சிலநேரம் பேசும் போது உண்மை தன்னால வரும் ..
சி.வி சண்முகம் பேசும் போது ஊரை அடித்து கொள்ளையடித்த வழக்கில் சசிகலா நான்காண்டு சிறைபெற்றவர் என்கிறார் .. அதே வழக்கில் ஜெயலலிதாவும் சிறை தண்டனைபெற்றாரே என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் நடையை கட்டினார் ..
(அவைத்தலைவர் மதுசூதனன் செத்தவங்களைப்பற்றி பேசுறீயே நாளைக்கு நீ செத்தாலும் என சாபமெல்லாம் விட்டார்..)
என்ன சொல்ல வருகிறார் சி.வி.சண்முகம் ஊழல் செய்தவர் என்பதால் சசிகலாவை சேர்க்க முடியாதென்கிறாரா..
அப்படியெனில் தண்டனை பெற்று ஜாமீனில் இருந்த காலகட்டத்தில் சின்னம்மாவை அம்மா ஆக்காமல் விடமாட்டோம் என்றதெல்லாம் சும்மாவா..
..
சசிகலா திருடி என்கிறார் ஆனால் ₹10 கோடி அபதாரம் கட்டிய சசிகலா திருடியெனில் அதே வழக்கில் ₹100 கோடி அபதாரம் விதித்த ஜெயலலிதா மகா திருடி என்பாரா..? இவர்கள் உண்மையில் சசிகலாவை எதிர்ப்பது ஏன் இதுவரை அடித்த கொள்ளையில் பங்கு கேட்பார் என்பதாலா .. அல்லது எங்கே இதுவரை காலில் விழாமல் இருந்தது மீண்டும் வளைய வேண்டுமே என்ற பயமா.. சசிகலாவை திருடி என ஊடகம் முன்பு வாய்திறந்தவர் ஒருஉண்மையை அவரை அறியாமலே சொல்லிவிட்டு செல்கிறார் ஜெயலலிதா மகா திருடி அவருக்கு எதற்காக மக்கள் வரிப்பணத்தில் நினைவிடம் அவரும் தண்டிக்கபடவேண்டியவர் இறந்துபோனதால் புனிதராகிவிட முடியாது .. மறைந்தாலும் திருடியை திருடரென்றே அழைக்க வேண்டும் என சொல்லாமல் உளறிவைக்கிறார் ..உள்ளே போனதும் சிலநேரம் உண்மையை பேசவைக்கும் என்பார்கள் .. சி.வி.சண்முகம் உண்மையைதான் பேசியிருக்கிறார்..
..
சசிகலா அடிப்படை உறுப்பினர் இல்லையென்று பேசிபார்த்தார்கள் .. பிறகு ஏன் ஒவ்வொருவராக காலில் விழுந்து அதிமுகவின் செயலாளராக வேண்டுமென அழுது கெஞ்சினீர்கள் என்ற போது பதிலை காணோம் இப்போது அவர் செயலாளரல்ல என உச்சநீதிமன்றம் வழக்கை காரணம் காட்டுகிறார்கள் வழக்கு முடித்துவைக்கபடவில்லை ..நாளை சசிகலா வந்தால் முதல் ஆளாய் நிற்பார் நீங்கள் சொல்லுங்கள் என்ற ஜெயகுமார் .. உண்மையில் இவர்களுக்கு பயம் பற்றிக் கொண்டிருப்பது இந்த பேட்டியில் தெரிகிறது .. சசிகலா தேர்தல் முடியும் வரை காத்திருப்பார் தேர்தலில் படுதோல்வி இவர்களை சசிகலா காலில் விழவைக்கும் இப்போதே எழு மாவட்ட செயலாளர்கள் தொடர்புக்கு வெளியே என செய்திகள் வருகிறது ..பேரணிக்கு தடை கேட்டு டிஜிபியை சந்திக்கிறார்கள் ஆட்சி அதிகாரம் கையில் இல்லையென்பதற்கு மற்றுமொரு எடுத்துகாட்டு..
..
கை காய்வதற்குள் இலை போட்டவரை கழுத்தறுக்கும் பாதகர்கள் இவர்கள் .. நாளை ஜெயலலிதாவையும் வசைபாடுவார்கள் .. நம்பிக்கை துரோகிகள் மாறி மாறி பேசி திரியும் மகா கேவலமானவர்கள் .. கூட இருந்து கொள்ளையடித்த போது இனித்தது கொள்ளையடித்ததில் பங்கை கொண்டுபோய் சசிகலா காலில் கொட்டியபோது இவர் மகா கொள்ளைக்காரி என தெரியாமல் போனது ..இப்போது சசியை திருடி என சேர்த்து குரல் கொடுக்கிறார்கள் .. உண்மைதான் மகா கொள்ளைக்காரி தான் ஆனால் அதே அளவுகோலை ஜெயலலிதா மீதும் வைத்திருக்க வேண்டும் ஜெயலலிதாவை புனிதராக்கி கூட்டுக் கொள்ளைக்கு துணை போன அமைச்சர்பெருமக்கள்..? இன்றைக்கு அதிகாரத்தில் இருப்பதால் தூய்மையாகி விடுவார்களா ..
..
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முழுஅளவில் விசாரணை செய்யபடவேண்டும இன்றைக்கு கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் அவர்களின் உறவினர்கள் என பெரும் கூட்டம் சிறைக்கு செல்லும் காலம் வரும் ..அந்த கூட்டத்தில் இன்று முகமூடிகொண்டிருந்தவர்களும் இருப்பார்கள் .. கூட்டு கொள்ளைகூட்டத்தின் தலைவி வருகிறார் ..கொள்ளையடித்தில் கூட இருந்த கொள்ளையர்கள் பதறுகிறார்கள் ..
திருடர்கள் ஜாக்கிரதை
..
No comments:
Post a Comment