..
அதேவேளை அடிக்கடி தன்னை கருணாநிதியின் மகன் என்கிறாரே ஏதேனும் சந்தேகமா என கேட்டு ஹா ஹா.. என சிரித்த எடப்பாடி அவர்களே எப்போது மன்னிப்பு கேட்கபோகிறீர்.. என் தாயை பழித்துவிட்டாரென கண்ணீர் சிந்தி மக்கள் முன் நடிக்க தெரிந்த நீங்கள் அடுத்தவரை பிறப்பையே எள்ளிநகைத்தீரே
அவரும் தாய் தானே .. ஆனால் ஸ்டாலின் உங்களைப்போல பெற்றதாயை வைத்து அரசியல் செய்யவில்லை..
ஒன்றா இரண்டா எடப்பாடி..
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குழந்தைகளின் அழுகுரல் கேட்டும் ஆதாரமிருக்கிறதா என கேட்க கள்நெஞ்சம் வேண்டும் .. அவர்களும் பெண்கள் தானே .. அதற்காக எப்போது மன்னிப்பு கேட்க போகிறீர்.. ஆனால் உங்களைப்போல வதைக்கபட்ட பெண்களை வைத்து அரசியல் செய்யாமல் அவர்களுக்கு நீதி பெற்றுதரப்படுமென சொல்கிறது திமுக..
..
சாத்தான் குளத்தில் அப்பனையும் மகனையும் லாக்கப்பில் அடித்தே கொன்றார்களே.. அவர்களுக்கும் மனைவி மக்களுண்டே.. அவர்களுக்காக எப்போது மன்னிப்பு கேட்பீர் எடப்பாடி பழனிசாமி அவர்களே..
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நான் தொலைக்காட்சி பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என்றீரே..அப்படியெனில் காவல்துறை உமது கட்டுபாட்டில் இல்லையா .. இல்லையென்று உமது மொழி கூறுகிறது அப்படியெனில் முதல்வராக இருக்க லாயக்கற்றவர் என்றுதானே பொருள்.. அன்று 18 வயது குழந்தையின் வாயில் சுட்டார்களே படுபாவிகள் அவளும் பெண்தானே அவளுக்கும் குடும்பம் உண்டே அவர்கள் கண்ணீருக்காக வருந்தியதுண்டா மன்னிப்பு கேட்டதுண்டா..
..
ஊடகத்துறையில் பெண்கள் படுக்கையை பகிர்ந்துக்கொண்டால்தான் செய்திவாசிக்கவே முடியுமென ஒரு பொறம்போக்கு சொல்லிவிட்டு அண்ணி தலைமைசெயலர் என்ற இறுமாப்பில் இருந்தானே அவனை கைதுசெய்தீரா அல்லது கண்டித்தீரா.. அவர்கள் பெண்கள் தானே அவர்களுக்கும் கணவன் குழந்தைகள் உண்டே .. ஒட்டுமொத்தமாக பெண்களை கேலிசெய்தவனை எல்லோரும் "அவர்களை" போல இருப்பார்களென எண்ணி பேசியவனை கண்டித்ததுண்டா எடப்பாடி அவர்களே.. ஒட்டுமொத்தமாக அதிமுககாரர்களையே impotent
என்றாரே அரசியல் தரகர் குரூமூர்த்தி அதற்காக கோபபட்டதுண்டா.. எதிர்ப்பையாவது சொன்னதுண்டா.. உங்கள் பெற்றவளை கலங்கம் சுமத்துகிறான் என பொங்கியதுண்டா..
சசிகலாவை சாக்கடை என்ற போது எங்கே போனீர்கள் .. ஆனால் ராசா உவமைக்கு சொன்னதை
என் ஆத்தாளை கேவலமாக பேசிவிட்டார்கள் என அழுது அரசியல் செய்வதற்கு பதில் வேறெதாவது செய்யலாம்.. அதிமுக வரலாறு அனுதாப அரசியல் தான் .. ஜானகி மோரில் விசம் கலந்து எம்ஜிஆரை கொல்லபார்த்தார் .. சென்னாரெட்டி கையைபிடித்து இழுத்தார்.. இதானே அதிமுக வரலாறு .. பொய்சொல்லாமல் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க துணிவின்றி தோல்வி பயம் எங்கே சிறை களியென கண்முன்னே வர அழுது நடிக்கிறார்.. ஆனால் உங்களி எண்ணம் ஈடேறாது எடப்பாடி பழனிசாமி அவர்களே..
..
ராசா பேசியதை வெட்டி ஒட்டி அதைவைத்து ஆதாயம் தேடலாமென்ற "நூல்புத்தி"யை கையிலெடுக்க வரிந்துகட்டிக் கொண்டு சிலர் நடுநிலை வகுப்பெடுத்தார்கள் ..ஆனால் ராசா மனம் வருந்துவதாக சொல்லிவிட்டார்.. அதே போல் எடப்பாடியும் ஸ்டாலினிடம் மன்னிப்பு கேட்க சொல்வார்களா.. கனிமொழியை தவறாக பேசிய எச்சையை மன்னிப்பு கேட்க சொல்வார்களா.. ஊடகத்துறையில் பெண்களை
படுக்கையை பகிர்ந்தே முன்னுக்கு வருகிறார்களென
பேசிய எஸ்விசேகரை மன்னிப்பு கேட்க சொல்வார்களா..
ராசாவின் கொடும்பாவியை எரித்த முற்போக்காளர்கள்..?
வேலைக்கு போகும் பெண்கள் விபச்சாரிகள் என்ற ஜகத்குரு சரஸ்வதி சுவாமிகளின் அருளுரையை தீயிட்டு கொளுத்துவார்களா ..
காலகாலமாக எங்களை சூத்தரன் (விபச்சாரி மகன்) எனும் வர்ணாசரத்தை, சாஸ்திரத்தை, சனாதனத்தை, எரிக்க சொல்வார்களா..
..
ராசாவின் பெருந்தன்மை தம்மால் தேர்தல் நேரத்தில் எந்த இடையூறும் வரகூடாதென்பதற்காக ..
திராவிட இயக்கம் பெண்களை மதிக்கும் சிறிய தவறெனினும் அவர்கள் மனம் புண்படுமேயானால் வருந்தும் .. பண்பட்ட அரசியலை பயின்றவர்
அவர் ஏன் தொடர்ந்து வேட்டையாடபடுகிறாரென எல்லோருக்கும் தெரியும்.. எனக்கு தெரிந்து அம்பத்கருக்கு பிறகு சனாதனம் அஞ்சிய ஒரு தலித்திய தலைவர் .. நிறைய தலித்திய தலைவர்கள் வந்தார்கள் இவரளவிற்கு எதிர்ப்பை பதிவு செய்ததில்லை சமரசமற்ற போராளி.. அறிவுநிகர் பண்பாளர் படிப்பாளி .. கொண்ட கொள்கையின் உறுதியாளர்.. அதைவிட பெரியாரின் பேரன்.. இது போதாதா ஆரிய கும்பல் வயிறெறிய..
ராசா முதல்வர் வருந்தினார் என்றவுடன் மனம்வருந்தினாரே அங்கே உயர்ந்துநிற்கிறார்..
..
உருவம் குள்ளம்தான்
ஆனால்
உயர்ந்த உள்ளம் எங்கள் ராசா
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment