மிக கேவலமான அரசியல்வாதியாக அன்புமணி ராமதாஸ் வலம் வருகிறார்கள் .. கொஞ்சம் கூட வெட்கமின்றி நேற்று நடந்ததென்ன இன்றைக்கு இப்படி மாற்றி பேசுகிறோமே .. மக்கள் என்னநினைப்பார்கள் .. குறைந்தபட்ச ஒழுக்கமற்ற அரசியலை செய்வதால் ஏதேனும் பலனுண்டா.. எதைப்பற்றியும் கவலை கிடையாது .. பணம் பதவிக்காக யார் எக்கேடுகெட்டால் என்ன என்று மிக மட்டமாக நடந்துக்கொள்கிறார்கள்..
..
அதிமுக சிறந்த ஆட்சியாம் .. ஆளுநரை சந்தித்து ஊழல்பட்டியலை தந்தபோது அதிமுக கொள்ளையடிக்கிற கட்சி.. மானங்கெட்டு டயர்நக்கி பிழைப்பவர்.. நிர்வாகமென்றால் என்னவென்று தெரியுமா என்றெல்லாம் பேசிவிட்டு அப்பனும் மகனும் அழைத்து விருந்து வைத்தது ஏன்.. எம்பி சீட்டிற்காக டயர்நக்கிகளின் காலை நக்கியது ஏன்.. தமிழகம் கண்ட அரசியல் தலைவர்களிலேயே மிக அயோக்கியர்கள் இவர்கள் தான் பொய் சொல்வது அறிந்தது தான் மற்றவர்களை மகாமட்டமாக பேசிவிட்டு உடனே அதை மறுப்பதும் .. அதைபற்றி கவலைபடாமல் காசு ஓன்றே குறிக்கோளாய் இருப்பதும் தொடர்ந்து பாமகவை சொந்த நலனுக்காக பயன்படுத்துவதும்
சமுதாய மக்களைப் பற்றி கவலைக்கொள்ளாமல் விலைபேசுவதும் சகிக்கவில்லை..
..
உதயநிதிஸ்டாலினை எதிரித்து பிரச்சாரம் செய்யும் போது மன்னர் பரம்பரையா என கேட்கிறார் ..வாரிசு அரசியலை பேசி தனக்கு தானே இழிவை தேடிக்கொள்கிறார்.. மிக தெளிவாக வாரிசு என்று மக்கள் நினைத்தால் தோற்கடிக்கட்டும் என பேசும் தைரியம் வேண்டும்..வாரிசு அரசியல் என்பது தொடர்ந்து சொல்லபடும் குற்றசாட்டு ஆனால் மக்கள் அங்கீகாரமில்லாமல் கொள்ளைப்புற வழியில் எம்பி ஆகவில்லை .. மக்கள் தர்மபுரியில் தோற்கடித்தார்களே உடனே மாநிலங்களவைக்கு சென்றதேன் .. இந்த தேர்தலில் அதே தர்மபுரியில் ஏதேனும் ஒரு தொகுதியில் நின்றிருக்கலாமே .. அதெல்லாம் செய்யமாட்டார்.. ஆனால் மற்றவரை குறைச் சொல்வார்.. அவரை தவிர மற்றவர்களுக்கு தகுதியில்லையென்று நினைப்பு.. தர்மபுரியில் சொல்லி தோற்கடித்ததை மறந்து போனார்.. மாறி மாறி சவாரி செய்ததை தடுத்து பாமகவை தோற்கடிப்பதென முடிவோடு களமிறங்கி வெற்றிகண்டவர் முன்பு தாமரைச் செல்வனை வெற்றிபெற வைத்து பாமகவை வலுவிழக்க செய்தவர் தளபதி..
பிறகு திராவிடக்கட்சிகளே வேண்டாம் மாற்றம் முன்னேற்றமென சொல்லி மக்கள் செவிட்டில் அறைந்தாற்போல அன்புமணியின் அலப்பறையை முடிவுக்கு கொண்டுவந்தார்கள்..
வேறுவழியின்றி அதிமுகவோடு சேர்ந்து கொடுப்பதை கொடு கூடவே பிஸ்கட் பாக்கெட் வேண்டுமென கரன்சிகளில் கரைந்து போனது பாமக..
..
இன்றைக்கு யாருக்கு வேண்டாத கட்சி.. வன்னியர்களுக்காக என்ற முழக்கத்தோடு உருவாகி அன்புமணிக்காக என்று சுருங்கியதுதான் நடந்தது..
அரசியலில் பிழை இவர்கள் .. வாய்க்கு வந்ததை பேசி திரிபவர்கள்.. இன்று வன்னிய பெருசமூகமே இவர்களை புறக்கணிக்கிற நிலைதான்.. நாகரீகமற்ற செயல்கள், பொய் பித்தலாட்டம், மற்றவர்களை தரம்குறைத்து மதிப்பிடுவது தனக்கே எல்லாம் தெரியுமென்கிற முட்டாள்
..
சில அரசியல் கட்சிகளிடத்தில் சமூக அக்கறை வற்றிப்போய்விட்டதோ என எண்ண தோன்றுகிறது.. சாதிய வெறியூட்டல், மதத்தை முன்னெடுத்தல், குறிப்பிட்ட பிரிவினரை தரந்தாழ்த்துதல், தனிநபர் தாக்குதல் கொஞ்சமும் கூச்சமின்றி செய்தல், பெண்களை இழிவாக பேசுதல்
பொய்களை கொஞ்சமும் அஞ்சமின்றி பரப்புதல், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இழந்து எதற்கும் ஒரு விலையுண்டென அகந்காரத்தோடு நடத்தல், ஊழல் செய்து தண்டிக்கபட்டாலும் உத்தமர் வேடமிடுதல்.. ஊடகங்களை விலைக்கு வாங்கிவிட்டால் போதும் ஒழுக்ககேட்டையும் உயர்த்தி பிடிக்கும்.. அறமற்ற அரசியலை இழிவானவர்களே மேற்கொள்வர்.. வெட்டி ஒட்டிதான் அரசியல் செய்யும் பலவீனமானவர்கள்..
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இழந்தவர்கள் எதற்கும் துணிந்து மரபுகளை மீறி வெறியாட்டமாடுகிறார்கள்..
மக்கள் மீதான நம்பிக்கை எப்போதும் பொய்க்காதென அறிவிலிகள் அறியார்..
..
கண்ணியம் முதன்மை அம்சமாக இருக்கவேண்டுமென்று தளபதி அறிவிப்பு அவர் தரத்தை காட்டுகிறது.. திமுகவை குறைகூறுபவர்கள் தங்களின் தரத்தை முதலில் நினைத்துக்கொள்ளட்டும்.. ராமதாஸ் எல்லாம் அதிமுகவோடு கூட்டணி தாயோடு ...சமம் என்ற யோக்கிய சிகாமணிதான் .. காடுவெட்டி குரு இவர் முன்னிலையிலேயே ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதெல்லாம் மறந்துவிட்டாரா.. ராசா பேசியதை வெட்டி ஒட்டி அதை நம்பி அறிக்கை விடுகிறார்.
ராசா தவறாக பேசிவிட்டதாக சொல்கிறார்.. வாய் திறந்தாலேயே அப்பனும் மகனும் பொய் பேசி தரங்குறைந்த வார்த்தைகளை பேசுகிறவர்கள் .. ராசாவை பேச ஒரு தகுதி வேண்டும் அது ராமதாஸ் அன்புமணிக்கு இல்லை
..
தமிழக அரசியலில் தரங்கெட்டவர்கள் ராமதாஸ் அன்புமணி..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment