சொந்த புத்தி எப்போதிருந்தது..
ஜெயலலிதாவிற்கே இருந்ததில்லை .. இரண்டு ரூபாய்க்கு அரிசி என்று கலைஞர் சொன்னபோது முடியுமா என்றார் ..கலைஞர் அதை ஒருரூபாய் ஆக்கியபோது வாய்பிளந்து நின்று பிறகு இலவசம் என்றார்.. வண்ண தொலைக்காட்சி தருவதாக சொன்னபோதும் எள்ளிநகையாடியவர்கள் பிறகு மிக்சி கிரைண்டர் என தேர்தல் அறிக்கை தந்ததுநடந்தது ..
இப்போது பொருளாதார வல்லநர்கள் கலந்து முடியும் என அறிந்து குடும்பதலைவிக்கு உரிமை தொகை ₹1000 அறிவித்ததும் எங்கள் திட்டம் கசிந்ததென உளறுகிறார் பாஜகவின் அடிமை பழனிசாமி..
..
திமுகவின் அறிவிப்புகள் சிலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு தூக்கம் போனது தான் மிச்சம்.. முடியாதென்பதை செய்துகாட்டி வரலாறு படைப்பது திமுகவிற்கே சொந்தம் .. அறிவின் நிழலில் கொள்கை பேசுபவர்கள் எதையும் மக்களுக்காக சமூகநீதியை நிலைநாட்டி தொண்டாற்றும் இயக்கம் .. விவரகேடுகள் சிலர் வயிறெரிகிறார்கள் .. துக்ளக்
அறிவுஜீவிகூட்டம் பதறுகிறது.. தாங்கள் நினைத்தது நடக்காதென்பதை விட கையிருப்பும் போகும் எழமுடியாத நிலையாகும் என அச்சபடுவது அவர்கள் நடவடிக்கையில் தெரிகிறது .. மனித கழிவை மனிதனே அகற்றும் முறை முற்றிலுமாக மாற்றபடும் என்றவுடன் ஏன் இதுவரை செய்யவில்லையென சில அறிவாளிகள் கேட்கிறார்கள் .. தளபதி உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்தபோது முன்னோட்டமாக செயல்படுத்தினார் தொடர்ந்து வந்தவர்கள் அதை செய்யவில்லை .. மனிதகழிவை மனிதனே அள்ளும் முறையை மாற்றபடும் என்ற ஒற்றை அறிவிப்பிற்காகவே மானிட சமூகம் வணங்கி மகிழவேண்டும் ..
கைரிக்சா அவலத்தை ஒழித்த கலைஞரை இந்தியாவே இப்போதும் திரும்பி பார்க்கிறதே அதே போல மனித கழிவை மனிதனே அள்ளும் கொடுமையை நீக்கும் தளபதியை வரலாறு போற்றும்..
..
இந்த முறை அதிமுக அணியில் மனிதகுல விரோதிகள் ஒன்றுகூடி நிற்கிறார்கள் .. சாதிவெறியர்கள் மதத்தை கையிலெடுத்து மக்களை கலவரத்தோடு நிறுத்துகிறவர்கள் பொய்யர்கள் துரோகத்தனத்தை கொஞ்சம் கூட கூச்சமின்றி செய்பவர்கள் .. நம்பிக்கை துரோகிகள், நாட்டை கெடுத்தவர்கள் நயவஞ்சகர்கள் இனத்தின் கலாச்சாரத்தை காவுகொடுத்தவர்கள், பதவிக்காக தமிழகத்தையே விற்க துணிந்து, தமிழர்களை வஞ்சிக்கும் அடிமைகள் ...என ஒன்றுகூடி நிற்கிறார்கள்.. நமக்கு சிரமமில்லாமல் அவர்களை ஒரே இடத்தில் நிற்கிறார்கள் அவர்களுக்கு தகுந்தபாடம் தருவோம் .. தமிழக உரிமைகளை தமிழ் குழந்தைகளின் கல்வி வேலைவாய்ப்பென அவர்கள் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாய் இருக்கும் இந்த கயவர்களை இனியும் அனுமதித்தால் உள்ளதும் போகும் என விழிப்புணர்வோடு தோற்கடிப்போம்..
..
நல்ல தலைவர் கிடைத்திருக்கிறார்.. அறம் பேசும் தலைமை.. நேர்மையோடு அரசியல் செய்கிறார் .. எதிலும் தொலைநோக்கு பார்வை .. இளகிமனம் இல்லாதோருக்காக உதவும் குணம், தெளிவான பார்வை, ஓயாத உழைப்பு, உடனிருப்போரின் நம்பிக்கை, இயக்கத்தின் எதிர்காலம், தமிழகத்தின் எதிர்ப்பார்ப்பு தமிழகத்தின் விடியலுக்கான குரல்,
திமுகவின் வெற்றி ஓன்றே நிம்மதி தரும்..
..
நம்பிக்கையோடு காத்திருக்கிறது தமிழகமும் தமிழர்களும் ..
..
No comments:
Post a Comment