Sunday, March 7, 2021

தளபதி ..

வெல்லும்..
மிக சரியாக காய்நகர்த்துகிறார்.. தலைவர் தளபதி
சில வீணர்களின் எதிர்ப்பார்புகள் சூழ்ச்சிகளை இடதுகையால் தள்ளி தனிபாதையில் வெற்றிநடைபோடுகிறார் .. எப்படியேனும் திமுக கூட்டணியை பிரித்துவிடவேண்டுமென சிலர் கண்விழித்து முயற்சித்தார்கள் .. உடன்பாடு கண்டபின்பும் தம்பி வா என்றெழைத்து இதுதான் சமூகநீதியா என கதறினார்கள் .. வெல்லபோவது யார் எத்தனை இடம் வெல்வோமென அறிந்து தோற்று கட்டிவைத்த காசும் (டெபாசிட்) பறிபோகாமல் வீரர்களாய் சட்டமன்றம் செல்வதே சமூகநீதியின் வெற்றி அடங்கியிருக்கிறதென கிராஸ்பெல்ட்களுக்கு தெரியாது..பாவம் நாக்பூர் கட்டளை நிறைவேற்ற நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு அலைகிறார்கள் ..
..
நடப்பது யுத்தமென அறிந்து பார்ப்பனீயம் சவபெட்டியில் கிடத்த தனியொருவனாய் தமிழகத்தின் தளபதியாய் மிக சாதூர்யமாக நகர்கிறார் ..அலறல்கள் கேட்கின்றன.. எதையாவது செய்திட முடியாதயென காத்திருந்தவர்கள் .. நடுநிலைபேர்வழிகளை (போலிகள்) கொண்டு ஆங்காங்கே கதறுகிறார்கள்.. இத்தனை தானா இதற்கு தனித்தே நின்றிருக்கலாமே மானத்தை அடகுவைத்துவிட்டு திமுகவோடு போகவேண்டுமா என சிலர் ரத்தகொதிப்பில் உளறுகிறார்கள்.. 
நோட்டாவை தாண்ட முடியாதவர்களுக்கு இருபது அதிகமில்லையா என எவரும் கேட்கவில்லை ஆனால் 25 ல் ஒதுக்கினார்கள் என போலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்

உண்மையில் தமிழனின் தன்மானம் காக்க ஓரணியில் இணைகிறார்கள் என நாக்பூரில் கால் நக்கிகளுக்கு சொல்வோம் .. பார்பனரை தவிர பிற இந்துக்களின் உரிமைகளை காவு கேட்பது இந்த நாதாரிகளுக்கு தெரிந்தும் தன் குடும்பம் பலன் பெற்றால் போதுமென சமுதாயத்தையே அடகுவைத்து விட்டு 2000 ஏக்கர் விலைபேசி வாங்க முயற்சிக்கும் "மர" மண்டைகளுக்கு சமூகநீதி காசுபார்க்கும் யுக்தி  ..
சொந்த சமுதாயத்தையே காட்டிகொடுக்கும் கயமை.. இளைஞர்களை வழிகெடுக்கும்  கோடாரி.. தமிழகத்தின் சாதிவெறியூட்டி கலவரத்தை செய்ய துடிக்கும் பாசிச பார்பனீயத்தின் செல்லப்பிள்ளை இவர்கள் எழ முடியாதவாறு புதைக்கபடவேண்டும் ..
..
இஸ்லாமிய கட்சிகள் ஐந்துக்குள் ஒதுக்கபட்டதாக "தீன்"பரப்பிகள் சற்று சுரம்குறைந்து பாடுகிறார்கள் .. 
முஸ்லிமை அமைச்சராக்கி அழகுபார்த்தது திமுக என்பதும் அதிகளவில் முஸ்லிம்கள் சட்டமன்றத்தில் நுழைந்தது திராவிட முன்னேற்ற கழகத்தால் என்றும் அரசியல் அறிவற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.. பிற்படுத்தபட்டோராக்கி அதிலும் உள்ஒதுக்கீடு தந்தது திமுகதான் ..ஆனாலும் நாங்கள் கதறுவோம் ஏனெனில் அப்படிதான் டிசைன் செய்யபட்டிருக்கிறோம் .. இன்னும் நிறைய தேவையிருக்கிறதென்பதை மறுப்பதற்கில்லை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஏனைய சமூகங்களின் உரிமைகள் பறிக்கபட்டும் கொடுக்கபடாமலும் இருப்பதென்னவோ உண்மைதான் தொடர்ந்து திமுக ஆட்சியில் இல்லாததும் சில பிரிவுகள் தடைபோடுவதும் அதை மிக சமத்தாக கைகாரியம் செய்யவேண்டியுள்ளது .. இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல எல்லாமாநிலங்களும் இந்த இந்துத்துவா அரசிடம் சிக்கி சீரழிகிறது ..மனிதனாய் பிறப்பதற்கு பதில் மாடாய் பிறந்திருக்கலாம் இந்த "குரங்குபடை"யிடம் தப்பித்திருக்கலாமென நினைக்கிறார்கள் .. உண்மையில் ஒருங்கிணைந்த இந்தியா கண்ணீரில்..
..
இந்தியாவே எதிர்நோக்கும் தேர்தல் தமிழகத்தை உற்றுநோக்கிறார்கள்.. சனாதனவாதிகளுக்கு சவபெட்டியை தமிழகம் தயார் செய்யவ்ண்டுமென காத்திருக்கிறது இந்தியா .. வந்தேறிகள் வளம் பெற்று வாழ்ந்தவனை குடிமகனை தூரநிறுத்த பார்க்கிறார்கள் .. கைகட்டி நில்  தொடும்தூரத்தில் நிற்காதே என சட்டம்போடாமல் அமல்படுத்துகிறார்கள் .. உரிமைகளை உடமைகளை கல்வியை உழைப்பை பறித்து நாட்டுகாரனை நாடோடியாக்க கைபர்வழி வந்த நாடோடிகள் முயற்சிக்கிறார்கள்.. இவர்கள் விரட்டபடவேண்டியவர்கள் இவர்களின் தலையாட்டியாய் போன பொம்மைகளை உடைத்தெறிய வேண்டும் இனி எப்போதுமே எவரும் தமிழகத்தில் தான்தோன்றித்தோடு செயல்பட அஞ்சும் நிலையை உருவாக்கிட வேண்டும் .. இழந்த உரிமைகள் கல்வி வேலைவாய்ப்பில் தமிழர்கள் நிரப்பபட திமுக அணியின் வெற்றி சரித்திரம் சொல்லும் விதமாய் வேண்டும்..
..
இன்றைய தளபதியின் அறிவிப்புகள் சரித்திரம் பேசும் .. விடியலுக்கான நேரம்
தளபதியின் அறிவிப்புகளில் முத்தாய்ப்பாய் மனிதகழிவை மனிதனே அள்ளும் நிலையை மாற்றுவோம்  என்பது வணங்கி மகிழவேண்டும்..
..
ஸ்டாலின்தான் வராரு..
விடியல் தரப் போறாரு..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment