணர்ச்சிபடும் விடயங்களில் கூட மிக லாவகமாக முடிவு தருகிறார் 
விநாயகர் சதூர்த்தி பொதுவெளியில் சிலைவைத்து நீர்நிலைகளை மாசுபடுத்தும் செயலை தடுத்திருக்கிறார் அருகில் கேரளாவில் ஓணம் பண்டிகை தளர்வுகள் கொரோனா தொற்று அதிகரித்து கட்டுபடுத்தமுடியாமல் திணறுவதை கண்டு பண்டிகை என்ற பெயரில் வடநாட்டு கலாச்சாரத்தை புகுத்தும் செயலையும் தடுத்து நிறுத்தி தனிநபர்கள் கொண்டாடி நீரில் கரைப்பதை அனுமதித்து நல்லதொரு நிர்வாகியாய் திகழ்கிறார் நம் முதல்வர்..
..
பாஜக விநாயகரை வைத்து அரசியல் செய்யும் இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும், பாஜக மதத்தை தவிர வேறெந்த பிரச்சனைகளையும் மக்களின் குறைநிறைகளையோ கவனம் செலுத்துவதில்லை அந்த கட்சியே மதவெறி சாதியம் பேசி கலகமூட்டுதல் தான் பெண்களை இழிவுபடுத்துதல் அறிவுக்கொவ்வாத விடயங்களை தூக்கிபிடித்து மானுடரிடையே பிரிவினையை தூண்டி #குறிப்பிட்ட_சமூகம் மேம்பாடடைய இயங்குவதுதான்.. தமிழகத்தின் கொலை கொள்ளையென கட்சியை அடிமைபடுத்திய நாசகாரர்களின் துணையோடு 
தமிழக வளங்களை அழித்து தமிழகத்தை வடவருக்கு தாரைவார்க்க தயாராகி நிற்கும் அடிமைகளை கொண்டு காலூன்றி.
இன்று சட்டமன்றத்தில் நுழைந்திருக்கிறார்கள் .. இப்போதும் அவர்களுக்கு பயம் .. ஒன்றிய அரசின் வேளாண்மை சட்டத்திற்கெதிராக சட்டமுன்வடிவை எதிர்த்து பல்லிளிக்கிறாார்கள் ..மிகவும் ஆபத்தானவர்கள் இந்த அடிமைகள்
..
காழ்ப்புணர்வு சிறிதுமற்ற முதல்வர் கடந்த ஆட்சியில் முதல்வரின் படங்களோடு கூடிய ஸ்கூல்பேக்  அப்படியே இருக்கட்டும் என்கிறார் அதிகாலையிலேயே அமைச்சர்களை அழைத்து பணிகளை சரிசெய்கிறார் .. பத்தாண்டாய் பேசவே பயந்த முதல்வர்கள் போல் அல்லாமல் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு விளக்கமளிக்கிறார் .. கண்ணியமாக சபையை கொண்டுசெல்லும் ஆளுமை ..
எதிர்கட்சிகள் ஒன்றுக்கும் உதவாத தற்சார்பு விடயங்களை மட்டுமே குரல் உயர்த்துகிறார்களே தவிர அரசை குறைகூற வக்கற்று நிற்கிறார்கள் ..கண்ணதாசன் பாடலை சொல்லி நகர்கிறார்கள் 
எதிரிகளும் பகைவர்களும் திகைத்து நிற்கிறார்கள்.. வாக்களிக்காமல் போனவர்கள் வருந்துகிறார்கள் .. இத்தனை கம்பீரமானவரை இதுவரை ஏன் புறக்கணித்தோமென சஞ்சலபடுகிறார்கள் .. அண்டை மாநில அரசியல்வாதிகளின் புகழுரைகள்   நம் முதல்வரின் திறமைக்கு சான்று ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
பெயரல்ல 
தமிழ் சமூகம் 
தமிழ் நிலம் 
தமிழர் வாழ்வு ..
ஆம் தமிழ்நாடு..
..
ஆலஞ்சியார்

Saturday, August 28, 2021

உடன்கட்டை ஏறுதல்
சட்டப்படி
தடைசெய்யப்பட்டிருந்தாலும் சட்டமன்றத்தில் தொடர்கிறது..
 "பாஜக  முன்னே அதிமுக" பின்னே! 
#தோழர்பாலபாரதி 
ஒன்றிய அரசின் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து சட்டசபையிலிருந்து பாஜக வெளிநடப்பை தொடர்ந்து அதிமுகவும் வெளியேறியது ..
"எமக்கு வாய்த்த அடிமைகள் " என்ற வசனம் ஞாபகம் வருகிறது ..
பாஜக சட்டமன்றத் தலைவர் நயினார் நகேந்திரன் எதிர்த்து வெளியேறிய போது அவைதலைவர் கட்சி தர்மம் போயிட்டுவாங்க என்றார் ஆனால் அதிமுகவும் வெளிநடப்பு செய்ததிலிருந்தே அவர்கள் எந்தளவிற்கு பயப்படுகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகிறது ..

நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, நடுவில் இறைவனின் சிரிப்பு. இதுதான்  என் நிலைமை” 
என தன் இயலாமையை பன்னீர் சொல்லிவிட்டு இது அவை முன்னவருக்கு என் நிலைமை தெரியும் என்கிறார் இவர்கள் எந்தளவிற்கு ஊழல் செய்துவிட்டு மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள் என்பதற்கு இவர்களே மொழியே சாட்சியம் கூறுகிறது ..
ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர் இவ்வளவு கண்ணியமாக சபை இதற்குமுன் நடந்ததில்லை என செங்கோட்டையன் சொல்வதிலிருந்தே சபையை எந்தளவு நேர்மையோடு ஜனநாயகத்தன்மையோடும் நடத்துகிறார்கள் என புரியும் .. முன்பும் சபை கண்ணியமான விவாதங்களாலும் எதிர்ப்பு அரவணைப்பு பாராட்டு என கண்ணியம் குறையாமல் நடந்ததுண்டு .. எம்ஜிஆர் காலம் வரை கூட கண்ணிய குறைபாடு அவ்வளவாக இல்லை..
ஆனால் செல்வி ஜெயலலிதா வரவிற்கு பிறகு சட்டைகிழித்துக்கொண்டு நாடகமாடிய தொடங்கியது முதல் காழ்ப்புணர்ச்சியோடு முதியவர்கள் கண்ணியகுறைவாக எள்ளிநகையாடுவது அம்மையாரிடம் நன்மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக கேலிகிண்டல் செய்வதென சபை நாகரீகமற்று பொலிவிழந்து கிடந்தது ஜனநாயகதன்மையற்ற செயல்கள் தனிநபர் துதிபாடல்கள் உச்சத்தில் ஒலிக்க நாடக கம்பெனியைபோல இருந்த சபையை மீட்டு மீண்டும் ஜனநாயகம் மலர்ந்திட வைத்த முதல்வருக்கு நன்றி ..
..
பாஜக வெளியேறியபோது கூட "கட்சி தர்மம் " போயிட்டு வாங்க என சபைதலைவர் சொல்கிறார் என்ன அழகு.. ஆனால் அதிமுக தொடர்ந்து சமூகநலன், சமூகநீதி தொழிலாளர் விவசாயிகளின் நலன் கல்வி உரிமை தமிழர் பண்பாடு என எல்லாவற்றிலும் துரோகத்தையே செய்கிறது கொஞ்சமும் கவலைபடாமல் .. உணர்வற்ற ஜந்துக்களாகிபோனார்கள் ..
..
மிக சிறந்த வெளிப்படையான நிர்வாகத்தை தருகிறார் மேதகு முதல்வர் அவர்கள் .. சபையில் நேரத்தின் மதிப்பை உணர்ந்து புகழபாடலை வேண்டாமென்கிறார்  முன்னாள் முதல்வரின் புகைபடத்தை அகற்ற 15 கோடி செலவாகும் அதை மாணவர்களின் நலனுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்கிறார் இலவசம்  வேண்டாமென சில அறிவிலிகள் கூச்சல் சத்தம் கேட்கிறது ஆனால் ஏழ்மையில் தினம் தினம் வாழ்வில் போராடும் மக்களுக்கு தான் அதன் அருமை தெரியும் .. அதிலும் தங்கும் விடுதியில் தங்கி வேலைக்கு செல்லும் பெண்கள் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் பணிக்கு சென்றுவர செலவழிப்பது மிச்சமாகும் அதை தங்கள் குடும்பத்திற்கு அனுப்புவார்கள்    இதையெல்லாம் உணராமல் அயல்நாடுகளிலிருந்து தமிழைச்சொல்லி வசூல்நடத்தி பிழைக்கும் கூட்டம் அறியாது.. ஈழ தமிழர் மறுவாழ்வு மையம் என 
மாற்றியது அவர்கள் அகதிகள் அல்ல உறவுகள் என உரக்க சொல்லியிருக்கிறார் ..
(Srilankan Tamil Refugee camps will hence forth be called as Srilankan Tamils Rehabilitation camps)
..
தமிழகம் விடிய தொடங்கி கதிரவனின் ஒளிகீற்று படர தொடங்கி வெளிச்சம் காண்கிறது ..
தீமைகள் நாற்றங்கள் ஒழிந்து நல்லதொரு மாற்றத்தோடு பயணம் தொடங்கியிருக்கிறது 
நல்ல தலைமை 
நல்ல படைதலைவனை கொண்டிருக்கிறோம் 
இளகிய மனம் படைத்தவர் மட்டுமல்ல இரும்புகரம் கொண்டும் அடக்கும் ஆற்றல் பெற்றவர் புகழுக்கு மயங்காத பேராண்மை கொண்ட பண்பாளர் .. 
தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி.ஸ்டாலின் அவர்கள் 
..
தமிழ்நாடு மகிழ்கிறது
..
ஆலஞ்சியார்

Wednesday, August 25, 2021

பாஜக..
ஜனநாயகபாதையில் நேர்மையோடு பயணிக்கும் கட்சி அல்ல.. பாஜக என்பதே பார்பனீயர் நலன் சார்ந்துமட்டுமே இயங்கும் ஆனால் பொதுதளத்தில் தனித்து இயங்க முடியாதென்பதால் மதம் எனும் கூட்டில் மற்றவர்களையும் அடைத்து தேவைபடும் போது காவு கொடுக்கும் .. பொய், பித்தலாட்டம், பாலியன் வன்முறை, பெண்ணடிமைத்தனம், சமூக அநீதி என பயணிக்கும் இயக்கத்தில் விளிம்புநிலை மக்களும் ஒடுக்கபட்ட மக்களும் மூளைசலவை செய்யபடுவார்கள் இலவச கல்வி வேலைவாய்ப்பு என தந்திரத்தோடு காய்நகர்த்தி தேவைபடும் போது அவர்களை கொண்டே கண்ணை குத்தி மகிழ்வார்கள்..
..
இரண்டுநாட்களாக தமிழக பாஜக பேசுபொருளாகியிருக்கிறது .. கே.டி. ராகவன் என்ற நபரின் அந்தரங்க லீலைகளை படமாக்கி அதை வைத்து பேர்தேட நினைத்த மதன் .. யாருமிங்கே ஒழுக்கமில்லை.. தனிநபரின் விடயங்களை விமர்சிப்பதோ சுகம்காண்பதோ தேவையில்லாதது ..ராகவனின் அரசியல் நமக்கு ஏற்புடையதல்ல கீழ்தரமானது மதவெறியின் கொடுமுடியில் நின்றாடும் நர்த்தனம் அவருடைய அரசியல் .. விமர்சனம் நிறைய உண்டு .. 
பாஜகவில் ஒழுக்ககேடானவர்கள் நிறைய உண்டு அது பாஜகவின் ஆரம்ப தகுதியாக கூட இருக்கலாம்.. அது காரியமல்ல
ஆனால் அதை வைத்து இவர்கள் நடத்தும்  நாடகம் சகிக்கவில்லை 
பாஜக கொள்கைக்கெதிராக இருந்ததால் மதனும் வெண்பாவும்  கட்சியிலிருந்து நீக்கபடுவதாக அறிவிக்கிறார்கள் .. வெண்பா அதிமுக உறுப்பினராம்..😃
மதன் செயல் அயோக்கியதனமானதென்பதில் நமக்கு கருத்துமுரண் இல்லை ..
ஆனால் பாஜக கொள்கைப்பற்றி பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது ..
..
பொதுசமூகம். ? ராகவனுக்கும் மனைவி குழந்தைகள் உண்டே நினைத்து பார்த்தார்களா என கேள்வி எழுப்புகிறார்கள் ..நன்று இதே அளவுகோலை மற்றவர்களுக்கு பயன்படுத்தியதுண்டு வயதான, சக்கரநாற்காலியில் வலம்வந்த தலைவனை நடிகையோடு இணைத்து கட்டுரை தீட்டினார்களே அப்போது இந்த சமூகம் எங்கே போனது.. சுயமரியாதைகாரர்களை இணைத்து பேசி புகளாகிதம் அடைந்தார்களே அப்போதெல்லாம் அவர்களுக்கு குடும்பம் உண்டென்பதை மறந்து போனார்களா..?
ராகவனுக்காக யூடியூப் சேனலையே முடக்க முடிகிறதே தொடர்ந்து அவதூறை பரப்பும் 
மாரிதாஸின் சேனல் முடக்கபட்டதா 
பார்பனருக்காக வேகமாக செயல்படும் உள்துறை மற்றவர்களின் விடயங்களில் மவுனம் காப்பதேன் ..
..
பாஜக தலைவர்கள் மீது அந்த கட்சியின் மகளிர் அணியினரே பாலியல் புகார் அளித்திருக்கிறார்கள் கலிவரதன் மீதும் பாஜக மாணவரணி தலைவர் மீதும் புகார் உண்டு ..தொடர்ந்து பொதுவாழ்விற்கு வரும் பெண்கள் பாலியல் தொந்தரவு நடந்துக்கொண்டுதானிருக்கிறது அதிகாரத்தில் இருந்தால் எதையும் செய்யலாம் என நமக்கு பொள்ளாச்சி அதிர்ச்சியளித்தது 
சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க ஜோதிமணி எம்.பி புகாரளித்திருக்கிறார் விரைந்து விசாரணை செய்யபடவேண்டும் 
..
பொதுவாழ்வில் கழிவுகளையும் கழிசடைகளையும் கொண்ட கட்சியாக  பாஜக இருக்கிறது 
சட்டமன்றத்திலேயே ஆபாசபடம் பார்த்த வரலாறு கோவில் கருவறையில் களியாட்டம் என பாஜக என்றாலே பாலியல் கூடாரம் என பேச்சு உண்டு.. மதத்தை மட்டுமே முன்னெடுக்கும் மடையர்களும் புராண இதிகாச புரட்டுகளை நம்புகிறவர்களும் வேறெப்படி இருப்பார்கள் ..
ராகவன் வகையறாக்கள் கடவுள் முன்பு சுயம் காண்பவர்கள் தான் அவர்களுக்கு தெரியும் கடவுள் என்று எதுவுமில்லையென்று .. காமகளிட்டாத்தை கடவுள் துணைக் கொண்டே நடத்துவார்கள் .. ஜெகத் குரு எல்லாம் காமலீலைகளை நடத்தியதும், அன்றைய அனுராதாக்கள் புலம்பியும் எதுவும் நடக்கவில்லை .. பார்பனரென்றால் எல்லாம் தலைகீழாகும் .. நீதி கூட தடுமாறும்..
பார்ப்போம் .. 
..
ஆலஞ்சியார்

Friday, August 20, 2021

துரை..
திமுக பொதுச் செயலாளராக உயர்ந்து நிற்கும் துரைமுருகன் ..
நாவன்மையும் பேச்சில் நளினமும் நையாண்டியோடு காய்நகர்த்தும் அழகும் கலைஞரோடு இரண்டறகலந்த தொண்டனாய் கழகத்தின் போர்வீரனாய் கலைஞரின் நடுவிரலாய் கழகம் காத்த தொண்டன் ..
..
50 ஆண்டுகள் சட்டமன்றத்தில் மெல்லிசையாய்,பேரிறைச்சலோடு கொடுங்காற்றாய்,  தீப்பொறியாய் 
ஆளும் கட்சியை நடுநடுங்கவைத்த சிம்மகுரலாய் திகழ்ந்தவர் .. இவர்கள் இருந்தால் என மூவரை கண்டு பயந்த வரலாறு எம்ஜிஆருக்கு உண்டு அந்த மூவரில் ஒருவர் .. தெளிவோடு ஆதாரத்தை எடுத்து வைத்து இவர் ஆற்றிய உரைவீச்சுகள் எம்ஜிஆரை கிடுகிடுக்க வைத்தது .. அண்ணாவை ஏற்று அரசியலை தொடங்கிய துரைமுருகன் கலைஞரின் நம்பிக்கைக்குரியவராய் கடைசிவரை இருந்தார் ..தனக்கு கல்லூரியில் படிக்க உதவிய எம்ஜிஆர் அழைத்தும் போகாதவர் .. இவர் விருப்பட்டிருந்தால் எம்ஜிஆரின் வலதாக முடியும் ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியோடு என் தலைவர் கலைஞர்தான் உங்கள் மீது மரியாதையும் நன்றியும் உண்டு அதற்காக நான் ஏற்ற கொள்கையிலிருந்து மாறி தலைவருக்கு துரோகம் செய்ய முடியாதென உறுதியோடு சொன்னவர் 
..
திரு.வைகோ ஒரு நள்ளிரவில் கன்னியாகுமரி கடற்கரையில் அமர்ந்து இவரோடும் மூத்த தலைவர் ஆற்காட்டாரோடும் பேசிக்கொண்டிருந்தபோது கலைஞருக்கு பிறகு நீர்தான் என பேச்சு வர .. அதற்கு  வைகோ பெரியார் போல 95 வயதுவரை வாழ்ந்தால் என கேட்க நிசப்தமாய் அந்த இரவு விடிந்தது.. அதறிந்த கலைஞர் ஒரு முறை அந்த இருவரில் ஒருவர் இரும்புபெட்டி இன்னொருவர் கண்ணாடி பெட்டி என கூறியதை நினைவுகூற வேண்டியிருக்கிறது .. கொள்கையில் எஃகு போன்ற உறுதி துரைக்குண்டு ..
..
நகைச்சுவை ததும்ப பேசும் ஆற்றல் உண்டு .. பாஜகவோடு சிலநேரம் கனிவு காட்ட நினைத்ததும் அது தனக்கே எதிராக வருவதை அறிந்து மாற்றிக்கொண்டதும் உண்டு எப்போதும் கரைசேர்க்கும் காட்பாடி இம்முறை தள்ளாட வைத்ததின் "பொருள்" அறிந்தவர் 
சஞ்சலமில்லாத கொள்கையே கரைசேர்க்கும் என காலம் உணர்த்தியது ..  கலைஞரின் இறுதிகாலங்களில் கரத்தை பிடித்துக்கொண்டே பயணித்தவர் இன்று கழகத்தின் உயர்பதவியில் அமர்த்தி அழகுபார்த்திருக்கிறது ..
1971ல் முதல்முதலில் தேர்தலில் நிற்க பணமில்லை என்றவுடன் தயாளு அம்மாளின் தயாளமனம் ₹10000 தந்துதவியதும், இன்று கழகத்தின் முக்கிய தலைவராக உயர்ந்து நிற்பதை காணும் போது மனம் மகிழ்கிறது ..
..
திராவிட இயக்க வரலாற்றில் இடம்பெறும் தலைவர்களில் ஒருவர் துரைமுருகன் அய்யா அவர்கள் .. கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தால் உயரத்திற்கு வரலாம் என்பதற்கும்
துரையின் அரசியல் பயணம் உதாரணம்.  வெற்றி தோல்வியல்ல இயக்கத்தின் வலிமை தொண்டர்களின் பலத்தில் என்பதை உணர்ந்து திராவிட சித்தாந்தத்தை உயர்த்திபிடித்து திராவிட இயக்கத்தின் நான்காம் தலைவனோடு இணைந்து செயலாற்றும் துரைமுருகன் அய்யாவிற்கு வாழ்த்துகள்..
தலைவர் தளபதியார்,
நான் கலைஞர் பேராசிரியர் வரிசையில் பார்க்கிறேன் என்கிறார் இதைவிட பேறு இல்லை..

..
ஆலஞ்சியார்
ஞான தந்தையே 
போய்விட்டீரா..
இறுதி மூச்சுவரை கொள்கைமாறாமல் தன் வாழ்வில் சுயமரியாதைகாரனாய் உறுதியோடு இருந்தீர் .. மண்ணறை கிடத்தி மண்மூடும் போது ஓங்கி ஒலித்த சுயமரியாதை "ஒலி" நீர் வாழ்ந்த வாழ்வில் மகிமையை உணர்த்தியது வீரவணக்கம்..
பல்வேறு தமிழ் அமைப்புகள் உன் இறுதிபயணத்தில் கண்களில் நீர்வழிய கலங்கி நின்றது நீர் வாழ்ந்த வாழ்வை சொல்லியது 
கொஞ்சமும் கலங்காமல் சமசரமற்ற பாதையில் பயணித்தீர் 
நல்ல கொள்கையாளர் தேடி அரங்கேற்றம் செய்தீர்.. நல்ல விதைகளை விதைத்திருக்கிறீர்..
ஒவ்வொன்றும் "தரு" ஆகும்.. 
..
குவைத் பெரியாரென பெருமக்களால் போற்றபட்ட 
பெருமைக்குரிய ஆசான் 
ச.செல்லபெருமாள் 
விடைபெற்றார்..
ஞானதந்தையே போய்வாரும்
..
ஆலஞ்சியார்


Tuesday, August 17, 2021

ப்ராமணனை கண்ணீர் விட வைத்தவர்கள் அழிந்து போவார்கள் .. பார்பனர் ஒருவர் படபடக்கிறார்..
சட்டசபையில் மக்கள் பிரச்சனையை பேசினால்  நிதியமைச்சர் பொருளாதாரம் பற்றி பேசுகிறார்..
கொடாநாடு வழக்கு முடியும் தருவாயில் மீண்டும் விசாரணை ஏன் என பழநிசாமி பதறுகிறார்..
..
#ப்ராமணன் யார் ..
இந்துமதம் ப்ராமணனரைப்பற்றி என்ன சொல்கிறது அதை சரியாக கடைப்பிடிக்கிறார்களா.. 
ஏழ்மைவாழ்வு .. கையேந்தி வஜீபனம் கடல்தாண்ட கூடாது பெண்களை வேலைக்கு அனுப்பகூடாது விபச்சாரம் பெருகும்  .தீட்டான பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கெட்டுபோய்விட்டது .. பெண்கள் ஆசைநாயகிகள் இப்படி நிறைய சொல்கிறது.. ப்ராமண வாழ்வை இங்கு எவனும் வாழவில்லை ..
இந்து மதம் என்பதே ஆங்கிலேயர் வருவிற்கு முன்பு பிராமண மதமாகதான் கருதபட்டது .. எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள் .. காவிரிக்கரையில் விவசாயம் செய்தார்கள் அவர்களிடமிருந்து போனதும் தண்ணீர் பிரச்சனை வந்தது .. கல்வியில் தனி ராஜ்ஜியம் கொண்டிருந்தார்கள் படிப்பு உனக்கு வராது என்றார்கள் முடியும் என சாதித்த போது அதற்கும் வேட்டு (நீட்வடிவில்) கொண்டுவந்தார்கள் .. நீதிபரிபாலன சபை ஆதிக்கத்தை தகர்த்த போது மிரட்டபடுகிறார்கள் 
நாமெல்லாம் ஒரே மதம் என சொன்னவன் நானும் அர்ச்சகராகிறேன் என்றவுடன் கடவுளை வீட்டுக்கு கொண்டுபோய்விடுங்கள் என தன்சார்ந்தோர்க்கு அறிவுரை சொல்கிறான் .. அப்படியெனில் ப்ராமணனின் கடவுள் வேறு .. இடைசாதி கடைசாதியினரின் கடவுள் வேறு .. கலவரம் பண்ண நான் வேண்டும் ..
கும்பிட்டு மனதுறுகி பாட நான் கூடாதா .. 
கடவுள் பொதுவானவனெனில் 
எனக்கு உரிமையில்லையா .. ஆகமவிதிகள் என்பதே தங்கள் கைவிட்டு போக கூடாதென்பதற்காக உருவாக்கபட்டதே தவிர வேறொன்றுமில்லை .. ப்ராமண சாபம் பலிக்காது 
..
சட்டமன்றம் 
தமிழக சட்டமன்றம் இந்திய ஒன்றியத்திற்கு முன்னோடியாய் திகழ்ந்தது இங்கு அறிவுசார் கூட்டம் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதியாய் பங்களித்து ஆளும் அரசை கதிகலங்க வைக்கும் .. திறமையானவர்கள் அறிவாளிகள் 
என தலைசிறந்த ஆளுமைகளை கண்ட தமிழ்நாடு சட்டமன்றம் அறிவுசூன்யங்களை இப்போது காண்கிறது .. ராமாயணம் எழுதியவரை தெரியாதவன் அண்ணாவிற்கு பிறகு அதிகம் புத்தகங்கள் படித்தவன் என்றபோதே கிழித்திருக்கவேண்டும் ஞானசூன்யங்களால் தமிழ்நாடு மதிப்பிழந்து போனது தான் மிச்சம்.
பொருளாதாரம் பற்றிதான் நிதியமைச்சர் பேசுவார் அவர் பேசுவதும் மக்களுக்காக தான் மக்கள் பிரச்சனையை மைய்யபடுத்திதான் .. தடுமாறிவிழுந்தவன் யானை மாலைபோட்டதால் மன்னன் ஆனவன், அடிப்படை தகுதியற்ற, மக்களை கேலிகூத்தாக நினைத்து 
கொள்ளையடித்து .. வடநாட்டவருக்கு கைகட்டி நின்று தன்மானமிழந்த எடப்பாடி பழநிசாமி அவர்களுக்கு பேச யோக்கியதை இல்லை விமர்சனம் செய்ய, எதிர்க்கட்சி தலைவராக இருக்க கொஞ்சமும் தகுதியற்றவர் எடப்பாடி பழநிசாமி 
..
கொடாநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை கண்டு ஏன் அஞ்சுகிறது இந்த அடிமைகூட்டம் ..
காவலாளி கொலைசெய்யபடுகிறார் சிசிடிவி கேமரா செயலிழக்கிறது .. ஓட்டுனரை கேரளாவில் விபத்துள்ளாகிறார் மர்ம தொடரை போல கதை கேட்டுக்கொண்டிருந்தோம் .. ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்து விசாரணை கமிஷன் முன்  நேர்நிற்காத பன்னீர் இப்போது பதறுகிறார் எங்கே  ஜெயலலிதா வழக்கு துரிதம் பிடிக்கும் என அஞ்சுவது அவரின் பேச்சில் தெரிகிறது .. மடியில் கனமில்லையெனில் வழியில் ஏன் பயம் .. இவர்கள் தான் விசாரணை விரைந்து நடத்த வேண்டுமென அரசிற்கு கோரிக்கை வைத்திருக்க வேண்டும் .. தவறு செய்தவர்கள் தண்டிக்கபடுவார்களென அரசின் தலைவர் சொன்னதும் இரண்டுநாள் சபைக்கே வரமாட்டார்களாம் .. ஓடியொளிவதால் பலனில்லை 
சட்டம் கடமையை செய்யும்..
..
சட்டபடி குற்றவாளிகள் தண்டிக்கபடுவார்கள் என்கிறார் தமிழ்நாட்டரசின் முதல்வர் ..
நீங்கள் ஏன் பயபடுகிறீர் பழநி அவர்களே..
எப்பன் குதிருக்குள் இல்லை ..
இன்னும் பலது இருக்கு..
எங்கும் ஓட முடியாது சுடலைசாமி கணக்கு தீர்க்கும்..
எல்லாம் நியாயபடி நடக்கும் .. இப்போது யாரும் துணைக்கு வர மாட்டார்கள் கூட்டணி தலைவர்கள் மெல்ல நகர்வார்கள் ஒன்றியம் கைகழுவும் இப்படிதான் இனி..
ஜெயலலிதா சாவின் மர்மமும் வெளிவரும் போது ஒட்டுமொத்த அடிமைகள் சிறையில் இருப்பார்கள்..
..
ஆலஞ்சியார்

Monday, August 16, 2021

கேள்வி எழுப்பும் முன் 
அதை கேட்க தகுதியானவன் தானா என எண்ணிபார்க்கவேண்டும் அரசியல் அடிமைகளாய் கால்பிடித்தும் நக்கியும் விழுந்து தவழ்ந்தும் வந்தவர்கள் திமுக தலைவர் மாண்பிமை தமிழக முதல்வரை பார்த்து வாக்குறுதி என்னானது என கேட்க சட்டமன்றத்தில் பதிலடி தந்துள்ளார் ..
..
அடிமை அதிமுகவினர் தெருவில் இறங்கி போராட்டமெல்லாம் செய்தார்கள் அந்த நேரத்தில் கூட கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றிக் கொண்டிருந்தார் தளபதி அவர்கள் 
கொரோனாவின் கோரதாண்டவம் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தபோது அவசரஊர்திகளின் சத்தம் ஓயாமல் அலறிபோது தளபதி தன் சகாக்களோடு உழைத்துக்கொண்டிருந்தார்.. படுக்கைகள் காலி இல்லை உயிர்வளி (ஆக்ஸிஜன்)  கையிருப்பில்லை என்றவுடன் விரைந்து நடவடிக்கை அமைச்சர்கள் சக்கரம்கட்டி ஓடினார்கள் .. பல்வேறு அவசர மருத்துவமனைகளை 15நாட்களில் கட்டி வரலாறுபடைத்தார்கள் சில வாரத்திலேயே 50,000 படுக்கைகள் காலியாக இருப்பதாக சொல்லும் திறன் திமுக ஆட்சிக்கு இருந்ததர இதுதான் சாதனை ..
இதுவே அடிமைகள் தொடர்ந்திருந்தால் சாவுமணி அடித்துக்கொண்டே இருந்திருக்கும்.. கொரோனா கால நிவாரணம் இரு தவணையாக ₹4000.. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் 100 நாட்கள் மக்கள் குறைதீர்க்க பெறபட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை
என ஒவ்வொரு வாக்குறுதிகள் 
நிறைவேற்றபடுவது தெரிந்தும் 
இந்த பொய்யர்கள் சொன்னதையே சொல்ல .. கூட வந்த பாஜக பாமக நேர்மையான அதிகாரிகளை கொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பாராட்டு பத்திரம் தர அடிமை அதிமுகவிற்கோ எரிய தொடங்கியது .. ஒன்றிய அரசு செய்ய தவறியதை பெட்ரோல் வரிகுறைப்பு செய்து பிற மாநிலங்களும் வியக்க மோடி அரசிற்கு நெருக்கடியை தந்தது 
முதல்வர் தளபதியின் தனி பாதையை உணர்த்தியது..

..
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு பாஜகவில் இருக்கும் பார்ப்பனர் அல்லாத தலைகள் ஆட தொடங்கியதுதான் ஹைலைட்.. 
நெடுங்காலமாய் எம் ஆசானின் நெஞ்சை தைத்த முள்ளை பேரன் எடுத்தெறிந்தார் .. பெண் ஓதுவார் கலைஞர் அங்கையர்கன்னியை நியமித்து துவங்கி வைக்க கடந்த பத்தாண்டாய் கண்டுக்கொள்ளாமல் இருந்தார்கள் மீண்டும் கோவிலில் பெண் ஓதுவார் கடவுள் மனம் குளிர்ந்தார்.. 
..
முதல்வரை நேரில் அழைக்கலாம் வரும் வழியில் மறித்து பேசலாம் உரிமையோடு முககவசத்தை அகற்ற சொல்லலாம் இவையெல்லாம் மேலைநாடுகளில் கண்டது இது நல்ல தொடக்கம் ..விரைந்து ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவேன் இது எனது அரசு அல்ல மக்களாகிய உங்கள் அரசு என ஜனநாயகத்தின் அறத்தை நமக்கு சொல்லி நேர்மை வெளிப்படைதன்மை விரயமில்லாத வீணாகாமல் மக்களுக்கு சென்று சேர்க்கும் துணிவும் நேர்மையும் கொண்டவர்களை அதிகாரிகளாயே நியமித்து படையோட்டம் நிகழ்த்துகிறார்
தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி.ஸ்டாலின்..
சொன்ன வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோமென
தமிழ்நாட்டின் முதல்வர் சொல்கிறார் ..செய்வார்
..
ஆலஞ்சியார்

Saturday, August 14, 2021

கொள்கைக் குன்று சமசரமற்ற சமூகபோராளி தன்னலமற்ற சேவை பெரியாரிடம் தந்த வாக்குறுதிக்காக வாழ்நாள் முழுவதும் புத்தங்களை சுமந்து நடமாடும் நூலகமாய் குவைத்தில் பெரும்பணியாற்றிய பேரன்பாளர் 
மானமிகு ச.செல்லபெருமாள் அய்யா
Chella Perumal Raju 
அவர்கள் மறைந்தார் 
..
ஒவ்வொரு மனிதனும் செத்துபோவது உண்மைதான்...
என்றாலும் 
அவரோட முயற்சிகளும், 
அவர் தொடங்கிய காரியங்களும்,
செத்துபோவதில்லை என்றார்
பெரியார் ஆம் அவர் தொடங்கிவைத்த சமூகப்பணியை இன்று பல அமைப்புகள் குவைத்தில் செய்துவருகின்றன .. பல்வேறு சமூகதளத்தில் பயணித்தாலும் அனைவரும் பெரியவர் அய்யா அவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தனர்..  அவரின் வழிதோன்றலாய் மிக சிறப்பாக செயல்படுவதும் அவருக்கு அணிசேர்க்கும்..
..
அவரோடான சந்திப்புகளும் நிகழ்வுகளும் என் வாழ்வில் மறக்கமுடியாத பக்கங்களாய் திகழ்கின்றன .. தோழர் ஆலஞ்சி என பெயரிட்டு அழைத்து மக்கள் முன் நிறுத்தியவர் என் எழுத்தை வெகுவாக ரசிக்கிற, சிலநேரம் விவாதம் செய்கிற சரியெனபட்டதை முகத்திற்குநேரே சொல்லும் நேர்மையாளர் நல்ல விமர்சகர்.. அய்யா அவர்கள் நல்விதைகளை தேடி தேடி விதைத்தவர் .. நல்ல களம் அமைத்து தருவார் இன்றைக்கு நல்ல பேச்சாளர்கள் நல்ல கருத்தாளர்கள் என குவைத் மண்ணில் மின்னுகிறவர்கள் எல்லோருமே அய்யாவின் பட்டறையில் பயின்றவர்கள் .. பெண்களை முன்னிலை படுத்த வேண்டுமென்பதில் முனைப்போடு செயல்பட்டவர் .. கவிதாயினிகள் நாவலாசிரியர்கள் என இன்று புகழபடுகிறவர்கள் அய்யாவின் பெரியார்நூலகத்தின் வார்ப்புகள் 
கொண்ட கொள்கையின் உறுதியோடும் சமூகநலன் சார்ந்து வாழ்ந்த கொள்கை போராளி செல்லபெருமாள் அய்யா அவர்கள்
..
குவைத் தமிழ் சமூகம் இவரை மறந்து செயல்படமுடியாதவாறு இவரின் பங்களிப்பும் உழைப்பும் இருந்தது ..சோர்வில்லாத பயணம்
ஐம்பதாண்டுகளுக்கு மேலாக "#பெரியார்நூலகம்" என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு நிகழ்வுகளை நடத்தி கொள்கை பேசியவர் சிறிய கூட்டமே பெரிய அரங்கோ எங்கெனினும் தான் சொல்ல வந்ததை துணிவோடு சொல்லி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற அய்யாவை குவைத் தமிழ் சமூகம் கண்ணீரோடு அஞ்சலி செலுத்துகிறது ..
..
நெஞ்சமெல்ல நிறைந்த அய்யாவிற்கு வீரவணக்கம் 
போய்வாருங்கள் அய்யா 
நீங்கள் விதைத்த விதைகள் 
விருட்சமாய் வளரும் ..
குவைத் தமிழ் சமூகத்திற்கு
நிழல் தந்த  #தரு  நீங்கள் 
..
ஆலஞ்சியார்

Friday, August 6, 2021

தகப்பன்சாமி..
இனம் காத்தவனே..
இடறுகள் ஒருபோதும் உம்மை தளர்த்தியதில்லை
சண்டை போட்டுக்கொண்டே இருந்தாய்
பகைவன் உன் ஆற்றல் கண்டு 
வாளெடுக்க மறந்ததுண்டு 
உன் 
தமிழ் எதிரியையும் மயக்கியதுண்டு..
உன்னைப் போல் ஒருவன் 
இனி வருவானா..
உன் நாதம் எழும் போதெல்லாம் 
சமூகம் நீதி கண்டது 
உன் குரல் பகையை வென்றது 
நீ
அண்ணாவிடம் இதயத்தையும் 
ஆசானிடம் (பெரியார்) துணிவையும்
காயிதெமில்லத்திடம் கண்ணியத்தையும் பெற்றவன் 
உனை வெல்ல எவனுமில்லை என்றாலும்
நிதானம் இழக்காமல் நின்றாடினாய்
..
14 வயதில் தமிழ்க்கொடியேந்திய 
நீ..
செம்மொழியாய் தமிழை உயர்த்தி
நாணயமற்ற கிறுக்கர்களின் வாயடைத்தாய் 
எண்பதாண்டுகள் பொதுவாழ்வு 
நாதியற்ற மக்களின் 
நடுவொடிந்த மனிதர்களின் 
ஒடுக்கபட்டவனின் 
தாழ்ந்துநின்றவனின் 
குரலை செவிமடுத்து 
அவனோடு களம்கண்டு
சப்தமற்றவரின் குரலாய் ஓங்கியொலித்தாய் 
வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வறியவரின் நிலை உயர்த்தி
மறுக்கபட்டவனின் உரிமையை மீட்டுதந்தாய்..
..
உன்னால் மட்டுமே முடிந்தது 
பள்ளத்தில் நிற்போரை 
படிகளில் ஏற்றிட ..
பள்ளி செல்லாத பாட்டனின் 
பேரன் பட்டதாரியானதெல்லாம் உன்னால்தான்.. 
மகளிர் கல்வி 
இலவச மின்சாரம் 
ஊர்தோறும் பள்ளி
மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி
நீ.. 
செய்து முடித்ததெல்லாம் 
ஒன்றியம் தொடரவே முப்பதாண்டானது 
நீ..
மூலம் 
உன் சிந்தனையும் செயலும் 
தொலைநோக்குகொண்டது 
..
கோவா திரைப்படவிழாவில் 
பராசக்தி திரையிட பயந்து
மலைக்கள்ளனை திரையிட்டார்கள் 
பாவம் மலைக்கள்ளனும் 
நீ தந்தெனயறியாதோர் 
உன் வசனம் 
இரத்தத்தை சூடேற்றியது 
பகைவர் பதறினார்
துரோகிகள் வாயடைத்தனர்
தமிழன்னை சிரித்தாள் 
..
தமிழர்களின் திருமந்திரமே
உன் மாயவித்தை கண்டு
மயங்கியவர்கள் உண்டு..
உன் எழுத்து வீரம் பேசியது 
கலைப் பண்பாடு மீட்டது..
பகுத்தறிவு துணைக்கொண்டு 
நீ..
தீட்டியதெல்லாம் பயன் தந்தது 
உனைவெல்ல எவனுமில்லை 
உனை தொடராமல் எவனுக்கும்  
அரசியல் வாழ்வில்லை 
உனைச் சுற்றிய இயங்கவைத்த
ஓய்வறியா சூரியன் நீ.
..
அரசு இயலே
உன் அடிச்சுவடிதான் 
அரசியலின் அரிச்சுவடி
உன்னை கற்றுதான் 
இனி எவரும்
அரசியல் செய்யமுடியும் 
உன் பாதைதான் 
தெளிவான அரசியல்பாதை
உனை இகழ்ந்தோ புகழ்ந்தோ 
பிழைத்தவன் ஆயிரம் 
நீயே.
பொதுவாழ்வின் அன்னம் ..
..
அச்சமன்றவனே..
ஆரூர் தந்த அறிவுச்சுடரே
இடறில்லா பயணத்தில் - உன்
ஈகையால் செழித்ததுதமிழர்வாழ்வு
உன்னை நம்பியவர் வீழ்ந்ததில்லை-என
ஊர்சொல்லும்
எழமுடியாமல் வீழ்ந்தவரையும் உயரத்தில்
ஏற்றிட உழைத்தாய்
ஐயமின்றி இன்று தமிழ்நாடு..
எங்கள் தகப்பன் சாமியே
ஒளிதந்தாய் 
ஓங்குக உன் புகழ்..
உன் புகழ் இறவா..
..
எம் ஞானதந்தையே..
நீ தந்ததும் தரமறுத்ததும் 
எம் வாழ்வில் பயன்தந்தது
நீ.. யின்றி அமையாது தமிழ்நாடு 
உனை மறக்காது தமிழர் நெஞ்சம்
வையம் உள்ளவரை உம் புகழ் நிலைத்திருக்கும்..
வீரவணக்கம்..
..
ஆலஞ்சியார்
பக்கீர் சேக்மைதீன்..
நெல்லை தந்த பக்கீர்.. 
பக்கீர் எனும் சொல் தன்னை இழந்து மெஞ்ஞானச்சுடரில் கரைந்து உலகாசபாசங்களை மறந்து வாழும் வாழ்வு.. ஒரு நாடோடியைப்போல ..
தமிழக இஸ்லாமிய வாழ்வியலில் 
இவர்களின் பங்கு தவிர்க்கமுடியாதது .. இப்போதெல்லாம் அரிதாகிப்போன பக்கீர்கள் வரவு நல் இசைகீதங்களை பாடி தப்ஸ் அடித்து இறைஞ்சிவாழும் எளியவாழ்வு ..  (இந்துமதத்தில் பிராமணர்கள் எப்படி அடுத்தவரை அண்டி இறைஞ்சி வாழ வேண்டுமோ அதைப்போல வாழவேண்டும்) .. இவ்வுலகில் ஆசைகள் துறந்த வாழ்வு .. துறவுநிலை அல்ல.. (துறவறம் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை) 
இவர்கள் இஸ்லாமிய வரலாறுகளை அரபுலகின் மகான்களின் வரலாறுகளை பாடி திரியும் வானம்பாடிகள் .. இவர்களுக்கென்று (பாதை) தரிக்கா பகுதாத் அரசர் முஹையத்தீன் ரலி அவர்களின் வழியொத்தது ..
..
ரிஃபாய் தரிக்காவில்
தாயிரா(தப்ஸ்) கொண்டு 
இஸ்லாமிய ஆன்மிக பாடல்களை பாடுவார்
நூர் மசாலா ...
முஹையத்தீன் மாலை ...
பாத்திமா, மற்றும் எண்ணற்ற
நபிமார்கள் வரலாறுகளை பாடி மக்களை மகிழ்வித்தவர் சேக்மைதீன் பாவா..
..
வழுத்தூருக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்புண்டு .. கோடைகால இரவுகள் இவர் வருகையால் "இஸ்லாமிய கலை இரவுகள்" களைகட்டும் .. கீழத்தெரு நிறைய மார்க்க பிரசாரங்களின் மேடையாகி இருக்கிறது .. நூறுமசாலா எழுநாட்கள் பத்துநாட்களென இரவுகள் களைகட்டும் ..காந்த கம்பீரகுரலில் இவர்பாட துணைக்கு மூவர் துதிபாட ரசனை மிகு காலமது .. 
வழுத்தூர் பக்கீர் ஹபிபுல்லாசா அழைத்துவருவார் நல்ல இஸ்லாமிய கீதங்கள் என அதுவொரு தேனொழுகும் இரவுகள் பக்தி பரசவம் தாண்டி இஸ்லாமிய கலை இரவுகளாய் மிளிரும் ..
இவர் சிங்கை ஹனீபா இசைதட்டிற்காக பாட தொடங்கியதும் இஸ்லாமிய இல்லங்களில் கேசட் வடிவில் ஒலிக்க தொடங்கியதும் இவர் நிகழ்ச்சிகள் குறைய தொடங்கி பிறகு காணாமல் போனது 
..
நல்ல குரல் வளம் நயமாக எடுத்தியம்பும் திறமை கோர்வையாக வரலாற்றை செப்பும் விதம் இடையிடையே தன் சகாக்களை கொண்டு ஆமாம் சொல்ல சொல்லியும் கேள்வி எழுப்பியும் ரசனையை கூட்டி களைகட்ட வைப்பார் .. முதியவர்கள் பெண்கள் இளந்தாரிகள் எல்லோரும் திண்ணைகளில் அமர்ந்தும் தெருக்களில் பெஞ்சில் அமர்ந்தும் இவரின் குரலில் மயங்கி லயிப்பார்கள்.. அதுவொரு கனாக்காலம் 
..
திருநெல்வேலி பொட்டல் புத்தூர் 
சொந்த ஊர் .. இவரின் குரல் ஒலிக்காத இஸ்லாமிய கிராமங்கள் இல்லை ..நாகூர் கூட்டில் இவரின் குரல்கேட்டு மயங்கும் பறவைகள் ஏராளம்..  நல்ல உள்ளம் படைத்த தனித்திறமை வாய்ந்த பாடகர் .. சொல்லில் சுவைக்கூட்டி இசைக்கும் ஆற்றல் மிகு பாட்டுக்காரன் .. சில நினைவுகள் வந்து போகிறது ..
இவரின் மகள் என் பெரியம்மா வீட்டில் உதவிக்கு இருந்தார்.. எங்கள் வீட்டில் நீண்டகாலம் சமையல் பொறிப்பேற்றிருந்த பீபாத்துபூவா தனக்கு உதவிக்காக அழைத்துவந்து வைத்திருந்தார்கள் .. ஒரு முறை குற்றாலம் சென்ற போது மறைந்த பக்கீர் லியாகத் அலியும் தம்பிம்மாவும் பொட்டல்புத்தூர் வரை சென்று இவரை பார்த்துவந்தோம் .. உடனே எங்களை அழைத்துக்கொண்டு பாபநாசம் வரை சென்று தாமரபரணியில் குளித்துவிட்டு வரும் போது "மாங்குயிலே பூங்குயிலே " என்ற பாடலை பாடிய போது மெய்மறந்து ரசித்து நின்றதெல்லாம் நெஞ்சில் ரீங்காரமாடுகிறது ..
..
தமிழ் முஸ்லிம் கலாச்சாரங்கள் மெல்ல மறைய அல்லது மறுத்து இவையெல்லாம் "சம்பூர்ண" இஸ்லாத்தில் இல்லையென விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு நல்ல நிகழ்வுகள் மக்களை மகிழ்விற்கும் 
விடயங்கள் மறைந்து போனது .. 
இஸ்லாமிய கோட்பாடுகளை மீறாத மக்கள் மனம் கவர்ந்தவைகள் இந்த மண்ணின் கலையோடு கலந்த கலைகள் .. பக்கீர்கள் மிக மோசமாக நடத்தபட்டதும், வருவாய் இல்லாத சூழலும் இன்று பல வழிதோன்றல்கள் பல்வேறு தொழில் தேடி சென்றுவிட்டார்கள் இருக்கும் சிலரையேனும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் .. எல்லோராலும் பக்கீர் ஆகிவிடமுடியாது ..
..
நல்ல குரல் வளமும் சொல் ஆளுமையும் ஏற்ற தாரிக்காவில் ஒழுங்கு குலையாமல் இஸ்லாமிய மக்கள் நெஞ்சில் நிறைந்திருந்தவர் சேக் மைதீன் பாவா .. 
நாலு பக்கீர்களின் குரல் இன்னமும் சிலர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது..
..
ஆலஞ்சியார்

Thursday, August 5, 2021

நல்லரசு..
தமிழகம் மீள்கிறது 
இரவல்களை விரட்டி தனதானதை உறுதி செய்து தமிழர் மானம்காத்து, இனத்தின் பெருமையை உலகறிய செய்யும் முயற்சி தொடர்வதும் மகிழ்வை தருகிறது ..
கோவில் கொடியவர்களின் கூடாரமாக கூடாது என்பதற்கு இன்று விடை தெரிகிறது .. கோவில் நிலங்கள் மீட்கபடும் போது பக்தி வேசம் கட்டிய பரதேசிகளும்,நாங்கள் தான்  இந்துமத காவலர்கள் எனும் பார்ப்பன கூட்டமும் பம்முகிறது ..
மயிலாப்பூர் மாமாக்கள் அன்னை தமிழில் அர்ச்சனையை மௌனமாக கடக்கிறார்கள் .. கோவில் நிலங்கள் கல்விசாலையாவது சிலருக்கு எரிச்சல் தரும் அறிவின் திறவுகோல் சமயங்களை சாய்த்துவிடுமென அஞ்சுகிறார்கள் . 
ஒன்றிய அரசு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தவைத்து சமூகநீதியை நிலைநாட்டி இது மக்களுக்கான அரசென்பதை நிரூபித்திருக்கிறார்கள்..
..
எதிலும் நேர்மையோடு யாருக்கும் வளைந்து கொடுக்காமல் சட்டம் தன் கடமையை செய்கிறது..
பாலியல் வழக்குகள் அவதூறுகள் உடனுக்குடன் கைது செய்யபடுவதும்  சிவசங்கர் பாபா பத்மா சேஷாத்திரி ராஜகோபாலன் என யாரும் தப்ப முடியாதென சொல்வதில் தெரியும் நேர்மையான ஆட்சி.. கொரோனா தொற்றை கையாண்டவிதம் உலகமே வியக்கிறது .. இதோ மக்களைத் தேடி மருத்துவம் இந்திய ஒன்றியம் இதுவரை அறியாதது.. இதுவே மக்களாட்சியின் மகிமை .. இந்தியாவிற்கே வழிகாட்டியாய் அமையும் .. இல்லம் தேடி மருத்துவம் மக்களரசின் மகத்தான செயல்.. 
.. 
சாதி பெயர் நீக்கம் 
நீண்டகாலமாக நெஞ்சில் அரித்துக்கொண்டே இருந்தது .. உ.வே.சாமிநாதய்யர் (எங்கள் ஊர் அருகில் பாபநாசம் அருகில் உத்தமதானபுரம்)  தமிழ் தாத்தா என அறியபட்டவரின் மறுபக்கமும் உண்டு அது இப்போதைக்கு தேவையில்லை .. நிறைய தமிழ்ச்சுவடிகளை மீட்டவர் .. இன்னும் நிறைய கிடைக்காமல் போனதும் பார்பனசதிதான் காரணம் போகியை சொல்லி வீட்டிலிருந்த தமிழ் மருத்துவம் வாழ்வியல் ரகசியம், பண்பாட்டு களஞ்சியம் எல்லாம் எரியூட்டபட்டன..மிச்சமிருந்ததை மீட்டவர் .. அவரின் தமிழ்மொழித் தொண்டு காலம்கடந்தும் போற்றபடும்.. ஆனால் உ.வே.சா. என்றாலே புரியும் சாமிநாதய்யர் என தொடர்ந்து பேசி வந்ததை தான் இன்று சாதி எனும் இழிவை நீக்கி தமிழறிஞரை பெருமையை பாடமாக்கி வரும் தலைமுறை சாதிபித்துப்பிடித்து அலையாமல் இருக்கும் துவக்கம்.. பாராட்ட மனமில்லையென்றாலும் கூட விமர்சனம் செய்யாமல் இருக்கலாம்.. சாதியை நம்பி பிழைப்பு நடத்தும் இளைஞர்கள் மூளைச்சலவை செய்து வழிகெடுக்கும் சமுதாய கோடாரிகள் புலம்புகின்றன அதை புறந்தள்வோம் .. 
..
கீழடி எனும் தமிழன் நாகரீகத்தின் தாய்மடியை வெளிகொணர்வதை சிலர் பதற்றத்தோடு அணுகினாலும் எங்கள் வரலாறும் வாழ்வியலும் நாகரீகமும் எத்தனை ஆழத்தில் புதைத்காலும் வெளிவருமென கட்டயம் கூறியிருக்கிறது இப்போதைய திமுக அரசின் செயல்பாடுகள் தமிழ்மொழி ஆர்வலர் கல்வெட்டின் அறிவாற்றல் கொண்டவர் எங்கள் தங்கம் தென்னரசு அவர் துறையின் அமைச்சரானதும் ஆர்எஸ்எஸ் கைக்கூலி பாண்டியராஜனின் அட்டூழியத்தால் மறைக்கபட்டவைகள் வெளிவருகிறது ..
..
ஒவ்வொரு துறைசார்ந்த செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது
கடந்த 10 ஆண்டு ஆட்சியின் அலங்கோலங்கள் வெள்ளையறிக்கையாய் வருகிறது.. அடிமைகளின் முகம் கிழியும் 
அரசு இயல் தெரியாத கூமுட்டைகளை தான் 
ஆளுமையென ஊடகங்கள் கொண்டாடியது வெளிச்சத்திற்கு வரும்..
திறமையானவர்களை தேர்வுசெய்து அமைச்சர்களாக்கி ஒவ்வொரு அசைவையும் ஆய்ந்தறிந்து செயல்படும் முதல்வர் ..தமிழகம் இனி தெளியும் உயர்வு பெறும் .. நல்லரசு என மக்கள் நம்பும் தொடக்கம் பொற்காலத்தை சமைக்கும்..
சாமானியரும் முதல்வரை கைநீட்டி அழைத்து கதைக்க முடிகிறது.. இதெல்லாம் நல்லாட்சியின் சாட்சியங்கள் .. கொடுத்த வாக்குறுதிகள் மகளிர் கட்டணமில்லா பயணம் தொடங்கி ஒவ்வொரு வாக்குறுதியும் நிச்சயம் நிறைவேற்றபடுமென அரசின் தலைவர் உறுதியளிக்கிறார்.. 
குறைகூற வழியில்லாமல் சிலர் பகடி பேசுவதும் எரிச்சல் அடைவதும் தெரிகிறது அவர்கள் இந்த மண்ணின் புறையோடிப்போன சீழ்கள் துடைத்தெறிந்து மருந்திடுவோம்.. 
புதிய தமிழ்நாடு சாதி சமயமற்ற தொல் தமிழன் வாழ்ந்த வரலாறு படைப்போம் ..
தலைவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் எனும் நம்பிக்கை ஒளி நம் பெருமையை வெளிச்சம் காட்டும் தமிழ்நாடு மிளிரும் மகிழும் ..
"தமிழ் வாழ்க"
..
ஆலஞ்சியார்

Sunday, August 1, 2021

#கலைஞர்சட்டமன்றத்தில்
மனம் நிறைந்தது ..
என்பதாண்டுகாலம் மக்களுக்காக உழைத்த ஓய்வறியா சூரியனுக்கு இன்று சட்டமன்றத்தில் புகழஞ்சலி..
படத்திறப்பு என்பது ஒரு சடங்கு அவ்வளவுதான் .. மாபெரும் தலைவனை கொண்டாடி தீர்க்க தமிழன் வாழும் காலமெல்லாம் நினைவுகூறதான் வேண்டும் .. 14 வயதில் திருவாரூர் வீதியில் தமிழ்கொடியேந்திய வீரமகன் என்பதாண்டுகள் சறுக்கல்கள் இல்லாத கொள்கையோடு வெற்றிநடைபோட முடிந்ததே இது யாருக்கும் வரும்..
..
வந்தார்கள் வென்றார்கள் சரித்திரமாய் சிலரே நின்றார்கள் 
ஆனால் நின்றவர்களில் சிலரே பெருமையோடு வாழ்ந்தார்கள் பொதுவாழ்வில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தான் ஏற்ற கொள்கையை நடைமுறைபடுத்தி சொன்னதை செய்த தலைவர்.. ஒடுக்கபட்டோரை உயரத்தில் ஏற்றிட திட்டங்கள் வகுத்தி அதை நடைமுறைபடுத்தியவர் .. ஒன்றியம் காணாத வரலாற்று நிகழ்வுகளை நிகழ்த்தியவர் .. அதிகாரம் கையில் வந்தபோதெல்லாம் அதை சரியாக பயன்படுத்தி தான் ஏற்ற சித்தாந்தத்திலிருந்து பின்மாறாமல், பெரியார் கண்ட கனவை நினைவாக்கியவர் .. இன்று தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தில் முதலாவதாய் நிற்கிறதே அது இந்த பெருமகன் செய்த மாயம்.. பொதுவுடமை பேசிய வங்கம் கூட செய்ய மறந்ததை 70 களிலேயே செய்து மனிதனை மனிதன் இழுப்பதா என கேள்வி எழுப்பி விடை கண்ட புரட்சியாளன் ..உண்மையான புரட்சித்தலைவன் .. மிகவும் பிற்படுத்தபட்டோர் என அறிவித்தவர் .. வசைபாடல்களை புறந்தள்ளி வாகைசூடியவர் .. துரோகங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன ஆனாலும் தன் செயல்பாட்டை நிறுத்தியதில்லை தலைவனுக்கான இலக்கணமாய் திகழ்ந்தவர் .. 
..
சட்டமன்றம் சுவையோடு நடத்தியவர் .. கலைஞர் இருக்கிறாரென்றால் பயந்தோடியவர்கள் அதிகம் ..  எம்ஜிஆரும் ஜெயாவும் சபைக்கே வராமல் இருந்த வரலாறுண்டு .. எதிரிகள் பகைவர்கள் வாயடைத்துப்போனார்கள்.. பெரியவர் பக்தவச்சலம் காமராஜர் என பெருந்தலைவர்களும் அரசியலறியா சில்லறைகளும் சபையில் இருந்ததுண்டு .. எல்லோரையும் திகைக்கவைத்து நாவன்மையால் வென்றுகாட்டிய வீரர்.. இவர் செயல்திட்டங்கள் தான் இந்திய ஒன்றியத்திற்கு இன்றைக்கும் தேவைபடுகிறது..
இந்திய ஒன்றியம் கண்ட ஒப்பற்ற தலைவன்.. இவரைப்போல் யாருண்டு இனி வரபோவதுமில்லை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை தளராமல் தோல்வி வெற்றி இரண்டிலும் பணியாற்றி அரசை இயக்கிய பேராற்றல் கொண்டவர்
விளிம்புநிலை மக்களையும் ஏழைகளுக்கும் இயலாதோருக்கும் 
பேரருளாய் வந்த பெருமகன்.. 1974 ல் மாநில சுயாட்சியை கொண்டுவந்து கூட்டாச்சியின் மகிமையை உணர்த்தி ஜனநாயகத்திற்கு செழுமையூட்டியவர்..
..
எழுத்து பேச்சு செயல் ஓயாத உழைப்பு..
இதுதான் கலைஞர் .. தமிழக அரசியல் இவரை சுற்றியே இயங்கியது என்னோடுவா இல்லெனில் எதிர்த்து நில் இதுதான் தமிழ்நாட்டு அரசியல் இவரை புறக்கணித்து தமிழ்நாட்டின் அரசியல் இல்லை .. 
இனி
சட்டமன்றத்தில் படமாய் அல்ல பாடமாய் நிற்கிறார் .. பதிமூன்று முறை நின்று பதிமூன்றுமுறையும் வென்று சாதனைபடைத்த மாபெரும் தலைவர் 
"
நான் இருக்கும் வரை இந்த சமூகம் ஆதிக்க வெறியாலும் மத வெறியாலும் தினம் தினம் செத்து மடிவதை எதிர்ப்பேன் . ஏனென்றால் நான் பெரியாரின் வளர்ப்பு , அண்ணாவின் கொள்கைப் பாதுகாவலன்" என்றார் கலைஞர் 
ஆம் 
தமிழ்நாட்டின் தமிழினத்தின் தமிழ்மொழியின் பண்பாட்டின் பாதுகாவலன் .. அவர் வழி தமிழ்நாட்டின் வழி என பெருமைக் கொள்வோம் மிகசிறந்த ஜனநாயகவாதியின் படம் மேதகு குடியரசு தலைவரால் திறப்பது பெருமைகுரிய விடயம் ..  
#நல்லோர்_சிறப்புறுவர் ..
..
கலைஞர் வாழ்க! 
#KalaignarInAssembly
..
ஆலஞ்சியார்
காவலர்களுக்கு ஒருநாள் விடுமுறை திமுக தேர்தல் அறிக்கையில் உள்ளது அதை தான் காவல்துறை தலைவர் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் வழக்கம் போல் சைலேந்திரபாபுவிற்கு நன்றி சொல்லி நடுநிலை சமூகம் பேரானந்தம் அடைகிறது ..
..
திமுக ஏன் செய்யவில்லை என 100 நாட்கள் கூட கடக்காத நிலையில் சிலர் பொங்குவதும் சத்தமில்லாமல் ஒவ்வொன்றாய் நிறைவேற்றுவதை துறைரீதியாக கணக்கெடுப்பதும் திமுக என்றாலே வாழ்த்த மனமில்லாத மனநோயாளிகள் இங்கே பரவலாக இருக்கிறார்கள் .. குடிமைமாற்று என்றவுடனே "பூர்வக்குடி" களை விரட்டுவதா என சிலர் வீரவசனம் பேசுகிறார்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் பீ யிலும் மூத்திரத்திலும் வாழ்வதை மனதுக்குள் ரசிக்கும் கொடூரமானவர்கள் அவர்கள் தான் இவர்களின் அரசியல் .. ஏழ்மையும் வறுமையும் தொடரவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள்..
..
ராஜகண்ணப்பன் எதிரே கைகட்டி திருமா அமர்ந்திருப்பது போல போட்டோஷாப் அதை பரப்பி தங்கள் அரிப்பை தீர்த்துக்கொள்வோர் முதலில் திருமாவை கூட சரியாக அறியாதவர்கள் யாருக்கும் அடிபணிய கூடாதென்ற கொள்கையில் இருப்பவரை அவமானபடுத்தும் நீலசங்கிகள் சூத்திரனை பார் என சந்தோசம் அடைவது தெரிகிறது .. மூத்தபத்திரிக்கையாளன் என தன்னை சொல்லிக்கொள்ளும் பாண்டே "கண்ணில் பட்டது " என சீவி விட கடைசியில் மூக்ககொடிந்தது ..இதெல்லாம் அவர்கள் தினம் காண்பது தான் ஆனால் நீலம் எதற்கெடுத்தாலும் பதறுவதும் திராவிடம் பார் என எகத்தாளம் பேசுவதும் சகிக்கவில்லை .. திராவிடம் இல்லையென்றால் இப்போது கூட தெருவில் நடக்கமுடியாத சூழலே இருக்கும்  என்பது தான் உண்மை..
..
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே !"
#திருமூலர் 

கோவில்களில் தமிழில் அர்ச்சனை அடுத்தவாரம் தொடங்கும் என சேகர்பாபு அறிவிப்பை சமய தமிழ் சமூகம் ஏன் கொண்டாடவில்லை..
இதற்கும் பாஜக பாமக தான் காரணமென சொல்வார்களோ OBC இடஒதுக்கீட்டை நீதிமன்றத்தை நாடி ,போராடி பெற்று தந்தால் மோடியின் நல்லமனசை பாரீரென போஸ்டர் அடிக்கிறான்.. ஒன்றிய அரசின் மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக இன்று உரிமை கொண்டாடும் சாதிவெறியர்களோ மதமூடர்களோ அன்று நவதூவாரங்களையும் பொத்திக்கொண்டிருந்தார்கள். ஆம்
இதையெல்லாம் திமுக தொடர்ந்து செய்யவேண்டும்.. கடமைதான் அதற்கெதற்கு விளம்பரம் செய்யாமல் இருந்தால் பக்கத்துவீட்டுகாரன் சொந்தம் கொண்டாடுவான் ..
திமுக செய்யும் நலதிட்டங்கள் நிறைவேற்றிய வாக்குறுதிகள் போராடி பெற்ற உரிமைகளை விளம்பரம் செய்யவேண்டும் 
..
தமிழகம் வெற்றிடம் இருக்கிறதென்றார்கள் தலைவரில்லா தமிழகம் என்றார்கள் .. ஸ்டாலின் மௌனபுன்னகையால் கடந்து போனார் .. இன்று #MyLeaderStalin 
என இந்திய ஒன்றியமே கொண்டாடுகிறது .. OBC இடஒதுக்கீட்டை பெற்று தந்தது தொடக்கம் தான் .. இன்னும் நிறைய பார்க்க போகிறது இந்திய ஒன்றியம் .. 
பதர்களே வீசும் காற்றில் பறந்துபோவீர்கள் ..
நெல்மணிகள் மட்டும் தாழ வரும் ..
நல்லெண்ணமும் நேர்மையும் அஞ்சாமையும் நீதியும் நெஞ்சில் சுமந்த தலைவர் ஸ்டாலின் ..
அவரையோ அவர் சார்ந்த இயக்கத்தையோ விமர்சனம் செய்ய முதலில்
 உங்கள் தகுதியை  வளர்த்துகொள்ளுங்கள் பிறகு வாள் வீசலாம் .. 
..
தலைவர் ஸ்டாலின்  
இந்திய ஒன்றியம் கொண்டாடும் தலைவராக வருவார் ..
..
ஆலஞ்சியார்