Wednesday, May 26, 2021

தமிழ் நாடு அரசு தன் செயல்பாடுகளில் ஒளிவுமறைவற்றதன்மையை கடைபிடிக்கிறது இது சிலருக்கு எரிச்சல் தருவதை வலைதளங்களில் பார்க்கமுடிகிறது.. கொரோனா நடவடிக்கைகளில் இத்தனை வேகத்தோடு செயல்பட்ட அரசை இந்திய ஒன்றியத்தில் காண இயலாது.. சட்ட நடவடிக்கைகளை நேர்மையோடு யாருக்கும் அஞ்சியோ இணங்கியோ செயல்படாமல் நேர்மைதிறனோடு செயல்படுவதை கண்டு சிலர் வாயடைத்து நிற்பதும் சிலர் பதைபதைப்பதை காணும் போது இத்தனைநாள் சுகபோகமாக இருந்தவர்கள் லாபி செய்தவர்கள் அதிகாரதிமிரில் ஆட்டம் போட்டவர்கள் உயர்ந்தவனென உல்லாசமடைந்து தற்சுகம் கண்டவர்கள் பதறுவதில் தெரிகிறது கடந்தகால அழிச்சாட்டியங்கள்..
..
கொரோனாவை கடந்த அரசு கையாண்ட விதம் இன்று பெரும்சுமையை தந்தாலும் தொடர்ந்து களப்பணியை முடக்கிவிட்டு அமைச்சர்கள் அதிகாரிகள் தன்னார்வலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து முதல்வரே நேரடி கண்காணிப்பில் துரிதபடுத்தியதால் இன்று உயிர்வளி கையிருப்பு தட்டுபாடற்றநிலையை அடைந்திருக்கிறோம்..

ஒரு வாரமாக தமிழ்நாடு தடுப்பூசி 
நிலவரம் - முதல் தவணை!
May 19 - 29,338
May 20 - 30,553
May 21 - 32,645
May 22 - 41,689
May 23 - 9,954
May 24 - 73,926
May 25 - 1,60,465
நேற்று 26 ந்தேதி 
2,24000 பேர்
என தொடர்ந்தால் மூன்றே மாதத்தில் தமிழகம் கொரோனாவிலிருந்து விடுபடும் ..
.. 
இடையிடையே சேக்கிழார்கள் வந்து எங்களாட்சியில் கட்டுக்குள் வைத்திருந்தோமென கதைகள் சொல்வார்கள் .. அவர்களின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் அலங்கோலத்தை 15 நாட்களில் சரிசெய்வதெல்லாம் எடப்பாடியல்ல மோடிகூட நினைத்து பார்க்கமுடியாதது ..
அடிமை பழநிசாமி ஆட்சியில் தடுப்பூசி இந்திய ஒன்றியத்திலேயே அதிகமாக 13% விழுக்காடு வீணாகியது ஆனால் இப்போது வீணாவது 1% விழுக்காடாக குறைந்திருப்பதெல்லாம் யாராவது எடப்பாடிக்கு சொல்லுங்கள் முதல்வராக இருந்தபோதும் சரி இப்போதும் சரி முட்டாளாகவே இருக்கிறார்..
..
பத்மா சேஷாத்திரி பள்ளியின் பாலியல் லீலைகள் இன்று நன்மதிப்பை கெடுத்துவிட்டதாக பார்பனர்கள் புலம்புகிறார்கள் .. ஆரம்பம் முதலே PSBB பள்ளி நிறைய தவறுகளை தங்களின் பார்ப்பன லாபிகொண்டு மறைத்ததும் ஜெயலலிதா ஆட்சியில் குழந்தையின் நீச்சல்குளம் மரணத்தை ஒன்றுமில்லாது செய்ததும் தொடர்ந்து அடிமைகள் ஆட்சியில் அதிகாரதளத்தில் தங்களின் தப்புகளுக்கு திரைபோட்டதும் இன்று வெளிவர தொடங்கியதும் 
மதுவந்தி திமுக ஆட்சி வந்த போதே தெரியும் இதெல்லாம் நடக்குமென்று என மடைமாற்ற பார்த்து தோற்றுநிற்கிறார்.. 
ஐந்து வருடங்களாக தொடரும் பாலியல் தொல்லைகள் பெண் குழந்தைகளை மட்டுமல்ல ஆண்குழந்தைகளுக்கும் பாலியல் வன் கொடுமை அரங்கேற்றியதெல்லாம் இப்போது
வெளிவருகிறது .. இந்த ஆட்சி நீதி நிலைநாட்டபடும்  என  பாதிக்கபட்டவர்கள்
நம்புகிறார்கள் புகாரளித்தால் ரகசியம் காக்கபடும் மாணவிகள் பெயர் வெளிவராதென அரசின் அறிவிப்பு அவர்களுக்கு தெம்பை தருகிறது..
..
 "அரங்கேற்றம்" இனத்திற்கு இதெல்லாம் பெரிதாக தெரியவில்லை தன் குழந்தைகள் மிஸஸ் ஒய்ஜிபி யின் மாணவர்கள் என்பது பெருமையென தலையில் ஏற்றி வைத்ததிருக்கிறார்கள் .. பார்பனர்களுக்கு மூளைவலிமை என்பதன் பொருள் எந்த தரங்கெட்ட மானங்கெட்ட செயலை நடத்தியெனும் தங்கள் உயர்வாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பது இந்த "திறக்கபடாத கதவுகளில் மடிக்கபடாத விரிப்புகளில்"ஆளுமை செய்கிறவர்களுக்கு கைவந்தகலை.. ஆனால் ஆங்கிலேய காலமில்லை கு.காட்டி பாளையத்தை எழுதிவாங்க.. இப்போது சுயமரியாதைகாரர்கள் 
நேர்மையோடு ஆட்சி செய்பவர்கள் நன்னெறி அரசியலை கையிலெடுத்து அரசு இயந்திரத்தை படையோட்டம் நடத்துகிறவர்கள் இருப்பதால் இவர்கள் குரலில் கலக்கமும் பதைபதைப்பும் தெரிகிறது..
..
கடந்த ஏழாண்டாய் இந்திய ஒன்றியம் கயவர்கள் கையிலும் , கடந்த பத்தாண்டாய் தமிழகம் முட்டாள்அடிமைகள் கையிலும் சிக்கி சீரழிந்ததை மீட்கும் தொடக்கமாய் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் புதிய பாதை வகுத்து செயல்பட துவங்கியிருக்கிறது .. மாநில சுயாட்சி சமநீதி, சாதிசமயமற்ற நேர்மையான ஆட்சி எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் என தெளிவான பயணத்தை தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாய் செயல்பட தொடங்கியிருக்கும் 
நாம் முதல்வரின் கரங்களை பற்றிக்கொள்வோம்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment