Friday, May 21, 2021

நல்லகாலம் பிறந்திடுச்சு..
நல்லவர் கையில் நாடும் மக்களும் நிம்மதியாக.. இதனை இதனால் இவன் முடிக்கும் என மக்கள் அறிந்து அதிகாரத்தை தந்திருக்கிறார்கள்.. ஆட்சியாளின்
தகுதியானது மக்களின் துயரங்களை கண்டு வருந்தி அதை தீர்க்க அரசை விரை‌ந்து செயலாற்ற பணிப்பதும் உடன் இருந்து ஆலோசனை வழங்கி வழிநடத்துவதும்..
முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக கடமையாற்றினார்..
..
குரலற்றவர்களின் குரலை கேட்பது அரசருக்கு அழகு.. மக்கள் விடும் சுவாசம் நிம்மதி தருமெனில் அவர்கள் துயரத்தில் நல்ல தலைவன் நமக்காக இருக்கிறாரென எண்ணம் நம்பிக்கை தருமெனில் கவலை மறந்து மக்கள் வாழ வகைசெய்யும் அரசு இருப்பதாய் உணர்ந்தாலே போதும் நல்லாட்சி என உளமாற மக்கள் சொல்வர்.. அடிமைகள் ஆட்சியை பார்த்து மனமுடைந்து போனவர்கள் மானகெட்டவர்களால் இழந்ததெல்லாம் திரும்ப வரும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.. மாநிலத்தில் மக்கள் மீது நடத்தபட்ட துப்பாக்கி சூட்டையே தொலைக்காட்சியில் தெரிந்துக்கொண்டேன் என மாநில முதல்வரே ஒப்புதல் அளித்த கொடுமை இந்திய துணைக்கண்டத்தில் வேறெங்கும் கண்டிராதது .. யார் ஆட்சி செய்தார்களென ஒற்றை சம்பவம் நமக்கு சொல்லும்.. திறந்தவெளி பல்கலைகழகத்தில் திணிக்கபட்ட மதவெறி கருத்துகள் சிறுபான்மை சமுதாயத்தை திவிரவாதிகளாக்க மெல்ல விசத்தை பரப்பியதை உயர்கல்வி அமைச்சர் கலைந்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பது இந்த மண் சமூகநீதியில் என்றும் பின்வாங்காது மத,சாதிவெறியை கல்வியில் புகுத்துவதை ஒருகாலும் அனுமதிக்காதென்பதற்கு சான்றுகள்..
..
இரண்டே வாரத்தில் 12678 படுக்கைகளை உருவாக்கி வேறெந்த மாநிலத்தில் இல்லாத 
மருத்துவ வசதியை ஏற்படுத்துவதெல்லாம் வேறலெவல்.. தன் சகாக்களோடு தாமும் இணைந்து களப்பணியாற்றுவதெல்லாம் இந்திய ஒன்றியத்தில் வேறெங்கும் காணமுடியாது .. தான் பேசும் மைக்கை திருப்பி துறைசார்ந்த அமைச்சர்களை விளக்கம் தரவைப்பது ஜனநாயத்தின் மற்றொரு கூறு.. சாமானியர்கள் குரலை செவிமடுத்து உடனுக்குடன் தீர்த்து வைப்பதெல்லாம் திமுகவால் மட்டுமே முடியும்.. வாக்களித்தவர்   வாக்களிக்காதவர் என்ற பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் நீதி வழங்குவது நல்குடியரசின் அழகு..
..
கண்ணீர் விடுவதால் மக்களை ஏமாற்ற நினைப்பதற்கு பெயர் கையாளாகாத்தனம் .. பெருந்தொற்று வேகமாய் பரவும் காலத்தில் பொறுப்பேற்கிறார் அனைத்து அரசு துறைகளும் அடிமை அதிமுகவினரால் அலங்கோலபட்டுகிடக்கிறது .. விரைந்து களம் அமைத்து அமைச்சர்களை முடக்கிவிடுகிறார் பல்வேறு மாவட்டங்களில் war room   கட்டுபாட்டு அறை அமைத்து வெளிப்படையாக மக்கள் அறிந்துக்கொள்ள ஏற்பாடு செய்கிறார் ஊரடங்கில் கொண்டகடலை கொடுக்கவில்லை மாறாக ₹4000 இருதவணையாக தந்து ஏழைகளை நிம்மதியடைய செய்கிறார்.. தடுப்பூசியை உலகநாடுகளில் ஒப்பந்தம் செய்து இறக்குமதி செய்ய ஆணைபிறப்பிக்கிறார் .. உயிர்வளி கிடைக்காமல் இறப்பென்று இருக்ககூடாதென பல்வேறு மாநிலம் நாடுகளில் இறக்குமதி செய்து தன்னிறவு அடைய செய்கிறார்.. மாவட்டம் தோறும் படுக்கைகள் உயிர்வளி படுக்கைகள் விரைந்து பயன்பாட்டிற்கு வருகிறது.. செவிலியர்கள் தற்காலிகமாக வேலைக்கமர்த்தபடுகிறார்கள் ..
 நான் ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியைவிட
கொரேனா தொற்றில்லை என செய்தி வரும் போதுதான் நான் மகிழ்ச்சியடைவேன் என முதல்வர் சொல்கிறார் நம் முதல்வர் ஸ்டாலின் ..
தாடி வளர்த்து நீலக்கண்ணீர் வடித்து மக்களை கொன்று குவிக்கவில்லை உலகின் மோசமான செயல்பாடுகளில் முதல் நபராக இந்திய ஒன்றிய பிரதமர் .. 
..
தமிழகத்தின் நன்கொடையாய் தளபதி.. விரைந்து செயல்படுவதை சதிகள் மூலம் தடுத்திட  தமிழகத்தை பதற்றத்தோடு வைத்திட ஆர்எஸ்எஸ் சதி.. 
4000 பேர் தவறுதலாக பதிவு செய்யபட்டதாக சொல்வதை ஏற்கமுடியாது இதன் பின்னில் உள்ள RSS பிரமுகர்கள் எச்சை போன்றவர்களை விசாரணை வளையத்திற்கு கொண்டுவரவேண்டும்..
medall நிறுவனம் கொல்கத்தாவில் எடுத்த கொரோனா டெஸ்டை கள்ளக்குறிச்சியில் எடுத்ததாக RSS பின்புலமுள்ள இயக்குனர்களை கொண்ட நிறுவனம் சூழ்ச்சி செய்ததை கண்டுபிடித்து உரிமையை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு இது குஜராத் உ.பி.இல்லை என்பதை உணரவேண்டும் .. இதன் பின்புலமாய் செயல்பட்டவர்கள் சட்டத்திமுன் தண்டிக்கபடவேண்டும்
அதே போல் பருப்பு கொள்முதல் கொள்ளையை ஒப்பந்தம் ரத்து செய்தால் மட்டும் போதாது ₹1400 கோடி ஊழல் செய்த எடப்பாடி உள்ளிட்டவர்கள் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தபடவேண்டும்..
..
நல்ல தலைவனை தமிழ்நாடு பெற்றிருக்கிறது .. அதேவேளை இந்திய ஒன்றியம் கேடுகெட்டவர்களிடம் .. 60 மாதங்கள் கொடுங்கள் ஏழைகளே இல்லாத  இந்தியாவை வல்லரசாக்கி காட்டுகிறேன் என 2014 ல் சொன்ன மோடி .. ஏழாண்டுகள் கழித்து இன்று மக்களை உயிர்வாழவே போராடுகிற நிலைக்கு தள்ளி போலிக்கண்ணீர் வடிக்கிறார்..
தயவை கூர்ந்து பதவி விலகுங்கள் பிரதமர் அவர்களே.
இந்திய ஒன்றியத்திற்கு ஸ்டாலின் போன்றவர்களே தேவை 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment