Sunday, May 9, 2021

அமைச்சர் என்பது யாதெனில் மக்கள் விளிக்கு செவிசாய்திடல் வேண்டும்..
ஊட்டிக்கு செல்ல தன் இரு குழந்தைகளுடன்  பேருந்துநிலையத்தில்.. அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை சரியான பதிலில்லை பழைய  ஆட்சியென்று இருந்திருப்பார்கள் அவர்  வலைதளத்தில் அமைச்சரின் கைப்பேசி எண்ணை பார்த்து அழைக்கிறார்  அமைச்சரே பேசுகிறார் நீண்டநேரமாகியும் ஒருபதிலுமில்லை என்றவுடன் அழைப்பு துண்டிக்கபடுகிறது .. உயரதிகாரிகளை அழைத்து பேசுகிறார் இரவு முழுதும் தூங்கமாட்டேன் என்கிறார் அமைச்சர் .. பத்துநிமிடங்களில் அந்த பெண்ணே அமைச்சரை அழைத்து அதிகாரிகள் வந்து  பேசினார்கள் நன்றி  என்கிறார்..
போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள்..
..
அவசரசிகிச்சை தேவை என அமைச்சரை அழைக்கிறார்  பதில்லில்லை மீண்டும் அழைக்கிறார் அமைச்சர் முதல்வரின் அமைச்சரவை  கூட்டத்தில் இருக்கிறாரென தெரிகிறது .. சிறுதுநேரம் கழித்து அமைச்சரே விளிக்கிறார் .. பொறுமையாக கேட்டு முழுவிபரத்தையும் வாட்ச்ஆப்பில் அனுப்புங்கள் என்கிறார்  அனுப்பிவிட்டதாக சொன்னதும் சிலமணிதுளிகளில் அவருக்கு படுக்கை ஓதுக்கபடுகிறது ..
செயலாய் மா.சு..
#104சேவைக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் கிடைக்கும்.!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்..
..
ஓவ்வொரு அமைச்சரும் விரைந்து அதேநேரம் தெளிவாக பயணிக்கிறார்கள் .. பொய்யுரையோ புகழுரையோ தேவையில்லை  உண்மையை நேருக்குநேர் சந்திக்க விரும்புகிறேன் என்ற முதல்வர் கிடைத்திருக்கிறார்.. WAR ROOM கொரோனா கட்டுபாட்டு அறை திறக்கபட்டு அதிகாரிகள் நியமிக்கபடுகிறார்கள் சில தினங்களில் எத்தனை படுக்கைகள்  காலியாக இருக்கிறதென்று மக்களே தெரிந்துக்கொள்ளலாம் ..வெளிப்படையான அரசு இதென்பதற்கு  சான்று ..

அரசு எப்படி செயல்படவேண்டுமெனில்..

தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்..
ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யவேண்டும்..
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.. ஆக்சிஜன் விரயமாவதை ஏற்கமுடியாது.. என அமைச்சர்கள் கூட்டத்தில் பேசி அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும் என்கிறார் 
#தமிழ்நாட்டின்முதல்வர்..
..
சென்னை மாநகராட்சியில் Mask என்ற பெயரில் filter வழங்கிய பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அதிரடி இடமாற்றம் நேர்மையான  இடர்காலங்களில்  சிறப்பாக பணியாற்றிய சுகன்திப் சிங் நியமிக்கபடுகிறார்.. திறமையான அமைச்சர்கள் நேர்மையான  அதிகாரிகள் என சிறப்பாக செயல்படுகிறார்..
அதிமுக ஆட்சியில் மகிழ்ச்சியாக இருப்போம் திமுக ஆட்சியென்றால் கடுமையாக உழைக்கவேண்டும் என  முன்பு  ஒரு உயரதிகாரி சொன்னது  ஞாபகம் வருகிறது..
..
இது திமுக  ஆட்சி அல்ல எல்லா மக்களுக்குமான ஆட்சி நான்  முதல்வரிசை பணியாளன் என மக்களுக்கு   நம்பிக்கை ஊட்டுகிறார் மாண்பிமை முதல்வர்.. நற்றமிழ் நாட்டின் மாபெரும் தலைவராய் தங்கதளபதி..
..
இனி தமிழ்நாடு வழிகாட்டும்..

👌👌♥♥ 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment