Friday, March 12, 2021

திமுக கதாநாயகர்கள்

திமுக வேட்பாளர் பட்டியல்..
எப்போதுமே திமுகவின் தேர்தல் அறிக்கை "கதாநாயகன் " என்பார்கள் இந்தமுறை வேட்பாளர் பட்டியலே கதாநாயகனாக இருக்கிறது .. மிக தெளிவான யாரை எங்கே நிறுத்துவது என சரியான தேர்வாய் வந்திருக்கிறது ..எங்கள் தொகுதியை கூட்டணிக்கு கொடுத்துவிட்டார்களே என்று வருத்தத்தில் இருந்தவர்கள் கூட வேட்பாளர் பட்டியல் வந்தவுடன் புத்துணர்ச்சியோடு வலம் வருகிறார்கள் ..
இத்தனை நாள் பட்டதுயர் துடைக்க வரும் படைவீரர்கள் 
தனியொருவராய் தளபதி நாட்டின் நலிவு நீங்கிட உழைக்கிறார்.. திராவிடத்தின் இறுதியை எழுதிவிடுமோன்றவர்களை செவிட்டில் அறைந்து எழுச்சியோடு தூக்கி நிறுத்தி திமுக இன்னும் நூற்றாண்டிற்கு தமிழகத்திற்கு தேவை என கடும் உழைப்பை தருகிறார்.. அவரின் படைவீரர்கள் யார் என்பதை எல்லாம் பார்க்காமல் உழைப்போம்
ஒவ்வொருவரும் தளபதியின் வீரர்கள் ..அவர் கைகாட்டும் திசையில் படையோட்டம் நடத்துவார்கள் .. வெற்றியை தளபதியின் தருவார்கள் ..
..
கலைஞரே நிற்கிறார்.. தளபதியே களம்காண்கிறார் என்ற ஒற்றை சிந்தனையோடு நாம் பணிசெய்வோம் .. 
நல்லதொரு தேர்வாய், அனைத்துதரப்பினரும் ஏற்கும் களப்பணியாளர்களாய் நம் வேட்பாளர்கள் .. குறிப்பாக அமைச்சர்களை எதிர்த்து நிறுத்தியவர்கள் "வாள்வீச்சில் கெட்டிகாரர்கள்" எதிரிகள் தலைபோகும்.. இப்போதே கண்ணில் பீதியோடு நிற்கிறார்கள் நம் எதிரிகள் ..  ஆடிய ஆட்டமெல்லாம் அடங்கும் நேரம் வந்துவிட்டதென அறிவார்கள் ..பாசிசத்தின் கரம்பற்றி தமிழகத்தை வஞ்சித்த கூட்டத்தை சாய்க்க செம்மார்ந்த வீரர்கள் .. கூட்டணிகட்சிகளின் வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்து தலைவர் சொன்னதைப்போல 234 தொகுதியிலும் வெற்றியை பறித்து தலைவர் கரங்களில் தருவோம் .. கலைஞரின் போர்படைவீரர்கள் தளபதியின் தலைமையில் வெல்லபோகும் வெற்றியை சரித்திரம் குறித்து கொள்ளும் .. வெல்ல எவனுமில்லை என புகழ்பாடும்..
..
தலைவர் கலைஞருக்கு பிறகு நாம் காணும் தேர்தல்.. அவர் இல்லாத குறையின்றி உறையிலிருந்து புறபட்ட வாளைப்போல தளபதி சுழன்றடிக்கிறார்.. பகைவர்கள் யார் .. இனத்தின் பகைவர்கள் பல வேசம் கட்டி வருகிறார்கள் சூழ்ச்சிகளால் நம் வெற்றியை தடுத்திட முடியுமா என பேராசை கொண்டு பல்லிளித்து நிற்கிறார்கள்.. பாசம்காட்டி மோசம் செய்திட முடியுமா என பார்க்கிறார்கள் .. நல்லவன் வேடம் கட்டி "அரிதாரமோகத்தால்" கவர்ந்திட முடியுமா என நினைக்கிறார்கள்.. பொய்யும் புளுகும் சுமந்து புராணம் பேசும் கூட்டமும் விபூதியடிக்க பார்க்கிறது .. ஆமைகதைகளை சொல்லி தேர்தல் குளத்தில் அள்ளியேனும் குடிக்க முடியுமா என பார்க்கிறார்கள் .. கயமைத்தனம் துரோகம் அடிமைசாசனம் என கடைசிவரை சுரண்டிவிட்டு பொய்யாய் வாக்குறுதியை தந்து மீண்டும் வரமுடியுமா என கனவோடு நிற்கிறார்கள்.. ஆனால் தளபதிபடை வீறுகொண்டு வரலாறு படைக்க வருகிறது ..
காஞ்சிதலைவனின் அருகில் துயில் கொள்ளும் பாசத்தலைவனிடம் வெற்றி ஓலையை வைத்திட 
புறப்பட்ட புறநானூற்றுப் படை.. இது ..
 வெல்லும் சரித்திரம் இனி சொல்லும்
இதுபோல் வெற்றி இனியில்லையென 
உழைப்பு..உயர்வு ..நேர்மை ..இதுதான்  தளபதி..

“செருமுக நோக்கிச் செல்கென விடுமே!”
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment