Monday, May 3, 2021

இரு ஊடகவியலாளர்கள்.. சிராஜூல் ஹசன், அதியமான் இருவரும் போகிறபோக்கில் எதையாவது சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள் .. கருத்துசுதந்தரம் என்ற பெயரில் எதைவேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணி உண்மையை திரித்தோ அல்லது மறைத்து புழுதிவாரி இறைக்கிறார்கள் ..
..
சிராஜூல்ஹசன் 
தமிழக சட்டமன்றத்தில் பாஜக  நுழைந்துவிட்டு அவர்களை எதிர்கொள்ள SDPI இல்லாமல் போனதென்று பொதுவாக கருத்தை சொல்கிறார் .. இஸ்லாமியர் மீதான விமர்சனத்தையோ விஷமத்தையோ இங்கே எளிதில் செய்திட முடியாது அப்படி முயற்சித்தால் திமுக விசிக மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் "இந்து" உறுப்பினர்களே பார்த்துக்கொள்வார்கள்.. திமுகவை சேர்ந்த மூன்று பேர்,விசிகவின் ஆளூரார்,காங்கிரஸ் ஹசன், மமகவின் இருவர் இவர்களெல்லாம் பேசமாட்டார்களா/ எதிர்க்கமாட்டார்களா.. ஏதோ SDPI
மட்டும் தான் இஸ்லாமியர்களின் பிரதிநிதி  போல சித்தரிக்க முயல்கிறார் ..  பேராசிரியர் ஜாஹிருல்லா போன்றோர் களப்பணியாளர்களாக வெற்றிக்கண்டவர்கள் தானே.. 
வாணியம்பாடியில் முஸ்லிம்லீக் வெற்றியை தடுத்த உவைசியின் AIMIM கட்சி 1700 வாக்குகளுக்கு மேல் பெற்று சக முஸ்லிம் வேட்பாளரை தோற்கடித்தபோது
ஏன் வாய்திறக்கவில்லை   SDPI தமிழக தேர்தலில் நின்றதால் சாதித்ததென்ன ..?  வாக்கை  பிரிக்க முடிந்தது அது பெருவாரியான வித்தியாச வெற்றியை தடுத்ததை தவிர வேறொன்றும் நடக்கவில்லை ..
SDPI கட்சி தமிழக முஸ்லிம்களின் முகம் அல்ல..
..
அதியமான் ..
யாரோ ஒரு தொழிலதிபர் திமுக  ஆட்சிக்கு  வந்துவிட்டதால் தன் ₹1.75 கோடி சொத்தை ₹1.50 கோடிக்கு விற்க முயல்கிறாராம் இல்லையெனில்  கட்டபஞ்சாயத்து வந்து மேலும் குறையகூடுமாம்.. போகிறபோக்கில் திமுகவை குறைச்சொல்கிறார் .. தவறான கருத்தை விசமத்தனத்தை பரப்ப  முயல்வோரை சட்டரீதியாக அணுகுவது எப்படி தவறாகும் .. கருத்து சுதந்தரம் என்பது  என் மூக்குவரை கைநீட்டுவதே தவிர என் மூக்கை தொடுவதல்ல.. குற்றசாட்டில் உண்மையிருந்தால்   ஏன் பயபடவேண்டும் .. சில நடுநிலைகள் வக்காலத்து  வாங்குவது  வேதனையாக இருக்கிறது .. தொடர்ந்து அவதூறை பரப்பவதை எப்படி நியாயபடுத்த முடியும் திமுகவிற்கு பாகிஸ்தானோடு தொடர்பு என்பான் ஒருவன் அதை அப்படியே உளறுகிறான் என விட்டுவிட்டால் காலபோக்கில் திமுக தேசவிரோதகட்சி என பிரச்சாரம் செய்வார்கள்  .. விமர்சிக்க எல்லா உரிமையும் உண்டு அதற்கு  பதில் தர தயாராகதான் இருக்கிறோம் அதற்காக பொய்யைச்  சொல்லி அவபெயரை உண்டாக்க நினைத்தால் நீதிமன்றம் மூலம் தடுத்துநிறுத்துவது தான் வழி .. சட்டம் தன் கடமையை செய்யட்டுமே.. 
..
ஊடகம் என்பது அறம் சார்ந்து நிற்பது, தவறை  சுட்டிக்காட்டுவதோடு கொட்டி திருத்துவது, மக்களின் கருத்துக்களை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று வழிநடத்துவது .. ஊடகம் இன்று  அற்பர்கள் கையில்.. பணத்திற்காக எதையும் எழுதவும், அரசின் தவறுகளை மறைப்பதும் அநீதிகண்டும் மௌனம் காப்பதும் சாமானியனின் குரலை நெறிப்பதும் தான் நடக்கிறது .. பொய்களை பரப்பி தனிநபர்களை தாக்கி கருத்துசுதந்திரம் என்ற பெயரில் விசமத்தனம் செய்வது  கண்டிக்கதக்கது..
..
அறம் சார்ந்து நிற்போம்
தவறெனில் குரலை உயர்த்துவோம் 
செவிசாய்க்கமறுத்தால் கண்டிப்போம்..
..
ஆலஞ்சியார்


No comments:

Post a Comment