Sunday, May 2, 2021

அறம் வென்றது

#அறம்வென்றது 
வெற்றி..
கழகம் வெற்றிபெற்றிருக்கிறது
தனியொருவராய் தமிழகத்தை தளபதி கரை சேர்த்திருக்கிறார் பத்தாண்டுகளில் அதிலும் கடந்த நான்காண்டுகளில் பாசிசத்தின் ஊடுறுவல் வலுபெற்ற நேரத்தில் நச்சு படர தொடங்கி எங்கே முழுவதுமாக  நம்மை அரித்துவிடுமோ என கவலைக்  கொள்ள செய்தது .. மாபெரும் சுமையோடு பகை முடித்து இன்று வெற்றி வீரராய் தளபதி
வாழ்த்துகள்..
.. 
நாம் எதிர்பார்த்ததை விட குறைவென்றாலும் இன்னமும் நாம் கொங்கு மண்டலத்தை உழைக்க வேண்டியிருக்கிறதென்பதை இந்த தேர்தல் உணர்த்தியிருக்கிறது .. நிறைய தெருமுனை கருத்தியல் பரப்புரைகள் ,பகுத்தறிவு சொற்பொழிவுகள், சாதியரீதியாக பிழைகளை சுட்டிகாட்டி பாசிசத்தின் நிழல் படிய தொடங்கியிருக்கிறதென்ற அபாயத்தை உணர்த்தி, சமத்துவமும் சமூகநீதியும் மட்டும் உயர்நோக்கு சிந்தனையை வளர்க்கும் சனாதனமும் பாசிசமும் கெடுதியே தரும் என்று விளக்கும் நீண்ட பணி  நமக்கிருக்கிறது.. கோவையில் அண்ணா  நூலகம் போன்று மிகப்பெரிய நூலகம் அமைத்து திராவிடத்தின் பெருமையை, அதன் அவசியத்தை உணர்த்த வேண்டும் .. மதமோ சாதியோ இறுதியில் பேரழிவை தரும் ..வீரமும்,மானமும் நிறைந்த மண் கொங்கு நிறைய கதைகள் சொல்லும்.. இன்றைக்கு தமிழர் வாழ்வாதாரத்தை வடவருக்கு  அளித்துவிட்டு நிற்பது கவலைக்குரிய விடயம் .. நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது..
..
அதிமுக குறைவான இடங்களில் மட்டும் வென்றிருக்குமேயானால் அதை  பாசிச பாஜக  விழுங்கிவிடும்.. இங்கே திராவிடமும் அதன் நிழலும் மட்டுமே போதும் என புரிந்து  மக்கள் வாக்களித்திருப்பதாக உணர்கிறேன் .. அதை அதிமுகவும் அதன் தலைமையும் உணர்ந்தால் நலம் ..பாஜக இல்லாத சட்டமன்றம் 2026ல் வேண்டும் அதற்காக இப்போதிலிருந்தே திமுக உழைத்திட வேண்டும் பெரியாரிய கருத்தியலே இங்கே வெல்லும் அது சமநீதிக்கானதாக  இருத்தலும் சமூகநீதியை  பின்பற்றுதலுமாக  அமைதல் அவசியம் இழந்ததை  மீட்க நாம் பெரும்பயணம் செய்ய வேண்டியிருக்கிறது  அதிமுகவின் பின்னால் நின்று பாசிசம் செய்த தீங்குகளை சரிசெய்யும் பணி காத்திருக்கிறது..
..
தலைவர் நெருக்கடியான காலகட்டத்தில்  பெரும் சவால்களோடு அறியணை ஏறுகிறார்.. கொரோனா தொற்று நம் வாழ்வாதாரத்தை நசுக்கியிருக்கிறது அதைவிட  கொடுமையாய் பாசிச பாஜக அரசின் கையாளாகாததனத்தால் சிறு தொழில்கள் நலிந்து கிடக்கிறது ,முட்டாள்கள் அடிமைகளின் ஆட்சியால் பொருளாதாரம் கீழே கிடக்கிறது,  அனைத்துதுறைகளையும் அடிமைகள் சீரழித்திருக்கிறார்கள்,  கல்வி வேலைவாய்ப்பில் நம்மவர்கள் புறக்கணிக்கபட்டிருக்கிற  சூழல் 
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்போடு மக்கள்  #இவன்_முடிபபான் என்று பொறுப்பை தந்திருக்கிறார்கள்..
..
ஆரூடத்தை நம்பாதே உழைப்பை நம்பு.. மக்களோடு செல்  மக்களோடு  பழகு மக்களை  புரிந்துக்கொள், வாய்ப்பு தரும் வரை காத்திரு.. நேர்மை  அரசியலை  முன்னெடு .. காலம் உன்னை உயர்த்தும் யாரும் தொடாத உச்சத்தை அடைய பாதை அமைக்கும் .. 
தெளிவான கொள்கையோடு புரிதலோடு கடமையாற்ற வருகிறார் எமது தளபதி..
தமிழகத்தின் தளபதி
..
இனி தளபதிபடையே தமிழகம் ஆளும்
..
அறம் வென்றது

ஆலஞ்சியார்

No comments:

Post a Comment