Monday, May 31, 2021

கலைஞர்

கலைஞர் ..
ஜூன் மாதம் வந்தாலே வலைதளங்களில் கலைஞரின் புகழ்மாலைகள் வழிந்தோடும்..
சிறு கட்டுரையில் குறுநாவலில் கலைஞர் எனும் மகாநதி தடத்தை அடக்கிவிட முடியாது .. சொல்ல சொல்ல நமக்கே புத்துணர்வை தரும் 
செய்திகள் .. ஒரு மனிதனால் இவ்வளவை சாதித்துவிட முடியுமா என விழி பிதுங்கி நிற்கிறார் பிற மாநில மக்கள்..  இங்கே பிறக்காமல் போனாரே என ஏக்க பெருமூச்சு சத்தமாய் கேட்கிறது .. என்பதாண்டு பொதுவாழ்வில் நான்கில் ஒரு பகுதி அதிகாரத்திலிருந்து.. ஒவ்வொரு நொடியும் சமூகநீதியின் நிழலில் நின்று  திட்டமாய் சட்டமாய் நடப்பிலாக்கி ஒவ்வொரு குடும்பதலிருந்தும் பட்டதாரிகளை உருவாக்கவேண்டுமென்ற நோக்கோடு முதல்பட்டதாரிக்கு இலவச கல்வியை வழங்கி இச்சமூகம் நன்றியோடு நினைவு கூர்கிறதே ..
இந்தியாவிலேயே முதல் சட்ட கல்லூரியை நிறுவி அதற்கு அம்பேத்கர் பெயரை சூட்டியதெல்லாம் மகாராஷ்ட்ராவில் கூட நடக்காதது .. ஒவ்வொரு திட்டமும் சமூகநிலையெண்ணி தொலைநோக்கோடு பிற மாநிலங்கள் இருபது முப்பதாண்டு கழித்து யோசனை செய்வதை முன்கூட்டி நடப்பிலாக்கி தமிழகத்தை அறிவுசோலையாய் மாற்றியதில் பெரும்பங்குண்டு ..
..
பெரியாரை பார்பனீயம் இக்கொடூரமாக தாக்கியதில்லை காரணம் அவர் அரசு பதவிகளை வெறுத்தொதுக்கியது அவர்களுக்கு வரமாக தெரிந்தது .. ஆனால் பெரியாரோடு திராவிடத்தை ஓரம்கட்டிவிடலாம் என்று தான் பார்பனீயம் நம்பியது ஆனால் பெரியார் உருவாக்கிய தம்பிகள் இவ்வளவு வீரியத்தோடு முன்னெடுப்பதை கண்டு திமுக மீது அதிலும் கலைஞர் மீது வன்மத்தோடு காய் நகர்த்தினார்கள் .. ஊழல் என்று வடிகட்டிய நிரூபிக்க முடியாத கதைகளை சொல்லி திமுகவை உடைத்து அதன் வலுவை சிதைக்க நினைத்தார்கள் அதிகாரத்தில் திமுக வரகூடாதென்பதற்காக எதுவெல்லாம் சாத்தியமோ அத்தனையும் செய்தார்கள் மீண்டெழுந்து வந்த போதும் அதே சமூகநீதி பேசி ஆட்சி செய்தார் முன்னிலும் அதிகமாய் நலத்திட்டங்கள் வெளிப்படையான அணுகுமுறை தெளிவான தொலைநோக்கு பார்வை .. பொறுக்குமா பாசிசம் புலிகளை காரணம் காட்டி ஆட்சியை மீண்டும் கலைத்தார்கள் .. துவண்டுவிடவில்லை இந்த பெரியாரின் நேரடி சீடன் .. மீண்டுவந்து அதிகாரத்தில் வந்தவுடன் சிறுபான்மையினர் உள்ஒதுக்கீடு அருத்ததியினர் உள் ஒதுக்கீடென "பணி செய்து கிடப்பதே தன் கடன் " என உழைத்துக்கொண்டிருந்தார் ..
இன்றைக்கும் பெரியார் மீதும் கலைஞர் மீதும் இந்த பாசிச கும்பல் வன்மத்தோடு அலைகிறதே அதிலிருந்து இந்த சமூகத்திற்கு இவர்கள் ஆற்றிய பணி வியப்பில் ஆழ்த்தும் ..
..
இன்றைக்கும் கொஞ்சமேனுெம் மெச்சபட்ட நிலையில் தமிழகம் நி்ற்பதற்கு கலைஞர் காரணம் என்பதை எதிரிகள் மிக தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் ஆனால் அவரால் பயன் அனுபவித்தவன் வசைபாடிக்கொண்டிருக்கிறான் .. விவசாய கடன் தள்ளுபடி செய்யபட்டபோது அதிகம் பலன் பெறுகிறவர்கள் அதிமுககாரர்கள் என்ற போது நான் அவர்களை விவசாயிகளாக பார்க்கிறேன் என்ற #அறநெறியாளன் .. பட்டியலின மக்களின் மேம்பாடு இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியது .. மலைவாழ் மக்களின் கல்விக்கு கால அவகாசம் வழங்கி அவர்களின் கல்வி வேலைவாய்ப்பில் உறுதிசெய்தது .. பிற்படுத்த மக்களின் இடஒதுக்கீட்டை தோழர்.வி.பி.சிங் காலத்தில் மண்டல்கமிஷன் பரிந்துரையை சட்டமாக்கி அதற்காக பதவி இழந்த வி.பி.சிங்கிற்கு பாராட்டும் நன்றியும் செய்தார் அந்த OBC இடஒதுக்கீட்டை தான் ஒன்றுமில்லாததாக்கி இன்றைய மோடி அரசு பிற்படுத்தபட்ட மக்களின் நெஞ்சில் அவர்களே அறியாமல் வேல்பாய்ச்சுகிறது .. கிழவன் இல்லை என்கிற தைரியத்தில் .. ஆனால்
இத்தனையும் தன் வாழ்நாள் முழுவதும் செய்துகாட்டிய #பேரருளாளன் 
சுயமரியாதை சமூகநீதி பகுத்தறிவு மாநில சுயாட்சி என தனக்கான களத்தில் திராவிட இயக்கம் எதற்காக தொடங்கபட்டதோ அதன் அடிப்படைநோக்கிலிருந்து மாறாமல் கட்சியை வழிநடத்துவது அதுவும் அரைநூற்றாண்டு காலம் தலைவனாய் வீற்றிருப்பது வியக்கவைக்கும் செயல் .. 
..
இந்த கிழவனின் இழப்பை தமிழகம் உணர தொடங்கியிருக்கிறது ஒற்றை மனிதனாய் காவல் காத்து நின்ற பெருஞ்சேவையை கண்ணீரோடு நினைவு கொள்கிறது ..
நிறைய விமர்சனங்கள் அரசியல் முடிவுகளில் தவறுகள்.. நீண்ட தலைமையில் ஏற்படும் சறுக்குகள்.. நண்பனே பகைவனாய் புறம்நின்று தாக்கிய போதும் அரசியல் அறம் வெல்லுமென நம்பி .. தம்மை ஒதுக்கிநின்ற நேரத்திலும் கடமையாற்றி ஒரு அரசியல்வாதியின் இலக்கணம் ..எப்படி பயணிக்கவேண்டும் மக்கள் சேவையில் நின்றாடிய அழகு .. கடைசி வரை கொண்ட கொள்கையில் கிஞ்சுற்றும் மாறாமல் மக்கள் பணி செய்த மாபெரும் தலைவன் ..
தொண்ணூற்றெட்டில்
பிறந்த நாளில் நெஞ்சமெல்லாம் மகிழ நினைவுகூர்வோம்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment