Friday, March 26, 2021

கருத்துகணிப்புகள் ஊக்கம் தந்தாலும் வாக்குகளே வெற்றி தரும்.. தலைவர் தளபதி..
..
வரும் கணிப்புகள் மகிழ்ச்சியை தந்தாலும் உழைப்பு உயர்வை தருமென்ற உண்மையை விளங்கியவராய் நிமிர்கிறார்.. களப்பணி மிக நேர்த்தியாக வடிவமைத்து யார்யாரெல்லாம் முன்னிறுத்தி செயலாற்றவேண்டுமென்று அறிந்து தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு உழைத்துவரும் தளபதியின் பேச்சை கவனமாக கேட்டு உழைத்திட வேண்டும்..
..
எதிரிகள் நம் இனபகைவர்களோடு கைகோர்த்து தமிழை அழிக்க தமிழர்தன் வாழ்வாதாரத்தை இல்லாதாக்க பெரும்முயற்சி செய்கிறார்கள்.. தமிழ் எழுத்துகளை அழித்து சமஸ்கிருத ஒலிவடிவ எழுத்துகளை எழுத துணிவுவந்திருக்கிறது .. இவையெல்லாம் தடுத்துநிறுத்தபடவேண்டும்.. திமுக ஆட்சிக்குவந்தவுடன் தமிழ் எழுத்துக்களுக்காக புதிய அரிச்சுவடியை/அகராதியை  உருவாக்கிட வேண்டும் தமிழ் எழுத்துக்களில் கலந்துள்ள சமஸ்கிருத எழுத்துக்களை கலைந்து ஆரம்பப்பள்ளிகளில் கொண்டுவர வேண்டும் (ஜ,ஹ,ஸ) போன்ற எழுத்துக்களை நீக்கி புதியதொரு தொடக்கத்தை தொடக்கப்பள்ளியிலிருந்து துவங்கவேண்டும்.. தமிழின் சிறப்பை சிதைக்க நினைக்கிற ஆரியர்களை அவர்தம் அடிவருடிகளை அதிகாரத்திலிருந்து துரத்துவதே 
நமக்கான நம் இனத்திற்கான பாதுகாப்பு..
..
இந்த தேர்தலில் திமுகவின் வெற்றியை எதிரிகள் அறிந்தே இருக்கிறார்கள்.. பாஜக வேட்பாளர்கள் கூட மோடியின் படத்தோடு கூடிய துண்டறிக்கை கூட வெளிவராமல் கவனமாக இருக்கிறார்கள்.. மோடி தமிழகம் வந்தால் கட்டிவச்சகாசு (டெபாசிட்) கூட கிடைக்காமல் போகுமென அதிமுககாரர்கள் வெளிப்படையாக பேச தொடங்கிவிட்டனர்.. அமைச்சரே மோடி வரவேண்டாமென எடப்பாடிக்கு கடிதமெழுதுகிறார் இதுதான் இன்றையநிலை.. செல்லுமிடமெல்லாம் மக்கள் "சிறப்பு" செய்கிறார்கள்.. பத்தாண்டு பாழாய் போனதால் மக்களின் கோபம் பெரும்மூச்சாய் சுட்டெரிக்கிறது.. 
அதிமுகவிற்கு அளிக்கும் வாக்கு அது பாஜகவிற்கே ஆரிய சமூகத்திற்கு பலனளிக்கும் .. தமிழர்களின் வேலைவாய்ப்பை இல்லாதாக்கும் வடவருக்கு வீடு தருவதாக சொல்வதொன்றே போதும் அவர்களின் நோக்கமெது.. அவர்கள் நம் மீது ஏன் இத்தனை வன்மத்தோடு இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்.. இந்த மண்ணை எவ்வளவு முயற்சித்தும் மதகலவரத்தை ஏற்படுத்த குளிர்காய முடியவில்லை என்ற கோபம் அவர்களின் செயல்களில் தெரிகிறது .. சிறுபான்மை மக்களின் உணர்வுகளை தூண்டி கலவரபூமியாக்க முயற்சித்து தோற்றுநிற்கிறார்கள் .. இந்த அடிமைகளால் இனி பலனில்லை என்பதை அறிந்து  அதிமுக என்ற கட்சியை விழுங்கி பாஜகவாக உருமாற்ற செய்ய முயல்வார்கள்.. எச்சரிக்கை இவர்கள் ஆபத்தானவர்கள்..
..
அதிமுக பாஜகவோடு சேர்ந்தது அழிவின் தொடக்கம்.. இன்று பாஜக "நட்சத்திர" வேட்பாளர்கள் கூட மோடி படத்தை அச்சிட்டால் மக்களின் கோவத்திற்கு ஆளாவோமென அஞ்சுகிறார்கள் என்றால் "பெருங்கிழவன் பற்றற்ற தொண்டு" கிழவன் செப்பனிட்ட பாதை ..இங்கே கயமைகளை அழிந்து போகும் .. பொய்யுரைத்தால் அந்தநிமிடமே முகம்கருவிபோவீர்கள் என்ற நிலை .. மதமோ சாதியோ கைகொடுக்காதென்பதை பாஜக பாமக கட்சிகளை மக்கள் எங்கே நிறுத்தியிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும்..  சாந்து பூசி நடித்தால் "கேளிக்கையாய்" மனிதர்கள் வாக்களிப்பார்களென நம்புவதெல்லாம் மலையேறிவிட்டது ..  உழைப்பவனை, உண்மையானவனை, உன்னதனை மக்கள் அறிந்திருக்கிறார்கள்.. ஓயாது உழைப்பவர் .. கூப்பிட்ட குரலுக்கு செவிசாய்பவர் யார்.. நம்மை காப்பவர் யாரென மக்கள் தெளிவாக இருக்கிறார்.. சில விஷமிகளின் சூழ்ச்சியை முறியடித்து நல்லவரை நமக்காவரை நானிலம் போற்றும் தளபதியை அறியணையேற்றும் வரை ஓய்வின்றி உழைப்போம்..
மு.க.ஸ்டாலின் எனும் நான்.. 
தமிழகம் ஆவலோடு கேட்க தயாராகிறது..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment