அல்லாஹ்வுடைய அர்ச்சில் எழுதபட்டிருக்கிறது நெல்லை முபாரக்..
சென்ற முறை தேர்தல் பரப்புரையின் போது சொன்னது தியாக தலைவி சின்னம்மா, தியாக செம்மல் தினகரன் தலைமையில் என்றெல்லாம் பேசினார்கள்.. மய்யத்தோடு கூட்டணி என்று செய்தி வந்தன.. 18 இடங்கள் என்றார்கள் .. சமுதாய அரசியல் அறிஞர்கள் ஹூதைபிய்யா உடன்படிக்கை என புகழ்மாலை பாடி முடிப்பதற்குள் தினகரனோடு மீண்டும் இணைந்தார்கள் .. நல்ல சவாரி.. ஆறு இடங்களோடு மனம் ஆற இனிதே முடிந்தது தேவையில்லாமல் திமுகவின் கதவை தட்டியிருக்கவேண்டாம் .. மய்யத்தோடு உடன்படிக்கை செய்திருக்கவேண்டாம் .. கடந்த நாடாளுமன்ற தேர்தலைபோல ஜனாப் தினகரனோடு நின்று "நாங்கள்" நம்பிக்கையானவர்கள் என்றாவது பெயரெடுத்திருக்கலாம்..
..
உண்மையில் இஸ்லாமிய அமைப்புகளின் நிலை சொல்லும்படி இல்லை .. தெளிவற்ற பயணம்.. மெத்தபடித்தவர்கள் மேதாவிகள் நல்ல சிந்தனையாளர்கள் நற்பண்பினர்,கல்வியாளர்கள், கருணையாளர்கள் கொண்ட சமூகம் இன்று அரசியல்
புரிதலின்றி அல்லோலப்படுகிறது ..
தனிநபர் பகை, பதவி மோகம் பிறரை புறம் சொல்லி வீழ்ந்துநிற்கிறது .. ஆரம்பம் முதலே திமுகவின் மீது தேவையற்ற வெறுப்பை பகிர்ந்தே வந்திருக்கிறார்கள் .. முஸ்லிம்லீக் திமுகவின் கைப்பாவை எனச் சொல்லி சொல்லி பிரிவினையை சுலபமாக செய்து தங்கள் நலனை கொண்டாடியிருக்கிறார்கள் .. எதை செய்யகூடாதென்ற புரிதல் இல்லை .. அனைவரும் ஒருங்கிணைந்து ஒருகுடையின் கீழ் தனித்து நின்று (234 தொகுதிகளிலும்) எத்தனை விழுக்காடு வாக்குவங்கி என்பதை உறுதி செய்திருந்தால் இன்று தொங்கோட்டம் ஓட தேவையிருந்திருக்காது .. திமுகவே தேடி வந்து உங்களுக்கு தொகுதிகளை பகிர்ந்திருக்கும் 0.16 விழுக்காடு வாக்கை வைத்துக்கொண்டு நீங்கள் இத்தனை சீட் வேண்டுமென்று பேரம் பேசி தொடங்கியிருக்க கூடாது.. பல்வேறு பிரிவுகளாய் போய்நின்றால் தங்களோடு தொடர்ந்து பயணிப்பவருக்குதான் முன்னுரிமை வழங்குவார்கள்..
நிலையற்ற தன்மை ஒரே இரவில் வேறொரு கட்சி யோடும் பேசும் நம்பகதன்மை..? இவ்வளவு பலவீனமாகவா இருப்பது ..
..
நேற்றுவரை வேறொரு கூட்டணியில் சவாரி செய்துவிட்டு கடைசி நேரத்தில் திமுகவின் தட்டுவதும்
திமுக மரியாதை தரவில்லையென முனகுவதும் எந்தவிதத்தில் நியாயம்.. லீக் இருந்தால் வரமாட்டேன் மமக இருந்தால் சரிபடாது என்பது தனிநபர் சுயநலமே தவிர சமுதாய நலனில்லை ..
2011 கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 5.81 % இஸ்லாமியர்கள் அதன் தாக்கம் தொகுதி/வேட்பாளர் பங்கில் தெரியும் ..ஒன்றுபடாமல் பல கட்சிகளாய் நின்றால் ஒன்றோ இரண்டோ தான் கிடைக்கும் கிடைக்காமலும் போகலாம் .. தற்போதைய சூழலில் திமுக ஒன்று மட்டும் தான் பாஜகவின் ஆட்டத்தை அடக்க சக்தி வாய்ந்த கட்சியாக இருக்கிறது .. வேறுயாருக்கு வாக்களித்தாலும் கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் விழலுக்கு இறைத்த நீரைப்போல பயனற்றதாகும்.. நமக்கான கோரிக்கைகள் தேவைகள் நிறைய உண்டு, திமுக தந்தது மிக குறைவாக கூட இருக்கலாம் இன்னும் சரியான பகிர்ந்தளிக்காமல் இருக்கலாம் ஆனாலும் இன்றைக்கு நம்பிக்கை தரும் கட்சியாய் பாசிசத்திற்கு சிம்ம சொப்பனமாய் இருப்பது திமுக மட்டுமே .. நமது தேவைகளுக்காக தொடர்ந்து உரிமையோடு குரலெழுப்புவோம் .. பாசிசத்தை வேரறுக்க திமுகவை வெற்றிபெற செய்வோம்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment