Friday, May 28, 2021

பாலியல் வன்முறை மட்டுமல்ல வருமானவரி ஏய்ப்பு ,நிதிமுறைகேடு ஆசிரியர் சம்பள முறைகேடு என பத்மா சேஷாத்திரி பள்ளியில் தொடர்ந்து வரும் செய்திகளால் ஆடிபோன நிர்வாகம் சு.சுவாமியிடம் முறையிட பார்பனப் புத்தி தமிழக அரசை கலைப்போமென பழைய நினைப்பில் உளறிக் கொட்டுகிறார்.. கர்நாடக எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் தேர்ந்தெடுக்கபட்ட அரசை இந்திய ஒன்றிய அரசு கலைக்க முடியாதென தெளிவாக சொல்லியிருப்பது தெரிந்தும் சேஷாத்திரி பள்ளிக்கு சங்கடத்தை உண்டுபண்ண நினைக்கிறார்..
தன் பேச்சை பாஜகவில் எவரும் கேட்பதில்லை என்பதும் தன் பதவிகாலம் வரும் ஏப்ரலோடு முடியபோவதும் சு.சுவாமியை உளறவைத்திருக்கிறது.. தன் வழக்கால் தான் ஜெயலலிதா சிறைச்சென்றாரென சொல்லி திரியும் சுவாமி, பேராசிரியர் அன்பழகன் வழக்கே தண்டனையை பெற்று தந்ததை அறிவார்..
மத்தியில் பார்பனர்களுக்கான அரசு இருப்பதால் எதையும் சாதித்துவிட முடியுமென மதுவந்தி வகையறாக்கள் பேசி இப்போது நெளிய தொடங்கியிருக்கிறார்கள்..
..
கடந்த பத்தாண்டாய் ஜெயலலிதாவின் இன பாசத்தில் குற்றங்கள் மறைக்கபட்டும் மீறி வெளிவந்ததெல்லாம் மிரட்டபட்டு,நீர்த்து போக செய்து , முடியாத போது நிரிவாகிகளை பணிஇடைநீக்கம் செய்து தப்பித்தவர்கள் இப்போது செய்வதறியாது கைபிசைந்து நிற்பது தெரிகிறது ..வேண்டபட்ட உயரதிகாரிகள் கூட மௌனம் காப்பதால் எங்கே முழுவதுமாக கைவிட்டு போய்விட்டு என அஞ்சுவதை தெரிகிறது.
..
காமகோடி ஜெயேந்திரர் மீது  பாலியல் குற்றசாட்டு சொன்னபோதும் சங்கர்ராமன் கொலைவழக்கிலும் இந்த பார்பன சமூகம்தான் குற்றசாட்டபட்டவருக்கு பின்னால் நின்றது .. பாதிக்கபடுவது தங்கள் சமூக குழந்தைகள் என்ற போதும் அதை குறித்து கவலைபடுவதில்லை.. மிகப்பெரிய அயோக்கத்தனம் சிறுகுழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதெல்லாம் இவர்களுக்கு கவலையில்லை.. முறைகேடுகள் விசாரிக்கபடும் அதில் எந்தவித சமசரமும் இல்லை..
..
மிஸ்டர் சுவாமி எங்களுக்கு நிறைய பணி  காத்திருக்கிறது .. போய் சின்மயி விவகாரத்தில் ஏதாவது செய்யமுடியுமா என பழைய "தொழிலை" செய்யலாம்..
எங்களுக்கு நிறைய வேலையிருக்கிறது.. பத்தாண்டாய் பார்பனீய மேலாதிக்கத்தை சரிசெய்ய வேண்டியிருக்கிறது .. வடவருக்கு தாரைவார்த்த வேலைவாய்ப்புகளை எம் மக்களுக்கு திரும்ப கிடைத்திட வேண்டும் கல்வியில் திணிக்கபட்ட வரலாற்று திரிபுகளை சூழ்ச்சிகளால் சேர்க்கபட்ட வன்மங்களை கலைய வேண்டியிருக்கிறது .. கல்வி எம் குழந்தைகளுக்கு திட்டமிட்டு மறுத்கபட்ட வாய்ப்பை திரும்ப பெறவேண்டியிருக்கிறது அடிமைகளை கொண்டு சீர்குலைத்த நிர்வாகத்தை சரிசெய்தல் பாசிச சிந்தனையுடையோரை அதிகாரித்திலிருந்து அகற்ற சமநீதியோடு கூடிய நேர்மையான ஒளிவுமறைவற்ற ஆட்சியை தரவேண்டியிருக்கிறது .. தவறிழைத்தவர்கள் தண்டிக்கபடுவார்கள் .. யாராக இருந்தாலும் எந்த உச்சியில் நின்றாலும் சட்டம்முன் நிறுத்தபடுவார்கள்..  நெஞ்சில் குற்றஉணர்ச்சியில்லையெனில் பதற தேவையில்லை.. இது 
மக்களுக்கான ஆட்சி 
திராவிட இயக்கத்தின் 
நான்காம் தலைமுறையின் ஆட்சி 
நல்லாட்சி.. நன்மை தரும் ஆட்சி  மக்கள் மகிழ்வர்.. 

..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment