திமுக தலைவர் ஸ்டாலின் நல்ல தலைமைத்துவத்தோடு செயல்படுகிறார் .. நம்பிக்கையானவர்கள் யார் யாரெல்லாம் தாவி குதிப்பார்கள் என்றறிந்து தன் செயல்படுகிறார்..சிலரை ஏன் புறக்கணிக்கிறாரென எண்ணியதுண்டு .. அது அவர்களுக்கான பரிட்சைகாலம் நல்ல நிர்வாகி கடைசியில் நிற்பவனை கூட கவனித்துக்கொண்டிருப்பான் ..
..
திமுக தலைவர் நல்ல நிர்வாகியாக மிளிர்கிறார்.. திமுக கூட்டணியை முன்னெடுத்ததில் பெரிதும் வெற்றிபெற்றிருக்கிறார் .. ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் எண்ணிக்கையில் திடமாயிருந்து வெற்றியின் இலக்கை எளிதாக்கியிருக்கிறார்.. உட்கட்சியில் சில புல்லுறுவிகளை முதலிலேயே இனங்கண்டு வாய்ப்பை மறுத்து தான் சிறந்த தலைவர் என்று ஊருக்கு சொல்லியிருக்கிறார்.. மாபெரும் ஜனநாயக இயக்கத்தின் தலைமை என்பது சவால்கள் நிறைந்தது.. பல்வேறு கருத்துபரிமாற்றங்கள் பிணக்குகள் சோர்வுகள் காணப்படும் அவையனைத்தையும் கண்டு களைந்து அனைவரையும் அரவணைத்து செல்லுதல் மிகப்பெரிய காரியம் ..
உனக்கான வாய்ப்பு வரும் அதுவரை காத்திரு என்ற அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள்காட்டி "என் கவனத்தில் " நீ இருக்கிறாய் என நம்பிக்கையை விதைத்திருக்கிறார்..
..
மிக மோசமான காலகட்டத்தில் பகைவர்கள் அடிமைகளை கொண்டு தமிழர்களின் கழுத்தறுக்கும் வேளையில்,பலம்கொண்டு நம் முன் நிற்கும் போதும் கொஞ்சமும் சஞ்சலப்படாமல் தெளிவான பாதையை வகுத்து களம் காணும் தளபதி.. உழைப்பின் சோர்வு முகத்தில் தெரிகிறது ஆயினும் தமிழன் வாழ்வு சீரழிந்துவிடகூடாதென உழைத்துக்கொண்டிருக்கிறார் ..
மிகச்சரியான தேர்வுகளை செய்து தன் படைவீரர்களை நிறுத்தியிருக்கிறார்.. எதுவெல்லாம் தமிழினத்தின் மீது வலுகட்டாயமாக திணிக்கபடுகிறதோ அதையெல்லாம் எதிர்த்தும் எது தேவையென அறிந்து அது மறுக்கபடுமேயானால் அதை பெற்றுதருவதற்கும் தமிழ்நாடு மிகவும் நம்புவது தளபதியை தான்
..
தேர்தல் அறிக்கையில் CAA சட்டத்திற்கெதிராக எதுவும் இல்லையென சிறுபான்மை சமூகம் கவலையடைந்ததை கண்டு அறிக்கையில் திருத்தம் செய்து திமுக காவலனாய் விளங்குமென முஸ்லிம்களிடையே பெரும்நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.. நாடாளுமன்றத்திலேயே எதிர்த்தவர்கள் .. சட்டமன்றத்தில்
தீர்மான போட வலுயுறுத்தியவர்கள் என்பதை நாடறியும் ..திமுக ஆட்சியில் தமிழகத்தில் CAA சட்டத்தைை செயல்படுத்தாது .. ஆனால் அதிமுக அறிக்கையில் CAA க்கெதிராக அழுத்தம் தருவோம் என சொன்னதை பாசிச எஜமானின் பணியாள் அதெல்லாம் முடியாதென சொல்கிறார் அதற்கு எடப்பாடி பதில் தராமல் நழுவுகிறார் ..இந்த ஆட்சியே பாசிச பாஜகவின் பினாமி ஆட்சிதான் இங்கே வேரூன்ற முடியாதென்பதால் அதிமுக அடிமைகளை அவர்களின் ஊழலை அடித்த கொள்ளையை காரணம் காட்டி மிரட்டி பணியவைத்து காரியத்தை எளிதாக சாதித்துக்கொள்கிறார்கள்.. இல்லையென்றால் நோட்டாவை தாண்ட முடியாதவர்களுக்கு 20 சீட் தந்து சுமப்பார்களா..?
..
நமக்கு கிட்டிய வாய்ப்பு ..
நல்லவர் தெளிவான சிந்தனையோடு பாசிசத்தை வேரறுக்க,பகட்டில்லாமல்,பொய் புரட்டு பித்தலாட்டமில்லாமல் இதை செய்வேன் இதை தவிர்ப்பேன் என வெளிப்படையாக பேசி, குறுக்குவழியில் பதவி சுகம் தேடாமல் எதையும் மக்கள் தந்ததாக இருக்கவேண்டும் என்ற உயர்நோக்கு அறத்தோடு உண்மையாய் உழைப்பதற்கு நமக்காக ஓய்வில்லாமல் உழைப்
பவர் உரிமையோடு கேட்கிறார்..
பவர் உரிமையோடு கேட்கிறார்..
வாய்ப்பை தருவோம் ..
நாடும் நாமும் நலம் பெறுவோம்
ஸ்டாலின் தான் வராரூ
விடியல் தரப்போறாரூ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment