Saturday, June 5, 2021

மத்தியம் ஒன்றியம் இரண்டிற்கும் பெரிய வேறுபாடெல்லாம் இல்லை 
மத்தியம் என்றால் ஒரே இடத்தில் அதிகார குவியல் ..ஒன்றியம் என்றால் அதிகார பரவல் ஒருங்கிணைந்து செயல்படல் இப்போது புரியும் ஏன் பதறுகிறார்கள்.. ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்பதெல்லாம் பன்முகதன்மை கொண்ட தேசத்தில் சாத்தியமில்லை என்பதை  அறிவார்கள் ஆனாலும் மாநில அதிகார வரம்பை சுருக்குவது அவர்களின் நோக்கம்
அதன் ஒருவடிவம் தான் ஒரே கார்டு ஒரே ரேஷன் .. 
..
ஒன்றியம் பற்றிய கேள்விக்கு எடப்பாடியின் பதில் சிரிப்பை தரவில்லை அவரிடம் போய் கேள்வி கேட்டவர்களின் "திறமையை" கண்டு சிரிப்பு வந்தது .. சேக்கிழார் எழுதிய ராமாயணம் என்ற போதே தெரிந்திருக்கவேண்டும் இவர் அறிவு சூன்யம் என்று ..பிறகெப்படி முதல்வராக இருந்தார் என்ற கேள்விக்கான விடை அவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார் ஆனால் அனைத்தும் அவரை கொண்டு நடத்திகொண்டார்கள் பாஜகவினர் குறிப்பாக பார்பனர்கள்..
..
ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டுமென்பதை கலைஞரின் ஆட்சியை பார்த்து கற்றுக்கொள் என  ராஜசேகர் ரெட்டி சொன்னாரென ஆந்திர முதல்வர் ஜெகன் சொன்னார் .. ஆம் கலைஞர் சாமானியர்களுக்காக சிந்தித்தவர் அவர் வழி வந்த தளபதி.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக வந்த பிறகு ஒரு மாதத்திற்குள் தன் சகாக்களோடு நடத்தி காட்டிய அரசு இயக்கம் வரலாற்று ஆவணம் .. படை நடத்தும் தளபதி முன் நின்று இயக்குவதை போல யாரை எந்த பதவிக்கு எப்படி பயன்படுத்த வேண்டுமென சரியாக முடிவெடுத்து செயல்படுகிறார்.. 
ஒவ்வொரு நியமனமும் எதிரிகளும் வாயடைத்து நிற்கிறார்கள் ..
ஒவ்வொரு முடிவும் ஜனநாயக மரபுகளோடு ஆலோசித்து எடுக்கபடுகிறது +2 மாணவர்களுக்கு தேர்வில்லை என்பதை சில வேறு பார்வையில் சிலர் பார்த்த போதும் 18 வயதை நிரம்பாத இளம்பிள்ளைகளுக்கு தடுப்பூசி சாத்தியமில்லை அவர்களின் உயிர் முக்கியமென எண்ணி அதேவேளை அவர்கள் பாதிக்க கூடாதென்பதற்காக கல்வியாளர்களை கொண்டு மதிப்பெண் வழங்க பரிந்துரை தேடி நீட் தேர்வை நடத்த கூடாதென்பதற்கு செக் வைத்திருக்கிறார் .. ஒவ்வொரு அசைவும் சமூகநீதி மக்கள் நலன் நேர்மையோடு கூடிய செயலாய் இருத்தல் வேண்டுமென பயணிக்கிறார்..
..
பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சரியான நபர்களை நிதியமைச்சர் திட்டக்குழுத் துணைத்தலைவர்(வளர்ச்சி குழு) தேர்வு செய்து இந்தியாவிற்கே வகுப்பெடுக்கிறார் .. ஆனால் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்
பெண்குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்காளான வழக்கு குறித்து PSBB பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் கைது குறித்து 
சினிமாவிற்கு அழைத்து போனேன் சக ஆசிரியர்களுக்கு வாட்ச்ஆப்பில் படங்களை பகிர்ந்தேன் மிரட்டி கருகலைப்பு செய்தேன் என வாக்கு மூலம்  தந்த அயோக்கியனை பற்றி அந்த நிர்வாகத்தை பற்றி பத்திரிக்கை நிருபர் கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் நழுவுகிறார் .. வளர்மதி இதெல்லாம் கேள்வியா என்கிறார் இனியும் பாஜகவிற்கு குண்டி கழுவி நிற்கும் இந்த கொடியவர்களை என்னவென்பது.. 
..
நல்வாய்ப்பாய் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நமக்கு முதலமைச்சராய் வந்தார் இனி நல்லதே நடக்கும் .. ஒவ்வொரு செயலும் தமிழர்களின் நலன் சார்ந்தும் தமிழ்நாட்டின் பலன் சார்ந்தும் இருக்கும் .. முத்துவேல் படை தமிழ்நாட்டை உயர்த்தி காட்டும் .. இந்திய ஒன்றியமே வியந்து பார்க்கும் ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment