Thursday, May 13, 2021

ஒரு  அரசு செயல்படுவதற்கு  அவகாசம் தராமலேயே சிலர் குறை கிடைக்குமா என பார்க்கிறார்கள்..
இரண்டாவது அலை மோசமாகும் எனத் தெரிந்தும் முந்தைய அரசின் பொறுப்பின்மையே இன்றைய இக்கட்டான சூழலுக்கு காரணம் என்பதை மறைத்து சில சொரிந்து கொள்கிறார்கள் .. ஆட்சி பொறுப்பேற்றபோது  இருந்த நிலை தொடர்ந்திருக்குமேயானால் இன்னும் அதிக இழப்பை கண்டிருப்போம் 12600 படுக்கை வசதி என்ற இலக்கை நிர்ணயம் செய்துஒரே வாரத்தில் 5000 படுக்கைகளை கட்டமைத்திருக்கிறார்கள் .. இதற்கு முன் இருந்த  அமைச்சரும் செயலாளரும் யார் மீது பழிபோடலாமென எண்ணி சிங்கிள்சோர்ஸ்  என வக்கரத்தோடு பேசி  தங்கள் தோல்வியை மறைத்துதான் நடந்தது ..  இப்போது அமைச்சர் மா.சு அவர்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறார் .. பல்வேறு பகுதிகளாக பிரித்து அதற்கு அமைச்சர்களை நியமனம் செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் பணித்திருக்கிறார்.. அமைச்சர் செந்தில்பாலாஜி சேலத்தில் 500  படுக்கை கொண்ட கட்டுமைப்பை விரைந்து உருவாக்க போர்கால அடிப்படையில் வேலை நடக்கவேண்டுமென்கிறார்.. 
..
முதல் அலையில் அதிகபட்சமாக 12000 தொற்றுதான் பதிவானது ஆனால் இப்போது 30000 என பதிவாகிறது முதல் அலையைவிட இப்போது உயிர்வளி(ஆக்ஸிசன்) தேவை அதிகரித்திருக்கிறது .. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் சிலிண்டர்கள் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்கிறது விரைந்து  பகிர்ந்தளிக்க ஏதுவாக.. தடுப்பூசி அனைவருக்கும் விரைந்து கிடைக்க வெளிநாடுகளிலிருந்து தமிழக அரசே இறக்குமதி செய்கிறது .. 
..
ஆட்சிக்கு வந்து எழுநாட்களிலேயே கேள்வி எழுப்பும் ஊடகம் (சிலவைமட்டும்) எழு வருடங்களாக வாய்பந்தல் போடும் மோடியின் நிர்வாகதிறமையின்மையை ஏன் கேள்வி கேட்கவில்லை இரண்டாம் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிந்தும் கும்பமேளாவை தடுக்க தவறியதும்  தேர்தல் பேரணியில் பிசியாக இருந்ததும் எரிகிற பிணத்தின் வாடையில் மதம் பெருமைபேசுவதையும், முட்டாளத்தனமாக  மாட்டுசாணியையும் மூத்திரத்தையும் புரமோட் செய்வதையும் கேட்க வக்கில்லை .. மோடியை காணவில்லை என  சில பத்திரிக்கைகள் மெல்ல தூக்கம் கலைந்து எழ  தொடங்கியிருக்கிறது .. பத்திரிக்கைகளை சந்திக்க தைரியமற்ற 52 இன்ச் மார்பழகன் எங்கு போனார் .. நாடே எரிகிறதே என உச்சநீதிமன்றம் கவலைபட்டும் வாய் திறக்க மறுப்பதேன் .. உ.பி.யை உலக சுகாதார மையம் பாராட்டுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் பொய்பேசுகிறாரே எவ்வளவு கேவலம் கொரோனாவை விரட்ட யாகம் செய்யுங்களென பாஜக எம்பி சொல்கிற அளவில் அவர்களின் அறிவு இருக்கிறது.. 
..
வாக்கு கேட்கமட்டும் மக்களை சந்திக்க முடிகிற மோடி அமித்ஷாவிற்கு பேரிடர்காலத்தில்   மக்களை சந்திக்க முடியவில்லை.. ஊடகங்களை சந்தித்து பதில்தர முடியவில்லை இன்றைய  நிலைக்கு இந்திய ஒன்றிய அரசின் அலட்சியபோக்கும் அடிமை அதிமுக அரசின் திறமையற்ற நிர்வாகமுமே காரணம் ..
..
உயிர்காக்கும் நடவடிக்கை!
சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள அவசர ஊர்தி திட்டத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபுணர் பிரப்தீப் கவுர் பாராட்டு தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அமைச்சர்  பெருமக்கள் சுழன்று பணியாற்றுகிறார்கள்.. நேர்மையான அதிகாரிகளை கொண்டு நிர்வாகத்தை விரைந்து  செயல்பட வைத்திருக்கிறார் தமிழ்நாட்டின் முதல்வர் .. பதவியேற்றவுடனே  war room  அமைத்து மக்களுக்கு  எளிதாக எங்கே படுக்கை வசதி உண்டென கண்டெறிய  முடிகிறது.. 12000 மேற்பட்ட உயிர்வளி  படுக்கைகளை போர்கால அடிப்படையில் உருவாகிறது.. படுக்கை எண்ணிக்கையை கூட்டுவது அவ்வளவு எளிதல்ல அதற்காக மருத்துவர் செவிலியர்கள்,மருத்துவ பணியாட்கள், கட்டமைப்பு  என அனைத்தும் இவ்வளவு விரைவில்  இந்தியாவில் வேறெங்கும் இல்லாதவகையில் செயல்படுத்துகிறார் மாண்பிமை தமிழ் நாட்டின் முதல்வர் ..
விமர்சனம் என்ற பெயரில் குப்பையை கொட்டாதீர்கள் .. 
மக்களிடம் நிவாரணம் உதவி கேட்டவுடன் மக்கள் நம்பிக்கையோடு   வாரிவழங்குகிறார்கள் .. இவர் நிச்சயம் நல்லது செய்வார் ஒரு ரூபாய் கூட வீணாகாமல் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையே காரணம் .. பிரதமர் நிதியை போல எங்கே போனதென யாரும் கேட்க முடியாமல் இருக்காது எல்லாம் வெளிப்படையாக இருக்கும் என நம்பிக்கையை  ஏற்படுத்தியிருக்கிறார் .. நம் முதல்வர்..
தமிழ்நாட்டின் முதல்வர் தளபதியாரோடு கைகோர்ப்போம்..
வென்றுகாட்டுவோம்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment