பாஜக மிக நேர்த்தியாக வாக்குகளை பிரிக்க முயற்சிக்கிறது.. மதரீதியாக முஸ்லிம் வாக்குகளை பிரிக்க SDPI நம்புகிறது ..அதே போல கிருஸ்துவர்களின் வாக்குகளை பிரிக்க சகாயம் முயல்வார்.. சாதிய கூட்டணிகள்(ராமதாஸ் கிருஷ்ணசாமி) வாக்கை பிரிக்கலாம் .. அதிமுகவின் வாக்குவங்கி சிதலமடைய செய்து வலுவிழந்த நிலையில் நிறுத்தினால் அந்த இடம் தமக்கு கிடைக்கலாமென நம்பி பல்வேறு முன்னெடுப்புகள்.. கமல் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற பிம்பத்தை கொண்டுவர பணிக்கபட்டிருக்கிறார்..
ஒன்று தெளிவாக தெரிகிறது அதிமுக கரைய தொடங்கியிருக்கிறது..
வலுவற்ற தலைமை அடிமைத்தனம் அடித்த கொள்ளையால் பிடிப்பட்டு வழக்கு சிறையென காலம்கழியுமோ என அஞ்சி எதைச் சொன்னாலும் செய்யும் கூட்டம் .. இந்த தேர்தல் விசித்திரங்கள் நிறைந்தது..
..
இஸ்லாமியர்கள் தெளிவற்ற பார்வை .. யாராண்டால் என்ன.. நாம் தொடர்ந்து பேசுபொருளாக வேண்டும், போராட்டம் அதைவைத்து தம்மை முன்னிலைபடுத்தி "சமுதாயகாவலன்" என்று ஊர்பேசவேண்டும் அவ்வளவுதான் தீர்வைநோக்கிய பயணம் தேவையில்லாதது அப்புறம் சோத்துக்கு என்ன செய்வது .. கொள்ளையடித்து சிறைச்சென்றவர் "தியாகி" என புகழ ஒருவேளை "அர்சில்" எழுதபட்டிருக்கலாம் .. கேவலமான நிலைபாட்டை எடுக்க சமுதாய மக்கள் மீது தனிபாசம் வேண்டும் எதைச் சொன்னாலும் கேட்பார்கள் என்ற தைரியம் வேண்டும்....
..
சாதிய வாக்குவங்கியை நம்பி
இனி தமிழகத்தில் காலம் தள்ளமுடியாது .. சொந்த சமூகத்தை இந்தளவு விலைபேசியவர்கள் யாருமிருக்க முடியாது.. தமிழகத்தில் சமூகநீதி பேசினால் தான் காலூன்ற முடியுமென அறிந்து போராளி வேசம்கட்டி அது வேலைக்காகாது என அறிந்து குடிசை எரித்தும், கௌரவ கொலைகளை தூண்டியும் சாதி எரியூட்டி குளிர்காய்ந்தவர்கள் கொழுத்து வளர்ந்தபின் தன் நலன் மட்டுமே பார்த்து அரசியல் செய்தது கடைசியில் கேவலபட்டுநிற்கிறது.. தன் உயர்ஜாதிகாரனாய் அடையாளபடுத்த எண்ணி கடைசியில் வேண்டாத பொருளைபோல குப்பைதொட்டில் கிடக்கும் அவலம்..
..
நேர்மையானவரென நம்பவைத்து அதிமுக ஆட்சியின் ஊழலை கொள்ளையை கேள்வி கேட்காமல் தன் மதத்தவர் அதிகமிருக்கும் தொகுதிகளை கண்டு ஆட்களை நிறுத்தும் யோக்கியர்.. பாஜகவை சகாயம் செய்ய,திமுகவின் வெற்றியை தடுக்க பாசிச பாஜக களமிறக்கிய "புதிய வார்ப்பு " அரிதாரம் கைகொடுக்காத நேரத்தில் யோக்கியன் வருகிறேன் நாட்டை சுத்தபடுத்த என வாங்குகிற சம்பளத்தை கருப்பில் பாதி வாங்கும் "உத்தமன் " இவர்களோடு ₹1000 மாத வருமானத்தில் 200 கடாவெட்டி விருந்து போட்டு பிரபாகரனுக்கே "மொட்டை" போடும் எளிய பிள்ளைகள்..
..
இவையெல்லாம் திமுகவிற்கு செல்லும் வாக்கை பிரிக்க முடியுமா என்ற நப்பாசையில் உருவானவைகள் ..
வெற்று விளம்பரங்களால்
வெற்றி வருமென நம்பும் மூடர்கள் .. உண்மையில் வேடிக்கையாய் ..
..
தோல்வி என்று தெரிந்தும் சிலர் வீம்பு பேசுகிறார்கள் .. 10 ஆண்டுகள் பாழாய் போனதால் தமிழகம் இழந்தவைகளை பட்டியலிட்டால் தலைசுற்றும் .. ஓபிஎஸ் செய்த அயோக்கியத்தனம் தமிழர்களின் வேலைவாய்ப்பை பறித்ததென்றால்.. பாண்டிராஜன் நம் குழந்தைகளின் கல்விகனவை சிதைத்து ஆர்எஸ்எஸ் கனவை செயல்படுத்திய மகாபாவி.. இவர்களின் தோல்வி சரித்திரநிகழ்வாக வேண்டும் .. எதற்கெடுத்தாலும் தலையாட்டி தமிழகத்திற்கு தீராத களங்கத்தை தந்த எடப்பாடி மத்திய அரசு கொண்டுவந்த அனைத்து பார்பனர் நலனுக்காக திட்டங்களை கண் மூடி ஆதரித்து சிறுபான்மை மக்களை வஞ்சித்து CAA சட்டமாக வாக்களித்துவிட்டு இன்று அழுத்தம் தருவோமென புளுகும் அயோக்கியர்கள் .. இந்த கேடுகெட்டவர்களை எழ முடியாதவாறு தோல்வியை தருவோம் ..
..
பிரித்தாளும் சூழ்ச்சியை அறிந்து, இப்போதைய நிலையில் திமுக கூட்டணியின் வெற்றி வரலாற்று சிறப்பிற்குரியதாக இருத்தல் வேண்டும்.. நமது கசப்புகள் குறைகள் எல்லாம் தூரவைத்துவிட்டு விசபாம்புகளை அடித்து துவைப்போம்.. நமது உரிமைகள் தேவைகளை திமுக செய்யும் ..சில சில குறைநிறைகள் இருக்கலாம் அதை நாமே சரிசெய்து கொள்ளகூடியவைகள் தான் ..ஆனால் நம்மை அழிக்க அடிமைபடுத்த சுயமரியாதையை சுட்டெரிக்க நினைக்கும் பாசிச பார்பனீய கூட்டத்தின், ஆர்எஸ்எஸ் எனும் தேசவிரோத கும்பலின் கைப்பாவையாய் தலையாட்டியாய் அடிமைகளாய் இருக்கும் இந்த கேடுகெட்ட அயோக்கிய அடிமை அதிமுகவை அதிகாரத்திலிருந்து விரட்ட திமுக கூட்டணியை வரலாறு காணாத வகையில் வெற்றிபெற செய்வோம்..
..
தளபதி.ஸ்டாலின் தமிழர்களின் நம்பிக்கை .. தமிழகத்தின் எதிர்பா்ப்பு .. நாளைய விடியல் ..
வைகறை வெளுக்கும்
உதயசூரியன் மெல்லென சிரிப்பான்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment