Wednesday, May 19, 2021

நல்ல  ஆட்சியாளனை அழிவுகாலத்தில் அறிவாய் என்றார் சேகுவேரா..
..
ஆம் 
பெருந்தொற்று காலத்தில் 
இந்திய ஒன்றிய அரசின் மதவெறியால் இன்று மக்கள் பெருந்துயரை  சந்திக்கிறார்கள் 
தமிழகத்தில் அதிமுக அடிமைகள் தலையாட்டிகளாய் இருந்து மக்கள் பிரச்சனையில் அவர்கள் இடையூறுகளில் கூட கொள்ளையடிக்க முடியுமா என சிந்தித்ததும் முககவசம் கூட வலைத்துணியில் கொடுத்து காசு பார்த்ததும் அறிவோம் .. இரண்டாவது அலையெல்லாம் வராதென துறை அமைச்சரே சொல்லி இன்று மக்கள் அவதியுறுகிறார்கள்..
அதிமுக ஆட்சி தொடர்ந்திருக்குமேயானால்  பிணங்களின் வரிசையை தான் பார்த்திருப்போம் .. 
..
பதவியேற்றவுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் பணியாற்றிட அமைச்சர்களுக்கு உத்தரவிட்டு தானே ஒவ்வொரு அசைவையும் கவனித்து குறையென தெரிந்தால் உடன் நிவர்த்திசெய்து ஒரு படை தளபதியாய் தமிழகத்தின்  முதல்வர் செயல்படுவதை  ஏடுகள் பாராட்டுகின்றன.. முதல்நாள் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நின்றதை கண்டு பதபதைத்தோம் .. மறுநாள் இரண்டே ஆம்புலன்ஸ் மட்டுமே காத்திருக்கும் நிலை.. 12464 படுக்கைகளை தமிழகமெங்கும் உருவாக்க  திட்டம் ஒரே வாரத்தில் 5000 பயன்பாடுக்கு  வருகிறது .. ஒரு புறம் செயல்வீரர் அமைச்சர் செந்தில் பாலாஜி.. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.,தொழில்துறை அமைச்சர் தங்கம் என விரைந்து செயலாற்றுகிறார்கள்  .. சிங்கப்பூரிலிருந்து 5000 சிலிண்டர்கள் வரவழைத்து விரைவாக விநியோகம் செய்ய ஏற்பாடு.. 30T கொள்கலன் நெதர்லாந்திலிருந்து வரவழைக்கபடுகிறது .. விமானம் மூலம் உயிர்வளி (oxygen) கொண்டுவரப்பட்டு விரைந்து தேவையானவர்களுக்கு வழங்கபடுகிறது .. தேவையில்லாதவர்களை கண்டறிந்து உயிர்வளி  சேமிக்கபடுகிறது .. இப்படியொரு அமைச்சரவை இந்தியாவிலேயே காண்பதறிது ..
..
உலகளாவிய ஒப்பந்தபுள்ளி கோரபடுகிறது 3.5 கோடி தடுப்பூசி இலக்கை முடிவுசெய்து படையோட்டம் நடத்துகிறார்.. தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்க தொழில்துறையை பணிக்கிறார்.. நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கபடும் என்கிறார் .. ஒவ்வொரு மாவட்டத்திலும் warroom கட்டுபாட்டு அறை 15 நிமிடங்களுக்குள்  தீர்வு .. என அரசின் செயல்பாடுகளை முடக்கிவிடுகிறார்.. இந்த அரசு மக்களுக்கான அரசு  எதுவும் வெளிப்படையாக  இருக்கும் 17 ந்தேதி வரை 59 கோடி நிவாரணம் கிடைத்திருக்கிறது அது கொரோனா நிவாரண பணிகளுக்கு பயன்படும் என  அறிவிக்கிறார்.. ஆனால் PMCARE   பிரதமர் வசூலித்தது எவ்வளவு என கேட்க கூடாதாம் எவ்வளவு செலவு செய்தார்கள் என்று யாருக்கும் தெரியாது .. பணம் எங்கே  போனதென யாருக்கும் தெரியாது .. இவர் ஊழலை  ஒழிக்க வந்தவராம் நம்புங்கள் உலகிலேயே ஒரு அரசின் தலைவர்  நிவாரண தொகையாய் மக்கள் தந்ததை  சொல்லமாட்டாராம்.. எங்கேயும் கண்டதுண்டா .. கொரோனா நடவடிக்கைகளை வெளிப்படையாக அறிவித்ததுண்டா .. அறிவியல்  துணைக்கொண்டு வெல்ல வேண்டியதை மாட்டுசாணி மூத்திரம் கொண்டு வெல்லலாம் என்கிற அறிவுடைய பிரதமரை நாடு கண்டு அலங்கோலபடுகிறது..
..
50 நாட்கள் தாருங்கள் இல்லையெனில் என்னை எரியுங்கள் என்றார் ஒன்றிய பிரதமர்..  தவறியதால் இன்று பிணங்கள் எரிய வரிசை கட்டிநிற்கிறது ..இந்திய ஒன்றியம் கண்ட மிக மோசமான பிரதமர் இவர்தான் .. படித்தபடிப்பு பொய், சொல்லும் செயலும் பொய், இவரை ஆட்டுவித்தவர்களே காரியம் முடிந்ததென கதைசொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் ..இந்த நாடு இந்த சீரழிவை சந்திக்க காரணமான ஆர்எஸ்எஸ் அமைப்பை,   அரச நிர்வாகத்தில் அதன் ஆதிக்கத்தை ஒழித்தால் ஒழிய இந்திய ஒன்றியம் சொல்லண்ணா  துயரையே காணும்.. தமிழகம் மட்டும் தனியாக  இருந்திருக்குமேயானால் உலகின் 26 வது பொருளாதாரத்தில் நிறைவுபெற்ற நாடாகியிருக்கும் என வல்லுநர்கள் சொல்வதை கேட்டிருப்போம் ..இதோ திராவிட ஆட்சியில் வேகமான நடவடிக்கைகள் யாரையும் எதிர்பார்க்காமல் பெருந்தொற்றை விரட்ட மக்களை காத்திட தன்னிகரற்ற தளபதியாய் நாடும்  மக்களும் நம்பிக்கை பெருமூச்சும் விடும் தலைவனாய் .. இத்தனை காலம் தவறவிட்டுவிட்டோமே  என எண்ணி வருந்துகிற நிலையை உருவாக்கியிருக்கிறார் ..
தளபதி படையின் படையோட்டம்
வருங்காலங்களில் எதிரிகளே இல்லாத நிலையை எத்தும் 
..
வேகமாய் சுறுசுறுப்போடு
ஒய்வில்லாத உழைப்பை தந்து
விளிக்கும் விளிக்கு செவிமடுத்து சரியான விமர்சனங்களுக்கு  மதிப்பளித்து ஜனநாயகதன்மையோடு ஆட்சி செய்கிறார்.. தொலைநோக்கும் 
சமூகநலனும், அனைவரின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து
திறமையான சகாக்களோடு களம்கண்டு சிறந்த ஆட்சியின் துவக்கமாய் தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சி சாட்சியம் வகிக்கிறது
 ❤️❤️❤️❤️
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment