மக்களின் தன்னெழுச்சி கண்டு இந்த முறை எழவே முடியாதென உணர்ந்து பொய்களை அவிழ்த்துவிட தொடங்கியிருக்கிறார்கள்.. தென் தமிழகத்தில் வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு பெருத்த எதிர்ப்பு வரவும் இது தற்காலிக ஏற்பாடென அமைச்சர் சொல்கிறார்.. தினம் தினம் அறிக்கைகளில் பொய் சொன்னவர்கள் அதையே மக்கள் முன் அவிழ்த்துவிட மக்கள் எதிர்கேள்வி கேட்கிறார்கள் .. கேனசிரிப்போடு சமாளிக்கிற நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கிறது.. பன்னீரை வைத்து காய்நகர்த்தி பாஜக தமிழகத்தில் ஊன்ற காரணமானது இன்று எதிர்வினையாற்றுகிறது.. "பட்டைசோத்துக்கே செஞ்சுருவோம் " என்ற இனப்பெருமையை பேசி தனக்கு முதல்வர் பதவிவரை தந்தவருக்கு துரோகமிழைத்ததை "சமூகபார்வை" கேள்வி எழுப்புகிறது.. பாவம் தொகுதிக்குள் நடமாட முடியாத நிலை வருமோ என அச்சம் கொள்கிறார்..
..
வரும் செய்திகள் அதிமுகவின் அந்திமத்தை எழுதுவதாக அறிந்து "கொடுக்கவேண்டியதை"அமுக்கநினைக்கிறார்களென மூத்தவர்கள் புலம்புவதும் கேட்கிறது ..அதிமுககாரர்களே பன்னீர் எடப்பாடி இருவரின் துரோகங்களுக்கு படிப்பினை தரவேண்டுமென எண்ணுகிறார்கள் .. அதிமுகவை விழுங்க நினைக்கும் பாஜகவை தகர்த்தெறிய அதிமுகவின் தோல்வி அவசியமென நம்புகிறார்கள்.. கட்சியிருந்தால்் போதும் இன்றைய நிலை நீடித்தால் திமுக பாஜக என்ற நிலை வந்துவிடும் அதிமுகவை கரைத்துவிடுவார்கள் எம்ஜிஆர் கட்டியெழுப்பிய கோட்டை தகர்க்கபடும் எனவே அதிமுகவின் தோல்வி மட்டுமே அதிமுக மீளுருவாக்க முடியுமென நம்புவது தெரிகிறது ..
காமராஜரை கலாமை சொல்லிதான் வளர்த்தார்களாம் எங்கே வளர்த்தார்கள் குழந்தை தொழிலாளியாக திரைக்கு அனுப்பினார்கள்.. பொய் சொல்வதென்று முடிவெடுத்துவிட்ட பிறகு எதைப்பற்றியும் கவலைபடகூடாது.. பார்ப்பன குடும்பங்களில் ராமானுஜரை போல வரவேண்டும் என்பார்களே தவிர காமராஜரை மேற்கோள் காட்டமாட்டார்கள் இன்னும் சொல்லபோனால் காமராஜரையே கொல்ல துணிந்த கூட்டம்.. அண்டங்காக்கையை டெல்லயிலேயே முடித்துவிடவேண்டுமென கு.கா.பாளையம் ராஜகோபால் (ராஜாஜி) சொன்னதெல்லாம் வரலாறு .. கமல் பிரபலமாகி வளர தொடங்கிய காலத்தில் கலாமை யாருக்கும் தெரியாது .. குஜராத் கலவரத்தின் தாக்கத்தை மறைக்க குடியரசுதலைவராக்கபட்டவர் கலாம்.. அடிப்படை அரசியல் அறிவற்று பிரசாரங்களில் எதையாவது உளறிக்கொட்டிவைப்பது .. தமிழகத்தில் பொய்யுரைகள் பலிக்காது.. உடனே தோலுரிக்கபடும் .. எப்போது நடந்ததென "பூர்வஜென்மம்" குழிதோண்டியெடுத்து சொல்லிவிடுவார்கள்.. பேராசான் பெரியார் அப்படிதான் திராவிடத்தை கட்டமைத்திருக்கிறார்.. யார் சொன்னாலும் யோசி உன் அறிவேற்காததை ஏற்காதே என தெளிவுபடுத்தியிருக்கிறார்..
அதனால் தான் இன்னமும் கோபத்தோடு களமாடுகிறார்கள்..
"தொலைநோக்கு" என்பதை கூட "கொம்புசுழி" போட்டு எந்த வளைத்தளத்திலும் இல்லாததை பெரியார் சீர்த்திருத்தம் செய்தார் என்பதற்காக மாற்ற முயற்சிக்கிறார்கள் பாவம்..
கணினிக்கு இன்று உதவுகிறது
சீர்த்திருத்தத் தமிழ் எழுத்துகள்
நினைத்தாலும் முடியாது அதைப்போல சென்னையை பிரித்து தமிழ்நாட்டிற்கு பெயர்மாற்றுவோம் எனச் சொல்லிவிட்டு எதிர்ப்பு வந்தவுடன் பின்வாங்குவது இவர்களுக்கு பழக்கமானதுதான்..
..
பொய்யர்கள் உலா வருதல் கண்டு விழிப்போடு தமிழகம் உற்றுநோக்கி.. கயமையை சுட்டெரிக்கும் உதயசூரியனை எதிர்நோக்கி காத்திருக்கிறது..
பாசிசத்தை முதுகில் சுமந்து சவாரி செய்யும் அடிமைகளை விரட்ட தயாரென்பதை நாளுக்குநாள் வரும் செய்திகள் உறுதி செய்கின்றன..
..
தமிழகம் விடியலை நோக்கி ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment