மோடி அரசின் ஊழலும் இந்திய ஒன்றிய அரசு செய்த அயோக்கியத்தனமும் வெளிவரபோகிறது ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அதை சிறப்பாக செய்கிறார்..
தடுப்பூசிக்கு வெவ்வேறு விலை நிர்ணயம் செய்து விற்பனையில் கொள்ளைலாபம் பார்த்த சீரம் அதற்கு துணைப்போன கார்ப்பரேட் அரசு
மாநிலங்களுக்கு₹400 விலை என்றதும் தனியாருக்கு விலையை மூன்று மடங்கு உயர்த்தி நெருக்கடியான காலகட்டத்தில் லாபநோக்கோடு செயல்பட அனுமதித்தது ..
ஆனால்
திமுக அரசு பதவியேற்றவுடன் உலகளாவிய ஒப்பந்தம்கோரி விரைந்து இறக்குமதி செய்ய முடிவெடுத்ததும் பிற மாநிலங்கள் இப்படியொரு வழியிருக்கிறதா என வியக்கின்றன .. உலகில் பைஸர் ஆக்ஸ்போர்ட் என பல நிறுவனங்கள் குறைந்தவிலையில் தான் விற்கின்றன நேரடியாக கொள்முதல் செய்யும் போது அதன் விலைவிகிதம் குறையும்
தடுப்பூசியில் மத்திய ஒன்றிய அரசு முதலுடைமைகளுக்கு சாதமகமான போக்கை கொண்டிருந்ததும் பெரும் கொள்ளை நடப்பதும் தமிழ்நாடு அரசின் இறக்குமதி கொள்கையால் வெளிவரும்..
..
அவசரகாலமாக கருதி அமைச்சர் பெருமக்கள் உழைக்கிறார்கள் நெதர்லாந்திலிருந்து உயிர்வளி
( oxyzen) கொள்கலன் 30T இறக்குமதி செய்து விரைந்து பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்கிறார்கள் சிங்கப்பூரிலிரிந்து முதல்கட்டமாக 462 காலி சிலிண்டர் வரவழைத்து பகிர்தளிப்பதை விரைந்து செய்கிறார்கள் மூடபட்டிருக்கும் ஆலைகளை திறந்து விடுமுறையில் சென்றிருக்கும் நிபுணர்கள் வரவழைக்கபட்டு உயிர்வளி உற்பத்தி அதிகரிக்கபடுகிறது
இரண்டேநாளில் தட்டுபாடு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளிக்கிறார்.. பதவியேற்ற பத்துநாளில் இதெல்லாம் நடக்கிறது .. நேற்று 100 ஆம்புலன்ஸ்கள் படுக்கைக்காக காத்திருந்த நிலை ஆனால் இன்றோ இரண்டு ஆம்புலன்ஸ் மட்டுமே நிற்கிறது தமிழகமெங்கும் 12463 படுக்கைகள் தயாராகிறது .. நோயின் வேகம் அதிகரித்திருக்கும் நிலையில் வேகமாக அரசு நிர்வாகம் செயல்படுகிறது war room கட்டுபாட்டு அறைக்கு முதல்வரே வந்து கண்காணிக்கிறார் மக்களுக்கு நம்பிக்கை தருகிறார்.. இதெல்லாம் பார்க்கிற போது பிறமாநிலங்கள் வியந்து பார்க்கிறது .. இந்திய அரசு கைகட்டி கள்ளமௌனம் காத்துநிற்கும் வேலையில் பல்வேறு ஏற்பாடுகளில் வெளிநாடு உள்நாட்டிலிருந்து
தேவைக்கேற்ப வரவழைத்து மக்கள் உயிர்காக்கும் அரசாயாய் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் தலைமையிலான மக்களுக்கான அரசு செயல்படுகிறது..
..
வெளிப்படையான சிறந்த நிர்வாகத்தை நேர்மையான அதிகாரிகளை கொண்டு திறம்பட ஆட்சி செய்கிறார்.. பத்துநாட்களிலேயே நிலைமையை சீர்செய்ய முடியுமெனில் 7 ஆண்டுகளாய் களிமண் மூளைக்காரர்கள் இந்திய திருநாட்டை குட்டிசுவராக்கி நிறுத்தியிருக்கிறார்கள்..
அறிவியலை துணைக்கழைக்காமல் கைதட்டவும், விளக்குபிடிக்கவும் சொல்லி மடைத்தனமான ஆட்சி செய்ததன் விளைவு உலகில் முதல் நிலையை நோக்கி தள்ளபட்டியிருக்கிறது .. கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என எச்சரித்தும் கும்பமேளாவை தடுத்து நிறுத்த சாமியார்களிடம் கெஞ்சுகிற பிரதமர் .. பிரதமர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என சாமியார்கள் .. விதைத்தது தானே வளரும், மதத்தை கையிலெடுத்து மகுடம் சூடியவர்கள் இன்று மதமே வெறியாட்டம் ஆடுவதை தடுத்திட முடியாமல் திணறுகிறார்கள் .. உயிர்வளி oxygen உதவியோடு உயிருக்கு போராடியவனை அனுமான் புகழ்பாடச் சொல்லி கொன்றே விட்டார்கள் .. தமிழகத்தில் ஆவிபிடிக்க சொல்லி அறிவிலிக்கூட்டம் முயற்சிக்கிறது ..பலபேர் ஆவி பிடித்தால் கொரோனா பரவல்தான் வரும் தமிம்நாடு முதல்வர் உடனடியாக அதை தடுத்திட வேண்டும்..
..
மக்களாட்சி ஜனநாயக மாண்புகளை காத்து மக்களுக்கு இடர் வருகிறபோது இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம் .. எதிர்கட்சி தலைவர் என்ன மருத்துவரா என கேள்வி கேட்காமல் அனைத்து கட்சியினர் அடங்கிய ஆலோசனைக் குழு அமைத்து செயல்படுகிறது தமிழ்நாடு அரசு.. மத்திய ஒன்றிய அரசின் பிரதமரை காணோம் என அச்சிட்டு தலைநகரில் ஒட்டபடுகிற அவலம் ..உள்துறை அமைச்சரை வெளியில் காணோம் .. சாணி பூசிக்கொள்ளவும் மூத்திரம் குடிக்கவும் மக்களிடம் சொல்லிவிட்டு தனக்கு வரும் போது எய்ம்ஸ் மருத்துவமனையில் தஞ்சமடையும் பேர்வழிகள் ..
நஸ்ரூதின் ஷாவின் வரிகள்
நகரம் எரிகிறது என கேட்பதைவிட பைத்தியக்காரன் கையில் தீக்குச்சியை தந்தது யார்..
ஆம் பைத்தியக்காரர்கள் கையில் நாட்டை கொடுத்துவிட்டு முழிக்கிறோம்..
..
நாட்டிற்கு தேவை மோடிகள் அல்ல..
ஸ்டாலின்கள்..
ஆம்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment