நல்லவர்கள் கையில் நாடு வந்தால் நன்மையே விளையும் என்பதற்கு மற்றுமொரு சான்று #முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின் அவர்களின் அரசுநிர்வாகம்..
முட்டாள்கள் கையில் நாடு கிடைத்தால் என்னாகும் என்பதற்கு உ.பி.யும் மற்றும் மாயாஜால வித்தைகாரர் மோடியும் நல்ல உதாரணம்..
..
கங்கை நதிக்கரையில் பிணங்கள்.. எரிக்ககூட முடியாத நிலையில் வீசியெறிந்துவிட்டு செல்வதாக சில ஊடகங்கள் மௌனம் கலைத்து மெல்ல பேசுகிறது.. கண்ணாடியை கழட்டிவிட்டு பாரும் என ராகுல்காந்தி சொல்கிறார்.. தயவு செய்து பதவி விலகுங்கள் என அருந்ததிராய் போன்றோர் மோடிக்கு நேரே குரல் உயர்த்துகிறார்கள் .. நிர்வாகமே தெரியவில்லையென இந்திய ஒன்றிய நிதியமைச்சரின் கணவரே சொல்கிறார்.. உலக நாடுகள் மோடியின் கையாலாகாததனத்தை சொல்லி இந்தியாவின் முகம் ஏன் இப்படி மாறியதென கேட்கிறது .. இப்போதும் இந்தியாவை காப்பாற்றுவது நேருவும்,இந்திராவும் கட்டியமைத்துதான் என காங்கிரஸோடு நெடும்பகை கொண்ட மும்பை முதல்வர் உத்தவ் தாக்ரே உண்மையை பேசுகிறார்..
பேரிடர் காலத்திலும் பொய்பேசி திரியும் மதவெறி மூடர்களை நாடு கண்டுவேதனைக்கொள்கிறது.
..
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..
பதவியேற்றதிலிருந்து அவர் காட்டும் வேகம்,சொல் செயல் இரண்டிலும் தூய்மையாக,
நிதானமாக அதே நேரத்தில் உறுதியாக , தன் அமைச்சர் பெருமக்களோடு கலந்து செயலாற்றும் விதம் ஊரே மெச்சுகிறது.. ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் அவகாசம் தந்து ஊரடங்கில் உணவுபொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் வியாபாரம் செய்யலாம் என்று அறிவித்து புலால் உண்போரையும் கணக்கில் கொண்டு, விரைந்து மருத்துவசேவையை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து இந்தியாவே திரும்பி பார்க்கவைக்கிறார்.. ஐந்தே நாளில் 12500 படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்து, மருத்துவமனை உட்புற நோயாளிக்கு மூன்றுவேளை உணவு, தடுப்பூசி 5 இடங்களில் கிடைக்க ஏற்பாடு .. கர்ப்பணி பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா பணியிலிருந்து விடுவித்து .. ஊடரங்கில் மக்கள் அவதிபட கூடாதென முதல் தவணையாக ₹2000 அளித்து.. எப்படி ஒரு முதல்வர் செயல்பட வேண்டுமென பாடமெடுக்கிறார்..
..
தன் பள்ளிகட்டிதத்தை கட்டிதர 7 வயது சிறுமி கடிதம் எழுதுகிறார் உடன் நடவடிக்கை,அமைச்சர்கள் தொலைப்பேசியில் அழைத்து வாட்ஸ்ஆப் பில் தேவையை சொன்னால் உடன் தீர்வு, அமைச்சர்கள் காவல்துறையோடு மோதல்/ மிரட்டல் கூடாது எதுவாகியினும் என்னிடமே சொல்லவேண்டும், என முதல்வர் கண்டித்து உத்தரவிடுகிறார்.. இதெல்லாம் கடந்த பத்தாண்டாய் கண்டிராதது குற்றவாளி, குற்றவாளி கைக்காட்டியவர் முதல்வர் என்றால் வேறெப்படி நிர்வாகம் இருக்கும்.. தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகள் கொரோனா தடுப்பிற்காக உபகரணங்கள் நிவாரணங்கள் அளிக்கிறார்கள் இதற்கு முன் இருந்த அரசை இவர்கள் நம்பவில்லை கொடுத்தால் சுருட்டிகொண்டு ஓடிவிடுவார்கள் பொருளாக கொடுத்தால் கள்ளசந்தைக்கு வந்துவிடும் என அறிவார்கள் அதனால் தான் காத்திருந்து நல்லவர் நேர்மையானவர் நிர்வாக திறன் கொண்டவர் ஆட்சிக்கு வந்தவுடன் கொடைகளை தருகிறார்கள்..
..
புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் சாத்தியமில்லை ஒரே நாடு ஒரே ரேசன் தமிழகத்தில் இல்லை ஜீயரை கூட தேர்வு செய்யவேண்டும், ஒவ்வொரு அடியும் மிக தெளிவாக எடுத்துவைக்கிறார் தமிழக முதல்வர்..
ஆனால்
இந்திய பிரதமர் திடீரென பணமதிப்பிழப்பென்பார் ஊடரங்கென்பார், மான்கிபாத் என பொய்சொல்ல தற்பெருமைபேசுவார்.. பத்திரிக்கையாளர்களை கண்டால் காததூரம் ஓடுவார் ..
தெளிவின்மை நேர்மையில்லை, தகுதியில்லை கூட இருப்போருக்கு துறைசார்ந்த அனுபவமோ வல்லமையோ இல்லை நூல் இருக்கிறது ஆர்எஸ்எஸ் நிழல்விழுகிறதா, மாட்டை புனிதமென பீற்றதெரிகிறதா, பிறமதத்தை வெறிக்கொண்டு கருத்துரைக்க முடிகிறதா, மதத்திற்காக மனிதனை கொல்ல தெரியுமா போதும் அமைச்சராகலாம் அதிகார பதவி பெறலாம் நாடும் நாட்டுமக்களும் எக்கேடு கெட்டால் என்ன..? ஒரே தேசம் ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என உதவாததை கையிலெடுத்து மூடர்கள் திரிகிறாக்கள் ..
பன்முகதன்மையும் எதிரியையும் மதிக்கும் பண்பையும் இவர்கள் பெறவே மாட்டார்கள்..
ஆனால் திராவிட சித்தாந்தத்தை உள்வாங்கியவர்கள் எதிர்கருத்துடையோரையும் மதிப்பார்கள் அதற்கொரு எடுத்துகாட்டு அம்மா உணவகம் செயல்படும் ..
..
"வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்"..
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.. என்றான் எம் பாட்டன் வள்ளுவன்..
..
திமுக அரசு தரும் நல்லாட்சி குடிமக்களுக்கானது
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment