புரிதலற்ற போனது இஸ்லாமிய சமூதாயம்..
பி.டி.ஆர் வாக்குசேகரிக்க சென்ற போது "சிலர்" இஸ்லாமியர்களின் வாக்கு இஸ்லாமியர்களுக்கே என கோஷம் போட்டார்களாம்.. அவர் அமைதியாக என் வாழ்நாளில் நான் சந்தித்த ஒரே வழக்கு CAA NRC க்கு எதிராக நான் பேசியதற்காக ..
யாருக்கு வாக்களிப்பதென்பதுஉங்கள் உரிமை என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.. அந்தந்த சமூகமும் தன் சமூகம் சார்ந்தவருக்கு தான் போடுவோமென்றால் அதைவிட அரசியல் தெரியாதநிலை வேறொன்றும் இல்லை..
இதற்கெல்லாம் தங்களை இஸ்லாத்தின் பிரதிநிதியாக காட்டிக்கொள்ள நினைக்கும் அறிவிலிகளே காரணமே தவிர முஸ்லிம் சமூகம் அல்ல.. சமுதாய இளைஞர்களை வழிகெடுத்து அவர்களை அரசியல் என்னவென்றே தெரியாமல் மதத்தோடு இணைத்து அரசியலை முன்னெடுக்க வைத்த அரைவேக்காட்டுத்தனம்
இன்று இதுபோன்ற விசமிகளால் நிகழ்கிறது..
..
ஆளூர் ஷாநவாஸ்
அவரை சிலர் முன்பு இஸ்லாமிய பெண் வேறுமதத்தவரை திருமணம் முடித்ததற்கு "மார்க்கஅறிஞர்" கூட்டம் பத்வா வழங்கியதை எதிர்த்து அதையே ஆண் செய்கிற போது ஏன் தருவதில்லை என்ற கேள்வி எழுப்பினார் உடனே வானுக்கும் பூமிக்கும் குதித்தவர்கள் .. அதில் குவைத் உலமா அமைப்புகள் கண்டன கூட்டமே நடத்தியது.. இது விவேகமற்ற செயலென அப்போதே சொன்னோம் ..இன்று அதை முன்னெடுத்து முஸ்லிம்களின் "நவீன காவலர்கள்" பொங்குகிறார்கள்..
கோவிலில் பரிவட்டம் கட்டியதை எப்படி ஏற்கலாமென்றெல்லாம் கத்துகிறார்கள்..
பரிவட்டமென்பது முதல்மரியாதை அவ்வளவுதான் எனக்கு தெரிந்து இன்னமும் சில கோவில்களில் முஸ்லிம் சகோதரர்களுக்கு முதல்மரியாதை செய்வது நடக்கிறது .. முன்பெல்லாம் துண்டும் மாலையும் வைத்து கோவிலில் இருந்து மரியாதை வரும் .. இதெல்லாம் இந்த பரதேசிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை..
கலீபா உமர்(ரஹ்) காலத்தில் கலிபா உமர் அவர்களே தேவாலயம் சென்று மரியாதையை ஏற்றுவாங்கியதெல்லாம் வரலாறு சொல்லும் இதெல்லாம் இந்த சமுதாய கிறுக்கனுக்களுக்கு தெரியாதா..?
..
முதலில் நீங்கள் தமிழக இஸ்லாமியர்களின் பிரதிநிதிகள் அல்ல.. .
தலைவனற்ற சமுதாயமாக ஆளாளுக்கு ஒரு வழி அதிலும் நான் செல்வதுதான் சிறந்தவழி அது நேராக சொர்க்கவாசலை அடையுமென சொல்லி திரிபவர்களின் இணையர்களே(மனைவியர்கள்) அதை நம்பமாட்டார்கள் அதுதான் உண்மை இவர்கள் லட்சணம் இதுதான் .. அரசியல் வேறு ஆன்மீகபாதை வேறு இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள் .. இரண்டு சீட்டு திமுக தந்திருந்தால் திமுக இவர்கள் பார்வையில் தூய்மையடைந்திருக்கும் உண்மையில் இவர்களை போன்றவர்களை கொள்கையற்ற ஆன்மீக கோமாளிகளை சேர்க்காதது தான் தூய்மையான அரசியல் ..
..
முஸ்லிம் சீமானை, SDPI அமுமுக போன்ற அமைப்புகளை நம்புவது வீண்.. இவர்கள் ஒழுக்கமற்ற அரசியலை முன்னெடுப்பவர்கள் பொய்யர்கள் பாசிசத்திற்கு ஒருவகையில் துணைகும் கூட்டம்.. அரசியலில் எதிர்ப்பை காட்ட வாக்குசீட்டு பயன்படுத்த வேண்டுமே தவிர தனிநபரை விமர்சிப்பதோ வாக்குகேட்க விட மறுப்பதோ சரியான அணுகுமுறையல்ல.. உனக்கு யார் தலைவனென்றே தேர்ந்தெடுக்க தெரியாமல் பேச தெரிந்தவன் மதம் சொல்லி மூளைச்சலவை செய்பவனை பின்பற்றி நிற்கும் போது .. இதுபோன்றுதான் தாக்க தோன்றும் .. பொது அரசியலோடு பழகுங்கள் ..மதம் சார்ந்த விடயங்களை அரசியலில் நுழைக்காதீர் .. என் இனத்தவனுக்குதான் என் சாதிகாரனுக்குதான் என் மதத்தை சேர்ந்தவனுக்குதான் என்பதுகூட பாசிசம் தான் ..
யாரை முன்னுறுத்துவதென்றும் தெரியவில்லை யாரை பின்துணைப்பதென்றுமே புரியவில்லை.. இந்த சமூகம் சீரழிகிறது.. நூற்றாண்டு அரசியலுக்கு சொந்தகாரர்கள் சிலரின் ஈனபுத்தியால் செல்வாக்கிழந்து வலுவிழந்து நிற்பது காலக்கொடுமை..
..
இப்போதும் நேரமிருக்கிறது..
உங்கள் முன் பாசிசத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோகிறவர்கள்.. நேர்மையோடு எதிர்த்துநிற்பவர்கள்.. யார் தேவையென்பதை யோசித்து முடிவெடுங்கள்.. நீங்கள் செய்யும் தவறின் பலன் உங்கள் எதிர்காலத்தை உங்கள் சந்ததியின் எதிர்காலத்தை பாதிக்கும்.. பொய்யர்களும் புரட்டுபேசி திரியும் புளுகர்களும்,
வாய்சவடால் வீரர்களும் .. மதம் சாதி பிரிவினை பேசி திரியும் மடையர்களும் உங்களை மூளைச்சலவை செய்ய வருகின்றனர் அவர்களை புறந்தள்ளுங்கள்..
நேர்மையானவர்களை சமுகத்தின் பாதுகாவலர்களை நாட்டின் நலன்விரும்புவோரை தேர்வு செய்யுங்கள்..
விடியும் ..
விடிந்துதானே ஆகவேண்டும்
உதயசூரியன்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment