Monday, February 8, 2021

சசிகலா சிறையிலுிருந்து திரும்பினா்..

சிறைச் சென்று திரும்புகிறவர்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சி அடைந்துகிடப்பார்கள் சசிகலா படைசூழ கொள்ளையடித்ததை கொண்டாடிக்கொண்டே வருகிறார்.. தமிழக ஊடகங்கள் அதை தொடர் நிகழ்வாக்கி தமிழகத்தின் அவமானமாய் நிற்கிறது.. எந்தவொரு ஊடகமும் சன்டிவி உட்பட எதற்காக ஜெயிலுக்கு போனார் யாரோடு சேர்ந்து கொள்ளையடித்து நீதிமன்றம் தண்டித்தது என பேச மறுப்பது அறம் தவறிய செயல் .. சசிகலா என்ற தனி மனுஷியோடு நமக்கு விரோதமோ பகையோ இல்லை
இன்னும் சொல்லபோனால் அடிமுட்டாள்களை (ஜெயலலிதா உட்பட) வைத்து பொம்மலாட்டம் ஆடிய அவரை நாம் கூர்ந்து கவனிக்கதான் வேண்டும் .. ஒரு பெண்ணாய் சராசரி குடும்ப சூழலை மறந்து ஜெயலலிதா என்ற பிம்பத்தை உயர்த்தி எழுப்பி அதில் தான் யாருமறியாமல் சிம்மாசனமிட்டு அமர்ந்து நடத்தி ..ஆட்சி ..சட்டம் கூட ஒன்றும் புடுங்கமுடியாதவாறு அதிகாரம் செலுத்திய விதம் அந்த பெண்மணியின் தனி குணத்தை காட்டுகிறது ..
..
ஆனால் சசிகலாவை புனிதராக்கவும் அதிமுகவை மீண்டும் உயிர்பிக்கவும் சிலர் படாதபாடுபடுவது அப்பட்டமாக தெரிகிறது .. திராவிடத்தின் ஆட்சி மீண்டும் வந்தால் இப்போதுபோல் கொழிக்கமுடியாதென பாசிச கூட்டம் தெளிவாக அறிந்துவைத்துத்திருக்கிறது .. சல்லி சல்லியாக அதிமுக போவது கூட ஒருவகையில் இழப்புதான் அந்த இடத்தை காங்கிரஸால் நிரம்ப முடியாதவாறு பிய்த்தெறிந்துவிட்டது பாசிசம் .. தங்கள் சிலிப்பர்களை ஒவ்வொன்றாக இறங்கி காங்கிரஸ் எழாதவாறு பார்த்துக்கொண்டிருக்கிறது ..
சாமானியர்களிடம் காங்கிரஸின் அதிகாரம் செல்லாதவரை .. பார்பனீய, ஜமீன் வாசம் மாறாதவரை கடினம் தான் அதுவரையேனும் அதிமுக ஊயிர்ப்போடு இருக்கவேண்டிய அவசியம் அதிகாரமற்ற நிலையிலேனும் எதிர்கட்சியாக அதிமுக இருப்பதுதான் தமிழகத்திற்கு நல்லது பாஜகவை காலூன்ற விடாமல் தடுப்பதற்கான உக்தியாக கருத்தில் கொள்வோம்..
..
சசிகலாவின் வரவு பழனிசாமி பன்னீர் வகையறாகளுக்கு பீதியை தந்திருக்கிறதென்பது அவர்களின் நடவடிக்கைகளில் தெரிகிறது .. A1 ஜெயலலிதா நினைவிடம் மூடபட்டதும் அதிமுக தலைமை அலுவலகம் போலீஸ் பாதுகாப்பில் கொண்டுவரபட்டதும் கடைசியில் சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றபட்டதில் பயம் தெரிகிறது .. காரணம் இவர்கள் யாருமே மக்கள் தலைவர்களாகவோ அல்லது கட்சியை ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்றவர்களோ அல்ல .. இன்றைக்கு எதையாவது பேசி சமாளிக்கிறவர்கள் தான் முதலில் மண்டியிடுவார்கள் ..ஏனெனில் அதிமுகவின் வரலாறு அதுதான் .. பொதுவாழ்வில் இருப்பவர்களின் பொழுதுபோக்கு என தரம் குறைந்து விமர்சித்த காளிமுத்து காலடியில் விழவில்லையா.. இன்றைக்கு அதிமுகவில் இருப்பவர்கள் ஏறக்குறைய எல்லோருமே  ஜெயலலிதாவை மிக கடுமையாக நாகூச பேசியவர்கள் தான் .. பணமும் பதவியும் விழ காலும் கிடைத்தால் போதும் .. தண்டனை பெற்றவர் தியாகியென பேசுவார்கள் ஊர் பணத்தை கொள்ளையடித்தவரென பேசுவோர்.. 
..

மிக மோசமான அரசியல் நிகழ்வுகளை தரங்கெட்ட மனிதர்களை, பொய்யர்களை, புறம்பேசி திரிவோரை
நாம் பெற்றிருக்கிறோம் 
கொள்ளையடித்தாலும் கொண்டாடும் மனநிலையை
உருவாக்கியிருக்கிறார்கள் .. மீண்டும் நல்லதொரு அரசியல்.. கருத்தியலோடும் கொள்கையோடு அறநெறி மாறாத நல்ல தலைவர்களை இனங்கண்டு ஆட்சியை தருவோம்.   இந்த கேடுகெட்டவர்களால் தமிழகம் இழிவை சுமக்கிறது .. வெட்கிதலைகுனியும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது இதற்கு நாமும் ஒரு காரணம் .. 
பணம் தந்தால் யாருக்கும் வாக்களிப்போமென்ற மனநிலை மாறவேண்டும் .. யார் வந்தால் தமிழகம் மானத்தோடும் சுயமரியாதையோடும் புகழோடும் இந்திய ஒன்றிய சமூகத்தில் நிற்கும் என அறிந்து 
வரும் தேர்தலில் வாக்களிப்போம் ..
திருடர்கள் விழா எடுக்கிறார்கள் நான்காண்டு சிறைத்தண்டனையை தியாகமென புகழ்கிறார்கள் ..
ஊடகம் சீரழிந்து அறமிழந்து நிற்கிறது ..
இனியேனும்
நல்லதை விதைப்போம்..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment