அதானி ஏர்போர்ட் அதானி கேஸ்..
கிழக்கிந்திய கம்பெனியின் வரவு இந்தியாவின் பல்வேறு பகுதிகளை கையடைக்கி கடைசியில் அரசு அதிகாரம் அடிமைத்தனம் என போராடவேண்டியிருந்தது இப்போது சத்தமே இல்லை இந்தியாவை தனியாருக்கு தாரை வார்க்கும் அவலம்
..
எங்கே என் இந்தியா ..
ஒன்பது பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்லாபத்தில் இயங்கியதை இன்று தனியாருக்கு மெல்ல மெல்ல தாரைவார்க்கும் நிலை .. இந்தியாவை இருவருக்காக கூறுபோட்டு பங்களிக்கிறார்கள் ..தன் சொத்தை தேசத்திற்கு செலவழித்தார் என்பதற்காக நாடே அவர் குடும்ப சொத்தாக வேண்டுமா என நேரு குடும்பத்தை பார்த்து கேட்ட இந்த கயவர்கள் இன்று தங்கள் பிரசாரத்திற்காக விமானம் கொடுத்துதவிய அதானிக்கு விமான நிலையத்தையே தருகிறார்கள் .. சிறு தொழில்களை முடக்கி பெரும் முதலாளிகளின் கார்ப்பரேட்களின் அடிமைகளாய் ஆக்குகிறார்கள் .. கண்ணியத்தோடு முதலாளியாக வலம் வந்தவன் இன்று பெரும் கம்பெனிகளில் கூலிக்கு வேலை செய்யலாம் .. திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் கார்ப்பரேட்களின் ஆதிக்கத்தில் வந்து சிறு தொழில்கள் நசக்கபடுகிறது .. இனி வரும்காலங்களில் மளிகைகடை அண்ணாச்சிகளை பார்க்கமுடியாது மளிகைகடைகளில் வேலைக்கு சேரலாம் அம்பானிகளிடம் சம்பளம் பெறலாம் ..
..
பெட்ரோல் விலை ₹100 தொடும் .. யாரும் கதைப்பதாக தெரியவில்லை .. அடக்கவிலையோடு 200% விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை .. ஏழைநாடுகளில் கூட இந்த இரக்கமற்ற செயலை ஆட்சியாளர்கள் செய்யவில்லை .. வாய்சவடால் பேசுவதும் எதிர்த்தால் தேச துரோகி என்பதும் வழக்குகள் பாய்வதும் இந்த கேடுகெட்டவர்களின் ஆட்சியில் நடக்கிறது
குஜராத்தில் கலவரத்தை
உருவாக்கி அங்கே ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்டோர் சாகக் காரணமாக இருந்தவர்கள்.. தேசபக்தர் என அழைக்கபடுவதும்,.. ஒரு சிறுமி வன்புணர்வு வழக்கில் சிறை சென்றவரை மாலை மரியாதையோடு வரவேற்பதும் இந்த புதிய இந்தியாவில் சாதாரணம் ..
1000 மைல் நடந்தே ஏழை தொழிலாளி வந்தாலும் கவலை இல்லை பாரத் மாதாக்கீ ஜே போடவில்லையா நீ துரோகி.. பசிக்கு என்ன உணவு வேண்டுமென்பதை சாஸ்திரம் தீர்மானிக்கும் மாடு தின்றால் கொலை செய்யபடுவாய்.. போராட்டம் நடத்துவர்களைஆடையை வைத்தே யாரென கண்டுகொள்ளலாமென தலைமை அமைச்சரே சொல்வார் .. நீதிமன்றத்தை நாடினால் வழக்கு தொடர்ந்தால் ஆவணங்கள் காணாமல் போகும் தேசபக்தர்களை..? கேள்வியே கேட்க கூடாது .. குறுக்குவழியில் அமைச்சரானாலும் தெனாவட்டாய் பதில் சொல்வது .. வெங்காயம் சாப்பிடமாட்டேன் அதன் விலையைப்பற்றி கவலையில்லை என்பது இது தான் தேசபக்தியின் அளவுகோல்
..
பெண்ணை கற்பழித்து இரவோடிரவாக யாருக்கும் தெரியாமல் எரித்து சாம்பலை குடும்பத்தாரிடம் வழங்குவதும்.. தலித் இளைஞர்களை மொட்டையடித்து கட்ட்வைத்து அடிப்பதும் ராமதேசத்தில் நடக்கும் .. இளம்பச்சிளங்குழந்தைகளை காப்பாற்ற பிராணவாயுவை சொந்த செலவில் வாங்கினால் தேசவிரோத வழக்கு சிறை .. இதெல்லாம் உலகில் எந்த கொடுங்கோலர்களின் ஆட்சியில் கூட நடந்ததில்லை ஆனால் பாசிச பார்பன மேம்பாட்டு அரசில் இதெல்லாம் சர்வசாதாரணம் ..நாட்டின் வளங்கள் கொள்ளையடித்தாலும் அதை சுரண்டி தனியாருக்கு விற்றாலும் ஜெய்ராம் சொன்னால் போதும் மோட்சம் அடையலாம் ..விவசாயி அம்மணமாய் போனாலும் அதானி அம்பானிகள் மனம் கோணகூடாது ..
மக்கள் எக்கேடுகெட்டால் என்ன எல்லாவற்றையும் விற்போம் .. காங்கிரஸ் கொண்டுவந்தது எதுவும் இருக்ககூடாது ..வரலாற்றை திரித்து எழுதுவோம் ..
..
எதற்கும் கவலையில்லை விளக்கம் தரமாட்டோம் நாங்கள் செய்வது தான் சரி .. எதிர்த்தால் தேசவிரோதி பாகிஸ்தான் கைக்கூலி .. அதிகம் பேசினால் துப்பாக்கி பேசும் .. பிணையில் வரமுடியாத வழக்கு தொடர்வோம்
இ்ந்த அரசு இருவருக்கான அரசு என்ற ராகுல் சொல்லில் பிழையில்லை ..
அதிகார போதையில் இறுமாப்போடு பதில் சொல்லி எகத்தாளம் செய்வோரே .. மக்கள் அதிகாரம் எல்லாவற்றையும் திருப்பி போடும் ..வெகுமக்களின் கோபம் பேரரசர்களை இருந்த இடம் தெரியாமல் புதையுண்டு போனதும் .. வரலாற்றில் நிறைய உண்டு..
நான் தான் எல்லாம் என்றவனும் நானே ஆண்டவன் என்றவனும் ஆண்டவனுக்கு நிகரென்றவனும்..வரலாற்றில் வீழ்ந்தே போயிருக்கிறார்கள் ..
..
அநீதி வீழும் ..
அறம் வெல்லும்..
..
No comments:
Post a Comment